ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2011

அகத்தியர் 1


DSC00012.JPG     DSC00013.JPG   
சாமி புத்தகம் அகத்தியர் 1  
(பக்கம் 29-33)
நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை, நம் எலும்புக் கூட்டுக்குள் ஊனாக இருக்கின்றது. இது தான் ஊழ்வினை என்பது. நாம் எடுத்துக் கொண்ட அனைத்துமே சத்தாகி, எடுத்துக் கொண்ட உணர்வின் எண்ணங்களின் உணர்வின் தன்மை  எலும்புக்குள் ஊனாக இருந்து,  அது வடித்துக் கொள்கின்றது.

நாம் எதையெல்லாம் டேப்பில் பதிவு செய்கின்றோமோ, இதைப் போன்றுதான், நாம் எண்ணிய உணர்வின் ரசத்தை வடித்து வைத்து நமக்குள் அதைப் பதிவு செய்யும் போது,  மேக்னட்.

இதற்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு, எப்படி டேப்பில் பதிவு செய்கின்றோமோ, அதைப் போன்றுநம் நினைவலைகளை நம் உடல் எதை எதையெல்லாம் இழுத்துக் கொண்டதோ, சும்மா இருந்தாலும், வேப்ப மரம் எப்படி தன் கசப்பின் தன்மையை, தனக்குள் கவர்ந்து எடுத்துக் கொள்கின்றதோ, எத்தனை வகையான சக்தி சேர்த்து, ஒரு கசப்பின் உணர்வின் சத்தாக வேப்ப மரம் கலந்திருக்கின்றது.

அதைப் போன்று தான் மனிதனுடைய நிலைகள். எந்த குணத்தின் தன்மையை நாம் எடுத்துக் கொண்டிருக்கின்றோமோ, அதை இழுத்துக் கொள்ளும். அப்போது, காற்றிலிருந்து தன் இனத்தைப் பிரித்து, தனது ஆத்மாவாகஓசோன் திரையாகும்.

பூமி, எப்படி தன் ஓசோன் திரையை அமைக்கின்றதோ, எந்த குணத்தின் படிவின் தன்மை நமக்குள் இருக்கின்றதோ, இது ஓசோன் திரை. எந்த குணத்தின் தன்மை உங்களுடன் கலக்கப்பட்டு, ஒரு குழம்பிலே காரத்தைக் கலந்தால் எப்படியோ, நமக்குள் சேர்த்துக் கொண்ட குணத்தின் அமைப்பு கொண்டு, இந்த உணர்வின் தன்மை தன் பாதுகாப்பின் நிலைகள் ஞானத்தைப் பேசும்.

அன்பையும் பண்பையும் வைத்திருப்பவருடைய நிலைகள், விகாரத் தோற்றம் உள்ளவர்களுடைய உணர்வின் தன்மையும்,  தான் பதிவு செய்து கொண்டது அனைத்தையும், தனது ஆன்மாவாக,  இது திரையாக தனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றது.  ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றும், தனக்குள் பாதுகாக்கும் தன்மையில் வைத்துக் கொண்டிருக்கின்றது.

இதைப் போன்று, அது ஓசோன் திரையாக வைத்து, அது வருவதை எல்லாம் அடக்கி, அடக்கி, விஷத்தன்மையை அடக்கும் போது தான், பூமியிலே மனிதனை உருவாக்குகின்றது. இதைப் போன்று, வியாழனோ, புதனோ, மற்ற கோளின் ஆற்றல்களிலே, அது எடுத்துக் கொண்ட காந்த சக்தியின் தன்மை குறைவு.
ஒரு மோட்டாருக்கு, காந்தத்தின் நிலைகள் எப்படி இருக்கின்றதோ,
இதைப் போன்றுதான், அது குறைவாக இருக்கும் போது,
அந்தக் குறைவான சக்தியின் துணை கொண்டு,
அது இழுத்து, அது எடுத்துக் கொண்ட சத்தை
அதை செயலாக்கக் கூடிய, திறனை இழந்து
அந்த விஷத்தின் தன்மைகள் அதிகமாகக் கூடுகின்றது, அந்தக் கோள்களின் வளர்ச்சியின் தன்மை.

விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு வெகு காலமாகும். ஆக, இந்த காந்தத்தின் இயக்கத்தின் நிலைகள் கொண்டுதான், கோளின் சுழற்சியின் வேகம். இது வேகமாக முட்டிக் கொள்ளும் நிலை. 

இதைப் போன்று, சூரியனுக்கும் தனக்குள் எடுத்துக் கொண்ட இந்த சக்தியினுடைய நிலைகள், அல்ட்ரா வயலட் என்று சொல்கின்றனர். தான் எடுத்துக் கொண்ட ஆற்றலின் சக்தியினுடைய சக்தி வெளிப்படும் போது, பிரபஞ்சத்தில் உள்ள விஷத்தின் சக்தியை, சூரியன் தனக்குள் வராதபடி, தன் உணர்வின் சக்தியை மோதி, அதை வேக வைத்து,  அதை அலைகளாக வெளிப்பரப்பச் செய்வதுதான்.

சூரியன், தான் தெளிவான நிலைகள் கொண்டது. அதில் அசுத்தங்கள் எதுவும் இல்லை. மிக குளிர்ச்சியான பூமி,  அதிலே நீர் வளங்களும் ஏராளமாக இருக்கின்றது. சூரியன் எடுத்துக் கொண்ட ஆவியின் தன்மைதான்இன்று நாம் எடுத்துக் கொண்டால், இன்று திரவகம். அதாவது நாம் பாதரசத்தைத் தொட்டால், ஐஸ் மாதிரி இருக்கும்.
அந்த பாதரசத்தை சகல சக்தியினுடைய நிலைகள் எடுத்து,
அது ஊடுருவி
ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி
அதனுடைய சக்தி தனக்குள் கவர்ந்து,
மற்றொன்றுடன் இணைத்துவிட்டு
இது பிரிந்து கொண்டே இருக்கும்.

அதைப் போன்ற நிலைகள் தான், இன்று சூரியன் தனக்குள் எடுத்து, குளிர்ந்த பூமியாக இருக்கின்றது. அது வெளிப்படும் நிலைகள்,  மற்ற பொருளுடன் மோதியவுடன், அது வேகமான நிலைகள் அது வெப்பமாகி,  அந்த வெப்ப நிலைகளிலே பல நிலைகளுக்கு ஆகி, இதைப் போன்று மற்ற உணர்வுக்குத் தக்கவாறு,  அந்த உணர்வுகள் சேர்க்கும் செயலின் தன்மைக்குத் தக்கதான், அந்த வெப்பத்தின் தன்மைகள் இருக்கும்.

நம் பூமியிலே எடுத்துக் கொண்டாலும், மற்ற கோள்களிலிருந்து வெளிப்படும் அலைகள் கூட, சூரியனுடைய காந்த அலைகள் வரும் போது, இவையெல்லாம் பாதரசத்துடன் சம்பந்தப்பட்டது.

ஆனால், அந்த அலைகள் மோதும் போது, எந்தக் கோளின் ஆற்றல் இருக்கின்றதோ,  அந்த கோளுக்குத் தக்கவாறு,  இது பட்டவுடன் இங்கு வெப்பத்தின் அலைகளைப் பார்க்கலாம்.

ஏனென்றால், நாம் நினைக்கலாம் சூரியன் அருகில் வந்துவிட்டது. அதனால்தான் சூடு அதிகமாகின்றது என்று.  எத்தனை கோடி மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், ஒரு சீரான சூடு தான். 

இதை விஞ்ஞானிகள் கண்டு கொள்வதற்கு வெகு காலமாகும். அங்கே இருக்கக் கூடிய பாதரசத்தின் தன்மையும், மற்ற கோள்களின் தன்மை பூமி கவர்ந்து தனக்குள் வரும் போது, இந்த வெப்ப காந்த அலைகள் சேர்வதற்குத் தக்கவாறுதான், இது ஒன்றுடன் ஒன்று மோதி, நீராக ஆவியாக மாற்றச் செய்யக்கூடிய சந்தர்ப்பமும், அதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட, இந்த உணர்வின் சக்தியின் நிலைகள் கொண்டுதான், ஒவ்வொரு நிலைகளும் ஏற்படுகின்றது.

(பக்கம் 34-36)
மகரிஷிகளின், மெய்வழியின் தன்மையின் நிலைகளை எடுத்துக் கொண்டால், அந்த உணர்வின் சக்தியைப் பெறும் தகுதியை, நாம் பெறுகின்றோம்.

சில பேர், தெரியாமல் கீதை புத்தகத்தைப் படித்துவிட்டு, கீதா உபதேசத்திற்குள், அன்று மெய்ஞானி வியாசர் எழுதிய தத்துவத்தை, பிற்காலத்தில் இருப்போர் பலவிதமாக மாற்றிவிட்டார்கள். ஆனால், மாறிய நிலைகள் கொண்டுதான், புத்தகத்தில் படித்து, அதில் ஞானத்தைச் செலுத்தி சில நூல்களை எழுதி, அதன்படி நடக்கின்றார்கள்.

மெய்ஞானி உணர்வு அவ்வாறு அல்ல. எங்கெங்கோ, தொட்டுத் தொட்டு கொடுத்துக் கொண்டு செல்கிறோம் என்று நினைக்காதீர்கள். இதையெல்லாம்,  உங்களுக்கு அந்த ஞானத்தை வளர்ப்பதற்காக வேண்டி,  அன்று அகஸ்திய மாமகரிஷி காட்டிய அருள்வழியில், அணுவுக்குள் அணு, இந்த மனித உடலுக்குள் எவ்வாறு இயங்குகிறது  என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.  முழுமையாகச் சொல்ல வேண்டுமென்றால் காலம் அதிகமாகும்.
உங்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென்ற,
இந்தப் பதிவின் வித்தைத் தான்
உங்களுக்குள், இந்த ஆற்றலை நீங்கள் கிரகித்து,
புறத்தில் இருந்து தான், இழுக்க முடியுமே தவிர, உள்ளுக்குள் உந்திப் பெறுவது கடினம்.
நம் உடலில் எண்ணிய,  அந்த சக்தியைத் தான் சேர்க்க முடியும்.

இன்று, ஒரு மரத்தின் சத்தான நிலைகள் வரப்படும்போது, விஞ்ஞான அறிவைக் கொண்டு என்ன செய்கின்றோம்? பல பொருள்களை உருவாக்கி, மண்ணிலே போட்டு அதற்கு தகுந்த நீரை விட்டவுடன், அது ஆவியாகப் போனவுடன், பூமியின் ஈர்ப்பலைக்குள் அதனுடைய சக்திகள் மாறி, ஆவியாகி, நீருடன் கலந்து மரத்திற்குள் செல்லும். அது இணைந்த பின் தான், காற்றிலிருந்து தன் இனத்தைக் கவர்ந்து கொழு கொழு என்று இருக்கும்.
உரம் அதிகமாகப் போட்டால்,  இதை வேக வைத்திடும்.
உரம் அதிகமாகப் போட்டால்,  எல்லாவற்றையும் கருக்கி விடும்.
அதை சிறிதளவு போட்டு, அதற்குத் தகுந்தவாறு ஆவியாக மாறி, மரத்துடன் ஒட்டி, தன் இனத்துடன் சக்தியை இழுக்கும்.
இல்லாவிட்டால், இதையும் கொன்றுவிடும்.

எல்லாச் சக்தியையும், நீங்கள் சீக்கிரம் பெறவேண்டுமென்று, மெய்ஞானியரின் அருள் சக்தியை, உரத்தை அதிகமாகப் போட்டோம் என்றால் என்னவாகும்? சொல்வது அர்த்தமாகிறதல்லவா? இது மாதிரி ஆகிவிடக் கூடாது என்பதற்காகத் தான், சிறுகச் சிறுகக் கொடுத்துக் கொண்டுள்ளோம்.

அவர்களுக்கெல்லாம் தெரிகின்றது, எனக்குத் தெரியவில்லையே என்று சிலர் சொல்வார்கள். அவரவர்கள், இதைத் தாங்கக் கூடிய சக்தி உள்ளவர்களுக்கு, இதைப் பதிவு செய்யும் போது, இந்த ஆற்றலைப் பெறமுடிகிறது. அவர்களுக்கு தெரிகிறது,

எமக்குத் தெரியவில்லையே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். சக்தியைக் கொடுத்தாலும், பிரித்தாலும் சக்தியின் நிலைகள் குறைவாக இருப்பதனால், அது மூடிக் கொண்டே இருக்கின்றது.

நாம் சிறுகச் சிறுக, எடுத்துத் தான் பெறமுடியும். திடீரென்று எடுத்துக் கொண்டால், இந்த மனித உடலில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அதனுடன் கலந்திருப்பதால்,  இது முழுமையாகப் போய்விட்டால், எதனுடன் கலந்து எண்ணத்தைப் பதிவு செய்திருக்கின்றனரோ,  பின் இந்த சிந்தனையை இழக்கச் செய்துவிடும்.

ஆகையினால், அதை நாம் மாற்றாதபடி, இது, சிறுகச் சிறுகச் சேர்த்து,  நாம் எடுக்கும் புது உணர்வுடன், நினைவலைகளைக் கொண்டு வருவது தான், பொருந்தும்.

நாம், புறத்திலிருந்து எதையுமே அதை,  திடீரென்று மாற்றிவிடும் சக்தி செய்வது தவறு.ஆகையினால் தான், அவரவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு, எமது குருநாதர், எமக்கு எப்படித் தாங்கும் சக்தியினுடைய நிலைகள் கொண்டு, அதைப் பக்குவப்படுத்திக் கொடுத்தாரோ, அதைப் போன்று, நாம் ஆயிரம் பேர் இங்கு இருந்தாலும், நீங்கள் அனைவருமே அந்த அருள் சக்தியைப் பெற்று, அறியாது இருக்கக் கூடிய துன்பத்தைப் போக்கவல்ல ஆற்றலாக,  நீங்கள் மாற்றவேண்டும்.
(பக்கம் 41-42)
அந்த மெய்ஞானியின் அருள் சக்திகள், உங்களுக்குக் கிடைக்க வேண்டும். உங்களுக்குப் பாதுகாப்பான நிலைகள் கிடைக்க வேண்டும். அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் விளைய வேண்டும். அந்த அலைகளை உங்களுக்கு பாதுகாப்பாகக் கொடுக்க வேண்டும்.

அதனால் தான், உங்களை ஈசனாக மதிக்கிறேன். உங்களுக்குள் இருக்கக்கூடிய உணர்வு,  எமக்கு அருள் பாக்கியம், உங்களிடமிருந்து கிடைக்கிறது.

ஏனென்றால்,  அந்த எண்ணத்தை ஈசனாக மதித்து, உங்களுக்குள் அந்த துன்ப உணர்வு வரக்கூடாத நிலைகள், தீமைகளைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம், எப்பொழுது நீங்கள் முன்னிலை படுத்துகின்றீர்களோ,  நிச்சயம் நல் ஒளியின் தன்மையை நீங்கள் சுவாசிக்க முடிகின்றது. மெய்ஞானியின் அருளை நீங்கள்  பெறமுடிகின்றது.

ஆகவே, இதைப் போன்று இந்த நல்ல உணர்வின் தன்மை, உங்களுக்குள் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்குதான், இவ்வாறு  குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசிப்பது.
(பக்கம் 44-46)
இப்பொழுது, நாம் சில செடிகளைப் பார்க்கிறோம். இன்று மழையே இல்லையென்றாலும் கூட, ஆகாசத்தில் நீங்கள் கட்டி தொங்கவிட்டால், காற்றிலே இருக்க கூடிய சக்தியின் தன்மையை, எடுத்து வளரும்.

இன்று கருவேல முள் (சீன முள்) என்று பார்க்கின்றோம். அது காற்றிலே இருக்ககூடிய, நீர் சக்தியை வடித்தெடுக்கக் கூடிய ஆற்றல், அதற்குள் இருப்பதனால் தான், நீர் இல்லையென்றாலும் அதனுடைய தன்மை இருக்கின்றது. அதைப் போல், பூமியில் அது வேரூன்றினாலும்,
நீரை ஈர்க்கக் கூடிய சக்திக்கு,
ஆழமாக,  துரிதமான நிலைகளில்
அதனுடைய வளர்ச்சியின் தன்மைகள்
தன் இனத்தை ஈர்ப்பதற்கு, மிக ஆழமாக ஓடுகின்றது. இது இயற்கையின் சில நியதிகள்.
இதைப் போன்றுதான், அந்தப் பாதுகாப்பான நிலைகள் நாம் பெறுவதற்கு, நாம் எங்கிருந்தாலும்  நம் எண்ணத்தின் உணர்வினுடைய தன்மைகள் ஊடுருவி,  அந்த மெய்ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த ஆற்றலை நாம் பெறவேண்டும்.






நாம் அ, ஆ படித்து,
ஏட்டுப் புத்தகத்தில் பார்த்து,
இப்படி பெருக்கிப் பார்த்து
உங்களிடம் சொல்லி,  எடுத்து
அப்படி,  யாரும் பெறுவதற்கு முடியாது.
அதனால் தான்,  உங்களுக்குள் ஞானத்தின் நிலையை,  பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

எல்லா அன்பர்களும் புத்தகம் வேண்டும் என்று கேட்பதனால்தான், இப்பொழுது, யாம் புத்தகமே எழுதுகின்றோமே தவிர, முன்னால் உங்களிடம் பேசும் பொழுதெல்லாம், அர்த்தம் புரியாத அளவிற்குப் பேசுவதின் நோக்கமே இதுதான்.

அப்படிக் கேட்டு, தெரிந்து,  என்ன பண்ணப் போகிறீர்கள்? அந்தப் பதிவின் நிலைகளைத்தான், உங்களுக்குள் பதிவு செய்வதற்குக் கொண்டு வருகின்றோம். இப்பொழுதும் அதுதான்.

இந்த அர்த்தத்தினுடைய நிலைகளை, நீங்கள் கண்டுணர்ந்து எடுக்க முடியாது. இந்த மெய் உணர்வின் அலைகளை உங்களுக்குள் பதிவு செய்யப் போகும்போது, சரியான முறையில் தியானித்தால், உணர்வின் சக்தியினுடைய நிலைகள் உங்களுக்குள் பதிவாகின்றது.
அப்படிப் பதிவான பின்,
உங்களுக்குள், அடிக்கடி நாம் சொன்ன நினைவு,
அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து,
நினைவுக்குக் கொண்டு வந்தால்,
அந்த எண்ண அலைகள்,
உங்களுக்குள் ஞானத்தைப் பேசும்.
அதன் வழி கொண்ட நிலைகளை நீங்கள் சுவாசித்து, உங்களுக்குள் உணர்வினுடைய நிலைகள் துன்பத்தைப் போக்க, உங்கள் உணர்வின் ஞானம் இங்கே தோற்றுவிக்கும். எமது அருளாசிகள்.
(பக்கம் 56-57)
யாம் உங்களை எதிரியென்ற நிலைகளாக வளர்த்துக் கொண்டு பார்த்தோமென்றால்,  அந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான் என் செயல் இருக்கும். 

ஆக ஒவ்வொரு மனிதனும் இந்த உடலில், சூரியன் எத்தனை அணுக்கள் எடுத்து சூரியனாக மாறியதோ, அந்த ஒளியான அணுக்கள் பிரகாசிக்க வேண்டுமென்றால்,  உங்கள் எண்ணங்களெல்லாம் மகிழ்ந்து, இந்த மகிழ்ச்சிக்குள் இருந்தால் தான், 
என் சுழற்சியின் ஓட்டமும் பிரகாசிக்கும்.
இல்லையென்றால், பல எதிரிகளைக் கொண்டு இவரை அழித்துவிடுவார்கள் என்ற இருண்ட நிலைகளுக்குத் தான் சுழல வைக்கும்.

நான் யானையைப் பண்ணுவேன், பூனையைப் பண்ணுவேன் என்று விகார ஓட்டத்தின் நிலைகள் நமக்குள் எடுத்து,  நான் பார்க்கிறேன்  என்ற ஆணவம் வரப்படும் போது, அடுத்த நிமிடம்  இரு நான் பார்க்கிறேன்  என்று இந்த உணர்வை அவர் உடலில் பார்த்து, தன்னைப் பாதுகாக்கும் உணர்வு எதிர்மறைகள் வரும்.

இந்த இருண்ட நிலைகள் கொண்டு,  சிந்திக்கும் நிலை கொண்டு அசுர உணர்வு வந்தாலும், நமக்குள் இருளுக்குள் சுழன்று கொண்டிருக்கின்றோம் என்று தான் அர்த்தம். அழிக்கும் உணர்வுதான் வரும். இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைக்க வேண்டும்.

(பக்கம் 63-66)
நமது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால், நாம் அனைவருமே இந்த அகஸ்திய மாமகரிஷியைக் காண முடிந்தது. அவரின் ஆற்றலையும் பெறமுடிந்தது. அந்த ஆற்றலின் துணை கொண்டு பலவும் அறிய முடிந்தது. அவர் ஆற்றலின் துணை கொண்டு, நீங்களும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் ஒளிகளிலே சுழலுங்கள்.

ஏனென்றால், விண்ணுலகில் தோன்றினால், இனம் இனத்தைத் தான் சேர்க்கும்.  நாம் எந்த குணத்துடன் சேரவேண்டுமென்று விரும்புகின்றோமோ, அந்த எண்ணத்துடன் நாம் செல்ல முடியும்.
எந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவுசெய்து, நாம் போகவேண்டுமென்று எண்ணுகின்றோமோ, அங்கே செல்லலாம்.

நாம் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே, மெய் ஒளியின் அருள், அந்த மகரிஷிகள் பெற்ற அருள் ஒளிகளை, பெறவேண்டுமென்று எண்ணுங்கள்.
சாமியிடம் போனோம்,
சாமி கொடுக்கவில்லை என்று குறையை எண்ணாதீர்கள்.
சாமியிடம் போய்,
அந்த அருள் ஒளியை வளர்ப்போம்,
அந்த அருள் ஒளியினுடைய நிலைகளில், ஒளி நிலை பெறுவோம்.  நாம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமையின் நிலைகளை,  நம் மூச்சாலே, நம்மை அணுகாது பாதுகாப்போம். 

அந்த மெய் ஒளியின் நிலைகள் பெறப்படும் போது, இருள் விலகும், அந்தப் பொருள் தெரியும். இருள் விலகிப் பொருள் காணும்போது, வாழ்க்கையிலும் நீங்கள் பொருள் காணலாம்.

ஆக நம் உடலில், எவ்வளவு வேதனைகள் நம்மை துன்புறுத்தினாலும், அந்த இருளை மாய்க்க, உங்களுக்கு யாம் கொடுப்பது ஆத்ம சுத்தி  என்ற ஆயுதம். எப்படி புலி நம்மை தாக்க வரும் போது அதை வேட்டையாடுவதற்கு,  அம்பைக் கொண்டு எவ்வாறு எய்கின்றோமோ அதே போன்று, உங்கள் உடலுக்குள் நின்று, உங்களை வேட்டையாட நினைக்கும் அந்த தீய, விஷ உணர்வுகளையும், வேதனைப்படச் செய்யும் அந்த உணர்வின் தன்மைகளையும் வேட்டையாடுவதற்கு,
ஓம் ஈஸ்வரா என்று, 
அந்த உணர்வின் ஆற்றலான ஆயுதத்தை எடுத்து,
மகரிஷிகளின் அருள் சக்திகளை, உங்கள் உடலுக்குள் செலுத்தி (ஆத்ம சுத்தி செய்து), உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும், வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும், அந்த உணர்வின் தன்மைகளை,  அந்த மகரிஷியின் அருள் ஒளியாலே, அடக்கச் செய்யுங்கள்.  அப்போதுதான் அடங்கும்.

ஆக, வேதனையாக இருக்கின்றது என்ற நிலையை மறந்துவிட்டு, அந்த மகரிஷிகளின் அருள் ஒளியாலே, எனக்குள் இருக்ககூடிய துன்பங்கள் நீங்கும் என்ற உணர்வைச் சுவாசியுங்கள்.

அந்த உணர்வின் தன்மை, மெய் ஞானியின் அருள் உணர்வு உங்களுக்குக் கிடைக்கும் போது, மெய்ஞானிகள், அவர்கள் உடலிலே எப்படித் தீமையை மாய்த்து, மெய் ஒளியின் தன்மையைப் பெற்றார்களோ, அந்த தீமையான உணர்வை மாய்க்க,  அருள் ஒளியின் தன்மையிலே சென்றால் தான் முடியும்.

நிறைய பேர்,
சாமியிடம் சென்று வந்தோம்,  தலைவலியே போகவில்லை.
சாமியிடம் சென்று என்ன கிடைக்கின்றது?  என்று எண்ணுவார்கள்.

அருள் வழியில் நன்றாக ஆகிவிட்டதென்றால், மீண்டும் வருவார்கள். அடுத்த முறை வந்து, சாமி என்று கேட்பார்கள். மூன்றாம் முறை வரும் போது, என்ன செய்கிறார்கள்?

நம் வாழ்க்கையில், அடிக்கடி அசுத்தங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்போது என்ன செய்கின்றோம். அன்று நடந்தது,  இன்று
யாம் சொன்ன வழிகளிலே நடந்தீர்ககளா? என்று
யாம் அவர்களிடம் கேட்டால்,
நேரம் இல்லைங்கே  என்று சொல்வார்கள்.

இது போன்று, நேரமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றால், அவர்கள், எம்மிடம் என்ன சாமி, ஒன்றுமே இல்லை என்ற நிலைக்குப் போய்க்கொண்டிருப்பார்கள். இம்மாதிரியாக, நமது வாழ்க்கையினுடைய நிலைகள் பயனற்றதாகப் போய்விடாதபடி, நாம் மெய்வழி காண்போம். நமக்குள் இருக்கக் கூடிய துன்பத்தைப் போக்குவதற்குத் தான், இந்நேரம் வரையிலும் யாம் பேசியது. 
அந்த ஆயுதத்திற்குள், (ஆத்ம சுத்தி)
பல இரகசியங்கள் இருக்கின்றது.
(பக்கம் 77-78)
அன்று, மெய்ஞானிகள் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியை, அவர்கள் வளர்த்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெற்றபின், அந்த அலையின் தொடரை,  தன்னுடன் கூடிய மக்களின்பால் அந்த உயர்ந்த சக்தியை, அங்கேயும் பதிய செய்து, அவர்கள் உடலிலே ஆரோக்கிய நிலைகளை வரச்செய்து, அதன்பால் அவர்களிடம் நல்ல எண்ணங்களை வெளியிட்டபின், அந்த உணர்வின் சத்தின் துணை கொண்டு,  தனக்குள் வளர்த்துக் கொண்டார்கள்.
எனென்றால,இந்த பூமியிலே இருப்போருடைய நிலைகளுடன், இணையச் செய்து, தனக்குக் குழந்தைகள் இல்லையென்றாலும், பலருடைய எண்ணங்களிலும் அந்த மெய்ஞானிகளின் உணர்வை, விண்ணின் சக்தியை பாய்ச்சச் செய்து,  அந்த ஞானிகள் உடலை விட்டுச் செல்லும் போது, அவர்கள் தான் விண் செல்லுவதற்குத் தான்,  கடந்த கால மகரிஷிகள் எல்லோருமே இவ்வாறு செய்தார்கள்.

இன்று போகரோ, வான்மீகியோ, வியாசரோ, அகஸ்தியனோ, அவர்களைப் போன்று எண்ணிலடங்காத மகரிஷிகள் எல்லோருமே, தமக்குள் பெற்ற ஆற்றலை
சாதாரண மக்களின் மத்தியிலே,
தன் உணர்வின் சொல்லாலே, அங்கே பாய்ச்சப்பட்டு
அவர் உடல்களில் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகளை மாற்றி,
நல்ல சொல்களை,  அவர்கள் வாழ்க்கையில் வெளிப்படச் செய்து
அவர்கள்பால்,  நல்ல எண்ணங்களை ஈர்த்துக் கொண்டார்கள்.

இப்போது, யாம் உங்களுக்கு ஒரு நன்மையை செய்கிறோம் என்று எண்ணும்போது, அந்த நன்மையின்பால் அந்த நபரை எண்ணி எம்மைப் பார்க்கின்றீர்கள். அவரால் நல்லது நடந்தது என்றும், அவ்வாறு, நீங்கள் எண்ணும் அதே எண்ண அலைகள், ஒன்று சேர்த்துக் கலக்கிறது.

உங்களது உணர்வின் எண்ணம், எமக்குள் பதிவாகின்றது. எமது எண்ணம், உங்களுக்குள் நல்லதை உருவாக்குகின்றது.  அப்படி நல்லதை உண்டாக்கப்படும் போது, அந்த உணர்வு கொண்டு யாம் இந்த உடலை விட்டுச் சென்றாலும், நீங்கள் எல்லோரும் எண்ணும்போது, யாம் விண் செல்ல முடிகின்றது.

இப்படித்தான், அன்று மெய்ஞானிகள் ஒளியின் சரீரம் பெற்று, விண் சென்றார்கள்.  ஆகவே,  நாம் அனைவரும் அவர்கள் சென்ற வழியிலேயே விண் செல்வோம், எமது அருளாசிகள்.
(பக்கம் 78-85)
நாம் அனைவரும் இந்த தியானத்தின் நிலைகள் கொண்டு, நமக்குள் ஆற்றல் பெற்றபின், யார் துன்பப்பட்டு வந்தாலும், நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டு,  அவர்கள் உடலில் இருக்கக்கூடிய தீமைகளை நீக்க,  அவர்களையும், அந்த ஆத்ம சுத்தி செய்யப் பழக்குங்கள்.

யாம் எப்படி, உங்களை நல்லதாக்க வேண்டுமென்று விரும்பி, இந்த ஞானத்தின் வழி முறை கொண்டு உங்களுக்குள் சேர்க்கச் செய்கின்றோமோ, இதை போன்று,  நீங்களும் செய்யுங்கள். 

உங்கள் மூச்சாலும் பேச்சாலும், மற்றவர்களுடைய துன்பத்தைப் போக்கச் செய்யுங்கள். இதை, உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம்.

நீங்கள் உங்களை நம்புங்கள். நாம் எடுக்கும் தியானத்தின் மூலமாக, ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெறமுடியும்.
யாரோ செய்து கொடுக்கிறார்,
எவரோ செய்து கொடுப்பார் என்று எண்ணாதபடி,
நாம் இதைப் பெறமுடியும்.
இந்த ஆற்றல் மிக்க சக்தி நம் உடலில் உண்டு,
அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெற முடியும்
என்ற நிலைக்கு, நாம் வரவேண்டும்.

உயிருடன் தொடர் கொண்டு, அந்த அலையின் வரிசையில் இங்கே பாய்ச்சப்படும் போது, ஒவ்வொன்றும் நல்லதாகும்.  நம்மால் முடியுமா? என்ற பலவீனத்தை மட்டும் விட்டு விடுங்கள்.  எண்ணியதை படைக்கும் சக்தி, உங்களை இயக்கிக் கொண்டிருக்கும், உங்களை ஆண்டு கொண்டிருக்கும், இந்த உயிருக்கு உண்டு.

ஆக, அதனுடைய துணை கொண்டு, அது எப்படி ஒளியாக நம்மை உருவாக்குகின்றதோ, நம் உணர்வின் செயலை உருவாக்குகின்றதோ, அதைப் போன்று,  நம் உணர்வுகள் அனைத்தும், அந்த ஈசனின் உணர்வின் ஒளி அலைகளாக மாறி,  அந்த உணர்வுகள் செயல்படும், 

(உயிர் நம்மை ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும்) இந்த உணர்வாக, நாம் மாற்ற வேண்டும்.

ஒன்றை ஒன்று விழுங்கித் தான், ஒன்றுக்குள் மறைந்து வருகின்றது. ஆனால், எல்லாவற்றிருக்கும் ஞானம் உண்டு. இன்றைக்குக் காற்றாக வருகிறதென்றால்,  இந்தக் காற்றும், போர் முறைகளிலே தான் வருகின்றது.

பல அணுக்களின் நிலைகள் கொண்டு, நம் பூமிக்குள் விளைந்த நிலைகள் கொண்டு, எதிர் நிலையான அலைகள் பட்டவுடன், ஒன்றுக்கொன்று போர் செய்துதான், சுழிக்காற்றும் வருகின்றது. ஆக, இவையெல்லாம், ஒன்றையொன்று வெல்லும் போது, ஏற்படக் கூடிய மூச்சின் அலைகள்தான்.

ஆகையினாலே, எல்லாமே இயற்கையின் செயல்தான். இவை அனைத்தையுமே அறிந்துணரக்கூடிய ஆற்றல், மனிதனுக்கு உண்டு. ஆகவே,
மனிதனாக இருக்கக் கூடிய நாம்
எதைக் கொண்டு,  எதை வெல்ல வேண்டும்?
நாம் இருளை வென்று, ஒளியாக்க வேண்டும்.
இதுதான் கடைசி நிலை.
ஆகையினாலே, அத்தகைய தன்மையை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்குத்தான், எமது குருநாதர்,  யாம் பெறுவதற்கு எதைச் செய்தாரோ, அதைப் போன்று,  எமக்குள் அவர் காட்டிய ஆற்றலை யாம் பெற்றாலும்,
அந்த ஆற்றலின் தன்மையை உங்களுக்குப் பாய்ச்சுகின்றேன்.
அந்த ஆற்றலை நீங்களும் பெறலாம்.
நீங்கள் பெறப் போகும்போது,
உங்கள் மூச்சலைகளை,
நீங்கள் சந்திப்போரும் பெற்று
அவர்களும் அந்த ஆற்றலைப்  பெறலாம்.

அந்த ஆற்றல் மிக்க சக்திகளை, உங்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, எப்படி, ரேடியோ நிலையத்தில் ஒலிபரப்பு பண்ணிக் கொண்டிருப்பதை, உங்கள் வீட்டில் ரேடியோவைத் திருப்பி வைத்தவுடன், அந்த அலைவரிசையில் நீங்கள் கேட்கின்றீர்களோ,  அதைப் போன்று,
உங்கள் ஒவ்வொருவருக்கும், நல்லது நடக்க வேண்டுமென்று,
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி,  நீங்கள் அனைவரும் பெற்று,
புனித நிலைகள் பெறவேண்டுமென்று,
சதா,  யாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
அதை யாம் ஜெபித்து, அலைகளாக அனுப்பும் போதுநீங்கள் நினைத்தவுடன், ஈர்க்க முடிகின்றது.
அந்த உணர்வு, உங்களுக்குள் நல்லதாகவும் சேர்கின்றது.
உங்கள் மூச்சு பிறர்மேல் பட்டவுடன், அவர்கள் துன்பத்தையும் போக்க முடிகின்றது.

இதையெல்லாம், நமக்குள் ஐக்கிய மனோபாவத்துடன், ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு,  அந்த உயர்ந்த தன்மைகளை நமக்குள் வளர்த்து, அந்த ஒளியின் சரீரமாக மாறவேண்டும்.

ஆகையினாலே, ஒவ்வொருவரும் ஐக்கியக் குடும்பமாக வளர்ந்து,  இந்த பூமியில் வரக்கூடிய பிரளயத்திலிருந்து, நாம் அனைவரும் மீண்டு,  இந்த மனித சரீரத்திலிருந்து ஒளி சரீரமாகப் பெறவேண்டும். அதை நீங்கள் அனைவரும் பெறவெண்டுமென்று, யாம் பிரார்த்திக்கின்றோம்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் ஒளியின் சக்திகளை நாம் எடுக்கும்போது, பெரும் வெள்ளமாக மாறி, அந்த பெருங்கடலான ஒளிக் கடலுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். தனித்து, சிறிது நீர் வெகு தூரம் செல்லாது.

ஆனால், வாய்க்காலில் செல்லும்போது, சில செத்தைகளினால் தடுத்துவிடும். சிறிய வாய்க்கால்களாகச் சென்று, ஒரு ஓடையாக வரும்போது, சிறிதளவு பிளந்து செல்லும். ஆனால்,  பெரும் நதியாகச் செல்லும் போது, அதனுடன் எது பட்டாலும் இட்டுச் சென்றுவிடும்.

இதைப் போன்று நாம் எடுப்பது,  ஒவ்வொருவரும் தனித்து என்று எண்ண வேண்டாம்.  நாம் எடுக்கும் ஒவ்வொருவருடைய எண்ண உணர்வினுடைய நிலைகள்,  உள் நின்று, 
மெய்ஞானியின் அருள் வழி கொண்டு,
பெரும் நதியாகச் செல்கின்றோம். 

இதிலே, நாம் ஒருவர் தப்பித் தவறிக் கீழே விழுந்தாலும், அந்த நதியின் நிலைகள் கொண்டு கடலிலே சேர்த்துவிடும். அந்த மெய் ஒளியுடன் கடலிலே சேர்த்துவிடும்.

காரணம், இந்த உடலை விட்டு யார் சென்றாலும், அந்த இறந்த வீட்டில் துக்கத்தைக் கொண்டாடாதீர்கள். 

அவர் சரீரத்திலே வாழ்ந்த,  இந்த துன்பக் கடலில் இருந்து,  இன்பக் கடலுக்குச் செல்கின்றார் என்ற உணர்வுடன்,  இறந்துபோன அந்த உடலை விட்டுச்சென்ற அந்த உயிராத்மாவை, சப்தரிஷி மண்டல ஒளியலைகளுடன் கலக்க வேண்டுமென்று,  ஐக்கிய மனோபாவத்துடன், எல்லோரும் எண்ணுங்கள்.

என்றென்றும், விண்ணிலே அந்த ஒளிச் சுடர்கள்,
இந்த பூமிக்கும்,
இந்த மனித உடலான நிலைகள்
நல்ல உணர்வுகள் தேடும் அந்த உணர்வுகளிலே ஊடுருவி,
அந்த நிலைகள் பெறவேண்டுமென்று,
நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்.

இவ்வாறு, தியானமிருந்த அந்த உயிராத்மா ஒளியாகச்  செல்லப்படும் போது,  இந்த நதியினுடைய தன்மைகளில், அந்த அலைகளில் அந்த உயிராத்மாவை,  அந்த விண்ணிலே ஒளிக்கடலிலே சேர்த்து, என்றுமே அந்த சப்தரிஷிகளின் அருள் ஒளியிலே கலந்துவிடலாம்.  அதற்கு, நாம் ஒருங்கிணைந்த நிலைகளில் செயல்படவேண்டும். எமது அருளாசிகள்.
DSC00019.JPG