ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 29, 2012

ஆன்மாவின் நிலைகள்

Inline image 1        Inline image 2

சாமி புத்தகம்  ஆன்மாவின் நிலைகள்   
(பக்கம் 23-32)
மனிதனாகப் பிறந்த நாம், எதனையும் உருவாக்கத் தெரிந்து கொண்டவர்கள்.  நாம் இன்றைய மனித வாழ்க்கையில்,  மந்திரங்களைச் சொல்லி நமக்குள் உருவாக்கிக் கொள்கின்றோம் உருவாக்கிய பின் அந்த தெய்வம் தான்,  எல்லாம் என்ற வகையில் சதா அந்த மந்திரத்தை சொல்லி வருகின்றோம்.

உதாரணமாக முருகன் படத்தில் இருந்து வரக்கூடிய கலர்,  அதன் மேல் போட்ட துணியின் கலர்,  இவைகளைக் கண் பார்த்து, அதன் கலர்களைக் காட்டுகின்றது. அதிலிருந்து அந்த உணர்வை எடுக்கின்றது. எடுக்க எடுக்க,  அந்த முருகன் மாதிரியே,  நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

நாம் ஜெபித்த சொல் (மந்திரம்),  நமக்குள் பதிவாகின்றது. இந்த உணர்வின் தன்மையை ஆயுள் முழுவதும்,  நமக்குள் உருப் பெறச் செய்கின்றோம். யாராவது நம்மிடம் வந்தார்கள் என்றால்,
முருகன் அருள் கிடைக்கும்,
உனக்கு நன்றாகி விடும்
என்று சொல்கின்றோம். அந்த வலுவான எண்ணங்கள் அவர்களுக்குள் சென்றவுடன், அவர்களுக்கு நன்றாகி விடுகின்றது.

இருந்தாலும் இதை உருவாக்கப்பட்டு,  என்னென்ன மந்திரத்தை சொல்லுகின்றேனோ, நீ இத்தனை முறை மந்திரத்தைச் சொன்னால், முருகனையே நீ  காணலாம்,  அவன் அருள் கிடைக்கும். இதைப் போன்று,  வராகி,  சுடலை மாடன்  என்று சொல்லுவார்கள். அந்தந்த உணர்வுகள் குவிக்கப்பட்டு, அந்த உருவம் உனக்குள் தெரியும்.இந்த உணர்வை வளர்த்து வந்தால், நாம் இறந்தபின்,  இதே மந்திரத்தைச் சொன்னார்களென்றால், அந்த உணர்வையே எடுத்து, நாம் போட்ட பூஷ்பத்தைப் போட்டால் முருகனையே கைவல்யப்படுத்தலாம்,  என்றெல்லாம் சொல்வார்கள்.

அப்பொழுது,  முருகனையே எனக்குள் வடித்துக் கொள்கின்றேன். எனக்குள் உருவான நிலைகளில்,  என் உருவம் தெரியாது.  எனக்குள் எந்த உருவத்தை நினைவுபடுத்திக் கொண்டேனோ,  அந்த அலைகள் பரவும். அப்பொழுது அங்கு,  முருகனாகக் காட்சி கொடுக்கும்.

காட்சிகளில்,  முருகனாகப் பார்ப்பது எல்லாம்,  பக்தி கொண்ட நிலைகள்தான்.  ஒரு முருகன் ஒரு விதமாகப் பேசுவார். இன்னொரு முருகன் வேறு விதமாகப் பேசுவார். அவரவர் உணர்வில் கலந்த உணர்வின் வேகங்கள்தான்,  அந்தந்த அலைகளாகப் படரும் பொழுது, அவரவர்களுக்குக் கிடைத்த நிலைகள் கொண்டு பேசுவார்கள்.

ஒரு முருகன் ரோட்டில் உருளும்,  இன்னொரு முருகன்,  இரு நான் பார்க்கின்றேன் என்று ஆசீர்வதிக்கும். இப்படி முருகனில்,  யார் யார் எந்தெந்த உணர்வு கொண்டு வளர்த்தார்களோ,  அந்த அலைகளாகப் படரும். படர்ந்த அலைகள் குவிந்தவுடன், முருகனையே  தரிசனம் செய்தேன்  என்று சொல்வார்கள். அந்த உணர்வின் ஒலிகள் வரும் பொழுது அதற்குரிய மந்திரத்தைச் சொன்னால் போதும், சஷ்டிக் கவசத்தைப் பாடுகின்றார்கள்.

அந்த உணர்வின் ஒலிகள் ஒருவர் மேல் பட்டவுடன்,  அந்த உடலில் இருப்பது எல்லாம் இங்கு இழுத்துவிடும். அந்த உணர்வுகள் இவருக்குள் வந்தபின்,  கஷ்டமெல்லாம் இவருக்கு வந்துவிடும்.

இப்படி ஆயிரம் கஷ்டம் வந்தவுடன், முருகன் இப்படி சோதிக்கின்றான் என்பார்கள்.

ஒரு சமயம், நான் சுற்று பயணம் செய்யும் பொழுது, ஒரு கிராமத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அந்த கிராமத்தில் ஒரு அம்மா இருந்தது. அது ஒரு முருக பக்தர். அந்த அம்மாவிற்குச் சொத்து அதிகம் இருந்தது, எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்து விட்டது.

என்னை, அந்த அம்மா இருந்த வீட்டில், திண்ணையில் உட்காரச் சொன்னார்  குருநாதர்.  அந்த அம்மாவால், எழுந்து நடக்க முடியாது.

அந்த அம்மாவிற்கு,   வயது எழுபது இருக்கும். அது புலம்பிக் கொண்டே இருந்தது. என்னிடம் இருந்த சொத்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு,  என்னை அநாதையாக்கி விட்டார்கள். செல்வமும் செருக்கும் உள்ள பொழுது,  என் மடிமேல் உட்கார்ந்து விளையாடுவையே, முருகா!, இப்பொழுது எங்கடா போனாய்?. செல்வம் இருப்பவர்களைத் தான் பார்ப்பாயா?  நான் இப்பொழுது அநாதையாக இருக்கின்றேன் என்னைக் காக்கவில்லையா? நான் அநாதைதானா?, என்று புலம்பிக் கொண்டு உள்ளது. ஆனால், உடலெல்லாம் மலத்தால் சூழ்ந்து, அசிங்கமாக வைத்திருந்தது.

அந்த அம்மா வீடு பெரியது,  ஆனால் சாலையில் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். முருகா!,  நான் நினைக்கும் பொழுதெல்லாம் வரம் கொடுத்தாய்,  நான் சொல்லுகின்றவருக்கு எல்லாம் நல்லது செய்தாய்,  எனக்கு நல்ல வழியும் காட்டினாய்.  ன்னிடம் செல்வம் இல்லையென்று, நீ கூட வராமல் போய்விட்டாயேடா,  என்று சொல்லிக் கொண்டு இருந்தது.

நான் அவர்களுக்கு எல்லாம் செய்தேனே,  எனக்கு இப்படிச் செய்கின்றார்களே,  எனக்குச் சொத்து வேண்டாம், நீ இருந்தால் போதும் முருகா. என்னை இந்த நிலைக்கு விட்டு விட்டார்கள்,  நான் அசிங்கமான நிலையில் இருக்கின்றேன், என்னை கவனிப்பதற்கு, நீ கூட வரவில்லையே, இந்த அசிங்கத்தைப் பார்த்து, நீ கூட விலகி விட்டாயா?  என்று கேட்டுக் கொண்டிருந்தது.  இரண்டு மணி நேரம்,  அந்த அம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இதையெல்லாம்,  என் அனுபவத்தில் நான் கண்டதைச் சொல்லுகின்றேன்.  அந்த அம்மா புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து,  நான் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன். அந்த அம்மவை பக்கத்தில் இருந்த கிணற்றில் குளிக்க வைத்து,  துணிகளை துவைத்துக் கொடுக்கச் சொன்னார் குருநாதர்,  செய்தேன். பின்பு,  ஆசீர்வாதம் கொடுத்தேன்.

மனது தெளிவடைந்து அந்த அம்மா அமர்ந்தது,   முருகா!, நீ வந்துவிட்டாயா?. நீ இந்த ரூபத்தில் வருவாய் என்று எனக்குத் தெரியவில்லையே, என்று முருகனைத் தான் நினைக்கின்றது.

என் பிள்ளை மாதிரி என் மடியில் அமர்ந்து விளையாடுவாய், இப்பொழுது, பெரிய ஆளாய் வந்து இருக்கின்றாய், நீ திருடனப்பா  என்று சொல்லுகின்றது. அந்த இடத்தில், அவர்கள் உணர்வுகளைத் தெரிந்து கொண்டு,  அந்த அம்மாவிற்கு உபதேசம் கொடுக்கின்றார், குருநாதர்.

குருநாதர்,  நீ நல்லதைச் செய்தாய்,  ஆனால், பிறருடைய கஷ்டமெல்லாம்,  நீ எடுத்துக் கொண்டாய். உனக்குப் பணம் வேண்டாம் என்று அவர்களிடம் கொடுத்து விட்டாய். அவர்களின் கஷ்டத்தை நீ எடுத்துக் கொண்டாய். 

அவர்களின் கஷ்டங்களை நீ எடுத்து, அது நோயாக வந்து விட்டது.  கடைசியில் நீ என்னைக் கைவிட்டு விட்டாய் என்று,  வெறுப்பைத்தான் எண்ணுகின்றாய். 

இந்த ஆறாவது அறிவின் (முருகன்) தன்மையை உனக்குள் ஒளிச் சுடராக மாற்றிடாமல்,  உடல் பற்றைத் தான் வைத்தாய்.
சொத்து வேண்டாமென்று விட்டு விட்டாய், நீ கூட மறந்து விட்டாய் என்று,   உடல் பற்றைத் தான் வைத்தாய்.

பக்தியில்,  துயரத்திற்கு அவன் (முருகன்) காக்கவில்லை என்ற நிலை வருகின்றது.  அந்த சமயத்தில்,  அருள் ஞானிகள் காட்டிய நிலைகள், இங்கு வரவே இல்லை என்பதைக் காட்டுகின்றார், குருநாதர். 

ஆனால்,  இதே நிலைகளில்,  பக்தியில் இந்த ஆன்மா வெளியே சென்றால்,  இது யார் மேல் வெறுப்பு கொண்டதோ, அவர் உடலுக்குள் தான் இந்த ஆன்மா செல்லும் என்று குருநாதர் சொல்கின்றார்.

அந்த அம்மாவிடம் கேட்கப்படும் பொழுது, என் சொத்துகளை சொந்தங்களுக்கு எழுதி வைத்தேன்  என்று சொல்லுகின்றது. சொத்துகளை வேண்டாம் என்று ஒதுக்கினாலும், உடலை விட்டு பிரியும் இந்த ஆன்மா, அவர்களிடமே (அந்த அம்மாவின் சொந்தங்கள்) செல்லுகின்றது.  

இதை விட்டு விட்டு, இன்னொரு இடத்திற்குப் போகச் சொன்னார் குருநாதர்.

அது ஒரு சின்ன கிராமம், அது பெண், இது ஆண். அவருக்கு வயது அதிகமாகிவிட்டது. என்னை ஏன்டா சோதிக்கின்றாய் முருகா, எல்லாவற்றையும் கொடுத்தாச்சு,  பேரன் பேத்தி எடுத்தாச்சு,  என்னை நீ உன்னிடம் அழைத்துக்கொள் முருகா.  எதுக்கு இந்த கஷ்டமெல்லாம் பட வேண்டும்?, பேரனுக்கு சம்பாதித்து வைத்தோம்,  அவன் அப்படித் திரிகின்றான்,  மகன் இப்படித் திரிகின்றான், எல்லாம் பார்க்கச் சகிக்கவில்லை,  எவ்வளவு கஷ்டப்பட்டேன், சம்பாதித்தேன்,  அவர்கள் செய்கின்றதைப் பார்க்கும் பொழுது, எனக்குப் பிடிக்கவில்லை முருகா”. அவர் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்.

என்னை அங்கே போகச் சொல்லுகின்றார் குருநாதர்,  பக்தியில் எந்தளவிற்கு இருக்கின்றார்கள் என்பதைப் பார்,  என்கிறார். எந்த முருகன் மேல் பக்தி வைத்தாரோ, இவருடைய நல்ல ஒழுக்கமும், அந்த சொத்து மேல் பற்று இல்லையென்றாலும்,  சொத்து சேர்த்து வைத்தேன்,  பையன் ஒழுக்கமாக இல்லையே என்ற நிலை தான் வளருகின்றது.

அவர்கள் செய்வது சகிக்கவில்லையப்பா,  நான் உன்னிடமே வந்து விடுகின்றேன் என்ற இந்த எண்ணம்தான் வளருகின்றது. சொத்தையும், பையனையும் வெறுக்கின்றார். முருகனிடம் வருகின்றேன் என்கின்றார். திருச்செந்தூர் முருகனைத்தான் எண்ணிக் கொண்டு இருக்கின்றார்.

நீ எத்தனையோ தீயதுகளை சம்காரம் பண்ணினாய். என் பையன்களுக்கு தீமைகள் வராதபடி சம்காரம் பண்ணப்பா. அவர்களுக்கு நல்ல வழி காட்டப்பா  என்று முருகனையே எண்ணிக் கொண்டிருக்கின்றார்.  இதே மாதிரி முருகனையே எண்ணிக் கொண்டிருந்த ஆவி,  எப்படி இவர் உடலில் நுழைகின்றது என்பதை, குருநாதர் காட்டுகின்றார்.

அவர் அருளாடுகின்றார்,  அப்பொழுது வருகிறவர்களுக்கு எல்லாம் நல்லதாகும் என்று சொல்லுகின்றார். நல்லாதாகின்றது. எவ்வளவோ நன்மைகளைச் செய்தார். இந்த உணர்வின் ஆன்மா உடலுக்குள் சென்றவுடனே,  பிறருடைய கஷ்டங்களைப் பார்த்தால்,  மகனே வந்துவிட்டாயா,  உன் நோயெல்லாம் தீரும் என்று சொன்னவுடனே,  இந்த உணர்வின் வலு அவரிடம் இருப்பதால்,  அந்த நோயெல்லாம் இவரிடம் வந்து விடுகின்றது,   மற்றவருக்கு நல்லதாகின்றது.

வாத நோய் உள்ளவருக்கெல்லாம்,  திருநீறு கொடுத்திருக்கின்றார். அந்த உணர்வுகள் வரவர,  இவருக்கு கைகால் வராமல் போய்விட்டது. முருகா!,  எல்லோருக்கும் நல்லது செய்தாயே,  என்னை இப்படி விட்டு விட்டாயே  என்று புலம்புகின்றார்.

சிறிது காலம் மற்ற இடங்களில் சுற்றித் திரிந்து விட்டு,  திரும்ப அவர் இருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். கை, கால், வராமல் கிடந்தார். நன்மை செய்யும் உணர்வுகளை தனக்குள் வலுவாக்கிக் கொண்டார்.

அவருக்குள் இந்த உணர்வுகள் சென்றபின், 
பிற உடல்களில் இருந்து இழுத்து அவர்களுக்கு நல்லது ஆகின்றது. 
ஆனால், பிறருடைய தீய உணர்வுகள்,
இவருக்குள் விளைந்து, 
இந்த உடலை வீழ்த்துகின்றது. 
முருகன் எனக்கு தரிசனம் கொடுத்தான், எல்லாம் செய்தான், இன்றைக்கு அவனைக் காணவில்லையே,  நோய் வந்தவுடன் இதையே தான், அவர் நினைக்கின்றார்.

தீமையின் உணர்வுகள் வந்தவுடன்,  அவர் எடுத்துக் கொண்ட நிலைகள் மங்கிப் போகின்றது. மங்கியபின்,  இந்த உடலை விட்டுச் சென்று விட்டால்,  கடைசி நிலைகளில், அந்த உயிரான்மா எப்படிப் போகின்றது? என்று அந்தளவிற்கு, அழைத்துச் சென்றார் குருநாதர்.

அந்த உயிராத்மா மனித உடலுக்கு போவதில்லை. எத்தனை பேருடைய நஞ்சுகள் இதில் கலந்ததோ,  அந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள், பரமாத்மாவில் கலக்கின்றது. கலந்தபின்,  இதற்கு ஒத்த உடல் கிடைக்கும் வரை,  சூட்சுமத்திலேயே இருக்கின்றது. அதைப் பின்தொடர்ந்து, போகச் சொல்கின்றார் குருநாதர்.

எனக்குச் சரியான பாதுகாப்பு கொடுத்தார். நீ இந்த எண்ணத்தில் இருந்தால் உன்னிடம் வந்துவிடும் என்று குருநாதர் சொல்லுகின்றார்.

பிறருடைய வேதனைகளை, அவர் எவ்வளவு எடுத்துக் கொண்டாரே, அதற்குத் தக்க“கட்டுவீரியன்” பாம்பின் ஈர்ப்பிற்குள் போகின்றார்.


இந்த ஆன்மா எவ்வளவு உயர்ந்ததை செய்தது,  ஒரு உடலுக்குள் போனவுடன்,  பல விஷத்தன்மையை எடுத்தது. இந்த உணர்வின் தன்மை கட்டுக்கட்டாக விளைகின்றது.

இந்த உடலைவிட்டுச் சென்றபின்,  அந்த ஆன்மா கட்டுவீரியன் பாம்பின் ஈர்ப்பிற்குள் எப்படிப் போகின்றது. அந்த உணர்வின் தன்மை கருவாகி,  அதே பாம்பாக ரூபமாகின்றது. இதை நேரடியாக, அந்த உணர்வைத் தேடிப் பிடித்துப் பார்க்கின்றவரை,  என்னை விடவில்லை குருநாதர்.  இப்படித்தான் சில அனுபவங்களைக் காட்டினார். குருநாதர்.

அவர் (பக்தியில் இருந்தவர்) தப்புச் செய்யவில்லை, பக்தி கொண்டார். நல்லதைச் செய்தார், நன்மையும் செய்தார்.  அந்தத் தீய உணர்வுகள் இவருக்குள் வரும் பொழுது, தன்னைக் காக்கக் கூடிய சக்தி,  அந்த மகரிஷிகள் காட்டிய சக்தி அவரிடம் இல்லை. 

ஏனென்றால்,  நஞ்சின் உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள். மனிதருக்குள் விளைய வைத்த உணர்வுகள்,  நன்மைகள் பல செய்ய வேண்டும் என்று எண்ணினாலும், அவர் உடலில் இருந்து வந்த உணர்வுகள், நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது. அந்த ஆன்மா, இன்னொரு உடலுக்குள் சென்றால், என்ன செய்கின்றது? என்பதைத் தெளிவாகக் காட்டினார்.

இன்று பெரும் பகுதியானவர்கள்,  தங்கள் கஷ்டத்தைத்தான் சொல்லுகின்றார்கள். நாம் அதைக் கேட்காமல் இருக்க முடியாது. ஆனால் கேட்டவுடன்,  பிறருடைய கஷ்டமான  உணர்வுகள் நமக்குள் வளராமல், விளையாமல் தடுக்கும் நிலையாக,  நஞ்சினை வென்று,  உணர்வினை ஒளியாக்கிய,  என்றும் பதினாறு என்று, மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும்,  அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும்,  பேரருளையும் பேரொளியையும், நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று இணைத்துப் பழக வேண்டும். 

இவ்வாறு செய்தோம் என்றால்,  பிறருடைய தீமைகள் நமக்குள் வராமல் தடுக்கின்றோம்,  இந்த வாழ்க்கையில்,  மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழும் நிலையும்,  இந்த வாழ்க்கைக்குப் பின் நம் உயிராத்மா பிறவி இல்லா நிலை என்னும் அழியா ஒளி சரீரம் பெறுகின்றது. இது தான் எல்லை.

Inline image 3


(பக்கம் 44-50)

மூர்த்தி என்பவர், ராணுவத்திற்கு போய்விட்டு வந்தவர், ஓய்வு பெற்று இங்கு வந்திருந்தார். இங்கு வந்தபின், அவர் தீவிர தி.க. மெம்பராகி விட்டார். சாமியாவது பூதமாவது என்று பேசிக் கொண்டே இருப்பார். அவருடைய மைத்துனர் ஒரு ரேடியோ மெக்கானிக், அவரும், எமது சைக்கிள் கடைக்கு வந்திருந்தார்.

யாம், 1954ல் விஜயகுமார் மில்லில் மேஸ்திரியாக வேலை பார்த்துக் கொண்டு இருந்த பொழுது, என்னுடன் இராஜரத்தினம் என்பவர், வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு இரண்டாம் தாரமாக, ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்தார்கள்.

என் சைக்கிள் கடையில் ரேடியோ மெக்கானிக்கும், அவருடைய மைத்துனரும் இருந்த பொழுது,  இராஜரத்தினம் அங்கு வந்தார்.

அவர் எம்மிடம், என் மனைவி, ரோட்டில் இருக்கும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு, கிணற்றில் போய்ப் போடுகின்றது. ஊரில் உள்ளவர்கள் எம்மை அடிக்க வருகின்றார்கள். சங்கிலியை வைத்துக் கட்டிப் போட்டுவிட்டு வந்திருக்கின்றேன்,  நீங்கள் வந்து, அதைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்.

கூட்டமாக இருக்கின்றதே, என்று யாம் சொன்னோம்.

குதிரை வண்டி கூட்டி வந்திருக்கின்றேன், போகலாம் என்றார்.

கடையிலிருந்து அவர் வீட்டிற்குச் சென்றோம். வீட்டைப் பூட்டி இருவர் வெளியில் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் சென்று, அங்கே கதவைத் திறந்து பார்த்தால், ஆளைக் காணவில்லை. சங்கிலி போட்டு, தூணோடு சேர்த்துக் கட்டிப் போட்டு வைத்திருந்தார்கள். அந்த வீட்டைச் சுற்றி, பெரிய சுற்றுச் சுவர் இருந்தது.

ஆனால், சங்கிலியைக் கழற்றிப் போட்டுவிட்டு, வெளியில் போய்விட்டது. சுற்றுச் சுவரைத் தாண்டி, வெளியில் போய்விட்டது. சுற்றுச் சுவருக்குப் பின்பக்கம், தெரு இருந்தது. கட்டிப் போடச் சொன்னவர் வீடு, அந்தத் தெருவில் இருந்தது. வீட்டில், அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

என்னைக் கட்டிப் போடச் சொல்லிவிட்டு, நீ இங்கே சாப்பிடுகின்றாயா? என்று அவரின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தது. கூட்டம் அனைத்தும் அங்கு நின்று கொண்டிருந்தது. இதெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்.

யாம் அங்கு சென்று பார்த்தோம். சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவருடைய, கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தது. ஆனால், அது சாப்பிட்டு, எட்டு   நாள் ஆகியிருந்தது. எலும்பும் தோலுமாக இருந்தது.

யாம் அங்கு சென்றவுடன், வாங்க வந்துட்டீங்களா! என்றது. தன் கணவனைப் பார்த்து, இவனுக்குச் சொல்லுங்க,  இவனுக்கு, அறிவே இல்லை என்று சொன்னது. இவன், என்னைக் கட்டிப் போட்டுவிட்டான் என்று சொன்னது.

சரி, நாம் போகலாம், என்று யாம் சொன்னோம்.

இவர்களுக்கெல்லாம் புத்தி சொல்லு, பிறகுதான் நான் வருவேன் என்றது.

ஏனய்யா இப்படிச் செய்கின்றீர்கள்? என்று அவர்களுக்கு புத்தி சொல்லியபின், எம்முடன் வந்தது. குதிரை வண்டியில் ஏற்றினார்கள். முன் பக்கம், மூன்று வாலிபர்கள் அமர்ந்து விட்டார்கள். யாம் சைக்கிளில் பின் தொடர்ந்தோம்.

காவல் நிலையம் அருகில் வண்டி வந்தவுடன், கணவனைக் கீழே தள்ளிவிட்டு, ஸ்டேசனுக்குள் சென்று, அங்கிருந்த தடியை எடுத்து, போலீஸை அடிக்க ஆரம்பித்துவிட்டது. S.I. அங்கு வந்தார், அவருக்கும் அடி விழுந்தது. அந்த அம்மாவைப் பிடிக்கவே முடியவில்லை.

நாலைந்து பேர் சேர்ந்து பிடித்தாலும், ஒரே ஒதரில், அத்தனை பேரும் கீழே விழுகின்றார்கள். யாம் அங்கு சென்றவுடன், இவர்களுக்கெல்லாம் புத்தி சொன்னால்தான்,  நான் வருவேன் என்று சொல்லிவிட்டது.

அதை ஒன்றும் செய்யாதீர்கள், நல்ல ஆத்மாதான் என்று சொல்லியபின், எம்முடன் வந்தது.

சைக்கிள் கடைக்கு வந்ததும், மூர்த்தி என்பவர் அங்கு வந்தார். உண்மையிலேயே இது பேய்தானா? என்றார்.

உனக்கு ஏன்டா இந்த சந்தேகம்? என்று கேட்டது. அட, அறிவு கெட்டவனே, உனக்கு ஏன்டா சந்தேகம்?  என்று கேட்டது.

அவர்கள் சொல்கின்றார்கள், நீ பேசாமல் இரு, என்று யாம் சொன்னோம். மூர்த்தியிடம், சங்கிலியால் கட்டிப் போட்டதைக் கழட்டி விட்டது என்றோம்.

நீங்கள் தளர்ச்சியாகக் கட்டியிருப்பீர்கள், இப்பொழுது நான் கட்டுகின்றேன். கழட்டச் சொல்லுங்கள் பார்ப்போம் என்றார். கயிற்றில் கட்டி,   தண்ணீர் ஊற்றி, இதைக் கழட்டச் சொல்லுங்கள் பார்ப்போம் என்றார்.

அடப் போடா, மானம் கெட்டவனே, என்று கயிற்றைக் கழட்டிக் கையில் கொடுத்து விட்டது. கயிறு முழுதாக இருக்கின்றது. இரண்டாவதாக, கையைப் பின்னாடி வைத்துக் கட்டினார். உனக்கு ரோஷம் இருக்குதாடா? என்று சொல்லிக் கழட்டிக் கையில் கொடுத்துவிட்டது. மூன்றாவதாக,  தூணில் வைத்துக் கட்டினார்.

உனக்கு வலுவுமில்லை, சக்தியுமில்லை, என்னை ஏன்டா சோதிக்கின்றாய்? என்று முறைத்துப் பார்த்தது. பயந்து நடுங்க ஆரம்பித்துவிட்டார், இதை அவர் மைத்துனர் ராணுவக்காரர் பார்த்துக் கொண்டே இருந்தார்.

இதுவெல்லாம் வேஷம் என்று அவரும் பேசுகின்றார். சாமியாவது, பூதமாவது, இதுவெல்லாம் ஏமாற்று வித்தைகள் என்று அவரும் பேசுகின்றார். நாங்கள் ஒரு பொருளை எடுத்துக் கொள்கிறோம், நீ சொல்லிவிடு என்றார்கள்.

ஒருவன் முடியை எடுத்துக் கொண்டான். இன்னொருவன் மண்ணாங்கட்டியை எடுத்துக் கொண்டான். மூன்றாமவன், ஐந்து பைசாவை எடுத்துக் கொண்டான். கையில் வைத்திருப்பதை, நீ சொல்லு பார்க்கலாம் என்றார்கள்.

ஐந்து பைசாவை வைத்திருப்பவனைப் பார்த்து, பரவாயில்லை, நீ காசு வைத்திருக்கின்றாய், பிழைத்துக் கொள்வாய் என்று சொல்லியது. அந்தக் காசில், நம்பர் இன்னது இருக்குமென்று சொல்லியது.

அதைச் சொல்லிவிட்டாய், நீ இதைச் சொல்லு பார்க்கலாம் என்றார் இன்னொருவர். அவரைப் பார்த்து, அடப் போடா, மண்ணாங்கட்டி என்று சொல்லிவிட்டது.

மூன்றாமவன், இதை உன்னால் சொல்ல முடியாது என்றான். அடப் போடா. மயிராண்டி, என்று சொன்னது. இதைச் சொல்லிவிட்டு, ஆவேசமாக ஆட ஆரம்பித்துவிட்டது.

இதெல்லாம் முடிந்தவுடன், குருநாதர் இரண்டு கோழி முட்டை, வாங்கி வரச் சொன்னார். ஒரு மூட்டை பொரி, எட்டு தேங்காய் வாங்கி வரச் சொன்னார். வாங்கி வந்தவுடன், எட்டு தேங்காயையும் நெருக்கி வைக்கச் சொன்னார். பொரியைச் சாப்பிடு, இல்லையென்றால், முட்டைக் கருவை உடைப்பேன், கடுகைப் போட்டு வறுப்பேன், என்று சொல்லச் சொன்னார்.

சொன்னவுடன், தேங்காயையும், பொரியையும் தின்றது. பிறகு பொத் என்று கீழே விழுந்து விட்டது. பின்பு சுய நினைவு வந்தது. 

பின்பு, ஏன்டா, சண்டை நடக்கும் பொழுது, தப்பி வந்தால், கல்கத்தா காளிக்கு தேங்காய் போடுகின்றேன், என்று சொன்னாயில்லையா? என்றது.

நான் எப்பொழுது சொன்னேன்?  என்று மூர்த்தி கேட்டார்

நீ ராணுவத்தில் சண்டையில், பனிப்பாறையில் சிக்கி, எதிரியிடமிருந்து மீண்டு வரும் பொழுது, அந்த குகைக்குள் நின்று சொன்னாயா? என்று கேட்டவுடன், அந்த ஆள் வெலவெலத்துப் போய்விட்டது.

இல்லை என்று மறுக்க, என்னிடம் மறுக்க முடியாது, என்று கடகடவென எடுத்துச் சொன்னது.

நீங்கள் இத்தனை பேர் வந்தது. கூட வந்தவன், சூடுபட்டு கால் இழந்து இருந்தது, அதற்கு வைத்தியம் பார்க்காமல் இறந்தது. இதெல்லாம் சொன்னவுடன்,  பயந்து போய்விட்டார்.

அந்த இடத்தில், இன்ன மாதிரி சொன்னாய் ஆனால், இங்கு வந்தபின், ஒன்றும் செய்யவில்லை. அந்த உணர்வை எடுத்துச் சொன்னவுடன், அவருக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. அதற்குப் பின்தான் அவர் நம்பினார்.

பின்பு, ஆவிகளது உண்மை, இந்த உணர்வின் எண்ண அலைகள் எப்படி இயங்குகின்றது?  என்று யாம் விளக்கம் சொன்னோம். அதற்குப்பின் அவர் உணர்ந்தார். உணர்ந்தபின், எனக்கு அப்பொழுது ஆனது. என் உடலில் காலை மடக்க முடியவில்லை, என்று சொன்னார்.

உடனே, சாமியிடம் கேள், உனக்கு நன்றாகிவிடும் என்றது. விபூதி கொடுத்தேன். மின்னல் தாக்கியது மாதிரி இருந்தது, பின் கால் மடக்க முடிகின்றது என்றார்.

இதுவெல்லாம் எமது குருநாதர் மூலமாக, அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டு வந்ததைச் சொல்லுகின்றேன். ஆரம்பக் காலங்களில், உண்மையின் நிலைகளை உணர்வதற்கு இதையெல்லாம் செய்தது.

மனிதன் உடலில் விளைந்த உணர்வுகள் எப்படி ஆகின்றது? அதில் ஒரு அணு மனிதரிடம் பட்டுவிட்டால், அதே அணு நுகரப்படும் பொழுது ஆன்மாவாகி, சுவாசித்தபின், உணர்வுகளின் எண்ண அலைகளை எப்படிப் பரப்புகின்றது? 

வேண்டுமென்றே பேசுகின்றார் என்று நாம் நினைக்கின்றோம். ஒன்று பதிவாகிவிட்டால், உயிரில் பட்டு அந்த உணர்வை இயக்கும். டேப் ரெக்கார்டரில் பதிவான மாதிரி தான்.

இது மாதிரி, மக்கள் மத்தியில் பல நிலைகள். இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்பதற்குத் தான், யாம் திருப்பதிக்குப் போய், பத்ரிநாத் வரையிலும் சென்று, மறுபடி கன்னியாகுமரி வரையிலும் சென்று, கன்னியாகுமரியிலிருந்து மறுபடி கேதார்நாத் போய்,  சைனா (china) பார்டர் வரை சென்று, இங்கு வந்தது.

Inline image 3

(பக்கம் 55-59)

கோகர்ணத்தில் (கர்நாடகா) நடக்கும் நிகழ்ச்சிகளை, எமக்கு முன்னமே குருதேவர் சொல்லியிருந்தார். அதைப் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று பண்டரிபுரம் போகிற வழியில், கோகர்ணம் இறங்கினோம். பாவங்களை எப்படிக் போக்குகின்றார்கள், எது எதுகளைச் செய்கின்றார்கள் என்பதை, அங்கே யாம் பார்த்தோம். எம்மிடம், ரூ.1000-க்கு மேல் நாராயணசாமி கொடுத்தது இருந்தது.

நாராயணசாமி என்ன சொன்னாரென்றால், நீங்கள் எங்கு சென்றாலும், பணம் இவ்வளவு வேண்டுமென்று தந்தி கொடுங்கள், பணம் வந்துவிடும். பணத்திற்காகக் கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லியிருந்தார்.

கோகர்ணத்தில், ஒரு பிராமணர் வீட்டில்தான் சாப்பாடு. எம்மிடம் இருந்த பணத்தைப் பார்த்துவிட்டு, அங்கு ஒரு மடம் இருக்கின்றது. அதில், தனியாகப் படுத்துக் கொள்ளலாம் என்று வீட்டில் இருந்தவர் சொன்னார். ரூபாய் எல்லாம் இங்கு கொடுத்துவிடுங்கள், என்றார்.

அப்பொழுது, குருநாதர் காட்சி கொடுத்து, உன்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்று சொன்னார். உன் பணத்தை எடுத்துக் கொண்டு, உன் சரீரத்தைக் கடலில் வீசி விடுவார்கள் என்று சொன்னார்.

அவர்களுக்குக் காட்சி கொடுத்து, காளியைக் காட்டியவுடன், விழுந்து சரணடைந்து விட்டார்கள். தெரியாமல் தப்பு செய்துவிட்டேன். நான் உங்களைக் கொலை செய்யலாம் என்றுதான் இருந்தேன். பட்டுத் துண்டு, வேஷ்டி எல்லாம் எடுத்துக் கொள்ளலாம் என்றுதான் இருந்தேன், என்றார்.

பிறகு, யாம் அவரிடம் பட்டுத் துண்டைக் கொடுத்து, நீ செய்த பாவம் போகக் கடலில் குளி என்றோம். துண்டு, வேஷ்டி எல்லாம் தண்ணீரில் மூழ்கியவுடன், சல்லடைக் கண் போல் ஆகிவிட்டது.

இதைப் பார்த்து, அவர் என்னங்க, தண்ணீரில்தானே மூழ்கினேன், இப்படி ஆகிவிட்டதே என்றார். உன்னுடைய உணர்வுகள் இப்படி இருந்தது, நீ எதையாவது செய்திருந்தால், உன்னுடைய உணர்வுகள் உன்னைச் சுக்கு நூறாக்கிவிடும். 

நீ எத்தனை பேருக்குப் பாவ வினைகள் செய்திருக்கின்றாய்? இந்த மந்திர ஒலிகள் உன்னை என்ன செய்யும்? என்பதை,  இதிலிருந்து தெரிந்து கொள், என்று யாம் சொன்னோம்.

அதிலிருந்து என்னை மன்னித்துவிடுங்கள், தெரியாமல் செய்துவிட்டேன் என்று சொன்னார். கோகர்ணத்தில் ஒரு மலை ஒன்று உண்டு, அங்கே எம்மை அழைத்துச் சென்றார். அங்கு அரசர்கள் போர் செய்யும் பொழுது, அமைந்த குகைகள் உண்டு. அதற்கு வழி காட்டவேண்டும் என்று யாம் கேட்டவுடன், எம்முடன் வந்துவிட்டார். குகைகளை எல்லாம் காட்டினார்.

அங்கு, கடலுக்கு மேல் ஒரு பாறை நீட்டிக் கொண்டு இருக்கும். அங்கு கடல் அலைகள் ஜிவ்வென்று இழுத்தது. அங்கு, சுற்றிக் கம்பி கட்டியிருப்பார்கள். அங்கு, புவியின் ஈர்ப்புக்கு, கடல் அலைகளின் காந்தம் எப்படி இருக்கின்றது?  என்று குருநாதர் உணர்த்தினார்.

அந்த இடத்திற்குப் போனவுடன், எம்மை அப்படியே இழுத்தது, பழக்கப்பட்டவர்கள், சங்கிலியை மாட்டிக் கொண்டு அங்கு போவார்கள். அங்குள்ள காளி கோவிலுக்குப் பூஜை செய்ய, அங்கே போவார்கள். மறுபடியும் சங்கிலியைப் பிடித்து, இந்தப் பக்கம் வந்துவிடுவார்கள். அந்தளவிற்கு அமைப்பு பண்ணி,  அங்கே கட்டியிருக்கின்றார்கள்.

அந்த காளி கோவிலுக்குக் கீழ், கல்லிலேயே கதவு செய்து வைத்திருக்கின்றார்கள். அங்கு வந்தபின், கூட வந்தவரைப் போகச் சொல்லிவிட்டேன். கல்லை எடுத்துவிட்டு, உள்ளுக்குள் சென்றால், குகை பல பிரிவுகளாகச் செல்லுகின்றது. அதற்கும் கதவு வைத்திருக்கின்றார்கள்.

அரசர் காலங்களில், எதிரிகளிடமிருந்து தப்ப என்னவெல்லாம் செய்தார்கள் என்று தெரிந்து கொண்டோம். அதிலிருந்து கீழே வந்தவுடன், ராமர் தீர்த்தம் என்று ஒன்று இருந்தது. அங்கு, அலைகள் வந்து பாய்கின்றது. பாவத்தைப் போக்க என்று வருகின்றார்கள். வருகின்றவர்கள் என்னென்னவெல்லாம் பாவம் செய்கின்றார்கள்? அந்த அலையின் தொடர் என்ன செய்கின்றது? என்று உணர்வால் உணர்த்திக் கொண்டே வந்தார் குருநாதர்.

அதைக் கடந்து, ஒரு பாறை இருந்தது. கடல் தண்ணீர் தூரத்தில் இருந்தது. அலைகள் அங்கு உயரமாக வருவதைப் பார்க்கப் பார்க்க, ரசிப்பாக இருந்தது. அது வந்த வேகத்தில், எம்மைத் தூக்கி கோவிலுக்கு முன் போட்டுவிட்டது.

கடல் அலை, இந்தக் கோவில் வரை வந்தது. திருப்பிப் போகும் பொழுது, சில பொருள்களை உள்ளுக்குள் இழுத்துச் சென்றுவிடுகின்றது. அந்த உணர்வுகளைக் காட்சியாகக் கொடுத்தார் குருநாதர். அலைகளின் பெருக்கமும், உணர்வின் தன்மையையும், உன்னுடைய ரசிப்பும் எப்படி இருந்தது என்று காட்டுகின்றார்.
கடல் அலைகள் எப்படி உருவாகின்றது?
உருவாவதற்குக் காரணம் என்ன?
புயல்கள் எப்படி உருவாகின்றது? என்பதனைக் காட்டுகின்றார்.

கீழே, வெப்பத்தின் தணல் ஓடும் பொழுது, எதிர் அலைகள் மோதும் பொழுது, எப்படிச் சுழல்கள் உருவாகின்றதோ, அதே மாதிரி வெப்பங்கள் உருவானபின், அதிலிருந்து கொப்பளித்து மேலே வருகின்றது. இது மேலே எழுந்து மோதும் பொழுது, புயலாக வருகின்றது. அந்தச் சுழற்சியின் தன்மையை, அப்படியே காட்டுகின்றார்.

கடல்களில், இவ்வாறு புயல்கள் வரும் பொழுது, மீன் முட்டைகள் அதனுடன் கலந்து, எப்படிப் போகின்றது என்பதைக் காட்டினார். இவைகளில் சில தரையில் விழுந்துவிடுகின்றது. சில, மேகங்களில் கலந்து, மழை நேரங்களில் மீன், தவளை, இவைகளெல்லாம் எப்படி விழுகின்றது என்பதைக் காட்டினார்.

ஆதியில், நீரில் வாழும் உயிரினங்கள் எப்படி வளர்ந்தது? என்பதைக் காட்டினார்.
அந்தக் கருவின் தன்மை எப்படி தரைக்கு வந்தது? என்பதைக் காட்டினார்.
தரைக்கு வந்து மடிந்தபின், அது எப்படி தரை வாழ் உயிரினமாக மாறுகின்றது? என்பதைக் காட்டினார்.

இந்த உயிரணு, தாவர இனங்களை நுகர்ந்து, தரை வாழ் இனங்களாக மாறுகின்றது என்று, புயலைக் காட்டி சில நிலைகளை உணர்த்தினார்.

அப்படியே பிரமைப் பிடித்தவன் மாதிரி நிற்கின்றேன்
எனக்கு ஒன்றும் தெரியாது.
எங்கேயோ அழைத்துச் சென்று,
எதை எதையோ காட்டுகின்றார்.

பிறகுதான், வியாசகர் காட்டிய நிலைகள் கொண்டு மச்சவதாரம். நீரிலிருந்து - மனிதன் வரை, எப்படி உருவானது "ஆதிநிலை"  என்பதைக் காட்டினார்.

Inline image 3

(பக்கம் 60-64)

குரு எமக்குள் கொடுத்த உணர்வை, தெளிவாக்குகின்றேன்.
என்றோ நடந்த உணர்வை,
சொல்லால் சொல்லி, பதிவால் இயக்கப்பட்டு,
நினைவால், இதே கண்ணின் உணர்வுதான்
பரவிக் கிடக்கும் உணர்வுகளில்,
எதனின் தன்மை பதிவாக்குகின்றதோ,
அந்த நினைவின் அலைகளை,
எப்படி உனக்கு உருவமாகக் காட்டுகின்றது?
என்று, இத்தனை விளக்கம் கொடுக்கிறார், நமது குருநாதர்.

வியாசகர், கடலுக்குள் இருக்கும் மற்ற உயிரினங்களைக் கொன்று குவித்து, பிழைப்பை நடத்தி வந்தாலும், அவனுடைய சந்தர்ப்பம் புயலில் சிக்கி, கடலில் உயிர்வாழ் இனங்களில் ஒன்றான டால்பின் என்ற மீன் இவனைக் காக்கின்றது. அப்படிக் காக்கும் பொழுது, இவன் நினைவின் அலைகள், இதன் மேல் பற்றுக் கொள்கின்றது.

இயற்கையில் விளைந்த, மீன் இனத்தால் விளைந்த உணர்வுகளை இவன் நுகர்கின்றான். அந்த சந்தர்ப்பத்தில், உணர்வின் உண்மை நிலைகளைக் கண்டுணர்ந்த, அகஸ்தியனின் ஆற்றலைப் பார்க்கின்றான். அந்த உணர்வின் துணைக் கொண்டுதான்,  இந்தக் கண்ணால் அவன் எதைப் பார்த்தானோ, அந்த பரவிக் கிடக்கும் உணர்வுகளை உள்ளதாகக் காட்டுகின்றான்.

உனது கண் கோகிலக் கண்ணன் (என்று), இங்கே கோகர்ணம் என்று காட்டினான். அதற்காகத்தான், நான் உன்னை இங்கே அழைத்தேன், என்று நமது குருநாதர் கூறினார். இதுவெல்லாம் குரு காட்டிய நிலைகள். உன் பெயர்தான், (வேணுககோபால்) என்று சொல்லுகின்றார். நீ திருடன்தான் என்று சொல்லுகின்றார்.

அங்கு வியாசகருடைய நிலைகள் தெளிவாக்கப்பட்டது. மகாபாரதப் போர் என்கின்ற பொழுது, நமது பூமியில் அணுக்கள் மோதப்பட்டு, தாவர இனங்கள் மாற்றங்களாகி, ஒன்றை ஒன்று வெல்லுகின்றது.
இதைத் தான் அதர்வண  என்றும்,
உணர்வின் தன்மை இணைந்து கொண்டபின்,  யஜூர்  என்றும்,
உணர்வின் தன்மையில் மாற்றங்களும்,
எதனின் மாற்றமானதோ சாம  என்றும்,
அதனின் இணைவின் தன்மை ஒருங்கிணைந்தது  ரிக்.
அதனின் உணர்வின் தன்மை கொண்டு, எதனெதன் தன்மையை உருவாக்குகின்றது என்று குருநாதர் காட்டினார்.

இந்தத் தத்துவத்தைப் புயலில் சிக்க வைத்து, என்னைக் காப்பாற்றி, பிரமை பிடிக்கவைத்து,  இத்தனை நிலைகளையும் காட்டுகின்றார். அரசர்கள் தன்னைப் பாதுகாக்க, எத்தனை குகைகளைக் கண்டுபிடித்தான்? அவன் இருக்கின்றானா? அவன் இந்த உடல் இச்சைக்கு இதைச் செய்தான், நீ வேடிக்கை பார்க்கின்றாய்.

அவன் ஆன்மாவை யார் என்று குருநாதர் காட்டினார். நஞ்சு கொண்ட உணர்வினைப் பெற்று, அவன் பின்  சென்றவர்கள் பாம்பாகவும், தேளாகவும் இருக்கின்றார்கள், ஆசையின் உணர்வு வரும் பொழுது, பூதங்களாக மாறி, அதனின் உணர்வின் தன்மை, கடும் வேதனைக்குண்டான உணர்வின் தன்மை பெறுகின்றது.

அப்படிப் பெற்றபின், கடல் வாழ் இனங்களில் அவன் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு, அவனுடைய எண்ணக் கலவைகளாகி, ஆக்டோபசியாகின்றது. அது பரவி தன் இரைக்காக, எத்தனை அவஸ்தைப்படுகின்றது பார்.

இங்கு இருந்து அங்கு போனது. இதனுடைய ஆசையின் நிலைகள் கொண்டு, கடலில் மூழ்கும் பொழுது, அந்த காந்தப்புலன் அழைத்துக் கொண்டபின்,
இவன் மீன் இனமாகி, இராட்சச மிருகங்களாக, பல விழுதுகளாகி,
இரைக்காக எத்தனை அவஸ்தைப்படுகின்றது பார்!
என்று குருநாதர் காட்டுகின்றார்.

காவியங்களில் வரக்கூடியதை, உணர்வின் இந்திரீகம் என்ற உணர்வின் தன்மை கொண்டு, இந்திரஜித் என்கின்ற பொழுது, அவனுக்குள் எந்தெந்த அளவில் வளர்ந்தது,  அந்த வளர்ந்து கொண்ட உணர்வுகள் எப்படி விளைந்தது, என்பதைத்தான் இங்கு காட்டுகின்றார். சில நிலைகளில், காவியமாகத் தீட்டிய உணர்வுகளில், இதுவும் ஒன்று.

அந்த இடத்தில் இதைக் காட்டுகின்றார். இதுவெல்லாம், அனுபவ ரீதியில் யாம் தெரிந்து கொண்டது. அவன் அரசனாக இருந்தான். பல உணர்வுகள் எடுத்தான். அவன் கடல் வாழ் நிலைகளில் மரணமடையப்படும் பொழுது, எப்படிப் போகின்றது என்று காட்டுகின்றார். கடலிலே கவரப்பட்டு, அந்த உணர்வின் தன்மை எப்படி மாறுகின்றது என்பதை,  ஒவ்வொன்றாகத் தெளிவாக்குகின்றார். ஆகையால்,
நாம் எதிலிருந்து வந்தோம்?
வந்தபின் எதிலே பெற்றோம்?
குருநாதர் காட்டிய உணர்வை, நாம் எப்படி இதற்குள் இணைக்க வேண்டும்?
எதையும் பார்க்கலாம், தவறில்லை. ஆனால்,  மனிதன் எல்லாவற்றையும் கடந்து வந்தவன். அவனுக்குள், அனைத்தையும் அறியும் ஆற்றல் உண்டு. அவனுக்குள் பதிவு செய்யும் நிலை உண்டு.

அனைத்திலிருந்து விடுபடவும் முடியும்.
அப்படிப் பெற்றவன் மகரிஷி. 
அந்த உணர்வின் தன்மைதான், இந்த உணர்வின் கண்களுக்கு, மனிதன் தவறு செய்த உணர்வைப் பார்க்கின்றாயோ, அதை வென்ற மகரிஷி எப்படி இருக்கின்றான்?

இதை இரண்டையும் எடுத்துக் காட்டி, அதைப் பருகும் பொழுது, நீ இதுவாகின்றாய், இந்த இச்சையின் ஆசையைப் பருகும் பொழுது, நீ அதுவாகின்றாய்.

அஞ்சி, இவனுடைய செயல்கள் என்னவென்று அச்சமாகும் பொழுது, அவன் செயல்களின் அச்சம் இங்கு உணர்வாக்கப்பட்டு, மீண்டும் நீ இங்கேதான் போகின்றாய்.
அச்சத்தாலும் போகின்றாய்,
உணர்வின் நினைவாலும் போகின்றாய், 
என்று குருநாதர் காட்டுகின்றார்.

நாம் ஒவ்வொரு நாளும், உயிரின் முகப்பில் ஈர்க்கப்படும் பொழுது, இந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றது. இதைப் போன்று, உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பின் இயக்கத்தில், உயிரின் துணை கொண்டு, துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது, என் குரு எப்படி செய்தாரோ, அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது, நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்.


அந்த கோகர்ணத்தின் நிலைகள், அனுபவ ரீதியாகத் தெரிந்து கொண்ட நிலைகள். நமக்குள் எத்தனையோ விதமான எண்ணங்கள் பதிவாகி இருக்கின்றது. அவை அணுக்களாக விளைந்து இருக்கின்றது. அதது ஆகாரத்திற்குத் தேடிக் கொண்டுதான் இருக்கின்றது.


ஒரு மாமரம் காய்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அதனுடைய கிளைகளே, மற்றதற்கு வரக்கூடிய சக்தியை மறைத்திருக்கும். மறைந்த நிலைகளில் வரக்கூடிய காய், ருசி இருக்காது. இதனுடைய சத்துக்கள் எடுக்காதபடி, ருசி இல்லாது, மாற்றிவிடும்.

அதே சமயத்தில், மாமரத்திற்குள் இருக்கும் அதே மரத்தின் சத்து, இங்கே வரப்படும் பொழுது,  மற்ற காய்களுக்கு வளர்ச்சி இருக்காது.
இடைப்பட்ட ஒளியின் அலைகள், எது வருகின்றதோ,
அதனுடைய வளர்ச்சி பெரிதாக இருக்கும்.
எந்த உணர்வின் சக்தி. இயக்கம் அதிகமாகின்றதோ,
ஒரே கிளையில் ஒரு பழம் ருசியாக இருக்கும்
இன்னொன்று ருசியாக இருக்காது, என்று இதையும் காட்டுகின்றார்.

இதைப் போன்றுதான்,  இந்த இயற்கையின் நியதிகள் எவ்வாறு இருக்கின்றது?  என்பதை எமக்கு அனுபவப் பூர்வமாக கோகர்ணத்தில் வைத்துக் காட்டினார், குருநாதர். அதைத்தான், யாம் உங்களுக்கு இப்பொழுது எடுத்து உரைக்கின்றோம்.

Inline image 3

(பக்கம் 65-74)

கலியில் தப்புபவர்கள்தான் மகரிஷிகளின் துணை கொண்டு, தீமைகள் நமக்குள் அணுகாது, தீமையான உணர்வுகள் தம்மைத் தாக்காது பாதுகாத்துக் கொள்வதும்,  தீமையைக் கண்டுணர்ந்து நுகர்ந்தாலும்,  அது நமக்குள் ஜீவ அணுவாக மாறாது, எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதுதான்,  நரசிம்மா என்பது.

நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ, அந்தத் தீமையின் உணர்வுகள் நமது கண் நமக்குள் பதிவாக்கி விடுகின்றது  பதிவானபின், கண்ணின் காந்தப் புலன்றிவு,  அதன் உணர்வைக் கவர்ந்து, நம் ஆன்மாவாக மாற்றிவிடுகின்றது. ஆன்மாவாக மாறும் பொழுது,  இதை மடி என்று சொல்லுகின்றார்கள்.அதே சமயம்,
நமது உயிர், 
சுவாசத்திற்கு நேராகத்தான் அமைந்துள்ளது.
நமது மூக்கு வாசல்படி,
வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன்,
இரண்யனைப் பிளந்தான் என்று சொல்லுவார்கள்.
மடிமீது வைத்து, அவனுடைய தீமைகளைப் பிளந்தான் என்று காட்டுகின்றார்கள்..

நாம் உயர்ந்ததை எண்ணும் பொழுதுநமது உயிர்,  உயர்ந்த அணுக்களை உருவாக்குகின்றது. தீமையை எண்ணும் பொழுதுஅதன் நிலைகளை உருவாக்குகின்றது. அதன் நிலைகளில் செயலாக்குகின்றது.  

நாம் உயர்ந்த குணங்களை எண்ணுகின்றோம்அந்த குணங்களைக் காப்பதில்லை. நான் நல்லது செய்கின்றேன் ஆனால்இவன் இப்படிச் செய்கின்றானேஎன்று இதில் இணைந்து கொள்கின்றேன். அவர்கள்,  அதிலிருந்து விடுபடும் எண்ணத்திற்கு நான் வருவதில்லை.

அவர்கள் எண்ணத்தை நம்முடன் கலக்கின்றோம். நல்ல மாவை வைத்துக் கொண்டுஅதில் துவர்ப்பு,  உப்பு அதிகமாகப் போட்டால் சுவை எப்படி இருக்கும்.

இதைப் போன்று,  நாம் பிறர் செய்யும் தவறுகளைக் கண்ணால் பார்க்கப்படும் பொழுது,  நம் ஆன்மாவில் இது கலக்கின்றது. நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சினை,  நமது உடல் மலமாக மாற்றுகின்றது. நமக்குள் நஞ்சினை நீக்கிடும் ஆற்றல்,  ஆறாவது அறிவாக வருகின்றது.  

இந்த ஆறாவது அறிவில்,  பிறரின் தீமையான உணர்வுகள் கலந்து விடுகின்றது. இதனுடன் கலக்கப்படும் பொழுது,  தீமையை அகற்றிடும் எண்ணம் இருந்தாலும்,  அவர்கள் தீமை செய்யும் உணர்வுகள்,  நம்மிடம் வந்தவுடன்,  தீமைகள் செய்யும் உணர்வுகளே நமக்குள் வருகின்றது.
                              
ஒரு குழம்பில் காரத்தைப் போட்டால், காரத்தின் உணர்ச்சியைத்தான் தூண்டும். விஷத்தைக் கலந்து விட்டால்,  விஷத்தின் செயலாக்கம்தான் வருகின்றது. ஆனால் தீமையை நீக்கி, மகிழச் செய்யும் வாகனமாக இருக்கின்றது ஆறாவது அறிவு.

நமது ஆறாவது அறிவின் செயலாக்கத்தை, மகிழ்வாகனா என்று தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். நாம் பல தீமைகளை அறிந்து, ணர்ந்து,  விலகிச் சென்றாலும்,  நமக்குள்,  ஆறாவது அறிவிற்குள் கலந்த தீமைகளை நீக்க வேண்டும்.

கையில் மண்ணைப் பிசைந்த பின், கையைக் கழுவாமல் உணவை உட்கொண்டால், மண்ணுடைய நிலைகள்தான்  வரும். உப்பைக் கையில் எடுத்துவிட்டு, எந்தப் பொருளை எடுத்தாலும், உப்பின் கைப்புத் தான் வரும்.

ஆகையால் நாம் நுகர்ந்த உணர்வுகள்,  நமக்குள் இது கலந்துதான் நுகர வேண்டும். இரண்டும் கலந்து நுகரப்படும் பொழுது,  பிறர் செய்யும் தீமையின் உணர்வுகள் முன்னிலையில் வந்துவிட்டால்,  நமக்குள் இருக்கும் நல்ல உணர்வின் தன்மை,  தெளிவாக்குகின்றது.
தெளிவாக்கும் பொழுது, 
தவறு செய்கின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம்.
ஆனால் தவறைத் தெரிந்து கொள்கின்றோமே தவிர, 
தவறை நீக்கும் நிலைகள் நமக்கு இல்லை. 

தவறை எவ்வழியில் நீக்குகின்றோம்? ஒருவரிடம் சொல்லுகின்றோம். கேட்கவில்லை என்றால்,  இவனைத் தொலைத்தால்தான் சரியாக இருக்கும் என்று, அவன் உடலைத் தான் எண்ணுகின்றோம். 
அவனைத் தொலைத்துவிடலாம்.
அந்த தொலைத்துவிட வேண்டும் என்ற எண்ணம்,
அவனில் விளைந்தது,
நம்முள் நின்று,  நம்மைத் தொலைக்கின்றது.

இதைத் தடுக்க வேண்டுமல்லவா?  இதற்குத்தான், சாதரண மக்களும் புரிந்து கொள்வதற்காக,  இந்த விநாயகனைக் காட்டியது. நாம் தீமையை சுவாசிக்கும் பொழுது, தீமையை செயல்படுத்தும் வாகனமாக, நமது உடலில் செயல்படுகின்றது. இதுதான் மூசிகவாகனா என்பது. அந்தத் தீமையான உணர்வுகள்,  நம் கணங்களுக்கு (குணங்களுக்கு) அதிபதியாக நம்மை இயக்கத் தொடங்குகின்றது,  இது தெளிவாக்கப்படுகின்றது.

இதை மாற்றுவதற்குத்தான்,  அரசைக் காட்டி (அரச மரம்),  மனித வாழ்க்கையில் தீமையை அகற்றிடும் உணர்வை,  உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைகொண்ட,  துருவ மகரிஷியைக் காட்டியது. நாம் தீமையை,  எதை நுகர்ந்தாலும், ஒளியின் சரீரமாக நிலை கொண்டிருக்கும் துருவ மகரிஷியை எண்ணி, நாம் அதை நுகர்ந்து, அதை உள் நின்று, வலுப் பெறச் செய்ய வேண்டும். 

உயிர் வழி அதை நுகர்ந்து, உடலுக்குள் செலுத்தி. தீமைகளை அகற்ற வேண்டும். நம் சுவாசத்தின் மூலம்,  அதை எடுக்க முடியாது.

ஏனென்றால், தீமையின் உணர்வுகள் அதிகமாக இருக்கும் பொழுது, நம் உயிரில்பட்டு,  அந்த இயக்கமாகத்தான் இருக்கும். 

ஆகவே,மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற எண்ணமே வராது. எண்ணினாலும், உடனே மறைந்து விடும். எல்லோரும் என்னால் எண்ண முடியவில்லையே என்று சொல்லுவார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்றால், நமக்குள் அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பதிவாக்கி இருக்க வேண்டும்.
அதை நம் கண்களுக்கு கொண்டு வந்து,
நினைவை, நம் உயிரான ஈசனிடம் செலுத்த வேண்டும். 

செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தை, புருவ மத்தியில் செலுத்த வேண்டும். பின் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று, உயிர் வழி உள்ளுக்குள் செலுத்த வேண்டும். இதுதான் ஆக்ஞை என்பது.

    மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்,  இந்த உணர்வின் தன்மையை உள்ளுக்குள் கொண்டு போய், அந்த உணர்வை வலுப்பெறச் செய்து தீமையை இயக்கும் நிலையை நாம் இழக்க வேண்டும். நமது ஆன்மாவில்,  அந்தத் தீமையை இழந்திடல் வேண்டும்.

உதாரணமாக, ஒரு நோயாளியைப் பார்த்து அவன் சொல்வதைக் கேட்கின்றோம். நாம் பாசத்தால் இருக்கும் பொழுது,  நமது ஆன்மாவில் வந்துவிடுகின்றது. ஆன்மாவில் கலந்த வேதனைகள்,  நம்மை அறியாமலே நமக்குள் வந்து கொண்டே இருக்கின்றது. நம் நல்ல குணத்துடன், இந்த வேதனை கலந்து விடுகின்றது. அது ஜீவ அணுவாக மாறியபின், தன் இரையைத் தேடி, உணர்ச்சிகளைத் தூண்டி,  அது வளரத் தொடங்குகின்றது. இப்படிப்  புதுப் புது அணுக்களாக,  நமக்குள் உருவாகிக் கொண்டேதான் இருக்கின்றது.

நாம் அந்த வேதனையைக் கேட்டறிந்தாலும்,  ஒவ்வொரு நொடியிலும், ஈஸ்வரா  என்று உயிருடன் தொடர்பு கொண்டு, மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று, உடலுக்குள் பதிவு செய்த உணர்வை நினைவு கொண்டு,  இதை உயிருடன் இணைத்துவிட வேண்டும். நம் ஆன்மாவில் கலந்த வேதனையை சுவாசிக்கும் பொழுது,  அந்த உணர்வு நம்மை இயக்குகின்றது. இதை இடைமறிக்க வேண்டும். 

மகரிஷிகளின் அருள் உணர்வு வரும் பொழுது,  கேட்டுணர்ந்த உணர்வுடன் இது இணைந்து விடுகின்றது. அந்த தீமையின் நிலைகளை நிலைகளை, உள்ளுக்குள் அடக்கும் உணர்வு வரும் பொழுது, ஆன்மாவில் கலந்துள்ள உணர்வுக்கு வேலை இல்லாமல், நம் ஆன்மாவை விட்டுத் தள்ளிப் போய் விடுகின்றது.
அப்படித் தள்ளவில்லை என்றால்,
அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வந்துவிடும்.

இப்படித்தான்நமது வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமையைக் கேட்டுணர்ந்தால், உணர்வதற்கு மட்டும் தான், பயன்படுத்த வேண்டும். மீண்டும் அது நமக்குள் வளராதபடி, தடுத்தல் வேண்டும். 

அதற்கு நாம் மகரிஷிகளின் அருள் சக்தியை,  அடுத்த கணமே அதனுடன் இணைத்துப் பழக வேண்டும். இது இரண்டும் கலந்து விட்டதென்றால், அந்த அணுவின் தன்மையாக விளைகின்றது. அந்த சக்தி நமக்குள் கூடிக் கொண்டே வருகின்றது.

இதுவெல்லாம் நமக்குள் தெரிந்து இருந்தாலும்,  உதாரணமாக,  சில வருடங்களுக்கு முன் ஒருவன் நமக்கு கெடுதல் செய்திருப்பான். அதனால் நம் குடும்பமே நஷ்டம் அடைந்திருக்கும். இல்லாததைச் சொல்லி ருப்பான்,  அவனைப் பார்த்தவுடன்,  கஷ்டமான நிலைகள் நமக்குள் ஏற்கனவே பதிவானது, இழுத்து நம் ஆன்மாவில் வந்துவிடும்.

அப்பொழுது,  அவனை வெறுக்கும் நிலைகள், நமக்குள் உருவாக ஆரம்பித்துவிடும். சிறிது நாள்,  அதற்குச் சாப்பாடு இல்லாமல் இருந்தது. சாப்பாடு கிடைத்ததும்,  வீரியம் அடைய ஆரம்பித்துவிடும்.

மண்ணுக்குள், எத்தனையோ வித்துகள் மறைந்து இருக்கின்றது. சிறிது காலம் மழை இல்லையென்றால்,  வறண்டு போய்விடுகின்றது. ஒரு நாள் மழை பெய்துவிட்டால்,  தளதளவென்று வெளியில் வரத் தொடங்கிவிடுகின்றது.

இதைப் போன்றுதான் பகைமை உணர்வுகள்,  அவன் செய்த தவறான நிலைகள் நமக்குள் பதிவானாலும்,  அவனைப் பார்த்தவுடனே,  அந்த இனத்தைத் தனக்குள் கவர்ந்து,  அதனின் செயலாகத்  தனக்குள் ஆகாரம் தேட ஆரம்பித்துவிடும். அப்பொழுது நாம்,  இவ்வளவு தியானம் எடுக்கின்றோம்,  அவனைப் பார்த்தவுடனே,  கோபம் வருகின்றது என்று நினைப்போம்.

இந்த உணர்வு இங்கு வந்தபின், இரவு தூங்கினால் கெட்ட கனவாக வரும். அந்த வெறுப்பின் உணர்வுகள்,  நமக்குள் வரும் பொழுது எப்படியெல்லாம் இருந்தோமோ,  நம் எண்ணத்திற்கு அவன் நினைவு வராது. கெடுதல் செய்தவனைப் பார்த்து, அந்த உணர்ச்சி நமக்குள் தூண்டப்பட்டாலும்,  அவன் உரு நமக்குள் நினைவிற்கு வராது. 

அந்த நேரத்தில்,  மற்ற மனிதர்களிடத்தில் உருவான, கெடுதல் செய்த உணர்வின் தன்மை, நமக்கு எதிரில் இருந்தால், அது வந்துவிடும்.

இரவில் தூங்கும் பொழுது, யாரோ கெடுதல் செய்கின்ற மாதிரி, இன்னொரு உரு நமக்குள் தெரியும். நாம் முன்பின் பார்த்திருக்க மாட்டோம். அந்த மனிதனின் உருவம் நமக்குள் தெரியும். அப்பொழுது நம்மை அறியாமலே,  இரவு வேளைகளில்,  தீமையின் உணர்வுகள் நம் தூக்கத்தைக் கெடுக்கும்.

அந்த மாதிரி நேரங்களில்,  நாம் இரவில் தூங்கும் பொழுதெல்லாம்,  இந்த உணர்வுகள் வரும் பொழுதெல்லாம், ஈஸ்வரா  என்று உயிரை வேண்டி, துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் இணைத்து,  அதைப் பெற வேண்டும் என்று எண்ணி,  உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும். அதைச் செலுத்தியவுடன் தன்னை அறியாமலே தூக்கம் வரும்.

எந்தெந்த வகையில் தீமைகள் வந்தாலும், 
இப்படி நாம் எடுத்துக் கொண்டால்தான், 
நமக்குள் தூய்மைப்படுத்த முடியுமே தவிர,
ஒரேடியாக ஜெபமிருந்து
ஆண்டவன் அருளைப் பெறுவேன்,
என்று சொன்னால் நடக்காது. 

ஒவ்வொரு நிமிடத்திலும், உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும். அவ்வப்பொழுது, அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை,
இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.

அப்படி அடக்கிக் கொண்டே வந்தோமென்றால் அது அப்படியே உறைந்துவிடும். எல்லா உணர்வுகளிலும், அந்த மகரிஷிகளின் உணர்வை சேர்த்துக் கொள்ளவேண்டும். இப்படி மனிதன் அடக்கிய நிலைகள்தான்,  இந்த பூமியில் எத்தனையோ விதமான விஷங்கள், கோபங்கள், வெறுப்புகள் இவையெல்லாம் அடக்கினான்.

அவ்வாறு அடக்கி, அவனுடைய வாழ்க்கையில் செய்யும் முறைகள் இப்படி, அந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது,  பேரானந்தப் பெரும் செல்வம் நமக்குக் கிடைக்கின்றது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்துப் பழகவேண்டும். இல்லையென்றால், நான் எல்லாம் செய்கின்றேன்,  ஆனால் உலகில் எங்கு திரும்பிப் பார்த்தாலும், இப்படித்தான் இருக்கும் என்று இதற்கு வலு கொடுத்து விடுகின்றோம்.

அப்பொழுது,  நாம் போகும் பாதையில் புவியின் ஈர்ப்பிற்கு வந்து விடுகின்றோம். எது எப்படி இருந்தாலும்,  எவ்வளவு கடுமையான நிலைகளை,  நாம் பார்த்துணர்ந்தாலும்,  ஒவ்வொரு நொடியிலும் ஆத்மசுத்தி என்ற நிலையை, நம் ஆன்மாவில் கலக்கும் நிலையை அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச்செய்து, தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இதுதான் ஆத்மசுத்தி என்பது. இதை முறைப்படி நம் வாழ்க்கையில் செய்து கொண்டே இருக்க வேண்டும். காற்று பலமாக அடிக்கும் பொழுது, தூசி வருகின்றது. அதிகமாகத் தூசி வரும்போது, ஒதுங்கிக் கொள்கின்றோம். இதே மாதிரி,  தீமையான உணர்வு வரும் பொழுது,
அந்த எண்ணத்தில் இருந்து விலகி நிற்க,
அந்த மகரிஷிகளின் உணர்வை ஆதாரமாக வைத்து,
இதிலிருந்து.  சிறிது நேரமாவது விலகி நிற்க வேண்டும்.

நாம் எப்படியும் ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்று நினைக்கின்றோம். அங்கு வெயில் குறைவாக இருந்தது. போகப் போக, வெயில் சூடு அதிகமாகின்றது. அதிகமான அந்த நேரத்தில்,  விலகி நிற்கின்றோம். இதைப் போன்று, 
நம் வாழ்க்கையில்,
கடுமையான நிலைகள் வரும் நேரத்தில்,
மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெறவேண்டும்,
என்று, அந்த எண்ணத்திலிருந்து
விலகி இருக்க வேண்டும்.


(பக்கம் 78-80)

நீங்கள் அனைவரும் அந்த மெய் ஒளியைப் பெற வேண்டுமே தவிர,  உடலில் விளைந்த உணர்வுகளைத் தேடாதீர்கள்,  அதை நாடாதீர்கள். 

நம் குரு காட்டிய நிலைகள் கொண்டு, மெய் ஒளியை எடுத்து வளர வேண்டுமேயொழிய,  இந்த உடலில் பெற்ற உணர்வுகளை நாடக் கூடாது. 

இந்த உடல் மடிவது. இந்த உடலில் பெற்ற மெய் ஞானியின் உணர்வை,  யாம் பெற்றதை,  வலு கொண்டு எடுக்க வேண்டும்.

நாம் இந்த உடலை எண்ணினால்,  அதில் என்னென்ன உணர்வு விளைந்ததோ அதுதான் வரும். யாம் காட்டிய நிலைகள் கொண்டு, காட்சிகள் வந்தாலும், யாம் கொடுத்த அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்,  என்று மெய் ஒளியுடன் இணைத்து வலுப் பெறவேண்டும். சாமி வந்தார்,  காட்சி கொடுத்தார்,  எனக்கு நல்லதாச்சு,  ஆகிவிட்டது என்பதெல்லாம்,  உடல் இச்சைக்குத்தான் மாறும். இந்த நிலையில் இருந்து மாறுபட வேண்டும்.

நாம் அந்த மெய் ஒளியைப் பெற வேண்டும்.
நம் பார்வையால் பிறருடைய தீமைகள் நீங்க வேண்டும்.
சாமி செய்கின்றார் என்பதற்கு பதில்,
சாமி பார்வை,
எப்படிப் பிறரின் தீமையைப் போக்குகின்றதோ,
அதே உணர்வை, பிறரின் தீமையை நீக்கும் சக்தியாக,
நீங்கள் பெற வேண்டும்.
அதை நீங்கள் பெற்றால் தான்,
"சாமி சக்தியை",  நீங்கள் பெற்றதாக அர்த்தம்.
இல்லாவிடில்,  அதில் அர்த்தம் இல்லை. 

அந்த வளர்ச்சிக்கு, நீங்கள் செல்ல வேண்டும். அந்த மெய் ஒளியை நீங்கள் பெறும் பொழுது, தீமையை இது அகற்றுகின்றது. உங்கள் பார்வையும்,  சொல்லும்,  பிறருக்குள் நுழையும் பொழுது, பிறருக்குள் இருக்கும் தீமைகள் அகற்றப்படுகின்றது.

நமது வாழ்க்கையில்,  பிறருடைய துயரத்தைக் கேட்கும் பொழுது, நம்முள் நின்று துயரத்தை உருவாக்குகின்றது. சாதாரண வாழ்க்கையில் இதுதான் உருவாகின்றது. 
நாம் எதை நமக்குள் உருவாக்க வேண்டுமென்றால்,
பிறருடைய தீமைகளை நீக்கும் உணர்வுகளை,
நமக்குள் உருவாக்க வேண்டும்.
அந்த வளர்த்துக் கொண்ட உணர்வுகள்,
வித்தாக, அவர்களுக்குள் பதிய வேண்டும்.

யாராவது,  தீமையின் நிலைகளைச் செய்தார்களென்றால் அந்த உணர்வை நாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம். உடனே, ஈஸ்வரா  என்று உயிரை எண்ணி,  அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று அதனுடன் இணைத்துவிட வேண்டும்.

என் பார்வை அவர்களைத் தீமைகளில் இருந்து மீட்டவேண்டும். அவர்களும்,  மெய்ப்பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இந்த உணர்வை,  நமக்குள் படைத்து அனுப்பிவிட வேண்டும். அது நமக்குள் வராதபடி,  மெய் ஒளி கொண்டு இதை எண்ணிவிட வேண்டும்.

அவ்வாறு எண்ணிவிட்டால், எத்தீமையாக இருந்தாலும் நமக்குள் வேலை செய்யாது.
அருள் உணர்வை நம் பார்வையால் செலுத்தும் பொழுது,
நம்மால் அவர்கள் பயனடைகின்றார்கள்.
அவர்களுடைய உணர்வுகள் நமக்குள் வராது,
நாம் பாதுகாத்துக் கொள்கின்றோம். 
இந்த இரண்டு நிலையும் வேண்டும். 

நாம் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை,  நமக்குள் வலுப் பெறச் செய்து,  நம் எண்ணப் பார்வையில் அவர்களுடைய தீமைகளைப் பிளந்திடல் வேண்டும். அவர்களைக் காக்கும் உணர்வுகள்தான், நமக்குள் விளைய வேண்டும்.  மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வருகின்றது. நம்மைக் காக்கும் உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

இதை ஒவ்வொரு நொடியிலும், நாம் செய்தாக வேண்டும். கடலில் பயணம் செய்யும்பொழுது, அலைகள் வந்து கொண்டே இருக்கின்றது. நாம் எந்தத் தீவிற்கு போகவேண்டும் என்று,  அதை எல்லையாக வைக்கின்றோமோ, அதைப் போன்றுதான், 
நமது எல்லை,
அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான நிலைகள்.
அது பேரானந்தப் பெருநிலையான எல்லை.
அந்த எல்லையை நாம் அனைவரும் அடைவோம்.

Inline image 3

(பக்கம் 83,84)
நாம் மெய் வழி சென்ற,  அந்த மகரிஷிகளின் உணர்வை,  நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், நமக்குள் வளர்த்துக் கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் எதுவும் நம்முள் இணைந்திடாது, செயல்படாது. மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற்றவர்கள்தான், உணர்வின் ஒளியானவர்கள். நாம் அதைப் பெற முடியும்.

நமது வாழ்க்கையில் வெறுப்பு,   சலிப்பு, வேதனை போன்ற குணங்கள் எதிர்படும் பொழுது, அக்காலங்களில் எல்லாம்,  அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைக்  கண் கொண்டு நம் உயிருடன் இணைக்க வேண்டும்.

அதை நம் இரத்தத்தில்,  ஜீவ அணுக்களுடன்,  ஜீவான்மாவுடன் இணைக்கப்படும் பொழுது,  எப்படிச் செடிகளில்,  சக்தி வாய்ந்த அணு செல்களை இணைத்தபின் அது மாறுகின்றதோ,  அது போன்று,  அந்த உணர்வுடன் சேர்த்து,  இணைத்துக் கொள்ளவேண்டும். இதற்கு முன் பழக்கமில்லை.

இப்பொழுதாவது,  முன்பு பதிவு செய்த எண்ணங்கள்
வரும் பொழுதெல்லாம்,  இதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரவில் தூங்கச் செல்லும் பொழுதெல்லாம்,
இதை வளர்த்துக் கொள்ளுங்கள்.

காலையில் எழுந்திருக்கும் பொழுதெல்லாம்,
அந்த மெய்ஞானியின் உணர்வை,
உணவாகக் கொடுத்துப் பழகுங்கள்.

உணவு உட்கொள்ளும் பொழுதெல்லாம், 
அந்த உணர்வைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

வெளியில் செல்லும் பொழுதெல்லாம், 
இந்த நிலைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தொழிலில் அமரும் பொழுதெல்லாம், 
மகரிஷிகளின் உணர்வைப் பெறச் செய்யுங்கள்.

எந்த சந்தர்ப்பங்களிலும்,
இதை இணைத்துக் கொள்ளுங்கள்.

நாம் இதை பற்றுடன் பற்றும்பொழுது,  அந்தப் பற்றின் தன்மை நமக்குள் வளரும் தன்மையும்,  இந்த உடலை விட்டு நாம் அகன்றால், நம் சேமிப்பு,  பேரானந்த பெரும் நிலையான பெரும் செல்வம்,  அதை நாம் அனைவரும் பெறுவோம்.  எமது அருளாசிகள்.