ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 15, 2012

உணர்வுகளின் பெருக்கமும் உயிரின் இயக்கமும்

Inline image 1      Inline image 2

சாமி புத்தகம்  உணர்வுகளின் பெருக்கமும் உயிரின் இயக்கமும் 
 (பக்கம் 3-10)

பண்டைய காலங்களில்,  இந்த  "ஆடிப் பெருக்கு"  நாளில்  மக்கள் எல்லோரும் ஒன்று கூடி, மகரிஷிகளை வேண்டி,  நல்ல மழை பெய்ய வேண்டும் என்று ஏங்கினார்கள்.  நாடு செழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, விண்ணை நோக்கி ஏங்கினார்கள். 

நாடும்,  மக்களும், மற்ற உயிரினங்களும்,  தாவர இனங்களும் செழிக்க வேண்டும் என்ற உணர்வை தங்களுக்குள் வளர்த்துக் கொண்டார்கள்.

அவ்வாறு வளர்த்து,  அவர்கள் வெளியிடும் மூச்சலைகளை சூரியனின்  காந்த சக்தி கவர்ந்து,  அலைகளாக பூமியில் படரச் செய்கின்றது. அவர்கள் எத்தகைய ஆற்றல் பெற்றனரோ, எத்தகைய நினைவு கொண்டனரோ,  அந்த நினைவுப்படி அவர்களுடைய மூச்சலைகள் மேகங்களில் படர்ந்து, நல்ல மழை பெய்து நீர் நிலைகள் பெருகியது. 

அன்றைய  மனிதர்களில்,  நூற்றுக்குத் தொண்ணூறு பேராவது, ஞானிகள் காட்டிய அருள் வழியில் செயல்பட்டனர். அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வலைகளால்தான், அன்றைய காலங்களில் சீராக மழை பெய்தது.

இன்று ஒரு விஷச் செடியிலிருந்து,  அதிகமான மணங்கள் வெளிப்படுமேயானால், அதனருகில் நல்ல செடிகள் வளராதபடி அது தடுத்துவிடும். அதே சமயம்,  விஷச் செடியின் மணங்களை சூரியனின் காந்த சக்தி கவருமேயானால்,  நல்ல செடியின் மணங்களை வெகு தூரத்திற்கு உந்தித் தள்ளிவிடும்.

அப்பொழுது,  நல்ல தாவரங்களுக்கு உணவு கிடைக்காது போய்விடும். அவ்வாறு ஆகிவிட்டால்,  அந்த நல்ல தாவரங்கள் அனைத்தும் கருகிவிடும். 

விஷச் செடியின் மணங்கள்,  எந்த திசையை நோக்கிச் செல்லுகின்றதோ,  அந்தப் பகுதியில் உள்ள,  நல்ல செடிகளும் விளைவதில்லை.

இன்று, விஞ்ஞான உலகில் நாம் எடுத்துக் கொண்ட வேதனை, வெறுப்பு,  சலிப்பு,  பயம், கோபம் போன்ற உணர்வுகளும்,  விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நச்சுத் தன்மைகளும் காற்றில் படர்ந்து,  அணுக்  கதிரியக்கங்களும் பரப்பப்படும்பொழுது. இந்த உணர்வுகளின் வலுவான நிலைகள் கண்டு,  மேகங்கள் ஓடிவிடுகின்றது.

அது ஓடும் வேகத்தில், மற்ற மேகக் கூட்டத்துடன் மோதி, அனைத்தும் மழையாக பெய்து விடுகின்றது. அதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல விபத்துகளை உண்டாக்கி விடுகின்றது.

அதேசமயத்தில்,  இந்த விஷத் தன்மைகள் பரவுமிடத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது. நீர் நிலைகள் வற்றிவிடுகின்றது. அதோடு மட்டுமல்லாது, 
விண்வெளியில்,  அணுகுண்டுகளை வெடித்துப்
பரீட்சித்துப் பார்த்த நிலைகள்,
புவி ஈர்ப்புக்குள் சிக்கி,
மேகங்களைக் கலைத்துக் கொண்டு இருக்கின்றது.

கதிரியக்கச் சக்திகள், புவிஈர்ப்புக்குள் சென்று
புவியின் வெப்பம் அதிகமாகின்றது.
அதனால் வடதுருவம் உருகி,  கடல் மட்டம் பெருகுவதும்,   நிலங்கள் குறுகும் நிலை ஆகின்றது.

அதே சமயம், கடல் பெருகினாலும், மற்ற நீர் நிலைகள் இந்த வெப்பத்தின் தன்மை கொண்டு ஆவியாகி விடுகின்றது. ஆவியாகி மேகமாவதற்குள்,  இந்த நச்சுத் தன்மைகள் உந்தித்தள்ள, அது ஓடும் வேகத்தில், பெரும் மழையாகப் பெய்து, வீணாகி விடுகின்றது.

இன்றைய விஞ்ஞான அறிவால், பல விஞ்ஞானக் கருவிகளை இயக்குவதன் மூலம், அமில நிலைகள் ஆவியாக மாறுவதால், மேகங்கள் கரைந்து, சரியான காலங்களில் மழை பெய்வதும் குறைகின்றது. சரியான காலங்களில் மழை பெய்யாததால்,  விவசாயம் செய்ய முடியாது, உணவுப் பற்றாக்குறையும் ஏற்படுகின்றது.

முந்தைய காலங்களில், மழை பெய்தால்
தாவர இனங்களுக்கு அது ஊட்டச் சத்தாக அமைந்தது.
குழந்தைகள் மழையில் நனைந்தால்,
உடலில் இருக்கக் கூடிய விஷக் கிருமிகள் மடிந்து,
உடலில் சத்தான அணுக்கள் உருவாகியது. 

இன்றைய காலங்களில், நாம் மழையில் நனைந்தால், டைபாய்டு சுரம், வைரஸ் சுரம்,  விஷ சுரம் போன்ற நிலைகள், மழை பெய்த காலத்திலேயே வந்து விடுகின்றது.

முந்தைய நிலைகளில்,  மனிதர் அவருக்குள் உயர்ந்த எண்ணம் கொண்டு,  விவசாயம் பெருக வேண்டும்,  நாடு செழிக்க வேண்டும் என்ற உணர்வுடன் செயல்பட்டனர்.

இன்றைய நிலைகளில்,  ஒருவருக்கு விவசாயம் நன்றாக விளைந்தால்,  அடுத்தவர்களின் நிலைகள்,  அவருக்கு இப்படி விளைச்சல் உள்ளதே என்ற உணர்வு கொண்டு,  விவசாயத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்துகின்றனர். வெறி கொண்ட உணர்வு கொண்டு,  செயல்படும் நிலையிலும் உள்ளனர்.

அன்று மெய்ஞானிகள்,  ஆடிப்பெருக்கு அன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இங்கு நல்ல மழை நீர் பெய்ய வேண்டும்,
நாடு செழிக்க வேண்டும்,
நற்பயிர் விளைய வேண்டும்.
அதை உணவாக உட்கொள்ளும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பெறவேண்டும்.

இந்த மகிழ்ச்சியான உணர்வு, மக்கள் மத்தியில் அறிந்திடும் உணர்வின் ஒளியாக மாறவேண்டும்.  இது பெருக வேண்டும்   என்ற எண்ணங்களை  நாம் அனைவரும் எண்ண வேண்டும்.

நாம் இந்த உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது, 
நஞ்சு கொண்ட நிலையை நீக்கி, 
இந்த உணர்வின் தன்மை விண்ணை எட்டி, 
நல்ல மழை நீராகப் பெய்யும் நிலை ஏற்படுகின்றது. 

இவ்வாறு, இத்தகைய உணர்வின் தன்மையை, நமக்குள் வினையாக்க வேண்டும். அந்த வினைக்கு நாயகனாக,  உடலாக்க வேண்டும். அந்த எண்ணத்தின் தன்மையை சுவாசித்து, அதன் நிலைகளிலேயே செயலின் தன்மை இருக்கவேண்டும் என்று, மெய்ஞானிகள் அன்று உணர்த்தினார்கள்.

அதன் நிலைகொண்டு,  அருள்ஞானியின் உணர்வை நமக்குள் பெருக்கி, அனைத்து  க்களும் நலம் பெறவேண்டும்,  பயிர் வகைகள் பெருக வேண்டும். எல்லோருக்கும் பசி போக்க வேண்டும்,  என்ற இந்த எண்ணத்தை,  மனப் பெருக்காக எண்ண வேண்டும்.
நம்முடைய எண்ணங்களில்,
உலகம் நலம் பெறவேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படரவேண்டும்.
நல் உணர்வு பெற்ற, மக்களின்  உணர்வுக்குள்,
நல்ல உணர்வுகள் நிலைத்து நிற்க வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால்,
இந்த நாடும், உலகமும், உலக மக்களும்
நல்ல நிலை அடைய வேண்டும்
என்ற ஏக்கத்தினை நினைத்து,
அந்த ஞானியின் உணர்வை, நமக்குள் செலுத்த வேண்டும்.

 அந்த ஞானியின் உணர்வை நமக்குள் பெருக்கி, இந்த சூரியனின் காந்த சக்தியில் கலந்து,  நாம் எண்ணிய உணர்வுகள்,  மேகங்களில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து, நல்ல மழை நீராகப் பெய்து, ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்துப் பெருக வேண்டும் என்று, ஆடிப் பெருக்கை  இப்படி வணங்கச் சொன்னார்கள் அன்று.

Inline image 3

(பக்கம்-13-21)
இன்று சனிக்கோளின் உணர்வுகள், அது எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து கொண்டு. பூமியை அணுகிய நிலைகளில்,  அது நமக்குள் பட்டவுடன் எதிர் நிலையாகி,  தென்றல் காற்றாக மாறுகின்றது. நமக்கு

தண்ணீர் வறட்சியாகும் பொழுது, இன்று தண்ணீரைத் தேடி அலைவது போல்,  முதலில் வெப்பத்தால் ஆன அணுக்கள் வெப்பமாகும் பொழுது,  சனிக் கோள் உமிழ்த்திய நிலைகள் வந்தவுடன், சுழற்சியாகும். முதலில் சனிக் கோளின் உணர்வு, ஒவ்வொரு அணுக்களிலும் பட்டு, உயிர் அணு போன்று அது மாறும். (உதாரணமாக, நாம் அடுப்பில் ஒரு பொருளை வேக வைத்தால், எப்படியோ அப்படி).

இவ்வாறு,  பூமியில் காற்றலைகள் அதிகமாகும். அது ஒவ்வொன்றும் அசைந்து, ஒன்றுடன் ஒன்று இசைந்து,  இதனின் நிலைகள் மாறி, ஆடி மாதம் பெரும் காற்று வீசும். அதே சமயம்,  மேகங்களாகக்  கூடி வரும்.

மனிதன்,  தான் மழைக்காக வேண்டி காய்ந்த நிலைகளில், வெப்பத்தின் தன்மை பூமிக்குள்ளாகி,  நீரெல்லாம் ஆவியாக மாறி,  விண்ணைச் சென்றடையும்.

ஆனால், இன்றைய விஞ்ஞான உலகில்
லேசர் என்ற நிலைகளாலும், ரேடியோ அலைகளாலும்,
எலக்ட்ரானிக் துணை கொண்டு, ஒளிபரப்பப்படும் TV அலைகளாலும்,
எதிர் நிலையான நிலைகள் கொண்டு, நஞ்சின் தன்மை ஏற்பட்டு,
மேகங்கள் நீராக வடிவது குறைகின்றது.
ஒரு பக்கம் இந்த உணர்வலைகள் பட்டு,  மழையில்லாமல் வறட்சியாகவும்,  மறுபக்கம் மழை கொட்டு கொட்டு என்று கொட்டி,  பெரும் சேதத்தை விளைவித்து,  யாருக்கும் பயனற்றதாக்கி நாட்டைக் கெடுக்கின்றது.

இன்றைய சூழ்நிலையில், விஞ்ஞான அறிவாக இருந்தாலும், மனிதன் வேகமாக இயங்கும் சூழ்நிலை உள்ளது.  ஒரு வேலையாக வெளியில் செல்லும் பொழுது, ஒரு துளி மழை விழுந்தால், சனியன் பிடித்த மழை இந்த நேரத்திலா வரவேண்டும், என்ற உணர்வைத்தான்,  வெளிப்படுத்தும் நிலையில் உள்ளோம். 

இவ்வாறு, மழை பெய்தால்,  ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாது, சனியன் தொலைந்து போ என்று நாம் ஒலிபரப்பு செய்வதை, சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.  

இது சிறுகச் சிறுக விளைந்து, மழை பொழியும் மேகத்திற்குள் பட்டவுடன்,  மழையும் பெய்யாது,  நமது உடலுக்குள்ளும்,  நல்ல குணத்தை மறைக்கின்றது.

நாம் எண்ணுகின்ற தீய உணர்வின் சத்து,
நமது உடலுக்குள் விளைந்து, அது உயிராத்மாவாகி விடுகின்றது.
எதை நாம் அழித்திட வேண்டும் என்று எண்ணுகின்றோமோ,
அதுவே அழிக்கும் சக்தியாக மாறிவிடுகின்றது.
அதுவே நமக்குள் நோயாகி, இந்த மனித உடலை அழிக்கின்றது.
இன்னொரு மனித உடலுக்குள் போனாலும்,
அந்த உடலையும் அழித்திடும் உணர்வாக, அது விளைகின்றது.

ஆகவே, மனிதனான நாம் இப்பொழுது மழை பெய்யும் பொழுது,  தொலைந்து போ என்று எண்ணும் பொழுது,  அது உடலில் விளைந்த உணர்வுக்குள் கலந்து,  தொலைந்து போகச் செய்யும் உணர்வாக, உடலில் இருந்து வெளிப்படுகின்றது. அவ்வாறு வெளிப்படுவதை ,சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

இதைப் படித்துணர்ந்த அனைவரும், அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில், அந்த மெய் ஞானிகளின் உணர்வைக் கூட்டி,  இந்த மாதிரி நேரங்களில், எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி மேகங்களில் படர்ந்து, மேகங்கள் கூடி, நல்ல மழை பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர்ந்து, ஏரி குளங்கள் நிரம்பி, நாடு நகரங்களில் குடிநீர் பஞ்சம் நீங்கி, ஊரும் உலகமும் நலமும் வளமும் பெறவேண்டும், என்று தியானிக்க வேண்டும்.

இப்படித் தியானிப்பதன் மூலம், நமக்குள் அது நல்ல உணர்வாகப் பெருகி,  அதேசமயம்,  நாம் எடுத்துக் கொண்ட எண்ணம்,  நல்ல மழையாகப் பெய்யும் ஆற்றலாகப் பெருகி, நல்லதை உருவாக்கிடும் சக்தியாகப் பெருகுகின்றது.

இதன் தொடர்பு கொண்டு, வீட்டில் குழந்தைகளிடத்திலும் நல்ல உணர்வைப் பெறச் செய்ய வேண்டும். ஒன்றும் அறியாத, எதையுமே கள்ளங்கபடமற்ற நிலைகளில், புரிந்து செயல்படக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் குழந்தைகள்.

ஆகவே, அவர்களை, இதே நிலையில் ஏங்கிப் பெறச் செய்யப் பழக்கவேண்டும். அப்படிச் செய்யும் பொழுது, குழந்தைகளுடைய எதிர்காலம் மிகவும் நல்லதாக இருக்கும். அதே சமயத்தில்,  இந்த உணர்வு கொண்ட செயல்கள்
வீட்டிற்கும்,  நாட்டிற்கும், உலகத்திற்கும்,
நன்மை பயக்கும், பெரும் சக்தியாகச் செயல் படுகின்றது.

ஆகவே, இதைப் படித்துணர்ந்த அனைவரும், இதன் வழியில் செயல்படுவதற்கே, யாம் இப்பொழுது உபதேசிப்பதும், தியானிப்பதும். எமது அருளாசிகள்.


Inline image 4

(பக்கம் 23-26)
            அன்று, 18ஆம் பெருக்கு என்கின்ற பொழுது, நாம் மனமகிழ்ச்சி கொண்டு, வெளிப்படுத்துகின்ற சந்தோஷ அலைகள் பரவி, நாம் எந்தெந்த தாவர இனச்சத்தை உணவாக உட்கொண்டோமோ, அந்தத் தாவர இனங்கள் செழித்து வளர மழை மேகங்கள் கூடி,  நல்ல மழை பொழியும்.

ஆகவே, நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.
அந்த ஏக்கத்திற்குச் சத்து கிடைப்பதற்கு,
நம்முடன் வாழ்ந்து வளர்ந்து, உடலை விட்டுப் பிரிந்து சென்ற
உயிரான்மாக்களை,  குலதெய்வங்களாக எண்ணி,
அந்த உயிரான்மாக்களை, இன்னொரு பிறவி பெறாத நிலைகள் கொண்டு,  சப்தரிஷி மண்டலங்களோடு இணையச் செய்திட வேண்டும்.

இன்று, நாம் குலதெய்வங்களுக்கு, மனித வாழ்க்கையில் அவர்கள் எதை எதையெல்லாம் சாப்பிட்டார்களோ, அதையெல்லாம் படையல் செய்யும் நிலையிலேயே உள்ளோம். அப்படிப் படையல் செய்து வணங்கும் பொழுது, அந்த உணர்வை நமக்குள் இழுக்கின்றோம்.

இதைப் போன்று, அவர்கள் சமாதிகளைச் சுத்தம் செய்து, அவர்களின் நினைவை 18ஆம் பெருக்கு அன்று, கொண்டு வரப்படும் பொழுது, உணர்வை இழுத்தவுடன், யாருடைய எண்ணம் அதிகமாக ஈர்க்கின்றதோ, அவர்கள் உடலுக்குள் இந்த ஆன்மாக்கள் சென்றுவிடும்.

நாம் எந்த பக்தியான நிலைகள் கொண்டு, இந்த உணர்வினை வளர்த்துக் கொண்டோமோ,  எதனை மந்திரம் சொல்லி,  மனித உடலுக்குள் விளைய வைத்தோமோ,  அந்த உணர்வின் தன்மை பதிந்தபின், இவர்கள் சொன்ன மந்திரத்தை நாம் பதிவு செய்திருந்தால், உடலை விட்டு ஆன்மா சென்றால், அதே மந்திரத்தைச் சொன்னவுடன்,  அவர்கள் ஈர்ப்புக்குச் சென்று, அவர்கள் சொன்னபடி கேட்கும்.

நாம் இந்த சமாதி நிலைகளை வைத்து, அதில் பூஜித்திருப்போம் என்றால், இதில் யார் மேல் பாசம் அதிகமாக இருந்ததோ, அவர்களின் உணர்வின் தன்மை ஆக்கப்பட்டு, அந்த ஆவியின் நிலைகள் வந்துவிடும்.

இன்று, ரேடியோ, டி.வி. எப்படி செயல்படுகின்றதோ, அது போன்று மனிதனுக்குள் வந்தாலும், உடலில் விளைய வைத்த வேதனை என்ற நஞ்சினைத்தான் விளைய வைக்கின்றது. இதுவும் பெருக்குத்தான்.

அன்றைய நிலைகளில்,  உண்மையில் சொன்ன முறைகள்,  மூதாதையர்களை நாம் எண்ணும்பொழுது,  அவர்கள் நமக்காக எத்தனையோ  வேதனைப் பட்டார்கள். அவர்கள்,  அந்த வேதனையிலிருந்து அகன்று,  மெய்ஞானிகளின் அருள் வட்டத்தில் இணைந்து,  பிறவா நிலை என்னும் அழியா ஒளி சரீரம் பெறவேண்டும், என்று நாம் உந்திச் செலுத்த வேண்டும்.

அவர்கள், உடல் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைய வேண்டும், மெய் ஒளியை அங்கே காண வேண்டும், என்று உந்தித் தள்ளவேண்டும். அப்பொழுது, நம் நினைவின் தன்மை அங்கே சென்று, அந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருக்க வேண்டும் என்று,  அன்று சொன்னது காலத்தால் மறைந்துவிட்டது.

மனிதனாக இருக்கக்கூடிய நாம், உயர்ந்த உணர்வின் தன்மையை நமக்குள் சுவாசித்து,  என்று இயங்கி, பிரம்மம் ஆக்கி ம் என்று சரீரம் ஆக்கவேண்டும்.

அந்த உணர்வின் சக்தி  (ஓம்) கொண்டு,
நம் மூதாதையர்களின் உணர்வுடன்
நம் நினைவினைக் கூட்டும் பொழுது,
அதனின் சக்தி நமக்குள் வலுகொண்டு, 
நம் முன்னோர்களின் உணர்வை உந்தி,  அங்கே சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள், தள்ள முடிகின்றது.

ஆடிப்பெருக்கு என்பது, உணர்வின் தன்மையை ஒளியாகப் பெருக்க,  அன்று இறந்தவர்களின் நிலைகளில் இதைப் போல் எண்ணி,  அன்று ஞானிகள் இணைக்கச் செய்தனர்.

அந்த உணர்வின் வலுக்கொண்டு,  நமக்கு மழை நீர் வேண்டும் என்று,  இந்த ஆடி மாதம் வந்தவுடன்,  வானை நோக்கி எண்ணி,  அந்த மகரிஷிகளின் அருள்சக்தி மேகங்களில் படர்ந்து, நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற உணர்வினை,  வானை நோக்கிச் செலுத்த வேண்டும்.

முதலில்  நம் எண்ணம், விண் செல்ல, யாருடைய உணர்வுடன்,  உடலாக இருக்கின்றோமோ, அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும்  என்ற எண்ணத்தை ஏங்க வேண்டும். 

இந்த மனித உடலைப் பெற்ற நாம்,  அந்த மெய்ஞானி பெருக்கிய உணர்வின் தன்மையை,  இந்த உடலுக்குள் பெருக்க வேண்டும் என்பதே  ஆடிப்பெருக்கின் தத்துவம்.

மக்கள் (நாம்) பல பேர் கூடி, தேரினை எல்லை சேர்க்கின்றோம். இதைப் போல, இத்தகைய பண்டிகை வரும் பொழுதெல்லாம், அனைவரும் ஒன்று சேர்ந்து,  அந்த ஞானிகள் கண்டுணர்ந்த,  உணர்வின் தன்மையை நினைவு கூறவேண்டும்.

அந்த உணர்வினை நமக்குள் தூண்டி,  நினைவினை விண்ணை நோக்கிச் செலுத்தி, அந்த உணர்வினை உடலுக்குள் பரப்பி, அதை வளர்த்துக் கொள்ளத்தான் இதை உபதேசிப்பது.

அந்த மெய்ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கி, ஆற்றல் மிக்கதாகச் செயல்படுத்தும் நிலைதான்,  மெய்ஞானிகள் கூறிய ஆடிப் பெருக்கு.

ஆடிப்பெருக்கு அன்று, அந்த மெய்ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கி,  நினைவினை விண்ணை நோக்கி ஏங்கி, 
உலக மக்கள் அனைவரும்,  மகரிஷிகளின் அருள் வட்டத்தில்
நிலைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அவர்கள் அறியாத இருள்கள் நீங்கவேண்டும்,
மெய்பொருள் அவர்கள் காண வேண்டும், 
அவர்கள் மூச்சலைகள் அனைத்தும்,
"உலகம் நன்மை பயக்கும் சக்தியாகப் படர வேண்டும்  என்றுநமக்குள் அதைப் பெருக்க வேண்டும்.


நமக்குள் அதைப் பெருக்கி, நமக்குள் அறியாத நிலைகளை நீக்கி, அருள் ஞானியின் உணர்வைப் பெருக்கி, மூதாதையர்களின் ஆன்மாக்களை ஒளி சரீரமாகப் பெருக்குவதுதான், ஆடிப்பெருக்கு.

Inline image 3