ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 20, 2012

உயிர் உடல் இயக்கம்


   
சாமி புத்தகம் உயிர் உடல் இயக்கம் 
(பக்கம் 4-8)

சூரியன் சுழலும் பொழுது, இந்த பிரபஞ்சத்திற்குள் சர்வத்தையும் இயக்குகின்றது. நமது உயிர் நமக்குள் இயங்கி, இந்த உடலுக்குள் சர்வத்தையும் இயக்குகின்றது. விண்ணின் ஆற்றலை சூரியன் தனக்குள் கவர்ந்து, பிரபஞ்சத்தை இயக்குகின்றது. நமது உயிரோ, துடிப்பின் இயக்கமாக உடலுக்குள் இயங்குகின்றது.

சூரியனோ, விண்ணில் ஓடும் பொழுது, தன் அருகில் இருக்கும் காந்தப் புலனிலும் உராய்ந்து, சுழன்று வெப்பமாகின்றது. தான் கவரும் உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிரித்து, வெளிப்படுத்தி, நல்ல உணர்வினை ஒளியாக மாற்றுகின்றது.

சூரியனிலிருந்து வரும் ஒளியை (வெப்ப காந்தங்களை), உயிர் தன் இயக்கத் துடிப்பில் ஈர்க்கும் பொழுது, அந்த வெப்ப காந்தங்களுடன் மோதும் பொழுது, அது வெப்பமாகின்றது. மனித உயிரை ஈஸ்வரன் என்றும், சூரியனை சர்வேஸ்வரன் என்றும், உயிரை நர நாராயணன் என்றும், சூரியனை நாராயணன் என்றும் ஞானிகள் அழைத்தனர்.

சூரியனை, லட்சுமி நாராயணன் என்றும் அழைக்கின்றனர். ஓர் காந்தப் புலன், தனக்குள் அனைத்து சக்தியையும், இயக்கும் சக்தியாக விளைய வைக்கின்றது என்ற நிலையை, விளங்க வைக்கின்றார்கள்.

காந்தப் புலனை லட்சுமி என்றும், அதன் ஈர்ப்பால் தனக்குள் அணைத்து, பெரும் கோளாக மாறி, சூரியனாகி, எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு, உலகை சிருஷ்டிக்கும் நிலையாக அது உருப் பெற்றது, என்பதனை நாமெல்லாம் அறிந்து கொள்வதற்கு, லட்சுமி நாராயணா என்று பெயர் வைக்கின்றார்கள்.

நமது உயிரின் துடிப்பை விஷ்ணு என்றும், நாராயணனின் மறு அவதாரம் என்றும் காட்டினார்கள். சூரியனை, லட்சுமி நாராயணா என்றாலும், அந்த நாராயணனுக்கு இரு மனைவி என்று எழுதியுள்ளார்கள். காந்தத்தால் இழுத்து, உடலாகப் பெறும் பொழுது, சூரியனாகின்றது.

சீதேவி என்பது லட்சுமி (காந்தம்), பூதேவி என்பது சூரியனின் உடலின் அமைப்பு. நமது உயிருக்கு, விஷ்ணுவின் மனைவிகள் பூதேவி, சீதேவி என்று பெயரை வைக்கின்றார்கள். உயிர் உடலுக்குள் நின்று இயக்கி, அதனால் ஈர்க்கும் காந்தமாகி, உயிரின் இயக்கத்திற்குள் துடித்து இயக்கும் நிலையை, பூதேவி, சீதேவி என்று பெயரை வைக்கின்றார்கள்.

இயற்கையின் செயல்களை நாம் அறிந்துணர்ந்து, அதன் வழி மனிதனானவன் தெரிந்துணர்ந்து செயல்படும் நிலைகளை, அறியும் பொருட்டே இத்தகைய நிலைகளை, எளிய முறையில் எடுத்துரைத்தார்கள் ஞானிகள்.

இந்த பிரபஞ்சத்திற்குள் நடக்கும் நிலைகளையும், நம் உடலுக்குள் நடக்கும் நிலைகளையும், தெளிவாக எடுத்துரைத்தார்கள். பிரபஞ்சத்திற்கு சூரியன் இயக்கச் சக்தியாக இருக்கின்றது. நமது உடலுக்குள், உயிர் இயக்கச் சக்தியாக இருக்கின்றது.

நமது உயிரை ஓம் ஈஸ்வரா குருதேவா
என்று ஞானிகள் அழைத்தார்கள்.
நாம் ஓம் ஈஸ்வரா குருதேவா
என்று சொல்லும் பொழுது
வெறும் சொல்லாக இல்லாமல்,
புருவமத்தியில் நினைவைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
       அவ்வாறு பழகிக் கொண்டால், நமது உயிரை குருவாகவும், 
நாம் எண்ணியதை, ஈசனாக உருவாக்கக் கூடிய நிலையை,  நாம் உணரமுடியும்.
நாம் எதை எண்ணுகின்றோமோ, அது உடலுக்குள் ஊடுருவது, நமக்கு தெரிய வரும்.

நமது கண்கள் ஒன்றைப் பார்க்கின்றது, என்று வைத்துக் கொள்வோம். அதிலிருக்கும் உணர்வுகளைக் கண்கள் கவர்ந்து, நமது ஆன்மாவாக மாற்றுகின்றது. நமது மூக்கு வழியாக சுவாசித்த பின், உயிரில் பட்டு அந்த உணர்வுகளை நாம் அறிகின்றோம்.

ஓம் ஈஸவரா குருதேவா  என்று சொல்லுகின்ற போதெல்லாம், புருவ மத்தியில் உயிரை எண்ணி, அதைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டோமென்றால்,  நாம் அதன்வழி, உணர்வுகளை உடலுக்குள் செலுத்தலாம்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது மூக்கு வழி சுவாசித்து,
உணர்வுகளை உடலுக்குள் செலுத்துவது.
இதை அறிந்து கொண்டாலும்,
தீமையான உணர்வுகள் உள்ளுக்குள் செல்லாதபடி,
அடுத்த நிமிடம், ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி,
இதை இடை மறிக்க வேண்டும்.

நம்முடன் எவ்வளவு நல்லவர்கள் பேசினாலும், அந்த உணர்வில், அவர்கள் குடும்ப கஷ்டம், உடல் நோய்கள் போன்ற உணர்வுகள் கலந்து சொல்லாக வரும்.

அவர்களை கண்ணால் பார்க்கும் பொழுது, நமது ஆன்மாவில் கலந்து விடும். அவர்கள் பேசும் பொழுது, இந்த உணர்வுகள் கலந்தே வரும். இருந்தாலும், அந்த நிலையிலும் ஈஸ்வராஎன்று சொல்லி உணர்வை இடைமறித்து, அதை பலவீனப் படுத்த வேண்டும்.

அவ்வாறு  ஈஸ்வராஎன்று சொல்லும் நிலைகள் வலுப் பெறும் பொழுது, தீமையை, அது மாற்றும்.  அவர் பலவீனமான நிலைகளைச் சொல்லும் பொழுது, மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சமைத்து அதை எடுத்துப் போட்டால்தான், அது ருசியாக இருக்கும். கஷ்டம், என்று ஒருவர் சொல்லும் பொழுது,
அடடா, உங்களுக்கு கஷ்டமாக போய்விட்டதா?”, என்று சொன்னோமென்றால், அதையே தான் சமைத்து, மீண்டும் எடுத்துக் கொடுக்கின்றோம்.
அதனால், இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

(பக்கம் 13-19)

நாம் ஒருவருடைய எண்ணத்தை எண்ணுகின்றோம். அந்த எண்ணத்துடன் சேர்ந்து, உடலுடன் சேர்ந்து உணர்வும் வருகின்றது. எந்த மனிதனில் விளைந்ததோ, அந்த எண்ணம், நம் பால்வெளி மண்டலமாக (ஆன்மாவாக) மாறுகின்றது. அந்த மனிதனின் எண்ணத்தை முதலில் பதிவு செய்திருந்தோம் என்றால், அதே உணர்வை எடுக்கும். இந்த பிரபஞ்சத்திற்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்,
நமக்குள், உணர்வுகள் உயிரணுக்களாகின்றது,
பிரபஞ்சத்தில், உணர்வின் அலைகளாக மாறுகின்றது.

நமக்குள் ஒரு அணுவின் தன்மை இருக்கிறதென்றால், அது இருந்த இடத்திலேயே, உணர்வின் மலத்தை வெளியிட்டு, கூடுகளைக் கட்டும். இருதயம் வர வேண்டுமென்றால், அந்த உணர்வுகள் அதற்குத்தக்க, அணுக்கள் அங்கு கூடு கட்டுகின்றது. அப்பொழுது அந்த உறுப்புகள் உருவாகின்றது, அதை வைத்து அந்த உறுப்பை உருவாக்குகின்றது.

இதே மாதிரி, நமது பூமி, விண்ணிலிருந்து உணர்வின் சத்தை எடுத்து, ஒரு செடியை உருவாக்குகின்றது. அந்த செடி காற்றிலிருந்து, தன் உணர்வை எடுத்து விளைகின்றது. இருந்த இடத்திலிருந்து அது விளைந்தாலும், அதனுடைய வளர்ச்சியை அது பெறுகின்றது.

நமக்குள் இருக்கும் அணுக்கள், அது இருந்த இடத்திலிருந்து தான் அதனுடைய உணர்வின் சத்தை பெறுகின்றது. நாம் பிறருடைய நிலைகளைப் பார்க்கும்பொழுது,
உயிர், உணர்வுகளை உடலில் பரப்புகின்றது.
சூரியன்ஒரு செடியின் சத்தை எடுத்து,
அலைகளாக பூமியில் பரப்புகின்றது.
அந்த செடியில் விளைந்த வித்து, எங்கிருந்தாலும்,
இந்த சத்தை எடுத்து, அதற்குக் கொடுக்கின்றது.

இதேமாதிரிதான், 
நமது உயிர், 
பிறருடைய உணர்வைப் பார்க்கும் பொழுது,
எண்ணத்தால் கவர்ந்து, ஆன்மாவாக மாற்றி,
சுவாசித்து, உடலுக்குள் அனுப்புகின்றது. 
பூமியின் காற்று மண்டலத்தில், பிராண வாயு, மற்ற வாயுக்கள் மாதிரி உடலுக்குள் சென்றவுடன், அணுக்களுக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றதைப் பிரித்து, வெளியில் தள்ளிவிடுகின்றது.

இதைத் தான் பிரணாயாமம்செய்ய வேண்டும் என்று இவர்கள் நினைப்பது. பிராணாயாமம்என்றால் என்ன என்று தெரியாமல், மூச்சை வலுக் கட்டாயமாக இழுத்துவிட்டு, சுவாசப்பைக்கு அனுப்பி உடல் முழுவதும் பரப்புகின்றது. பின் மூச்சை அடக்கிக் கொண்டு போனோமென்றால், அங்கங்கு காற்று ஏறிக்கொள்ளும். இந்த பிராணாயாமம் செய்பவர்கள் எல்லோரும், குடு குடு என்று ஓடுகின்றது என்று சொல்லுவார்கள். எனக்கு எப்படியோ வருகிறது என்று சொல்லுவார்கள், அதுவல்ல பிராணாயாமம்.

உண்மையான "பிராணாயாமம்", எதுவென்றால்,
ஒரு உணர்வின் தன்மை,
நமக்குள் வாடி இருக்கிறதென்றால்,
அந்த மெய்ஞானிகளின் உணர்வை எடுத்து,
நமக்குள் ஜீவ அணுக்களாக மாற்ற வேண்டும்.
அப்படி ஜீவ அணுக்களாக்கும் பொழுது,
அந்த அணுக்களை எடுத்து,
அது தனக்குள் வளரத் தொடங்கும்.

நமக்குள் விஷம் கொண்ட உணர்வுகள் வரும் பொழுது, அருகில் இருக்கும் உறுப்புகளை மாற்றுகின்றது. அப்பொழுது, மகரிஷிகளின் அருள்சக்தி நான் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி, நாம் உடலுக்குள் அனுப்ப வேண்டும்.

அந்த சக்தி வாய்ந்த நிலைகள் உள்ளுக்குள் சென்றவுடன், நலிவடைந்த உறுப்புகள் கொஞ்சம் பலம் பெறுகின்றது. நாம் செடிகளுக்கு உரம் போட்டவுடன், காற்றிலிருந்து எடுத்து எப்படி விளைகின்றதோ, அது போல, இதை எடுத்து வரும்பொழுது, அது கொஞ்சம் கொஞ்சமாக விளைகின்றது.

குரு எனக்கு இதை உணர்த்தினார். குரு காட்டிய வழியில் நீங்கள் எல்லோரும் இதைப் பெற வேண்டும் என்றுதான், இதை நான் சொல்கின்றேன். நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று நான் விரும்புகின்றேன். நம் அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கின்றது.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள,  27 நட்சத்திரங்களின் உணர்வுகள் எதில் கலக்கின்றதோ,
ஒரு செடியில் கலந்தாலும்,
அந்த நட்சத்திரத்தின் நிலை கலக்கப்படும் பொழுதுதான்
அதற்குத் தக்கவாறு, அந்த தாவர இனச் சத்தை உருவாக்கும்.
இந்த பூமியில் செடிகள் எப்படி முளைக்கின்றதோ, அதே மாதிரிதான்,
நமது உடலில், 
சுவாசிக்கும் உணர்வுக்குத் தக்கவாறு,
அணுக்கள் விளையும்.
மலைப் பகுயில் விளைவது, கீழே தரைப் பகுதியில் விளைவதில்லை.

இதைப்போன்று, நமது உடலில், அந்தந்த காலப் பருவமும், அதனுடைய நிலைகள் வரும்பொழுது அணுக்கள் விளைகின்றது. அதனதற்குத் தக்கவாறுதான், இது கவரப்படும் பொழுது, சுவாசத்தை எடுத்து, அது விளைகின்றது. அந்த அணுக்கள், அது இருந்த இடத்திலிருந்து விளைகின்றது. இத்தனைக்கும் சாப்பாடு கொடுப்பது நமது உயிர்தான், அதை உருவாக்குவதும் நமது உயிர்தான். 

சூரியனோ, சந்தர்ப்பத்தில் ஒன்றோடு ஒன்றை இணைக்கச் செய்கின்றது. ஒரு வித்தை உருவாக்குகின்றது. அது விளைந்த பின், 
எதை எடுத்து, வித்தை உருவாக்கியதோ,
புவி ஈர்ப்பின் துணை கொண்டு
அதற்கு அதைக் கொடுத்து, செடியாக வளர்க்கின்றது.

இதே மாதிரி தான், நாம் நல்ல குணங்களோடு இருக்கின்றோம், பிறருக்கு உதவி செய்கின்றோம். அவர்களது உடலில் இருந்து வரும் உணர்வுகள், நம் எண்ணங்களோடு கலந்து, உயிரணுவாக மாறும் பொழுது, புதுப்புது குணங்களாக மாறுகின்றது.

நேற்று நன்றாகப் பேசினார், ஆனால், இன்று மோசமாகப் பேசுகின்றார் என்று சொல்கின்றோம். ஏனென்றால், அவர் யாரிடம் அதிகமாகப் பேசுகின்றாரோ, அந்த உணர்வுகள் இங்கே வளர்ச்சி பெறும். இவர் சுவாசிக்கும் அணுக்களின் தன்மை வளரப்படும் பொழுது, இதற்கு முன் மோசமாகப் பேசினாலும், இந்த மணங்கள் வந்து நல்ல எண்ணங்களை பேசுவார்.

சிலர் உயர்ந்த எண்ணங்களில் இருப்பார்கள். பிறர் சொல்லும் கஷ்டங்களைக் கேட்டிருப்பார்கள். அவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம் கேட்டிருப்பார்கள். இந்த உணர்வுகள் அணுக்களாகப் பெருகி இருக்கும்.

நல்லவராக இருந்து, நான்கு பேருக்கு பஞ்சாயத்து செய்தவர், பிறருடைய குறைகளை எல்லாம் கேட்டு, அது அணுக்களாக விளைந்து, தப்புள்ளவருக்கு நியாயத்தைப் பேசுவார். பஞ்சாயத்துகளில் பார்த்தால் இதுதான் வரும். முதலில் நியாயஸ்தர் என்று நினைப்போம்,
பிறருடைய உணர்வுகள்,
அணுக்களாக விளைந்த பின்,
நியாயங்கள் மாறிவிடும்.
இந்த தப்பிற்குத் தக்கவாறுதான், அவருடைய தீர்ப்பும் வரும்.
இந்த உணர்வுகள், ஏன் இந்த மாதிரி மாற்றமடைகின்றது என்றால்,
இது எல்லாம் இயற்கையின் சில நிலைகள்தான்.

அதைப் போன்றுதான், குரு காட்டிய உணர்வை உபதேசிக்கின்றோம். அவர் எனக்குள் உபதேசித்தார். அவர் உபதேசித்ததை உங்களிடம் சொல்கின்றோம். இது உங்களுக்குள் பதிவாகின்றது. இது, உங்களுக்குள் வளர்ச்சியாகிக் கொண்டே இருக்கும்.

எனக்கு எப்படியெல்லாம் நல்வழி காட்டினாரோ, அந்த நினைவு சிறுகச் சிறுக விளைந்து, நான் பெற்ற சக்தி மாதிரி, அதை அறியக் கூடிய சக்தி, நீங்கள் பெறுகின்றீர்கள். குரு உடலில் வளர்த்து வந்த எண்ணம், எனக்குள் இருக்கின்றது. அதை யாம் பெற்று, எமக்குள் வளர்த்து வந்த உணர்வைத் திரும்பச் சொல்லும் பொழுது, அது வருகின்றது.
குருவால் பெற்ற நிலைகள், எனக்குள் வளர்வதும்,
அது உங்களுக்குள்ளும் விளைகின்றது. 
ஒரு செடி, எந்த ஊரில் விளைந்ததோ, இந்த ஊரில் போய் வித்தை வாங்கி வந்தேன் என்று சொல்கின்றீர்கள். 

அதே மாதிரி, குருவினுடைய அருளை வைத்து, எனக்குள் விளைகின்றது.
குருநாதருடைய நிலைகளை, சாமியிடமிருந்து பெற்று வந்தேன்
என்றுதான் நீங்கள் சொல்வீர்கள்.
நீங்கள் இந்த உணர்வின் தன்மை சொல்லும் பொழுது,
சாமியினுடைய நிலைகளைச் சொல்லிச் சொல்கின்றீர்கள்.
 குருநாதர் என்னிடம் சொன்னது பற்றி, நான் உங்களிடம் சொல்கின்றேன்.
நான் சொன்னதை, நீங்கள் சொல்கின்றீர்கள்.
ஒன்றின் தன்மை ஒன்று, நாம் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு வருகின்றது.
குருநாதர், அவர் கண்டுணர்ந்த உணர்வுகள், எத்தனையோ கஷ்டப்பட்டு அதைப் பெற்றார். ஆனால், அதைத் தெரியப்படுத்துவதற்கு, எத்தனையோ ரூபங்களில் உணர்த்தி, அதைப் பெறச் செய்தார்.

எல்லோரும் அந்த மாதிரிக் கஷ்டப்பட முடியாது. ஆனால், அவர் கொடுத்த நிலைகளை, நீங்கள் அனைவரும் பெற வேண்டும். எமது அருளாசிகள்.


 (பக்கம் 20-25)

எத்தனையோ பேர், குருநாதரோடு பழகினார்கள். அவர் ரசமணி செய்து கொடுத்தால், சக்தி கிடைக்கும். அவரிடம் சித்துகள் பெற்றால், நானும் சக்தி பெறுவேன், என்று அந்த ஆசையில்தான் வந்தார்கள். அவர் யாரிடமெல்லாம் பழகினாரோ, அவர்களெல்லாம், சாமி எங்கள் வீட்டில் தான் படுத்திருந்தார், நான் சோறு போட்டேன் என்று சொல்லுவார்கள்.

அதே சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வந்தால் மலம் இருந்து வைத்து விடுவார், துணியைக் கிழித்து வைத்து விடுவார், என்று சொல்லுகிறவர்களும் உண்டு. நம் வீட்டிற்கு வந்தாலும், தொட்டியில் இருக்கின்ற தண்ணீரில் தவிடை எடுத்துப் போட்டு, “அனைத்தும் அசிங்கமாயிடுச்சு”, என்று சொல்லி அனைத்தையும் கொட்டிவிடச் சொல்வார்.

குடத்தில் இருக்கும் தண்ணீரை, வீடு முழுவதும் ஊற்றிவிட்டு, “வீடு அசிங்கமாக இருக்கு, அதைக் கழுவுகின்றேன்”, என்று சொல்வார். வீட்டிற்குள், சின்ன ரூமில் சிறுநீர் கழித்துவிட்டு, “எவனோ அசிங்கம் பண்ணி வைத்திருக்கான், அதைக் கழுவ வேண்டும்என்பார்.

சாமி அம்மாவோட அம்மா, எனது மாமியார், “பைத்தியத்தை வீட்டுக்குள் விட்டு இந்த மாதிரி செய்கின்றான்என்று சொல்லி, என்னைத் திட்டும். ஒரு நாள் இங்கே வந்து, “இந்தச் சொத்து போய்விடும், இந்த வீடு போய்விடும், எல்லாமே போய்விடும்”, என்று குருநாதர் சொல்கிறார்.

இது சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது, சாமி அம்மாவோட அம்மா, அருளாட ஆரம்பித்து விட்டது. உடம்பெல்லாம் எரியுது, தண்ணீர் ஊற்றுஎன்று சொல்கிறது. குருநாதர், “எனக்குத் தெரியாமல், எப்படி இந்த சாமி வருகிறதுஎன்று சொல்கிறார். எரியுதா!”, “உனக்கு இன்னும் எரியும் பார்என்கின்றார். அக்கினியாகின்றது, “அந்தக் கிழவனை போகச் சொல்என்கிறது அந்த அம்மா.

தண்ணீர் எடுத்து அடி”, என்றார், அடித்தவுடன் கீழே விழுந்துவிட்டது. அது உடலில் இருந்த பேய் போய்விட்டது .
கழுவிவிட வேண்டும் என்று சொன்ன நிலைகள், 
இந்த வீட்டில், அந்த அம்மா பாதங்களால் பதிவானது",
சாமி அம்மாவோட சின்னம்மா’,
"அது சாபமிட்ட அலைகள் இங்கு இருக்கின்றது”, 
அதனால் தான் தண்ணீரை ஊற்றி கழுவச் சொன்னேன்என்றார் குருதேவர்.

துணியைப் போட்டுத் தேய்க்கின்றார்,
எல்லாம் போய்விட்டது என்றேன்”.
உன் கண்களுக்குத் தெரியவில்லை, நீ முட்டாள்டாஎன்கிறார்.
உற்றுப் பார்என்றார்.

பார்க்கும் பொழுது, அந்தம்மா திட்டியது, பேசியது, எல்லாம் டேப் ரிக்கார்டரில் பதிவான மாதிரி, சுழன்று கொண்டு இருக்கின்றது.

இதுவெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள். நாம் வீட்டில் வாழ்ந்தவர்கள் இறந்து போய்விட்டார்கள் என்று நினைக்கிறோம். அவர்கள் உடலில், எந்தெந்த எண்ணங்களை வேகமாக எண்ணினார்களோ, 
பூமியில் இருக்கின்ற காந்தம்,
அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றது.

சில பேர் நல்லவர்களாக இருப்பார்கள். பக்கத்து வீட்டுகாரர், குடும்பக் கஷ்டங்களைப் பேசினால் நிம்மதியாக இருக்கின்றது, என்று சொல்லி விடுவார்கள். எந்த இடத்தில் உட்கார்ந்து பேசினார்களோ, அந்த இடத்தில் பதிவாகிவிடும். அந்த அலைகள் எல்லாம் சேர்ந்து விடும். நிம்மதியாக இருந்த வீட்டிற்குள், சண்டையும் சச்சரவுமாக வந்து விடும். 

நாங்கள் என்ன பாவம் செய்தோமோ”, என்பார்கள். காரணம், இரண்டு பேரும் கலந்து உறவாடிய உணர்வுகள், சுவரிலும் பதிவாகி விடுகின்றது. சங்கடமாக இருந்தால், வேறு எங்கும் போக மாட்டார்கள், சங்கடமாக எங்கு பேசினார்களோ, அங்கு போய்த் தான் உட்காருவார்கள்.

சாதரணமாக சுற்றுலா மையங்களில் பார்த்தால், சில பேர் ஒதுங்கித் தனியாகப் போவார்கள். உட்காருவதற்கே இடமிருக்காத அந்த இடங்களில், ஒற்றைக் காலில் நிற்பார்கள். ஊரில் இருக்கின்ற குறைகளெல்லாம் பேசிக் கொண்டு இருப்பார்கள். இவை அனைத்தும் அந்த இடங்களில் பதிவாகும்.

அந்த இடத்திற்கு வந்தவுடனே, ஊரில் உள்ள குறைகளைப் பேசிக் கொண்டே இருப்பார்கள். குறைகளைப் பேசப் பேச, அவர்கள் தொழில் நலிந்துவிடும்.
"உலகத்தில் எல்லோரும் ஏமாற்றுகின்றார்கள்,
ஏமாற்றுபவர்கள் நன்றாக இருக்கிறார்கள்,
நம் தொழில் மட்டும் நலிந்து கொண்டே இருக்கின்றது" என்று சொல்வார்கள்.

நான் குமாரபாளையத்தில் இருக்கும்பொழுது, தலையில் உருமா கட்டிக் கொண்டு சுற்றுலா செல்வார்கள். சின்ன ஒற்றைக் கல்லில், ஒரு காலில் நின்றுகொண்டு பேசுவார்கள். அதைப் போய் பார்க்கச் சொல்வார், குருநாதர். அங்கு சென்று பார்த்தால், பேசியது எல்லாம் அங்கு பதிவாகி இருக்கும், அதெல்லாம் டேப் செய்யப்பட்டு இருக்கும், அந்த உணர்வலைகளைக் கவனித்தால், அவர்கள் பேசியதெல்லாம் இருக்கும்.

இன்னும் சிறிது நாள் சென்றால், விஞ்ஞான அறிவு, இதையும் கண்டுபிடிக்கும். எலக்ட்ரானிக்கைக் கண்டுபிடித்தவர்கள், மனித உடலில் எலக்ட்ரானிக்காக மாற்றிய உணர்வுகள் பூமியில் பட்டவுடன், இந்த உணர்வையும் அறிய முடியும்.

ராமாயணத்தின் மூலங்களை, அரச சபைக்கு ஏற்றதாகக் கொண்டு வந்தார்கள். இப்படி, ராமஜென்ம பூமி என்ற இடத்தில் உருவாக்கிய நிலைகளையும், அங்கு நடந்த கொலைகளையும், விஞ்ஞான அறிவால் பார்க்க முடியும். எத்தனை உடல்கள் எரிக்கப் பட்டது, அந்த உணர்வின் அலைகள் எப்படி இருக்கின்றது என்பதை விஞ்ஞான அறிவால் பார்க்கும் நிலைகள் வரும். மெய்ஞான அறிவின் நிலைகள் இருந்தாலும், அந்த அணுக்களின் தன்மையை அறிய முடியும்.

ஆனால், ஜீவ அணுக்களாக உயிரினங்களில் வளர்ந்தது. இதை அறிய முடிந்தாலும் அவர்களுக்குப் பயனில்லை. அந்த உலகம் வருவதற்கு முன், இவனே அழிந்துவிடுவான். எலக்ட்ரானிக் என்ற நிலைகள், விஞ்ஞான அறிவால் வளரப்படும் பொழுது, எலக்ட்ரானிக்கைக் கண்டுபிடித்து விட்டான்.

அதே தான், நமது உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. ஒவ்வொரு நிலையிலும் கரண்டை உற்பத்தி செய்கின்றது. எடுத்துக் கொண்ட உணர்வை, அலைகளாக இயக்குகின்றது. இந்த உண்மையைக் காட்டுவதற்குத் தான், குருநாதர் என்னைக் காடு மேடெல்லாம் அலைய வைத்தார். அந்த காலங்களில் தவமிருக்கச் சென்றவர்களும், அரசர்களும் எவ்வாறெல்லாம் தாவர இனங்களின் மூலிகைகளை, நுகர்ந்து அறிந்தார்கள் என்பதைக் காட்டினார்.

போக மாமகரிஷி, எவ்வாறெல்லாம் தாவர மூலிகைகளை நுகர்ந்து அறிந்தார் என்ற நிலையும், அதைப் பின்பற்றிக் காட்டுப் பகுதியில், அரசர்கள் சென்ற நிலையும் எப்படிப் பதிவாகி இருக்கின்து என்பதைக் காட்டி, அந்த அலைகளை எனக்கு உணர்த்துகிறார். அதைத் தெரிந்து தான், நான் உங்களுக்கு சொல்கின்றேன்.

எல்லோருக்கும், எனக்கு தெரிந்த மாதிரி தெரிய வேண்டும் என்றால், அதிக நாட்கள் ஆக வேண்டும். ஆனால் தெரிந்தாலும், வாழ்க்கைக்கு அதை விலக்கி, மெய்ஞானியின் உணர்வைப் பெறக்கூடிய நிலைகள் வரவேண்டும்.

அரசர்கள், அவர்கள் ஆசைக்கு, உடலின் இச்சையை வளர்த்தவர்கள். இதில் சிக்கி விட்டால், பெரிய மகானாகப் போகின்றேன், என்று  உடல் பற்று வந்துவிடும். அந்த மெய்ஞானிகளின் உணர்வை வளர்த்து, அதைப் பெற வேண்டுமென்று, அவர்கள் பெற்ற உணர்வை வளர்த்தால் நாம் அங்கே போகலாம்.

நமது எல்லை, துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் வாழும், சப்தரிஷி மண்டலமாகத்தான் இருக்க வேண்டும். அந்த உணர்வை வளர்த்து, அங்கே செல்வதுதான், மனிதனின் கடைசி எல்லை. அந்த எல்லையை அடையும் அருள் வாழ்க்கையை, நீங்கள் அனைவரும் வாழ, குரு அருளும், எமது அருளும் எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.