ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 30, 2013

சிவலிங்கம் - வெப்பம் தான் “உயிர்”

1. கண்ணுக்குப் புலப்படுவது சிவம்
கண்ணுக்குப் புலப்படாத சக்தி, ஒரு பொருளாகச் சேர்க்கப்படும் பொழுது சிவமாகின்றது. இவ்வாறு சிவமான அந்த சக்தி திடப் பொருளாக ஆகும் பொழுது,
பேரண்டத்திலே ஒன்றுமே இல்லாத இடத்தில்
ஒரு பொருள் அந்த எல்லையாகத் தெரிகின்றது.

இப்பொழுது, நாம் இங்கிருந்து சூரியனைப் பார்க்கும் பொழுது, அது ஒரு எல்லையாகத் தெரிகின்றது. ஒரு நட்சத்திரத்தைப் பார்க்கும் பொழுது ஒரு எல்லையாகத் தெரிகின்றது. கடலுக்குள் நீருக்குள் பார்த்தால், அதற்குள் தனியாக ஒரு திட்டாகத் தெரிந்தது என்றால், அங்கேதான் நாம் தங்க முடியும்.

அதாவது, கடலுக்குள் ஒரு திட்டாக எப்படி இருக்கின்றதோ (மிதக்கின்றதோ), பாற்கடலிலே பேரண்டத்தில் பல உணர்வின் சத்தான ஆவியான அலைகளுக்குள், அது பரம் பொருளாகினறது. பரம் என்பது ஒரு எல்லை. எல்லையான நிலைகளாகின்றது.

பல சக்திகள் ஒன்று சேர்த்து, பரமான நிலையாகும் பொழுது பரமசிவம். மெய்ஞானிகள் வைத்த பெயர் அது. நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது தனக்குள் எடுத்துக் கொண்ட பல உணர்வின் சக்திகள் கொண்டு, அண்டத்திலே ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, மற்ற காந்த அலைகளுடன் சேர்க்கப்படும் பொழுது சுழல்கின்றது.

நாம் ஒரு கல்லை வீசியெறிந்தால், காற்றுடன் உராயப்படும் பொழுது சுற்றுகின்றது. ஆக, அதைப் போல
விண்ணிலே ஓடும் வேகத்தில்
மற்ற காந்த அலைகளுடன் மோதும் பொழுது,
அந்தப் பரம்பொருள் சுழற்சியின் சக்தியாகும் பொழுது,
ஈர்ப்பின் சக்தியாகின்றது.
ஆனால் சுழற்சியாகும் பொழுது,
வெப்பம் தனக்குள் ஆகாரத்தை எடுத்துக் கொள்கின்றது.
2. வெப்பம் தான் “உயிர்” - சிவலிங்கம்
நம் உயிரின் துடிப்பாகும் பொழுது வெப்பம். ஆனால், உயிரின் துடிப்பாகும் பொழுது, நமக்குள் இழுக்கும் சக்தி “மூச்சு”. இதைப் போன்றுதான், பரம்பொருள் சுழலும் பொழுது, தன் அருகிலே இருக்கக்கூடிய சத்தைத் தனக்குள் இழுத்துக் கொள்கின்றது.

ஆனால், சுழற்சியின் நிலைகளில் வெப்பமாகின்றது. அந்த வெப்பத்தின் நிலைகள் கொண்டு ஈர்ப்புத்தன்மை வரும் பொழுது, ஏற்படும் வெப்ப அலைகளை தனக்குள் மாற்றி “ம்” என்று பொருள்களுக்குள் மோதுகின்றது.

மோதியவுடனே, வெப்ப அலைகள் உருவாகி, அது நடு மையத்திற்கே வெப்பத்தைக் கொண்டு செல்கின்றது. ஆக, ஒவ்வொரு பொருளுக்குள் கலந்திருக்கும் வெப்பங்ககள் அதிகமாகி, அந்தப் பரம்பொருளான திடப்பொருளுக்குள் வெப்பம் அதிகமாகக் கூட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த வெப்பம்தான் அதற்கு உயிர். அதனால்தான் ஒரு திடப்பொருளாக ஆனதை சீவலிங்கம் – நாம் சிவலிங்கம் என்று சொல்வதை, மெய்ஞானிகள் சீவலிங்கம் என்று பெயர் வைத்தார்கள்.
3. வெப்பத்தால் தான் பேரண்டத்தில் வெளிச்சமே வருகின்றது
அந்தச் சீவலிங்கத்தின் தோற்றம் தான் பல சக்திகளாகி, அதாவது சிவ சக்தி என்று பெயரை வைத்து நம்மை அறியச் செய்தார்கள் மெய்ஞானிகள். இவ்வாறுதான் அது வளர்ச்சியாக வளர்ச்சியாக, தான் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்தை, அது விண்ணிலேயிருந்து பல சக்திகளை விழுங்கி விழுங்கித்தான், பெரும் கோளாக மாறுகின்றது.

முதலில் கல், மண் மற்ற பொருள்கள் உருவாகின்றது. வெப்பம் அதிகமாக, கல் மண் உருகி, உலோகங்களாக மாறுகின்றது. வெப்பம் அதிகமாகும் பொழுது உலோகங்கள் உருகி அமிலமாகின்றது, கோள் நட்சத்திரமாக மாறுகின்றது. தன்னிச்சையாக ஒளி பெறும் தன்மை பெறுகின்றது நட்சத்திரம்.

அதற்குப்பிறகுதான் பேரண்டத்திலே வெளிச்சமாகின்றது. ஆக, தனக்குள் சுழற்சியின் வேகம் கூடி, வெப்பம் கூடி, ஈர்க்கும் திறன் கூடும் பொழுது, நட்சத்திரம் சூரியனாக மாறுகின்றது.

சூரியனாகும் பொழுது வெப்பம் அது குளிர்ந்து,
தனக்குள் இருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் பொழுது,
பிரபஞ்சத்திலிருக்கக்கூடிய மற்ற ஆற்றலினுடய சக்திகளை
செயலிழக்கச் செய்து,
சுலபமான நிலைகளில் தனக்குள் சக்தியை எடுத்துக் கொள்கின்றது.
சூரியன் குளிர்ச்சியான நிலை.

ஆனால், அதிலிருந்து வெளிப்படுத்தும் அற்றலின் தன்மைகள்தான், அது பல இலட்சம் மைலுக்கு அந்தப் பக்கம், வெப்பத்தை உண்டாக்குகின்றது.

ஆனால், சூரியனைச் சுற்றி அது வெளிப்படுத்தும் ஒளிகளிலே இருக்கக்கூடிய அந்த வெளிச்சத்துக்குள் ஊடுருவி, சூரியனின் நிலத்தை நாம் பார்க்க முடிவதில்லை.

ஆனால், அதில் வெளிப்படும் அந்த ஒளியின் தன்மை அதற்குள் ஊடுருவி, அந்தச் சத்துக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு நிலையும், அது அதிகமான ஆற்றலின் தன்மையை வெளிப்படுத்துகின்றது.

July 29, 2013

நம் உடலுக்குள் பதிவாகி இருக்கும் RADIO,T.V. அலைவரிசைகளைப் பற்றிய உண்மைகள்

நாம் எந்த அளவிற்கு ரேடியோவையும், டீ.வி.யும் பார்க்கின்றோமோ, இந்த உணர்வுகள் அநேகமாக நம் எல்லோருக்குள்ளும் பதிவாகிவிட்டது. மனிதனுடைய மூச்சலைகள் கொண்டு கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்து,
இன்று இராக்கெட்டில் இருக்கக்கூடியவனை
இங்கிருந்து இயக்கச் செய்து,
அவன் உடல்நிலைகளைச் சீராக்கச் செய்து,
அவனுக்கு இங்கிருந்து மருந்தைக் கொடுக்கின்றான், விஞ்ஞானி.

இராக்கெட்டில் உள்ளவனும் அங்கே டீ.வி.யைப் பார்க்க்கின்றான், இவனும் இங்கே டீ.வி.யைப் பார்க்கின்றான். அவனுடைய உடலைப் பார்த்து, பரிசீலித்து, இதே கம்ப்யூட்டர் அலைவரிசையில் அவனுக்கு மருந்தைக் கொடுக்கின்றான். 

ஆக, நாம் இங்கே ரேடியோவையும், டீ.வி, யும் நம் புலனறிவாலே பார்க்கின்றோம், கேட்கின்றோம். இந்த உணர்வலைகளிலே ஆற்றல்மிக்க அலைகளைச் செருகிச் செருகி, கொஞ்ச கொஞ்சமாக நம் உடலில் இன்றைக்கு விஞ்ஞான அறிவு கொண்டு.சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் சேர்த்துக் கொண்டபின், இன்றைக்கு ஏதாவது சந்தர்ப்பம் வந்தபின், நம் நினைவுகளையே இழக்கக்கூடிய அளவிற்கு, நம்மை இருள் சூழ வைக்கலாம்.

அதாவது, நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ, அது ஒரு நூல் (மிகச் சிறியளவில்) அதிகமாக மாற்றும் பொழுது, நம்முடைய சிந்தனை சிதைகின்றது. கண் தெரியாமல் போகலாம், காது கேட்காமல் போகலாம்.

கண பார்வையைப் போக்குவதா? ஞாபக சக்தியைப் போக்குவதா என்ற எண்ணங்கள் கொண்டு, அதில் பலவிதமாக இன்று ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அப்படிப் போக்கினால், மீண்டும் அதை உருவாக்க முடியுமா? என்று இன்றைக்கு பரிசீலனையில் இருக்கின்றார்கள்.

அதில் சில நிலைகளில், முழுமை பெற்றிருக்கின்றார்கள். ஆனால், அந்த அலைகளை அனுப்பும் பொழுது, இன்றைக்கு கம்ப்யூட்டர் அனைத்தும் தாறுமாறாக இயங்கி, இராக்கெட்டுகளில் பொருத்தி வைத்திருக்கப்பட்டுள்ள, மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் வெடிக்கலாம். அதைப் போல,
இன்று விஷ ஆலைகளில் உள்ள
ஒவ்வொரு இயந்திரங்களையும் இயக்கி,
அவைகளை ஓட்டிக் கொண்டிருப்பது
அனைத்துமே இந்தக் கம்ப்யூட்டர்கள் தான்,

ஆக, இது தாறுமாறாக இயங்கினால், அனைத்துமே சுக்குநூறாகி நாடே நஞ்சாகக் கூடிய நிலைகள் வந்துவிட்டது. இதையெல்லாம் கண்டுபிடித்ததனாலே, வெளியிட முடியாதபடி பயத்தில் இருக்கின்றார்கள்.

ஏதாவது ஆராய்ச்சியில் தவறுதலான நிலைகளில் வெடித்துவிட்டால், இன்றைக்கு என்ன செய்வது? என்று அணுகுண்டுகளையெல்லாம் ஒழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நன்றாக கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். யாம் சொல்லக்கூடியதெல்லாம் பின்பு வரும். யாம் முன்பு சொன்னது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருக்கின்றது. இப்பொழுது சொல்வதையும், நீங்கள் பின்பு பார்க்கலாம்.

ஆனால், அதற்குள் நீங்கள் அந்த மெய்ஞானிகள் அலைகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்.அந்த உணர்வின் நினைவு கொண்டு, அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ தியானம் இருங்கள். அம்மா, அப்பாவை வணங்கி, வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானம் செய்யுங்கள்.

வீட்டை விட்டு எங்கே வெளியில் சென்றாலும், ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்லுங்கள். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

எமது ஆசை, நீங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.
எமது ஆசை, உங்கள் மூச்சு பிறருக்கு நல்லதாக வேண்டும்.
எமது உபதேசம், உங்கள் கஷ்டத்தைப் போக்கச் செய்ய வேண்டும்.
உங்கள் அனைவரது பேச்சும், மூச்சும்
பிறருக்கு நல்லதை உண்டாக்க வேண்டும்.

ஆகவே, ஓம் ஈஸ்வரா என்று உயிரை புருவ மத்தியில் எண்ணுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று வானை நோக்கி எண்ணுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

இதை எடுத்து, நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும். எடுப்பதற்குப் பழக்கம் வந்துவிட்டதென்றால், அப்புறம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. தன்னாலே அது எடுத்துக் கொள்ளும். எமது அருளாசிகள்.

July 28, 2013

கண ஹோமம்

கண ஹோமம் எது என்றே தெரியாது இருக்கின்றோம். கண ஹோமம் என்பது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள். உயிர் ஒரு நெருப்பு,

நாம் உயர்ந்த குணங்களை எண்ணும் பொழுது, பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்று எண்ணுகின்றேன். அந்த உணர்வின் தன்மை எனக்குள் வரப்படும்பொழுது
உயிரான இயக்கத்திற்குள் (நெருப்புக்குள்) உணர்வு பட்டவுடனே
அந்த உணர்வுகள் என் உடலுக்குள் பரவுகின்றது,
என் சொல்லின் அலைகள் வெளிப்படுகின்றது.

வெளிப்பட்ட நிலைகள் மீண்டும் எனது உடலில் உள்ள காந்தப்புலன், எனது ஆத்மாவாக மாற்றிக்கொள்கின்றது. இதற்குப் பெயர் தான் கண ஹோமம்.

ஹோமத்தில் மலரைப் போட்டுவிட்டு, நெய்யை ஊற்றுகின்றார்கள். பாலில் இருந்து தயிரைக் கடைந்து, வெண்ணையாக்குகின்றோம். அந்த வெண்ணையை உருக்கி நெய்யாக்குகின்றோம்.

இதைபோலத்தான், உயிர் இனங்களில் இருந்து  மனிதனாகி,
மனித நிலைகளில் இருந்து
மிகச் சக்தி வாய்ந்த உணர்வின் தன்மையை
நெய்யாக மாற்றிச் சென்றவர்கள் மகரிஷிகள்.

ஆகவே, ஒவ்வொரு பொருளையும் நெருப்புக்குள் இடப்படும்பொழுதெல்லாம் சொல்லித்தான் போடுவார்கள். ஏன் போடுகிறோம், எதற்குப் போடுகின்றோம் என்று தெரியாது,
புறத்தீயிட்டு அல்ல, 
அகத்தீயில் போடவேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும், ங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், ங்கள் ஜீவாத்மா பெறவேண்டும், இந்த மலரைப் போல மணம் பெற வேண்டும், நாங்கள் பார்க்கும் அனைவரும் இதையெல்லாம் பெறவேண்டும், என்று நாம் எண்ணும் பொழுது நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் ஆகின்றது,
நம் உயிருக்குள் இருக்கும் நெருப்புக்குள் இந்த மணம் பட்டவுடன்
உணர்வலைகளாக உடல் முழுவதும் பரவுகின்றது, 
சொல்லாக வெளிப்படுகின்றது.
இதுதான் கண ஹோமம் என்பதும்
அபிஷேகம் என்பதும். 

July 27, 2013

முரடனாக இருந்த வான்மீகி எப்படி ஞானியானான்?

1. வான்மீகி முரடனாக இருந்தாலும், தன் மனைவி, குழந்தை என்ற பாச உணர்வு அவனிடம் உண்டு
வான்மீகி ஒரு முரடன், கொள்ளைக்காரன். அவன் வேடனாக இருந்ததால் தன்  பசியைப்போக்க பல உயிரினங்களைக் கொன்று அவனுடைய ஜீவிதம் நடந்தது. ஆக, கொள்ளையடிப்பது, ஈவு இரக்கமற்ற செயல்களைச் செய்வது, அதாவது வில்லேந்தி பல பறவைகளைக் கொல்வது, அதைப் புசிப்பது, இப்படி பல வேலைகளைச் செய்து கொண்டிருந்தான் வான்மீகி.

அவனுக்கோ கல்வியறிவு கிடையாது,
ஆனால், இந்த வேடன் இராமாயணக் காவியத்தை எழுதினான்.
இராமாயணக் காவியத்தின் உட்பொருள் என்ன? வியாசகனும், வான்மீகியும் ஒரே காலகட்டத்தில்தான் ஆற்றல் பெற்றனர். இந்தப் பூமியிலே சந்தர்ப்பத்தால் உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளை இருவருமே பெற்றார்கள்.

வான்மீகி எவ்வளவு மோசமாக ஈவு இரக்கமற்று இருந்தாலும், தான் வாழும் பொழுது தன் மனைவி, தன் குழந்தை என்ற எண்ணம் வரப்படும் பொழுது, அந்தப் பாசம் என்ற ஒன்று இருக்கும்.

கணவன், மனைவி என்ற அன்பின் நிலைகள் கொண்டு, ஒரு உடல் உருவானால், அதற்குள் இருக்ககூடிய இந்தப் பாசத்தில், அந்தக் காந்தத்தின் அலைகள் இருக்கும்.

ஆக, அவர்கள் எவ்வளவு அசுரத்தன்மையாக இருந்தாலும்,
ஒரு கொடூரமான நிலைகொண்ட மனிதனாக இருந்தாலும்
தன் குழந்தை என்ற நிலைகள் வரப்படும் பொழுது,
அந்தப் பாச உணர்வு கொண்டு தனக்குள் இணைக்கும்.
அவனுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டுவிட்டால், அவனைக் காக்க வேண்டும் என்ற எண்ண உணர்ச்சிகள் இருக்கும்.

ஆகையினாலே, சரீரத்தின் நிலைகளிலில் தனித்து இருந்தாலும், அவனை, “தன் இனமான சக்தியைக் காக்க வேண்டும் என்று, உணர்வுகள் உணர்ச்சியைத் தூண்டும்.

ஏனென்றால், ஒரு மரமானாலும் செடியானாலும் இந்த உணர்வுகள்தான் இயக்கும். இதைப் போன்றுதான் அதனின் செயல் இருக்கும்.
2. மகிழ்ச்சியாக இருக்கும் பட்சிகளில் ஒன்றை, இரக்கமற்றுக் கொல்கிறான் வான்மீகி
இவ்வாறு வேடுவனோ வேட்டைக்குச் செல்கின்றான். வேட்டைக்குச் செல்லப்படும் பொழுது இரு பட்சிகள் அது தனது இரையைத்தேடி அது சுழல்கின்றது.

ஆனால், இவனுடைய வாழ்க்கைக்கு இவன் இரையைத் தேடிச் செல்கின்றான். அந்த இரண்டு பட்சிகள் மகிழ்ந்து கூடிக் குலாவி இரையைத் தேடி தனக்குள் மகிழ்ச்சியாகச் சுழன்று கொண்டிருக்கின்றது.

இரையைத் தேடிவிட்டு, தான் மகிழ்ச்சியாகச் சுழன்று கொண்டிருக்கும் நேரத்தில், தன் மகிழ்ச்சியின் ஆரவாரத்துடன் இருக்கப்படும் பொழுது, இவன் மறைமுகமாக இருந்து ஒரு பட்சியைக் குறி பார்த்து அம்பை எய்கின்றான். அது அடிபட்டு, துடிதுடித்துக் கீழே விழுகின்றது.

இது துடிப்பதைக் கண்டு, மற்றொரு பட்சி, அதுவும் தன் பாசத்தாலே துடிக்கின்றது. ஆனால், இதனுடன் கூடிக்குலாவிக் கொண்டிருந்த அந்தப் பட்சியோ, அடிபட்டுக் கீழே விழுந்து தரையிலே துடித்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால், துடித்துக் கொண்டிருப்பதைத் தன் பாசத்தால் ஏங்கிப் பார்க்கின்றது. ஆனால், அது ஏங்கிப் பார்க்கப்படும் பொழுது, அந்தப் பட்சியை இவன் எடுத்து வைத்துக் கொண்டான்.

ஆக, இவன் அந்த அடுத்த பட்சியையும் தான் கவர்ந்து, அதையும் அம்பால் தாக்க வேண்டுமென்று தன் கண்ணின் புலனறிவைக் கூர்மையான நிலைகளில், பட்சி மீது எண்ணத்தைச் செலுத்துகின்றான்.
3. பட்சியின் எல்லை கடந்த பாச உணர்வு, வேடனுக்குள் ஆழமாக ஊடுருவுகின்றது
அப்பொழுது, அந்தப் பட்சியோ இவன் கையிலிருக்கக்கூடிய அடிபட்ட அந்தப் பட்சியை ஏங்கி, அது பரிதவித்து, அந்தப் பாசத்தின் உணர்வு கொண்டு பார்க்கின்றது.
               
இவன் தனக்குக் கிடைத்தது என்ற நிலையில் அதைக் குறிவைத்து, அதைத் தாக்கும் நிலைகளுக்குச் செல்கின்றான். இவனுடைய எண்ணம் அந்தப் பட்சியின் மேல் படுகின்றது.

அந்தப் பட்சியிடமிருந்து வரக்கூடிய உணர்வின் மணத்தை, அதனின் பாசமான உணர்வின் சத்தை,
இவனின் கண் புலனறிவு
அந்தப் பட்சியைப் படமெடுக்கின்றது.

ஈர்க்கும் சக்தியினுடைய காந்தம்,
அந்த உணர்வின் பாச அலைகளை
இவனுக்குள் ஈர்த்துச் சுவாசிக்கச் செய்கின்றது

ஆனால், இவன் அதைச் சுவாசித்து,
நாணை இழுத்து அம்பை எய்யப்படும் பொழுது,
இந்தப் பாசத்தாலே அம்புகள் திசை மாறுகின்றது.
அது தப்பித்துக் கொள்கின்றது.
தன் பாசத்தாலே அது ஏங்கித் தவிக்கப்டும் பொழுது, இந்த உணர்வுகள் கூர்மை இரண்டிலேயும் சேர்க்கப்படும் பொழுது, அது மாறுகின்றது. 

இன்றைக்கு, கம்ப்யூட்டரில் பல அலைகள் வரப்படும் பொழுது சமமான அலைகள், மாறுபட்ட அலைகளை ஒதுக்கிவிட்டு, நாம் ஆணையிட்ட பாஷைகள் மூலம் தெளிவானவற்றைக் காட்டுகின்றது. அதை நாம் அறிந்து கொள்கின்றோம்.

அதைப் போன்று, வேடனுடைய எண்ணமோ பட்சியைக் குறி வைத்து, அதைத் தாக்கும் நிலைகொண்டு கூர்மையாக எண்ணும் பொழுது,
பட்சியினுடைய உடலிலிருந்து வரக்கூடிய உணர்வின் அலைகளை
இவனுடைய புலனறிவு
இவனுக்குள் ஈர்க்கின்றது.
அது அவனுக்குள் ஆழமாக ஊடுருவுகின்றது.
4. வேடன் விண்ணை நோக்கி ஏகுகின்றான்
வேடன், தன் இனத்தைப் பாதுகாக்கும் உணர்வின் தன்மை, குழந்தைப் பருவத்திலிருந்து கூட்டிக் கொண்ட, அந்த மறைந்திருந்த உணர்வுக்குள் பட்சியுனுடைய பாச உணர்ச்சி தாக்குகின்றது.

ஆனால், வேடன் பல முறை அம்புகளை எய்கின்றான், அது தப்பிக்கின்றது. ஆக, பட்சி அது பாசத்தாலே துடிப்பதை, அதனுடைய குறிப்பை, பல முறைகள் எண்ணி எண்ணிப் பார்க்கின்றான்.

அப்பொழுது, இவனுக்குள் மறைந்திருந்த பாசத்தின் நிலைகள் தட்டியெழுப்பும் பொழுதுதான் இவனுடைய சிந்தனைகள் தடுமாறுகின்றது. அம்பைக் கீழே போடுகின்றான்.

இவனையறியாமல் தட்டியெழுப்பிய அந்த உணர்ச்சி கொண்டு, அந்தப் பட்சியின் பாச உணர்வை ஏக்கத்தாலே எண்ணி, ஏங்கிப் பார்க்கின்றான்.

இவன் கையிலே இருக்கும் பொழுதே அடிபட்ட பட்சி துடித்து இறந்துவிட்டது. ஜீவனுடன் உள்ள மற்றொரு பட்சி, தன்னுடைய பாசத்தால் ஏங்கிப் பார்க்கின்றது. இவனையே பின் தொடர்கின்றது.

ஆக, இவன் அம்பை எய்யும் பொழுது, பட்சியின் பாச அலைகளை இவனுக்குள் காந்தம் இழுத்துக் கொள்கின்றது. அது, இவனுக்குள் மறைந்திருக்கக்கூடிய,
தன் இனத்தைக் காக்கும் அந்தப் பாசத்திற்குள் தாக்கியவுடன்,
இந்த உணர்வுகள் உந்தி
சிந்தனையைக் கிளரும் நிலைகள் வருகின்றது.

அப்பொழுது, இவனுக்குள் இருக்கும் அசுரத்தன்மைகள் அனைத்தும் மாய்ந்து, அவனுக்குள் மறைந்திருக்கும் தன் இனத்தின் பாச உணர்ச்சிகள் உந்தி, அந்தப் பட்சியின் எண்ணத்தின் துடிப்பின் ஆழத்தை இவன் அறிகின்றான்.
அறிந்துகொண்ட அந்த உணர்வை வைத்து,
இவனிடம் இருக்கக் கூடிய அசுரச் சக்திகள் அனைத்துமே,
இவனுக்குள் மறைந்திருக்கக்கூடிய பாச எண்ணத்திற்குள் சிக்கி,
அவன் கண்ணான புலனறிவுக்குள் ஊட்டி,
விண்ணை நோக்கி ஏகுகின்றான்.
5. துருவ நட்சத்திரத்திலிருந்து வந்த ஒரு அணுவின் ஆற்றல், இவனுக்குள் சிக்குகின்றது
கதிரவன், அவன் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஒளி கொடுத்து உலகத்தைச் சிருஷ்டிக்கிறான், என்ற அந்த பக்தியின் நிலைகள் கொண்டு ஏங்கித் தவித்து, அன்று ஒவ்வொரு உணர்விலேயும் சேர்ந்து கொண்டிருக்கக்கூடிய ஏக்கம் கொண்டு, விண்ணை நோக்கி ஏகி இருந்தான் அந்த வேடன். வான்மீகி என்று அப்பொழுதுதான் பெயர் வந்தது.

அவனுடைய சந்தர்ப்பம், அவன் தேக்கிய அந்த உணர்வுதான், விண்ணின் ஆற்றலைத்தான் கவர்ந்து கொண்டது, அந்த விண்ணின் ஆற்றலை, எந்தெந்த அணுவின் தன்மை எப்படி ஆவியாக இருந்தது? இன்று எவ்வாறு கோள்களாக மாறியது? என்ற பேருண்மையை அறிந்துணர்ந்தவன் வான்மீகி.

அவன் வானை நோக்கி ஏகும் பொழுது, அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வந்த ஒரு அணுவின் ஆற்றல்தான், இவன் ஈர்ப்புக்குள் செல்கின்றது.

அன்று அகஸ்தியன்,
தான் எந்தப் பாசத்தைச் செலுத்தி,
தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றானோ,
அந்த ஆற்றலை இவன் நுகர நேருகின்றது.
அதன்வழி கொண்டு சிந்திக்கச் செய்யும் ஆற்றல் கூடி,
தன்னை அறியும் நிலை அவனுக்குள் வருகின்றது.

July 25, 2013

ஹரி ஓம் நமோ நாராயணா...!

1. விஷத்துக்குள் தான் அனைத்துமே வளர்ச்சி
ஆதிசேஷன் என்பது விஷம். இந்த விஷத்துக்குள் தான் அனைத்துமே வளர்ச்சி.

சாதாரணமாக, ஒரு குடம் பாலுக்குள் ஒரு துளி விஷம் பட்டவுடனே, அந்த பாலின் சத்துக்கள் செயலிழந்து விஷத்துக்குள் அடங்கிவிடுகின்றது. ஆனால், அந்தப் பாலை யார் ஒருவர் குடித்தாலும், அது மாய்த்துவிடும்.

விஷம் அதற்குள் கலந்திருந்தாலும், அதனுடன் மேலும் அதிகமான அளவில் பாலைச் சேர்க்கப்படும் பொழுது, அந்த விஷத்தின் தன்மையை, அது குறைத்து விடுகின்றது.

இவ்வாறுதான், விண்ணிலே தோன்றிய விஷத்தின் தன்மைகளுக்குள், நல் உணர்வின் ஆற்றல்களைத் தனக்குள் சிறுகச் சிறுகச் சேர்த்து அந்த உணர்வின் ஒளி நிலைகள் கொண்டு ஒளியாக மாறி,
விஷத்தை மாற்றி,
நல்லதை உருவாக்கும் நிலைதான்
ஆற்றல்மிக்க அணுக்களின் தோற்றம்.
         
அந்த நிலையைக் காட்டுவதற்குத்தான், “ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டான் நாராயணன்” என்றார்கள். நாராயணன் என்பது சூரியன். சூரியன், விண்ணிலிருந்து வரும் விஷத்தை அடக்கி, ஒளிக்கதிராக மாற்றி, தன் உடலுக்குள் அணுகாத நிலைகள். அதை “அல்ட்ரா வயலட், ULTRA VIOLET” என்றும் சொல்கின்றோம்.
இந்தப் பிரபஞ்சம் அனைத்துமே விஷம். அதற்குள்தான் சூரியன் படுக்கையை வைத்திருக்கிறது. அதன் மேல் பள்ளி கொண்டு, மிதந்து கொண்டிருக்கின்றான் என்ற தத்துவத்தைக் காட்டுவதற்குத்தான், நச்சுத்தன்மையான பாம்பைக் காட்டி, நாராயணன் விஷத்தின் தன்மையான ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டான், என்று காட்டினார்கள்.
2. ஹரி ஓம் நமோ நாராயணா
விஷத்தின் ஆற்றலுக்குள் மிதந்து கொண்டு
பள்ளி கொண்டிருக்கின்றான், ஸ்ரீமன் நாராயணன்.
ஹரி ஓம் நமோ நாராயணா.

அதாவது, ஒளியாக நம் கண்ணிலே
புலனறிவுகளிலே தெரிவதற்கும்,   
அந்த உணர்வின் அலையே நமக்குள் இயக்கி,
நாம் அறியச் செய்யக்கூடிய ஆற்றலும்,
வளரச் செய்யக்கூடிய ஆற்றலும்
அந்த சூரியனின் ஒளிதான்.

அவ்வாறு அது வளர்ந்த பின் தான், அந்த உணர்வின் இயக்கத்தாலே, இன்று நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். கண்ணாலே பார்க்கின்றோம், செயல்படுகின்றோம், அதை நாம் அறிவதற்கு, நாம் அதனுடன் மோதும் நிலைகள் கொண்டுதான் ஓம் -- பிரணவம் ஜீவனாகி, ஹரி ஓம்.

அந்தச் சூரியனின் ஒளி வட்டத்திற்குள் நாம் மோதி, அந்த மோதும் நிலைகள் கொண்டுதான், இந்த உடலும் நம் எண்ணமும் ஜீவனாகின்றது,

ஹரி ஓம்,. அதனுடன் இணைந்த நிலைகள் நமோ அந்த வெப்பத்தின் தன்மை நமக்குள் இருந்து அதுவாக இருந்து நமக்குள் அது இயக்கும். நமோ நாராயணா, அதனுடைய தொடர் வரிசையில்தான் நாம் சுழன்று கொண்டிருக்கின்றோம் என்ற இந்தத் தத்துவத்தை ஒரு சொல்லுக்குள் அடக்கி, அன்று மெய்ஞானிகள் தெளிவுற உணர்த்தினார்கள்.

ஆதிசேஷன் மேலே பள்ளி கொண்டான் என்று இதை யார் காட்டியது? ஒன்றுமறியாத அந்த மீனவனான வியாசன் தான் இதைக் காட்டினான். ஆக இந்த வியாசனுக்கு எங்கிருந்து இந்த ஞானம் வந்தது?

அன்று ஆதியிலே தோன்றிய மகரிஷிகள், பேரண்டத்தின் உண்மையினுடைய நிலைகளை அறிந்துணர்ந்தவர்கள். அவர்கள் சப்தரிஷிகள்.

சூரியனிலிருந்து வரக்கூடிய நிறங்கள் ஏழு. அந்த ஏழு உணர்வுகளையும் தனக்குள் அடக்கி, உணர்வின் ஒளியாக ஒளிரச் செய்து, தன் அடக்கத்திற்குள் செயல்படுத்திய அந்த ரிஷிதான் சப்தரிஷி ஏழு.

ஏழையும் தனக்குள் அடக்கி ஒளியாக இயக்கும் ஆற்றல் பெற்றது. அதிலிருந்து வெளிவரும் நிலைகள் தான் ரிஷியின் மகன் நாரதன். அந்த ரிஷித்தன்மையான நிலையில் விளையப் பெற்ற அந்த அணுவின் தன்மை, வியாசனின் உடலிலே சேர்க்கப்படுகின்றது.

அப்படி வியாசனுக்குள் சேரும் பொழுதுதான் அந்த மெய் ஒளியின் சுடரின் தன்மை அங்கே அறிய முடிந்தது.
அத்தகைய சந்தர்ப்பத்தைத்தான்,
யாம் இப்பொழுது உங்களுக்கும்
இந்தத் தியானத்தில் ஏற்படுத்துகின்றோம்.