ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 28, 2013

"ஒரு தலைவலி" ஏன் வருகின்றது...? MIGRAINE HEADACHE

1. “ஒரு தலைவலி” ஏன் வருகின்றது?
நம்முடைய உடல் அமைப்போ விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு உடலின் தன்மையை நல்லதாக மாற்றுகின்றது.
மனிதனுடைய ஆறாவது அறிவோ
எதையுமே சிருஷ்டிக்கும் வல்லமை பெற்றது.
ஆக, தீமைகளை நீக்கும் அத்தகைய ஆற்றல் நமக்குள் இருந்தாலும்
நாம் இப்பொழுது எதை சிருஷ்டிக்கின்றோம்?

வேதனை, சங்கடம், சலிப்பு, இன்றைக்கு என்ன செய்வது? நாளைக்கு என்ன செய்வது? நான் அவனுக்கு இப்படியெல்லாம் செய்தேனே என்ற இந்த விஷத்தைத்தான் நாம் அதிகமாக நமக்குள் சிருஷ்டிக்கின்றோம்.

சாதாரணமாக, யாராவது ஒரு சிறிய சொல்லைச் சொல்லிவிட்டால் போதும் தாங்க முடியவில்லை. அடிக்கடி வேதனைப்படுபவரைப் பார்த்தவுடனே, கை கால் குடைச்சல் இருக்கும். முதுகு வலி இருக்கும்.

பெண்கள் எல்லாம் பாசமாக இருப்பார்கள். “ஐயோ, என் பிள்ளை இப்படி இருக்கின்றானே, அவனுக்கு சரியாகப் படிப்பு வரவில்லையே” என்று இவர்கள் வேதனைப்பட்டால் போதும், உடல் வலிக்கும், நிச்சயம் தலை வலிக்கும்.

அதே போன்று மூட்டுக்கு மூட்டு வலிக்கும். எதாவது ஒரு பொருளைத் தூக்க வேண்டுமென்றால் முடியாது.
பெண்ர்கள் யார் யார் மேலே பாசமாக இருந்து
எதை எதை நினைத்து அவர்கள் செய்யவில்லையோ,
உடனே என்ன செய்யும்?
இந்த ஒரு தலைவலி அவர்களுக்கு வரும்.
அடிக்கடி தலைவலி வரும்.
2. நாம் சுவாசிக்கும் தீமையான உணர்வுகளால்தான் உடலில் வலி, நோய் வருகின்றது
அதே சமயத்தில், முதுகுத்தண்டு எலும்பு நான்காவது எலும்பில் வந்து கடுகடுப்பு அதிகம் வரும். ஏன் நான்காவது தண்டு எலும்பில் அப்படி வருகிறது என்றால் நம் எடையைத் தாங்கி இருப்பது அதுதான்.

அந்த நேரத்தில் டாக்டரிடம் போனால் எலும்பு தேய்மானம் ஆகிவிட்டது பேண்டேஜ் போடவேண்டும், பெல்ட் போட்டுத்தான் ஆகவேண்டும், இல்லையென்றால் இப்படித்தான் முதுகு வலி இருக்கும் என்பார்.

இதெல்லாம் நம் உணர்வால் ஏற்படக்கூடிய நிலைகள். நாம் எடுத்துக் கொண்ட சுவாசம் நஞ்சாக மாறி, பல நிலைகளைச் செய்கின்றது. இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றவேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
3. “முருகு” மாற்றி அமைக்கும் சக்தி நமக்கு உண்டு
ஓம் ஈஸ்வரா குருதேவா என்று புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும். பின் பூமியின் வட கிழக்குத் திசையில் விண்ணிலே நினைவைச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தோடு ஒன்ற வேண்டும்.

உங்கள் அருளால் (நம் உயிரான ஈசனின் அருளால்) துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி தியானிக்க வேண்டும்.

அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி
எங்கள் உடலில் உள்ள ரத்தங்கள் முழுவதும் படர்ந்து,
உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும் என்று
உயிர் வழி கவர்ந்த அந்த ஆற்றல்மிக்க சக்தியை
கண்ணின் நினைவைக் கொண்டு
உடல் முழுவதும் படரச் செய்யவேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் படரவேண்டும் என்று எல்லா அணுக்களுக்கும் அந்த சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

அடுத்து, நம் உடலில் எங்கெங்கெல்லாம் வலியோ, வேதனையோ, அல்லது நோயோ அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகள் அங்கே படர்ந்து, தீமை செய்யும் அணுக்கள் ஒழிந்து நன்மை செய்யும் அணுக்களாக உருவாக வேண்டும் என்று ஏங்கி தியானிக்க வேண்டும்.
4. மகிழ்வாகனா, மகிழ்ந்து வாழமுடியும்
எப்பொழுதெல்லாம் நமக்கு தீமைகள் வருகின்றதோ, அந்த நேரத்தில் இப்படிச் செய்து வந்தால் தீமைகளை வேக வைத்து அது நமக்குள் வளராமல் தடுக்க முடியும். மகிழ்ந்து வாழ முடியும்.

அதனால்தான், நமது ஆறாவது அறிவை சேனாதிபதி என்றும் முருகா என்றும் ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள். “முருகு” என்றால் மாற்றி அமைக்கும் சக்தி என்று பொருள்.

அதே சமயத்தில் மகிழ்வாகனா என்றும் உணர்த்தியுள்ளார்கள். தீமைகளை நீக்கினால் மகிழ்ச்சி என்ற நிலைகள் உருவாகின்றது.

ஆகவே, நாம் அனைவரும் தீமைகளை நீக்கி, உணர்வை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகளின் ஆற்றல மிக்க சக்திகளை நமக்குள் சிறுகச் சிறுக சேர்ப்போம். அனைவரும் பெற தவம் இருப்போம்.

பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோம். இந்த உடலுக்குப் பின் அழியா ஒளி சரீரம் பெறுவோம். என்றும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வோம். எமது அருளாசிகள்.

தர்மம் (நல்லது) செய்கின்றோம், ஆனால், நமக்குள் வரும் தீமைகளைத் துடைக்கின்றோமா?

1. பலருக்கு தர்மம் செய்து, ஒருவருக்கு இல்லை எனும் பொழுது என்ன ஆகின்றது?
நாம் யாரும் தப்பே செய்யவேண்டாம். இன்றைக்கு ஆயிரம் பேருக்கு தர்மத்தைச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கடைசியில் ஒருவருக்கு மட்டும் இல்லை. அதனால், கையில் இருக்கிற காசைக் கொடுக்கிறீர்கள்.

“ஐயா, அவர்களுக்கெல்லாம் கொடுத்தீர்கள், எனக்குக் கொடுக்கவில்லையே?” என்பார் அவர்.

நான் தான் எல்லாம் செய்தேன், ஆனால் “இப்பொழுது இல்லை” என்று சொல்வோம்.

எல்லாம் இருக்கிறது. நீங்கள் வைத்துக் கொண்டே இல்லை என்கிறீர்கள் என்பார் அவர்.

நாம் “அட., போப்பா” என்று வேகமாக “சுருக்” என்று சொன்னால் போதும். இந்த உணர்வுகள் உடனே என்ன செய்வார்? சாபமிடும் நிலைகளுக்கு வரும்.

எல்லோருக்கும் கொடுத்தீர்கள், ஆனால், நான் ஒரு பாவி என்பார். அதாவது, அவர் உணர்வுக்குத் தக்கவாறு கடுமையான ஒரு வார்த்தையைச் சொன்னால், இந்த உணர்வுகள் நமக்குள் எதிர்த்து விடுகின்றது.
2. தர்மம் செய்கின்றோம், ஆனால் நமக்குள் வரும் தீமைகளைத் தடுப்பதில்லை
ஒரு பாலுக்குள் காரம் பட்டுவிட்டாலோ, ஒரு விஷம் பட்டுவிட்டாலோ அதைக் குடிப்போரை எல்லாம் மயங்கச் செய்கிறது. இதைப் போல, அந்த மனிதன் தான் சுருக் என்று சொன்னவுடனே
தான் வேதனை தாங்காதபடி
அதிகமான நிலைகளில் அதை இழுத்து
சாபமிட்ட உணர்வின் தன்மையை நமக்குள் சேர்த்துக் கொள்கிறோம்.
அதிலிருந்து தப்புவதே கஷ்டம்.

அப்பொழுது நல்லது யாராவது சொல்லட்டும். நீங்கள் காதில் கேளுங்கள் பார்க்கலாம். அதிக நேரம் நின்று கேட்கவே முடியாது.
நீங்கள் சங்கடமாக இருக்கும் பொழுது
ஒருவர் ஏதாவது ஒரு சந்தோஷமான வார்த்தையை
அவர் பேசிக் கொண்டிருக்கட்டும்.
நீங்கள் ஒரு பத்து நிமிடம் நின்று கேட்டுப் பாருங்கள்.
நிற்க முடியாது.

அதே சமயத்தில், ஒருவர் சங்கடமாகப் பேசட்டும். “அவன் இப்படிப் பண்ணினான், இவன் இப்படிப் பண்ணினான்” என்று அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை நின்று கேட்போம். இப்படித்தான், அயோக்கியப் பயல்கள் ஊரில் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று அவர்களிடம் ரசித்துக் கேட்போம்.
அங்கேதான் போய் நிற்போம்.
இங்கே நல்லதை எடுக்கவே விடாது.

ஆக, இதைப் போல இந்த உணர்வின் தன்மை அங்கிருந்து பல நிலைகள் செய்யும். ஆனால், இதெல்லாம் நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தின் நிலைகளில் வருகின்றது. 

மனப் பக்குவம் பெறுவதற்குத்தான் தபோவனத்தை அமைத்துள்ளோம் - ஞானகுரு

யாம் காந்திஜி ஆசிரமத்திற்குப் போயிருக்கும் பொழுது அவரவர்கள் வேலையை அவர்களே செய்ய வேண்டும்..
ஒரு குறையைக் கண்டால் அதை நிவர்த்தி செய்து
சுத்தம் பண்ணிவிட்டுத்தான் வரவேண்டும்.
காந்திஜி அப்படிப் பழக்கி வைத்திருந்தார்.

ஏனென்றால், அவர் அரசியல் நிலைகளில் இருந்தாலும் கூட, மனப்பக்குவம் பெறுவதற்கு சபர்மதி ஆசிரமத்தில் இந்த மாதிரி செய்து  வைத்திருந்தார்.

அதைப் போல இங்கே வருபவர்கள் மனப்பக்குவம் பெறுவதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை அமைத்திருக்கின்றோமே தவிர, பேரும் புகழும் வாங்கிக்கொண்டு, பெரிய கட்டிடத்தைக் கட்டிக் கொண்டு பெரிய சாமியார் என்று சொல்லிக் கொண்டு இருப்பதற்கு அல்ல.

நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று, மகிழ்ந்திடும் உணர்வுடன் உங்கள் பேச்சு மூச்சு அனைத்தும் உங்கள் குடும்பத்திற்கு நல்லதாக வேண்டும்.

நீங்கள் வெளியில் மற்றவர்கள் யாரிடத்தில் பேசினாலும்
அவர்களுக்கும் நல்லதாக வேண்டும்.
நீங்கள் தொழில் செய்யும் பொழுது
உங்கள் வாடிக்கையாளர்களும் எல்லா நலமும் பெறவேண்டும்.

நீங்கள் யாரைச் சந்தித்தாலும் அவர்கள் அனைவருக்கும் நல்லதாக வேண்டும்
என்ற அந்த நிலை பெறச் செய்வதற்குத்தான்
தபோவனத்தை அமைத்திருக்கின்றோம்.

ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் தபோவனத்திற்குள் வந்துவிட்டீர்கள் என்றால், இங்கே புற நிலைகளில் இருக்கக்கூடிய கஷ்ட நஷ்டங்களைப் பற்றிப் பேசக் கூடாது. ஆக, மகரிஷிகளின் அருளாலே நமக்கு நன்றாக வேண்டும் என்ற நிலைகளைத்தான் நீங்கள் பேச வேண்டும்.

இங்கே மற்றவர்கள் சொன்னாலும் கூட, நாம் அடுத்த நிமிடம் நன்றாக வேண்டும் என்று சொல்லிவிட்டு உடலில் உள்ள நோய்கள் எல்லாம் விலகி எனக்கு நன்றாக வேண்டும் என்றுதான் எண்ண வேண்டும், கேட்க வேண்டும்.

November 26, 2013

நாம் எதிலே வலிமையானவர்களாக ஆக வேண்டும்...?

1. இயற்கையில் ஒரு அணு தன் ஆற்றலை எவ்வாறு பெருக்கிக் கொள்கின்றது?
இயற்கையில், ஒரு அணுவை ஒரு அணு விழுங்கித்தான் ஆற்றல் பெருகி வரும்.
இப்பொழுது நாம் அந்த வகையிலே
ஆற்றல்மிக்க நிலைகள் ஒன்றை ஒன்று விழுங்கி,
“விழுங்கி விழுங்கித்தான்
ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு, நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வின் தன்மை அத்தனையும் வேலை செய்யும்.

ஆக இதைப் போலத்தான் கெட்டவன் நல்லதைச் செய்வான். நல்லவன் கெட்டதைச் செய்வான். இப்படி இரண்டும் ஒன்றுக்கொன்று
ஒரு நல்லவன் திடீரென்று பயந்தான் என்றால்,
விஷம் வந்து இவனை ஆட்கொண்டுவிடும்.
அப்படி இவன் விழுங்கிய நிலைகள் கொண்டு
நல்லது கெடுகிறது.

ஆக, ஒரு முரடனானவன் தாக்கும் நிலைகள் கொண்டு, அசுர உணர்வின் தன்மை கொண்டு அவனுக்கு வலிமையான நிலைகளை அங்கே பெறுகின்றான்.

அந்த வலிமையின் தன்மை வரப்படப் போகும் பொழுது அவனுக்குள் விஷத்தைச் சேர்த்து, அவன் உடலின் தன்மை விஷமாக மாறும். மிருகமாகப் பிறப்பான்.
2. நல்லதை அழிக்கும் நிலைதான் இன்று வலுவாக இருக்கின்றது
இன்று மனிதனுடைய நிலைகளில் இருக்கப்படும் பொழுது ஆத்திர புத்தியுடன் நாம் பேசினோம் என்றால், அந்த ஆத்திர புத்தியினுடைய நிலைகள் இங்கே அமிழ்த்தி இந்த அசுரத்தன்மை அதாவது மிருகத்தின் தன்மையிலே உணர்வுகள் அங்கே பதிந்துவிடும்.

ஏனென்றால், மிருகத்தின் தன்மை விஷத்தின் தன்மையை ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டு இந்த உணர்வின் தன்மை இங்கே வந்துவிடும். ஆக, இங்கே இரத்தக் கொதிப்பாக வந்துவிடும்.

இதைப் போல, ஒவ்வொரு நிமிடமும் நம்மையறியாமலே பல நிலைகள் செயல்படும் தன்மையிலிருந்து இன்று உலகம் முழுவதற்கும் மனிதனுடைய நிலைகள் இருள் சூழும் நிலைகளுக்கு வந்துவிட்டது

விஞ்ஞானத்தின் தன்மையில் மனித உடலில் ஒவ்வொருவரும் வெளியிட்ட மூச்சலைகள் அனைத்தும் இந்தக் காற்றிலே நச்சுத்தன்மையாக மாறி
ஒன்றை ஒன்று விழுங்கும் நிலைகள் என்றால்
ஒன்றை ஒன்று அழிக்கும் நிலைகளை
மனிதனுக்குள் வளர்த்து வந்தான்.

அரசருடைய நிலைகளில் ஒருவன் தெளிவாக வருகிறான் என்றால், அவன் தெளிவான நிலைகளில் டக்கிக் கொண்டு வருகிறான். அதைப்போல நாமும் நடத்த வேண்டுமென்று இந்த அரசனும் நினைக்கின்றான்.

அவன் தெளிவான நிலைகளில் வந்துவிட்டால்
நம்மைக் கவிழ்த்துவிடுவான்.
முதலில் அவனை எப்படிக் கெடுப்பது
என்றுதான் இன்றும் உலகம் முழுவதற்கும் அப்படித்தான் முன்னேற்றம் அடைய முடியாதபடி, சென்று கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இன்றைக்கும் இதைப் போலத்தான் ஆரம்ப நிலைகளிலிருந்து, ஒரு வலுக் கொண்டவன் வலுவற்றவனை அடக்குவது என்ற நிலைகளில் செயல்படுகின்றனர்.
3. வலுவான மனிதர்களாக இருக்கும் நாம் எதை நமக்குள் வலுவாக்க வேண்டும்?
ஒரு அணுவின் தன்மை வலு கொண்டது வலுவற்றதைத் தனக்குள் அது வசியப்படுத்திக் கொள்கின்றது. இதுதான் உலக இயல்புகள் ஆக,
வலுகொண்ட நாம்
வலுவை எதிலே சேர்ப்பது?

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் அந்த மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும் என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி, உயிர் வழியாக நுகர்ந்து (சுவாசித்து) நம் உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் சேர்க்க வேண்டும்.

ந்த வலுவான எண்ணத்தை நாம் சேர்க்கப்படும் பொழுது இந்த மனிதனின் உடலில் நாம் வெல்லுகின்றோம்.
ஒளியின் சரீரமாக நாம் பெறுகின்றோம்.
ஒளி சரீரம் பெறும் வலுவின் தன்மைதான்
நமக்குள் அது வளரவேண்டும்.

காக்காய் வலிப்பு போன்ற சில நோய்கள் வரக் காரணம் என்ன?

திடீரென்று ஒரு குழந்தையை நாம் எதிர்பார்க்காதபடி ஒருவன் ஓடி வந்து அடிக்கின்றான். பார்த்தவுடன் நம் எண்ணமெல்லாம் மாறிப் போகின்றது. அப்பொழுது பதட்டமாகின்றது.

அந்தக் குழந்தை “படக் படக்” என்று துள்ளுகிறது. அங்கே மனது என்ன ஆகின்றது? அப்பொழுது இந்த உணர்வெல்லாம் முழுவதும் மாறி உணர்வின் தன்மை மாறுகின்றது.

திடீரென்று எதிர்பார்க்காமல் அடித்தவுடனே நமக்கு பயம் வந்துவிடுகின்றது. அது துள்ளும் பொழுது, அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் வந்தவுடனே அந்த பயமோ, அந்த பதட்ட உணர்வோ அதிகமாகி பேதி கூட ஆகிவிடுகின்றது.

அதிலிருந்து அடிக்கடி பயமாக வந்துவிடும். அந்த பயத்தின் தன்மை அதே இன்னலினுடைய நிலைகள் உங்களுக்கு நிச்சயம் ஜன்னி வரும். அல்லது ஒரு காக்காய் வலிப்பு போல நிலைகள் வரும். அல்லது நோய் வரும்.

அதாவது, முக வாதம், கண் வாதம், காது வாதம். காது வாதம் என்கிற வகையிலே, காது கேட்காது திடீரென்று எதிர்பார்க்காமல் ஒரு குழந்தையை ஒருவன் அடிக்கின்றான். “ஆ” என்று நீங்கள் அலறினால் போதும்.

இந்த உணர்வின் தன்மை வந்து முக வாதம் வரும். கண் வாதம் வரும். கண் வாதம் என்றால், கரு விழி அங்கும் இங்கும் சுற்றாது.
அது வேகமாக இழுத்த நிலைகள் கொண்டு
நரம்புகள் பலவீனமாகும்.

அதே சமயத்திலே அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது காது வாதம் வரும். ஒலியின் உணர்வுகள் நாதத்தைப் பிரித்துக் கொடுக்கக்கூடிய சக்தியை காது இழந்துவிடும்.

அதே சமயத்திலே உங்களுக்கு ரொம்பவும் அதிகமாகிப் போனால், குடல் வாதம் வரும். “ஆ” என்றவுடனே,
மூளைக்குள் இருக்கக்கூடிய
அந்தக் குடலை இயக்கக்கூடிய தன்மை வேதனையாகிப் போனால்
குடல்கள் சரியாக ஜீரணிக்காது.
இதையெல்லாம் டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாது.

ஏனென்றால், இதெல்லாம் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள். நாம் தவறு செய்யவில்லை. ஆனால், அடிப்பவன் முரட்டுத்தனமாக அடிக்கிறான்.

அவனுடைய சிந்தனை ஆக்ரோஷமான நிலையில் இருக்கிறது.. கடைசியில் அவனுக்கு என்ன செய்யும்? காக்காய் வலிப்பு வரும். அல்லது ரத்தக் கொதிப்பு வரும்.

ஆக, சிந்தனையற்ற நிலைகள் கொண்டு தன்னையறியாமலே தன்னை அழித்துக் கொள்ளும் நிலையில் அவன் இருப்பான். இப்படி நிர்பந்தமான நிலையில் ஒருவன் தாக்குகின்றான் என்றால் அவனால் தாக்க முடியாத நிலையில் அவனே அவனைத் தாக்கிக்கொள்ளும் நிலைகள் வரும்.

காரணம், அவன் சுவாசிக்கும் உணர்வுகள் அவன் உயிருக்குள் பட்டவுடனே அந்த உணர்வின் தன்மைகள் வேலை செய்கின்றது.

இதைப் போன்றுதான், ஒவ்வொரு நிமிடமும் மனிதனுடைய வாழ்க்கையில் வரக்கூடிய தீய சக்தியினுடைய நிலைகள்
நம்மையறியாமலே
நாம் தவறு செய்யாமலே
நம் புலனறிவுகளிலே ஈர்க்கப்படும் பொழுது
இந்த நிலை வந்துவிடுகின்றது.
இதை நாம் எப்படித் துடைப்பது? இதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

November 24, 2013

சூரியனிலிருந்து அதிகமாக காந்தப்புயல்கள் வருவதற்குக் காரணமும், அதன் விளைவுகளும்

1. சூரியனிலிருந்து அதிகமாக காந்தப்புயல்கள் வருவதற்குக் காரணமும், அதன் விளைவுகளும்
இன்று சூரியனிலிருந்து காந்தப் புயல் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றது. அந்த  காந்தப் புயல் அதிகமாக அதிகமாக, விஷத்தன்மைகள் கூடும். ஆனால், அதே சமயத்திலே சூரியனுக்குள் காந்தப் புயல் இல்லை.

இவன் (விஞ்ஞானிகள்) வெடித்துப் பார்த்த அணுகுண்டினுடைய தன்மைகள் பிரபஞ்சத்திற்குள் ஊடுருவி, இந்த கதிரியக்கச் சக்திகள் தாக்கப்படப் போகும்போது, இந்த உணர்வின் தன்மையாக அதனுடைய உண்மைகள் இவர்களுக்குத் தெரியும்.

பிரபஞ்சத்திற்குள்ளேயே இராக்கெட் மூலமாக பல ஆயிரக்கணக்கான செயற்கைக் கொள்களைப் பறக்க விட்டிருக்கின்றார்கள். அதிலே கதிரியக்கச் சக்திகளையும் இணைத்து அனுப்பியிருப்பதால், அந்த நச்சுத்தன்மைகளும் பரவிக்கொண்டிருக்கின்றது.

இதைப்போல நம் பூமிக்குள்ளும் அணுகுண்டுகளை வெடித்து, அவை ஊடுருவி நீர்நிலைகள் இருக்கும் பக்கம் எல்லாம் போய்க் கலந்து கொண்டிருக்கின்றது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கழிவுகள்
(நச்சுத்தன்மைகள்) அனைத்துமே
பூமிக்கடியில் போய் இறங்கி
நாம் குடிக்கிற நீரிலிருந்து எல்லா வகையிலும் இது கலக்கிறது.
ஆக பூமியில் வெப்பம் ஊடுருவி வரப்படும்போது
இந்த விஷத்தன்மைகள் எல்லாமே இந்த நீருடன் கலக்கிறது.

தாவர இனங்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிக்கின்றார்கள். அந்த மணத்தையும் நஞ்சின் தன்மையாக சூரியனுடைய காந்த அலைகள் எடுத்துக் கொள்கிறது. பூமி முழுவதும் அது படர்ந்துள்ளது.

அதே மாதிரி தொழிற்சாலைகளிலே இவர்கள் சேர்க்கும் ஒவ்வொரு கலவைகளிலும் வரக்கூடிய விஷத்தன்மைகள் அனைத்துமே மழை நீருடன் கலக்கிறது. அதுபோக காந்த அலைகளுடன் கலக்கின்றது.
2 மனிதனுடைய சிந்தனைகளை முழுமையாகச் செயலிழக்கச் செய்கின்றது
இப்படியெல்லாம் பல விஷத்தன்மைகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. இது நாளுக்கு நாள் பெருகிவர,
நாம் சிறிதளவு கோபப்பட்டாலும்
அந்தக் கோபம் ஏன் வந்தது? எதற்கு வந்தது? என்று
சிந்திக்கக் கூட நேரமில்லாமல் போய்விடும்.

இதைப்போல் வாழ்க்கையிலே நல்லவர்களாக இருப்போம். நாம் தவறு செய்யவில்லை. ஆனால், உங்களை அறியாமலேயே பிறர் செய்யக்கூடிய தவறுகளை எண்ணி எண்ணிப் பார்த்து, “இப்படிப் பண்ணுகிறார்களே, இப்படிப் பண்ணுகிறார்களே” என்று சுவாசித்துக் கொண்டிருந்தால் போதும், நீங்களே கடைசியிலே தப்பு பண்ண ஆரம்பித்துவிடுவீர்கள்.

உங்களை அறியாமலேயே உங்கள் சொல்லுக்குள் அந்த வேதனை வந்து, "அவர்கள் அப்படித்தான், இவர்கள் அப்படித்தான்” என்று அந்தக் குறையையே நீங்களும் பேசவேண்டிய நிலை வந்துவிடும்.

எனக்கும் நல்லதாக வேண்டும்,
மற்றவருக்கும் நல்லதாக வேண்டும் என்ற சொல்
வாயில் வரவே வராது.
ஆக, நல்லதைப் பற்றிச் சிந்திக்க முடியவில்லை.

இன்றைக்கே இப்படி இருந்தால், இனி நாளைக்கு வரக்கூடிய  விஷத்தன்மையினுடைய நிலைகள் இன்னும் அதிகமானால் எதைச் செய்யப்போகிறோம்?

இன்றைய உலக நிலையில் மனிதனாகப் பிறந்த அனைவருமே எங்கெங்கோ எப்படி எப்படியோ செயல்படுகின்றார்கள். மனித சிந்தனையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் அளவிற்கு விஷத்தன்மைகள் காற்றிலே கலந்து வந்து கொண்டிருக்கின்றது. 
3. நம்மையும் இந்த உலகையும் காக்கச் செய்ய குருநாதர் காட்டும் வழி
இதிலிருந்து நாம் நம்மையும் காத்து,
நம்மை அணுகி உள்ள மற்றவர்களையும் காத்திடும் சக்தியாக
நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் செயல்படுவோம். அந்த ஆற்றல் நமக்கு உண்டு.

ஆகவே, ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்ப்போம். அந்த ஆற்றல்மிக்க அருள் சக்திகளை நமக்குள் விளைய வைத்து, எல்லோரும் அதைப் பெறவேண்டும் என்ற மூச்சலைகளை இந்த உலகம் முழுவதும் பரவச் செய்வோம்.

நாம் அனைவரும் உலகுக்கு எடுத்துக் காட்டாக, இந்த உலகைக் காத்திடும் அருள்ஞானிகளாக உருவாவோம். எமது அருளாசிகள்.

என் மனைவியின் (சாமியம்மா) வலுவான எண்ணத்தால் யாம் சக்தி பெறமுடிந்தது - ஞானகுரு

1. என் மனைவியின் வலுவான எண்ணத்தால் எமக்குச் சக்தி கிடைத்தது
குருநாதர் எம்மை அழைத்துச் சென்ற நிலையில், நான் இங்கே என் குடும்பத்தை விட்டுவிட்டுப் போய்விட்டேன். என் மனைவிக்கு நோய் வந்து அதிலிருந்து மீண்டு அப்பொழுதுதான் எழுந்திருந்தார்கள்.

அப்பொழுது அவரின் தாயாருக்கு உடலுக்கு முடியாமல் இருக்கிறது. எமக்கு ஐந்து குழந்தைகள். ஆனால், கையில் இருக்கக்கூடிய பணத்தையெல்லாம் என் மூத்த பையன் கொண்டுபோய் இறைத்துவிட்டான்.

அப்படி இருந்த அந்த சந்தர்ப்பத்திலும்
தன் வலுவின் தன்மையை விடாதபடி
ஒரே நிலைகளிலே எப்படியும்
நாளைக்கு ஜீவிக்க முடியும்.
நாளைக்கு நன்றாக இருப்போம் என்ற அந்த எண்ணத்தில்
என் மனைவி (சாமி அம்மா)
இருந்து வந்ததினால்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது.

ஏனென்றால் அந்த வலுவான எண்ணத்தை இங்கே அதிகமாகக் கூட்டியதால்தான். எனக்கு இந்தச் சக்தி கிடைக்க முடிந்தது. என் மனைவி சோர்வையும் சஞ்சலத்தையும் எடுத்து அதை நான் பார்த்துக் கொண்டிருந்தால் நான் சக்தி பெற்றிருக்க முடியாது.

குருநாதர் பல சக்திகளைக் கொடுத்தாலும் கூட என்னைச் சார்ந்தவர்கள் குடும்பத்தில் வேதனையிலும், சங்கடத்திலேயும் எத்தனையோ அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

நான் வெளியிலே போகப்போகும்போது எனக்குக் கஷ்டம். அதே சமயத்தில் வீட்டிலே கஷ்டம். ஏற்கனவே கையில் வைத்திருந்த பணத்தையெல்லாம் பையன் வாரி இறைத்துவிட்டான். பல நிலைகளிலும் தொல்லை வருகிறது. இங்கேயும் தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் நன்றாக நீட்டாக (NEAT) இருந்து கொண்டு இங்கிருந்து போகிறோம். போகிற பக்கமெல்லாம் நம்மைக் கிண்டல் செய்வது, கேலி பண்ணுகிறார்கள். ஒருவருக்கு யாம் உதவி செய்தாலும்கூட கேலி பண்ணுவார்கள் இத்தனை அவஸ்தைகள்.

ஆனால் வீட்டில் வந்தால் இவ்வளவு இம்சை. அப்போது அந்த நேரத்திலே இதைத்தான் குருநாதர் கொடுக்கிறார்.
இப்படி, ஒவ்வொரு நிமிடத்திலும் வரக்கூடிய
ஒவ்வொரு இம்சைகளிலிருந்தும், எதை எதையெல்லாம்
எப்படி எப்படியெல்லாம் பக்குவப்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று
எனக்கு அனுபவபூர்வமாகத்தான் கொடுத்தார் குருநாதர்.
2. யாம் உங்களையும் அந்தச் சக்தியைப் பெறச் செய்கின்றோம்
அந்த சமயத்தில் நம் வீட்டில் தியானம் இருக்கவில்லை அப்பொழுது தியானமெல்லாம் சொல்லவில்லை. பொதுவாக குருநாதருடைய நிலைகள்தான் தெரியும்.

எல்லோரும் தியானத்தைச் செய்வதற்குண்டான வழியை முதலில் அறிவதற்கு, எது தியானம்? எப்படி தியானம் செய்வது? என்ற இந்த அனுபவத்தைப் பெறுவதற்கு 16 வருட காலம் உணர்த்தினார்.

அதாவது, ஒரு எண்ணத்தின் தன்மையை
இந்தக் காற்றிலே இருப்பதை எப்படி சுவாசிப்பது?
அதைக் காற்றிலிருந்து எப்படி பிரிப்பது?
அதை நாம் எப்படி சுவாசிப்பது?
உங்கள் உடலில் எப்படிச் சேர்ப்பது?
என்ற இந்த நிலைகளையெல்லாம் அறிந்த பின்புதான் உங்களுக்கு அதை உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

நமது குருநாதர் 16 வருட காலத்தில் உணர்த்திய, அதை யாம் கண்டுணர்ந்து வளர்த்த, அந்த சக்தி வாய்ந்த அருள் ஞான வித்துக்களைத்தான் உங்களுக்குள்ளும் ஊன்றி, அதை நீங்களும் வளர்ப்பதற்கு, குருநாதர் உணர்த்திய அதே வழிப்படி உணர்த்தி வருகின்றோம்.

November 23, 2013

ஐந்து அறிவு கொண்ட உயிரினத்தின் இயல்பும், மனிதனின் ஆறாவது அறிவின் ஆற்றலும்

1 ஐந்து அறிவு கொண்ட உயிரினங்களின் தன்மை
புழுவிலிருந்து மிருகமாகத் தோன்றி, மிருகத்திலிருந்து மனிதனாகத் தோன்றியது. மற்ற உயிரினங்கள் அனைத்துமே தான் உட்கொள்ளும் உணவிலும், தான் சுவாசிக்கும் உணர்வுக்குள்ளும் இருக்கக்கூடிய விஷத்தின் தன்மையை தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது.
ஆக, விஷத்தை உடலாக மாற்றிக் கொண்டு
நல்லதை மலமாக மாற்றிவிடுகின்றது.

அவ்வாறு மாற்றி, தன் வலுவைக் கொண்டு உடலாகப் பெற்றபின் அதிலே தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகள் தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப,
ஒவ்வொரு உருவத்திற்குத் தக்கவாறு
தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகளைச் செலுத்துகின்றது.

விஷத்தின் தன்மை தன் உடலில் சேர்க்கப்படும் பொழுது, வேதனை என்பதை அது அறிய முடிவதில்லை.

ஆனால், வலுவான எண்ணங்கள் கொண்டு
மூர்க்கத்தனமான எண்ணங்கள் வந்தாலும்,
பிறிதொரு எதிரியிடமிருந்து தப்புவதற்கு
அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு தான் ஏங்கி
அந்த அசுரத்தன்மையான நிலைகள் தாக்கினாலும்,
அது தாக்கும் நிலைகள் கொண்டு
தான் வேதனையைத் தாங்கும் நிலை வருகின்றது.
ஆனால், எதிரியிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய
பாதுகாக்கும் உணர்வும் எடுத்துக் கொள்கின்றது.
2. அணுவிற்குள் இருக்கும் விஷத்தின் தன்மை
இவ்வாறு தனக்குள் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் நிலைகள் தான் உடலிலே அது சேர்க்கப்பட்டு, அது வினையாகச் சேர்த்து ஆற்றல்மிக்க நிலைகளாக வரப்படும் பொழுது, நாம் சுவாசிக்கும் உணர்வின் எண்ணங்களுக்குள் நல்லது எண்ணினாலும் சரி, கெட்டது எண்ணினாலும் சரி, நாம் சுவாசிக்கும் உணர்வின் அணுக்களுக்குள் இந்த விஷம் உண்டு.

ஆக, நாம் சுவாசித்தது உயிரிலே படும் பொழுதுதான் இந்த விஷத்தின் ஆற்றல்கள் அது ஊடுருவி, நம் உடலுக்குள் உணர்த்தவும் இயக்கவும் செயல்படுகின்றது.

அவ்வாறு நாம் உணர்த்தி அறிந்துணர்ந்து செயல்பட்டு அறிந்துணர்ந்தாலும் அந்த உணர்வின் சத்துக்கு இடையூறாகச் சேர்ந்து நம் உணர்வுடன் ஆகாரத்துடன் கலந்துவிடுகின்றது.

அத்துடன் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையில்,
ஒவ்வொரு அணுக்களினுடைய நிலைகளிலும்
விஷம் ஊடுருவி,
அது இயக்கத்தான் செய்கின்றது.
அதைச் சுத்தப்படுத்தவேண்டும்.
3. மனிதனின் ஆறாவது அறிவின் தன்மை
நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய உணர்வின் தன்மை கொண்டு, எத்தனையோ கோடி உணர்வுகளுடைய தன்மைகளைச் சுவாசித்துத்தான், இன்று பரிணாம வளர்ச்சியில் மனித நிலையை அடைந்துள்ளோம்.

இதைப் போலத்தான் மனிதனாகப் பிறந்தபின், ஆறாவது அறிவான நிலைகளை நாம் செம்மையான நிலைகளில் கடைப்பிடித்து, எடுத்துக் கொண்ட விஷத்தின் தன்மையினுடைய நிலைகள் எதுவானாலும் நல்ல வாசனையான பொருள்களை நாம் சாப்பிட்டாலும் நம்முடைய மலம் நாற்றமாகின்றது. ஆனால், நம் உடலோ நல்லதாக இருக்கின்றது.

நாம் எத்தகைய நல்ல வாசனையுள்ள சுவையான பொருள்களைச் சாப்பிட்டாலும் அந்த வாசனைக்குள் இருக்கக்கூடிய விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிடுகின்றது. ஆக,
தீயதை மலமாக மாற்றிவிட்டு
நல்லதாக, உடலாக மாற்றுகின்றது.

ஆக, நம் உடலின் தன்மை உயிரின் இயக்கத்தில் இருக்கும் பொழுது எந்த உணர்வின் சத்து நமக்குள் இருக்கின்றதோ அந்த மணம் வெளிப்படுகின்றது.

இன்று ஒரு மாமரம் வளர்ந்தபின், அந்தப் பருவம் வரும் பொழுது, அது கனியானபின் அந்தக் கனியின் மணம் எப்படி வீசுகின்றதோ அதைப் போன்றுதான் நம் உடலுக்குள் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள் மணங்களாக வெளிப்படுகின்றது

அப்படி வெளிப்படும் அந்த மணத்தை நாம் சுவாசித்து, விஷத்தை மலமாக மாற்றிவிட்டு நம் உடலை நல்லதாக மாற்றிய அந்த உணர்வின் அணுக்களுக்குள் இருக்கக்கூடிய
தீயதை இயக்கி அதை நல்லதாக ஆக்கிக் கொள்ளவும்
தீயது எதுவாக இருந்தாலும்
தனக்கு வேண்டிய நிலைகளுக்கு
அதைப் பக்குவப்படுத்தும் நிலைகள் தான்
நாம் செயல்படுத்த வேண்டிய
மனிதனின் ஆறாவது அறிவின் தன்மை.

அந்த ஆறாவது அறிவைச் சீராகக் கடைப்பிடித்து,  எத்தகையை உணர்வையும் மாற்றி அமைத்து, உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக ஆக்கி ஒளியின் சரீரம் பெற்றவர்கள் தான் மெய்ஞானிகள். ஆகவே, நாமும் அவர்கள் சென்ற பாதையில் செல்வோம்.