ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 29, 2014

பத்து மகரிஷிகள் - காளிங்கநாதர் 3

1. விஷத்தின் தன்மையை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவர் காளிங்கநாதர்
காளிங்கன் என்பது, எப்பொருளின் தன்மையும் ஒரு விஷத்தின் அமைப்பிற்குள் சென்றுவிட்டால், அது விஷத்திற்குள் அடங்கி இயக்கும் என்று பொருள்.

காளிங்கநாதர், விஷத்தின் தன்மை கொண்ட ஒவ்வொரு அணுவின் தன்மையையும் பரிட்சித்துக் கொண்டு வருகின்றார். அப்படிப் பரிட்சித்துக் கொண்டு வரும் பொழுது, இளம் பருவத்தில் வந்த போகனுக்கு விஷத்தின் ஆற்றலை உணர்த்துகின்றார்.

காளிங்கநாதர், விஷத்தின் தன்மையை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக்கூடிய ஒரு வைத்தியர். ஆராய்ச்சி செய்து, தனக்குள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வரும் பொழுது, அங்கு வந்து சேருகின்றார், இந்த போகர். அந்த உண்மையின் தன்மையை அவர் விளக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான், போகன் விண்ணுலகத்தின் தன்மையைப் பின் தொடர்கின்றார்.
2. நுகரும் சக்தியை போகருக்குக் கொடுத்தார் காளிங்கநாதர்
காளிங்கநாதர் விஷத்தின் நிலையைக் காட்டி, நுகரும் சக்தியை போகருக்குக் கொடுத்தார். விஷத்தின் தன்மைகளைப்பற்றி பாட போதனைகளைக் கொடுக்கின்றார்.

இவரிடம் கற்றுக் கொண்டபின் தான், போகர் தாவர இனத்திற்குள் மறைந்திருக்கக்கூடிய, விஷத்தின் தன்மையை அறிகின்றார். போகர் நுகரும் தன்மையை அறிகின்றார். பின், நுகரும் தன்மை கொண்டு பல நிலைகளை அறிகின்றார்.

காளிங்கநாதர் வைத்தியத் தொழிலில் இருக்கப்படும் பொழுது, அந்தச் சிறுவனை அழைத்துச் சில நிலைகளைக் கற்றுக் கொடுக்கின்றார்.

அந்த காளிங்கநாதர் காட்டிய குரு வழியில், இந்த உணர்வின் ஆற்றல் கொண்டு, தனக்குள் போகர் இத்தன்மையைக் கொண்டு வருகின்றார்.

அப்பொழுது, இந்த விஷத்தின் தன்மை எல்லாவற்றிற்கும் எவ்வாறு பாதுகாப்பாகின்றது என்பதையும், விஷம் ஒன்றை எப்படி மாற்றுகின்றது? என்பதையும், தன் உடலுக்குள் பல விஷத்தின் ஆற்றல்மிக்க நிலைகளைச் சேர்த்து அறிகின்றார்.

காளிங்கநாதர் அன்றைய மக்களுடைய துயர் துடைக்க, பச்சிலைகள் மற்ற மூலிகைகள் இலைகளில் இருந்து வரக்கூடிய சாறினை எடுத்துப் பக்குவப்படுத்தி, மனித உடல்களில் பிணிகளை நீக்க தமது ஆற்றல்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

அதே சமயம், போக மாமகரிஷி இளம்பிராயத்தில் இவரை அணுகியவுடன், போகமாமகரிஷிக்கு எதிர்பாராத ஆற்றல்மிக்க சக்திகள் இருப்பதைக் கண்டவுடன், காளிங்கநாதர் வைத்திய முறைகளையும் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

வைத்தியரீதியில் போகர் கற்றுக் கொண்டாலும், தாவர இனத்திற்குள் அடங்கியிருக்கும் உணர்வின் ஆற்றலைத் தன் நிலையில் நுகர்ந்து அறிந்தார்.

அதனின் ஆற்றல் மிக்க சக்திகள் எவ்வாறு செயல்படுகின்றது? என்ற நிலையையும், அந்த உணர்வின் ஆற்றல் எங்கிருந்து தோன்றி, எதன் வழிகளில் வழிப்படுத்தி, ஆற்றல்மிக்க நிலைகளாக வருகின்றது என்ற உண்மைகளையும் அறிவதற்கு மிக முயற்சி எடுத்தார்.

அவருடைய சுவாசத்தைத் தன் உடலுக்குள்ளும், விண்ணுக்கும், மண்ணுக்கும் செலுத்தித் தனக்கு ஏற்பட்ட உணர்வினை அறிந்துணர்ந்து உலகிற்கு உணர்த்தினார்.

அவர் உணர்த்திய ஆற்றலின் தன்மை கொண்டுதான், நமது ஆறாவது அறிவை முருகனாகக் காட்டி, இந்த ஆறாவது அறிவைக் கொண்டு வாழ்க்கையில் வரக் கூடிய தீமைகளை நீக்கிக் கொள்ள முடியும், என்று போகர் உணர்த்தினார்.

காளிங்கநாதரோ, தாவர இனச் சத்தின் தன்மையை எடுத்து, உடல் பிணிகளைப் போக்க முடியும் என்று சொன்னார்.

ஆனால், உடல் பிணிகளைப் போக்க முடியும் என்று காளிங்கநாதர் சொன்னாலும், அந்தப் பிணியை நீக்கும் உணர்வின் ஆற்றல், எந்தெந்தத் தாவர இனச் சத்திற்குள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நுகர்ந்தறிந்தார் போகர்.

June 28, 2014

பத்து மகரிஷிகள் - அகஸ்தியர் 2

1. காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு விண்ணின் ஆற்றல் எப்படிக் கிடைத்தது?
ஆரம்பத்தில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன், காட்டிற்குள் அகஸ்தியரின் தாய் தந்தையர்கள் தான் வாழ்ந்திட மற்ற விஷப்பூச்சிகளிடமிருந்து தப்பிக்கவும், மற்ற கொடூர மிருகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், மிக சக்தி வாய்ந்த தாவர இனங்களைத் தன் உடலில் முலாமாகப் பூசிக்கொண்டனர்.

அவர்கள் உடலிலிருந்து வரும் முலாமாகப் பூசிய மணங்களை நுகர்ந்தபின், விஷ ஜெந்துக்கள் இவர்களை அணுகாது இந்த மணத்தைக் கண்டு விலகிச் செல்கின்றது. அதிலிருந்து தன்னைக் காத்திடும் நிலை பெற்றார்கள்.

அந்தத் தாவர இனச் சத்தின் விஷத்தின் தன்மை, தாயின் உடலில் சிறுகச் சிறுக இணைகின்றது. இரவில் மிருகங்களிடமிருந்து காத்துக் கொள்ள இவ்வாறு செய்து வாழ்ந்து வந்தனர்.

இருளில் இரை தேடி வருபவைதான் மிருகங்கள். ஆனால், ஒளி கண்டபின் மறைந்து கொள்கின்றது. ஆகவே, மக்களைக் காக்க கடவுள் இன்று பிரகாசித்து வருகின்றான் என்ற எண்ணத்தில் சூரியனையே வணங்கிப் பழகியவர்கள்.
2. ஆதியிலே காட்டு மனிதருக்கு இந்த சக்தி எவ்வாறு கிடைத்தது?
புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும்
ஒவ்வொரு தாவர இனங்களையும் மணத்தால் நுகர்ந்து,
அதை உணவாக எடுத்துத் தன் உடலிலே சேர்த்து,
அந்த உணர்வின் எண்ணமாக வளர்ந்து,
இவ்வாறு பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு
அந்த மணத்தின் தன்மை தன் உடலுக்குள் எண்ணமாகி
அந்த உணர்வின் இயக்கமாக தன்னைக் காத்து
அந்தத் தாவர இனத்தின் உணர்வுக்கொப்ப
இந்த உடலின் அமைப்புகள் அமைந்து
இவ்வாறு நம்மை மனிதனாக ஆக்கியது.

மனிதனுக்குள் உணர்வின் நிலைகள் எண்ணத்தின் வீரிய நிலைகள் அடைந்தது. அப்படி அமைந்த மனிதன் தான், எந்தெந்தத் தாவர இனத்தை ஆரம்பத்தில் எடுத்தானோ அந்த உணர்வின் ஆற்றல் அந்த முதல் மனிதனுக்கு வருகின்றது.

தன்னைக் காத்திடும் உணர்வின் நிலைகள் வரப்படும் பொழுது, தான் புசித்த உணர்வின் அலைகள் காட்டுக்குள் இருக்கும் ஆதி மனிதனுக்கு இது தோற்றுவிக்கின்றது.
3. தாய் கருவில் இருக்கும்போது அகஸ்தியர் பெற்ற ஆற்றல்
ஆக, விஷப்பூச்சிகளிலிடமிருந்து காத்துக் கொள்ள இந்த உணர்வின் மணத்தை தனக்குள் முலாமாகப் பூசி, சூரியனையே வணங்கி வந்தனர். இந்நிலையில் கருவாகின்றார் அகஸ்தியர் என்று நாம் பிற்காலத்தில் அழைக்கப்பட்டவர்.

அகஸ்தியனின் தாய், நஞ்சு கொண்ட உயிரினங்கள் தன்னைத் தாக்காது தன்னை அணுகாது தாவர இன நஞ்சினை முலாமாகப் பூசி, அந்த உணர்வின் சத்தைத் தனது உடலுக்குள் எடுத்துக் கொண்டது.

இதைப் போல, தன் கருவிலே இருக்கக்கூடிய குழந்தையை எண்ணி எத்தகைய நிலையும், குழந்தையைக் கண்டபின் அருகிலே வராதபடி, அது வீரிய உணர்வுகள் பெற்று, தன் குழந்தை வளரவேண்டும் என்று அந்தத் தாய் எண்ணுகின்றது.

தாய் பூசிக்கொண்ட அந்த முலாமின் உணர்வின் தன்மை,
கருவிலே இருக்கும் குழந்தைக்கு,
நஞ்சினை வெல்லும் ஆற்றலாக உருப்பெறுகின்றது. கருவாகின்றது.

இதனின் வழியில் அவர்கள் வளர்ந்து வரும் பொழுதுதான் இவர்கள் சூரியனை வணங்கி,  அந்தச் சூரியனின் காந்தச் சக்தியிலும் இவர் எடுத்துக் கொண்ட நஞ்சினை வெல்லும் உணர்வின் ஆற்றல் பெருகி அதனின் உணர்வின் நிலையைக் கொண்டு, அவர்களுக்கு காட்டிலே தன்னைக் காத்துக் கொள்ளும் ஞானத்தின் நிலைகள் வருகின்றது.

அகஸ்தியர் அங்கே குழந்தையாகப் பிறந்தபின், அவர் அருகிலே நஞ்சு கொண்ட மிருகங்கள் வருவதில்லை. அது கொஞ்சித் திரியும் நிலைகளுக்கு வந்துவிட்டது.

தாய் தந்தை முலாம் பூசிய இந்த உணர்வுகள் நஞ்சினைக் கொண்ட உணர்வுகள் தன் மணத்தைக் கண்டு விலகிச் சென்றாலும்
நஞ்சு கொண்ட மிருகங்கள் அனைத்தும் இவரைத் தீண்டாது
பாதுகாக்கும் நிலையில் அமைகின்றது.

இதைக் கண்டு அந்தத் தாய் தந்தையர், கடவுளின் அவதாரமாக நம் குழந்தை பிறந்திருக்கின்றது என்று பேரானந்த நிலை பெற்று, சூரியனை வணங்கி குழந்தைக்கு அவனேதான் அருள் கொடுத்தது என்று, அவர்கள் அறியாமல் இயங்கி நிலைகள் கொண்டு அந்தக் குழந்தையைப் போற்றிக் காத்து வந்தனர்.
4. அகஸ்தியர் ஒளிக்கதிரில் நுண்ணிய அலைகளைப் பார்க்கக்கூடிய ஆற்றலைப் பெற்றார்
அகஸ்தியர் தம் தாயின் வயிற்றில் சிசுவாக இருந்தபொழுது பெற்ற பூர்வபுண்ணியத்தால், அவர் தம்முள்  விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றலை கருவிலேயே பெற்றார். 

அவர் குழந்தையாகப் பூவுலகில் பிறந்தபின், திறந்தவெளியில் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் சூரியனை உற்றுப்பார்க்கின்றார். சூரியனிலிருந்து வெளிப்படும் விஷத்தை நுகர்கின்றார், அது சமயம் அவைகள் அவருக்குள் அடங்குகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்க உணர்வுகள், ஒன்றுடன் ஒன்று மோதும்பொழுது மின்னல்களாக, மின் கதிர்களாக புவியில் பரவுகின்றது.
அதனில் கலந்து வரும் விஷத்தை அகஸ்தியர் நுகர்கின்றார்.
அதுவும் அவருக்குள் அடங்குகின்றது.

இப்படி,  தமது குழந்தைப்பருவத்தில் கண்ணால் பார்த்து நுகர்ந்த உணர்வுகள், அகஸ்தியருக்குள் நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஒளிக்கதிர்களாக மாறுகின்றது. 

மின்னல் எப்படிப் பல நிலைகளிலும் ஊடுருவிச் சென்று தாக்குகின்றதோ, அதே போன்று
அகஸ்தியருடைய நினைவாற்றலும்,
விண்ணில் பரவும் தன்மையினைப் பெறுகின்றது.

ஆகவே, அகஸ்தியர் ஒளிக்கதிரில் நுண்ணிய அலைகளைப் பார்க்கக்கூடிய ஆற்றலைப் பெற்றார்.
5. நஞ்சினை வென்றிடும் ஆற்றலை அகஸ்தியர் எப்படிப் பெற்றார்?
அகஸ்தியருடைய தாய் தந்தையர் உடலில் அதிகமான நஞ்சின் தன்மை (தாவர இனங்கள்) பூசி அதனின் உணர்வுகள் சிறுகச் சிறுக அவர்கள் உடலில் விளைந்து, இந்தக் குழந்தை ஐந்து வயது ஆவதற்கு முன் தாய் தந்தையர் இருவரும் மடிந்து விடுகின்றனர்.

அவர்கள் மடிந்தபின் அகஸ்தியர் தனித்து வாடுகின்றார். இந்த ஏக்கத்தின் நிலைகள் கொண்டு காலை கதிரவனைப் பார்த்து, “என்னை ஈன்ற தாய் தந்தையர் மறைந்துவிட்டனர்”,
அவர்களின் அருளை நான் பெறவேண்டும்,
அவர்களின் அணைப்பு எனக்கு வேண்டும்.
என் அன்னை தந்தையைப் பார்க்க வேண்டும் என்று ஏங்குகின்றார்.

தன் அன்னை தந்தையைப் பெறவேண்டும் என்ற உணர்வை அறியாப் பருவத்தில் விண்ணை நோக்கி, ஒளிச் சுடராக வீசி வரும் கதிரவனை எண்ணி ஏங்கி, அந்தக் கதிரவனின் காந்தப்புலனின் ஆற்றலை இவர் பெறுகின்றார்.

அப்படி வணங்கப்படும் பொழுதுதான், தன் தாயின் கருவிலே பெற்ற அவர் உடலுக்குள் விளைந்த நஞ்சின் உணர்வின் தன்மை நஞ்சினைக் காணும் நிலை ஏற்படுத்துகின்றது.

தாய் தந்தையரை எண்ணி, அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் கொண்டு கதிரவனைப் பார்க்கப்படும் பொழுது, சூரியனிலிருந்து வரும் நஞ்சின் தன்மையை அவர் உணருகின்றார்.

இன்று விஞ்ஞானிகள் அல்ட்ரா வயலட் என்று சொல்வதை, அன்று இவர் உடலிலிருக்கும் நஞ்சான உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு சூரியனிலிருந்து வரும் நஞ்சினைக் கண் கொண்டு பார்க்கின்றார்.
6. அணுவின் ஆற்றலை அறிந்தவர் அகஸ்தியர்
இவர் அறியாத நிலைகளில் இருந்தாலும், இவர் உடலில் விளைந்த இந்த உணர்வின் தன்மைகள் இவர் எதை எடுத்து சூரியனை வணங்கினாரோ, அந்த ஞானத்தின் தொடராக அந்தக் காந்தப்புலனின் ஆற்றல் பெருகி, இவர் எண்ணத்தின் நிலைகள் வலுப்பெற்று, சூரியனிலிருந்து வெளிப்படும் இந்த உணர்வினை உற்று நோக்க, அதனின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தார் அகஸ்தியர்.

அதிலிருந்து வெளிப்படும் நஞ்சும், சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தப்புலன்களும், அதைக் கடந்து வரப்படும் பொழுது அந்த அணுவின் இயக்கங்கள் எவ்வாறு மாறுகின்றது? என்று முதலில் அணுவின் இயக்க ஆற்றலைக் கண்டுணர்ந்தவர் அகஸ்தியர்.

ஆகையால் விண்ணுலக ஆற்றலும் அதனின் பரிணாம வளர்ச்சியில் அணுவின் ஆற்றலும், பிரபஞ்சத்தின் உரு நிலையையும், இளம் பிஞ்சு உள்ளத்திலேயே மெய் உணர்வைக் காணும் நிலைகள் அவருக்குள் வளர்ந்தது.

தாயின் கருவிலிருந்து பெற்று, அவருக்குள் வளர்ந்த நிலைகள்தான் நஞ்சு வலு கொண்டதாகவும்,
நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் வளர்ந்ததனால்
நஞ்சு கொண்ட நிலைகளைப் பிளந்து
நல்ல உணர்வின் தன்மையை
அவர் அறிந்திடும் உணர்வு பெற்றார்.

முதல் நிலையில், அவர் உடலில் விளைந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான்
பிரபஞ்சத்தின் இயக்கமும், பிரபஞ்சத்தில் அணுவின் ஆற்றலும்,
அணுவின் ஆற்றலின் பெருக்கமும்
அதனின் நிலைகள் கொண்டு கோள்களாக ஆனது என்பதையும்,
கோள்கள் நட்சத்திரமாக ஆனது என்பதையும்,
நட்சத்திரங்கள் சூரியனாக ஆனது என்பதையும் கண்டுணர்ந்தார்.

பின், சூரியனிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் கோள்களாக மாறி, அது நட்சத்திரமாகி, ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கும் நிலை பெற்றது என்பதனை, முதல் உண்மையின் நிலையை அன்று பரிணாம வளர்ச்சியின் நிலையையும், அணுவின் வளர்ச்சியின் நிலையையும் கண்டுணர்ந்தவர் அகஸ்தியர்.

பத்து மகரிஷிகள் - ஈஸ்வராய குருதேவர் 1



1. தாய் கருவில் பெற்ற சக்திதான் நமது குருநாதருக்கும்
குருநாதருக்கும் கல்வி அறிவில்லை. படிப்பில்லை என்றாலும், அவர் தாய் கருவிலே விளைந்தது. அவர்கள் பூஜை, புனஸ்காரங்கள், மந்திரங்கள் இதெல்லாம் சொல்லித்தான் வளர்ந்திருக்கின்றார்கள்.

இருந்தாலும், அகஸ்தியரின் வாழ்க்கையைப் போன்று பூஜை செய்யும்போது, குருநாதருடைய தாயும் தந்தையும் இறந்துபோய் விடுகிறார்கள். இவர் இளமையில் ஆகப்போகும்போது, இவர் கருவிலே விளைந்த அந்த சக்தி இவருக்குள் இருக்கின்றது.

இதைப்போல ஏங்கித் தவிக்கும்போது அவர் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பிக்கின்றார். ஆனால், தாய் கருவிலே விளையப்படும்பொழுது, அவர்கள் கற்றுக் கொண்ட இராமாயணம், மஹாபாரதம், கார்த்திகை புராணம் போன்ற, அந்த உணர்வைப் பதிவு செய்ததை வைத்து, குருநாதர் அனாதையாகத் தான் வெளியேறுகின்றார்.

வெளியேறி, அங்கங்கே ஏதாவது தொழிலில் சேருவது. பத்து நாட்களுக்கு இருக்கின்றது. கடையில் சேர்வது சமையல் சமைக்கின்றது. இப்படியேதான், உலகம் முழுவதற்கும் சுற்றி வந்திருக்கின்றார் ஈஸ்வரபட்டர்.

அவர் எல்லா வழியிலும் வந்தார். ஆனாலும், அவரில் விளைந்த உணர்வுகள் தாய் கருவிலே விளைந்தது. அதன் அடிப்படையில்தான், ஒவ்வொன்றும் அந்தச் சந்தர்ப்பத்தில் தாய்  கருவிலே விளைந்தது, பூர்வ புண்ணியமாக அமைந்து சில சக்திகளை அவர் பெறக்கூடிய தகுதி பெறுகின்றது.
2. குருதேவர் ஆரம்பத்தில் விண் சென்ற உணர்வு
நமது குருநாதர் அவர் ஆரம்பத்தில் விண் சென்றவர். நம் எண்ண அலைகள் ஒன்றாகச் சேர்த்து குவிக்கப்படும் பொழுது, மனித உடலிலிருந்து ஒளியின் உணர்வுகளைப் பெற்ற  நமது குருநாதர் அவர் ஆரம்பத்தில் விண் சென்ற உணர்வுகளை”, நாம் அனைவரும் எளிதில் பெற முடிகின்றது.

அந்த ஒளியின் உடலில் இருந்து வந்த ஒளி அலைகள்தாம்
நம் பூமியில் படரப்பட்டு,
மற்ற உடல்களிலே பாய்ச்சப்பட்டு,
அந்த உணர்ச்சிகள் தூண்டி மீண்டும் இங்கே எழுகின்றது.

எழுந்த நிலைகளில் அந்த வித்தின் சத்துதான், எமக்கும் அது கிடைத்தது. எமது குருநாதர் அருள் வழி கொண்டு, அவர் கொடுத்த வித்தினை அவர் காட்டிய வழிகளில் வளர்த்து, அதை உங்களுக்குள்ளும் நல்ல வித்தாக விளையச் செய்கின்றோம்.
3. பல கோடி ஆண்டுகளுக்கு முன் விண் சென்றவர் நமது குருநாதர்
நமது குருநாதர், எமக்குக் காட்டிய நிலைகள் கொண்டு, அவர் பல கோடி ஆண்டுகளுக்கு முன், அவருடைய உயிராத்மா விண்ணிலே சபதரிஷி மண்டலமாக இணைந்தவர்.

அதன் வழி, நமது பூமியிலே அந்த உணர்வின் வித்துக்கள் பட்டு, மற்ற உயிர்களிலே அது விளைந்து, பலவாறு பல உணர்வின் தன்மையை இங்கே பரப்பிய நிலைகள் கொண்டு, அந்தந்த உணர்வுகள் பட்டு, அந்தந்த உடல்கள்,
அந்த உயிராத்மாக்கள் விண்ணிலே அவருடன் ஐக்கியமாகி,
அவருடன் விண்ணிலே பெரும் மண்டலங்களாக
இதைப் போன்று எத்தனையோ ரிஷிகள் சேர்ந்து,
அந்த நிலைகள் கொண்டு அவர்கள் சென்றுள்ளார்கள்.

ஆக, எமது குருநாதர், நமது குருநாதர், ஏனென்றால், எமது என்று, யாம் தனித்துச் சொல்வதற்குப் பதில், நமது என்ற நிலைக்கே, அந்த நிலைக்கு அவர் எம்மை அந்த உணர்வின் தன்மை கொண்டுதான் உபதேசிக்கின்றோம்.

ஏனென்றால், அவருடைய உணர்வுகள் இன்று, அந்த சப்தரிஷி மண்டலங்களாக இருப்பதினாலே, அந்த உணர்வின் தொடர் கொண்டு, ஏனென்றால், அவருடைய உணர்வலைகள்தான்
இங்கே பலவாறாக பரவலாகப் படரப்பட்டு,
பல உயிராத்மாக்கள் விண் சென்றுள்ளார்கள்.

நமது குருநாதருடய உணர்வலைகள், இங்கே ஒவ்வொரு உணர்வுகளிலேயும் படரப்பட்டு, நம் உயிராத்மாவை ஒளியாக மாற்றி, ஒளியின் சரீரமாகப் பெரும்மண்டலமாக, சப்தரிஷி மண்டலமாக, சப்தரிஷி மண்டலம் என்று, அது சுழன்று கொண்டிருக்கின்றது.

அந்த சப்தரிஷி மண்டலத்திலே நாம் எல்லோரும் இணையலாம்.
4. குருதேவரின் பரிபாஷை
உலகில் எத்தனை நிலைகள் இருக்கின்றதோ, அத்தனையையும் எந்தெந்த வழியில் எமக்கு உணர்த்த வேண்டுமோ அத்தனை வழிகளிலும் எமக்கு உணர்த்தினார் குருநாதர்.

அதே சமயத்தில் மின்கம்பத்தை அடிப்பார். தொலைபேசிக் கம்பத்தை அடிப்பார். மின் கம்பத்தை அடித்துக்கொண்டே,
இந்த லைன்,
அந்த லைன் என்பார், குருநாதர்.
டேய்.., மிளகாய் ஒரு லட்சம்,
கோடி, கோடி என்பார்.

எமக்கு ஒன்றுமே புரியாது. பைத்தியம் பிடித்தது போன்று பேசிக்கொண்டே வருவார். குருநாதர் எல்லா பாஷையிலும் பேசுவார். “கோடி கோடி என்பார்.

சாமி கோடி இங்கே இருக்கிறது? என்போம்.

அந்தக் கோடி இல்லை என்பார். “ஈகோடி என்பார். மிளகாய் கோடி, கோடி என்பார். என்னென்னவோ கோடி என்பார், எமக்கு அர்த்தம் ஒன்றுமே புரியாது.

பிறகு சொல்வார், ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்து எத்தனை கோடி உணர்வுகளாக மாறுகின்றது என்பதையெல்லாம் விளக்குவார்.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் மின்னலாக்கப்படும் பொழுது இதனின் உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது? உணர்வுகள் எப்படி மாறுகின்றது? என்பதை குருநாதர் எமக்குச் சொல்வார்.

உள்ளுணர்வாக உணர்த்தவும் செய்வார். முதலில் சொல்லிவிடுவார். பின்னர் புரிய வைப்பார்.

இப்படி குருநாதர் எமக்குக் கொடுத்த அருளுணர்வுகளை, யாம் அப்படியே உங்களிடத்தில் பதிய வைக்கின்றோம். சந்தர்ப்பம் வரும் போது, இதன் நினைவு உங்களிடம் வரும்.

யாம் உங்களுக்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு, துருவ நட்சத்திரத்தை எண்ணினால், அது உங்கள் நினைவுக்கு வரும். அப்பொழுது, அதன் உணர்வுகள் உங்களிடத்தில் தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இயங்கும்.