ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2014

ஈசனுக்கு மகிழ்ச்சி எது?

நாம் இங்கே கற்றுக் கொண்ட நிலைகள்,
நம் குடும்ப வாழ்க்கையிலும் சரி
நம் எதிரியாக இருந்தாலும் சரி
நம் சொல்லின் நிலைகள் அங்கே இனிமைப்படுத்த வேண்டும்.

மற்றவர்கள் காரமான நிலைகளில் பேசினாலும், நாம் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் பலன் பிறர் காரமாக பேசக்கூடிய உணர்வுகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலாகப் பெறவேண்டும்.

ஆக, இதை ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் ஆற்றல் பெறுவதற்கு, சதா நீங்கள் ஆத்ம சுத்தி”  என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உயிரை ஈசனாக மதித்து, அந்த ஈசனுக்குபாலாபிஷகம்ஆலயங்களில் செய்வது போன்று, உங்கள் ஈசனுக்கு அந்த மெய்ஞானியின் அருள் சக்தியான நிலைகளை நீங்கள் சுவாசித்து அபிஷேகிக்க வேண்டும்.

அந்த மெய்ஞானிகளின் உணர்வின் மணங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக
உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து
அந்த அபிஷேகத்தை யாம் செய்து கொண்டே இருக்கின்றோம்.

ஆகையினாலே, உங்கள் உயிரான ஈசனுக்கு இந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் இந்த ஆத்ம சுத்தியைச் செய்துஅங்கே உங்கள் உயிரான நிலைகளுக்கு அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசித்து  உங்களுக்குள் மகிழச் செய்யுங்கள்.

இதைப் போல, ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நாம் எடுத்து பிறருக்குச் சொன்னாலும், அவர் உடலில் இருக்கக்கூடிய உயிரான ஈசனிடம் நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகளை அவர்கள் சுவாசித்து, ஒலிகள் மூலம் உயிரிலே பட்டு, அந்த உணர்வுகள் தூண்டப்படுகின்றது.

நாம் பேசிய உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் நிலைகள் அந்த உடலை இயக்கச் செய்து. நம்மைப் பக்குவப்படுத்துவதோ ன்மை சொல்லச் செய்வதோ  இதைப் போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகையினாலே இதையெல்லாம் கண்டுணர்ந்த நாம் பாச அணைப்புடன் உதாரணமாக,
குழந்தை தவறு செய்தாலும்
நாம் பாசத்துடன் அணைத்துக் கொள்கின்றோம்.

ஆக, நம் உடலிலே ஒரு வேதனையாகும் பொழுது நமக்குள் ஒரு அசுத்தம் பட்டுவிட்டால்
அசுத்தம் என்ற நிலைகளை எண்ணாதபடி
அதைத் துடைக்க முற்படுகின்றோம்.

அதைப் போன்று, பிறருடைய எண்ணங்களில் அசுத்த சொற்கள் வந்தாலும், நாம் எண்ணத்தாலே துடைக்கும் பக்குவத்தைப் பெறவேண்டும்.
அசுத்தமான நிலைகள் இருந்தாலும்
எப்படி மனமுவந்து துடைக்கின்றோமோ, அதைப் போன்று,  
பிறருடைய அசுத்த உணர்வின் எண்ணங்கள் தோற்றுவித்தாலும்,  
த்ம சுத்தி என்ற ஆயுதத்தை நாம் பயன்படுத்தி, 
அவருடைய அசுத்தத்தை நீக்கும் ஆற்றலை 
நாம் செய்து பழகுவோமேயானால்
நமக்குள் ஐக்கியமாகும் நிலைகள் பிறக்கும்.

இதன் மூலம் நாம் அனைவரும் ஏகாந்தமாக மகிழ்ந்து வாழலாம். அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அனைவரும் எளிதாக அடைய முடியும். எமது அருளாசிகள்.

July 30, 2014

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் ஆத்மசுத்தி செய்ய வேண்டும்

உதாரணமாகசில வருடங்களுக்கு முன் ஒருவன் நமக்கு கெடுதல் செய்திருப்பான். அதனால் நம் குடும்பமே நஷ்டம் அடைந்திருக்கும். இல்லாததைச் சொல்லி இருப்பான்.

அவனைப் பார்த்தவுடன்,  கஷ்டமான நிலைகள் நமக்குள் ஏற்கனவே பதிவானது இழுத்து நம் ஆன்மாவில் வந்துவிடும்.

அப்பொழுதுஅவனை வெறுக்கும் நிலைகள்  நமக்குள் உருவாக ஆரம்பித்துவிடும்
சிறிது நாள்  அதற்குச் சாப்பாடு இல்லாமல் இருந்தது
சாப்பாடு கிடைத்ததும் வீரியம் அடைய ஆரம்பித்துவிடும்.

மண்ணுக்குள் எத்தனையோ வித்துகள் மறைந்து இருக்கின்றது. சிறிது காலம் மழை இல்லையென்றால் வறண்டு போய்விடுகின்றது.
ஒரு நாள் மழை பெய்துவிட்டால்
தளதளவென்று வெளியில் வரத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்றுதான், பகைமை உணர்வுகள் நமக்குக் கெடுதல் செய்த தவறான நிலைகள் நமக்குள் பதிவானாலும்,  அவனைப் பார்த்தவுடனே அந்த இனத்தைத் தனக்குள் கவர்ந்துஅதனின் செயலாகத்  தனக்குள் ஆகாரம் தேட ஆரம்பித்துவிடும்.

அப்பொழுது, நாம் வ்வளவு தியானம் எடுக்கின்றோம்,  அவனைப் பார்த்தவுடனே  கோபம் வருகின்றது என்று நினைப்போம்.

இந்த உணர்வு இங்கு வந்தபின் இரவு தூங்கினால் கெட்ட கனவாக வரும். வெறுப்பின் உணர்வுகள்  நமக்குள் வரும்போது எப்படியெல்லாம் இருந்தோமோநம் எண்ணத்திற்கு அவன் நினைவு வராது.
கெடுதல் செய்தவனைப் பார்த்து
அந்த உணர்ச்சி நமக்குள் தூண்டப்பட்டாலும் 
அவன் உரு நமக்குள் நினைவிற்கு வராது. 

அந்த நேரத்தில் மற்ற மனிதர்களிடத்தில் உருவான கெடுதல் செய்த உணர்வின் தன்மை நமக்கு எதிரில் இருந்தால் அது வந்துவிடும்.

இரவில் தூங்கும் பொழுது, யாரோ கெடுதல் செய்கின்ற மாதிரி இன்னொரு உரு நமக்குள் தெரியும். நாம் முன்பின் பார்த்திருக்க மாட்டோம். அந்த மனிதனின் உருவம் நமக்குள் தெரியும்

அப்பொழுது நம்மை அறியாமலே  இரவு வேளைகளில்  தீமையின் உணர்வுகள் நம் தூக்கத்தைக் கெடுக்கும்.

அந்த மாதிரி நேரங்களில்நாம் இரவில் தூங்கும்போது இந்த உணர்வுகள் வரும் பொழுதெல்லாம், “ஈஸ்வரா”  என்று உயிரை வேண்டி,
துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் இணைத்து 
அதைப் பெறவேண்டும் என்று எண்ணி,  
உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்.
அதைச் செலுத்தியவுடன் தன்னை அறியாமலே தூக்கம் வரும்.

எந்தெந்த வகையில் தீமைகள் வந்தாலும், இப்படி நாம் எடுத்துக் கொண்டால்தான் நமக்குள் தூய்மைப்படுத்த முடியுமே தவிர, ஒரேடியாக ஜெபமிருந்து ஆண்டவன் அருளைப் பெறுவேன் என்று சொன்னால் நடக்காது. 

ஒவ்வொரு நிமிடத்திலும் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.

அவ்வப்பொழுதுஅந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.

இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
அப்படி அடக்கிக் கொண்டே வந்தோமென்றால் அது அப்படியே உறைந்துவிடும்.

எல்லா உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இப்படி மனிதன் அடக்கிய நிலைகள்தான்  இந்த பூமியில் எத்தனையோ விதமான விஷங்கள், கோபங்கள், வெறுப்புகள் இவைகளை எல்லாம் அடக்கினான்.

அவ்வாறு அடக்கிஅவனுடைய வாழ்க்கையில் செய்யும் முறைகள் இப்படி அந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது பேரானந்தப் பெரும் செல்வம் நமக்குக் கிடைக்கின்றது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்துப் பழகவேண்டும்

ல்லையென்றால், நான் எல்லாம் நன்றாகச் செய்கின்றேன்ஆனால் உலகில் எங்கு திரும்பிப் பார்த்தாலும் இப்படித்தான் (தவறும், குறையும்) இருக்கின்றது என்று எண்ணினால், இதற்கு வலு கொடுத்து விடுகின்றோம். ஆக, நாம் போகும் பாதையில் புவியின் ஈர்ப்பிற்கு வந்து விடுகின்றோம்

து எப்படி இருந்தாலும்  
வ்வளவு கடுமையான நிலைகளை நாம் பார்த்துணர்ந்தாலும்
ஒவ்வொரு நொடியிலும், ஆத்ம சுத்தி என்ற நிலையை
நம் ஆன்மாவில் கலக்கும் நிலையை
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச்செய்து,
தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இதுதான் ஆத்மசுத்தி என்பது
தை முறைப்படி நம் வாழ்க்கையில் செய்து கொண்டே இருக்க வேண்டும். 

காற்று பலமாக அடிக்கும் பொழுது தூசி வருகின்றது. தூசி அதிகமாக வரும்போது ஒதுங்கிக் கொள்கின்றோம்.

இதே மாதிரிதீமையான உணர்வு வரும் பொழுது அந்த எண்ணத்தில் இருந்து விலகி நிற்க,
மகரிஷிகளின் உணர்வை ஆதாரமாக வைத்து,
இதிலிருந்து சிறிது நேரமாவது விலகி நிற்க வேண்டும்.

நாம் எப்படியும் ஒரு இடத்திற்குப் போகவேண்டும் என்று நினைக்கின்றோம். அங்கு வெயில் குறைவாக இருந்தது. போகப் போக, வெயில் சூடு அதிகமாகின்றது. அதிகமான அந்த நேரத்தில்  விலகி நிற்கின்றோம்.

இதைப் போன்றுவாழ்க்கையில் கடுமையான நிலைகள் வரும்போது மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று ஆத்மசுத்தி செய்து, அந்த எண்ணத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.

July 29, 2014

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் தீமைகளை எப்படி மாற்றியமைக்கின்றது?

யாம் ஏட்டைப் படிக்கவில்லை. குரு அருள் உணர்வை எடுத்து, நினைத்து யாம் அதன் வழியில் நடந்தோம். 

காற்றில் உள்ளதனைத்தையும் நீங்களும் அறியலாம். நல்லதை நீங்கள் சேமிக்கலாம். நல்லதை நீங்கள் பெறுவதற்குத்தான் இதை உபதேசிப்பது.

அதாவது,  தீமை எப்படிச் சேர்கிறது?
தீமையை நீங்கள் எப்படி மாற்றுவது? என்று இந்த உணர்வைச் சேர்க்கும் போது, நீங்கள் நுகர்கின்றீர்கள்.

இந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கிறது. கூடுமான வரையிலும்,  உங்கள் உடலிலுள்ள அணுக்களுக்கு கொஞ்சமாவது போய்ச் சேர வேண்டும். 

தைப் பெறச் செய்வதற்காகத்தான், இவ்வளவு நேரம் பேசுகின்றோம். நேரம் போய்க் கொண்டு இருக்கிறதே என்று நினைக்கக் கூடாது.

இப்பொழுது உபதேசிக்கும் இந்த உணர்வு கொஞ்சம் சேர்ந்தவுடன், மற்ற தீய அணுக்கள் கொஞ்சம் மூச்சுத் திணறும். அந்த மூச்சுத் திணறும் போது, இதை (அருள் உணர்வுகளை) கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து இதைச் சேர்க்க வைத்துவிட வேண்டும்.

ஏனென்றால், யாம் இடைவிடாது உபதேசித்துக் கொண்டே இருக்கிறோம். இடைவிடாது நீங்கள் நுகர்ந்து கொண்டே இருக்கின்றீர்கள். உங்களுக்குள் கலந்து கொண்டே இருக்கும். யாம் கலக்கச் செய்கிறோம்.

எமக்கு, குருநாதர் மணிக்கணக்கில் கொடுத்தார். இரண்டு நாட்கள் கூட பட்டினியாக இருக்க வைத்துவிடுவார். எமக்குச் சாப்பாடு அந்த அருள் சாப்பாட்டைக் கொடுப்பார். என் உடலிலுள்ள நல்ல அணுக்களுக்கு அந்தச் சாப்பாடு கிடைக்கும்.

அதனால்தான் சாமி அதிக நேரம் பேசுகிறார். மூன்று மணி நேரம், ஆறு மணி நேரம் கூட பேசுகிறார் என்று சிலர் எண்ணிவிடுவார்கள். இதை எல்லாம் உங்களிடம் அருள் சக்தியைப் பெறச் செய்வதற்குத்தான் இந்த நிலைகள்.

ஒரு நிமிடத்தில் சொன்னால் என்னவாகும்?

அருளுணர்வுகளை உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்து,  கெட்ட அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கச் செய்ய வேண்டும். 

அருள் உணர்வுகளைப் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுத்தி வைக்க வேண்டும். ஏனென்றால், அந்த வழி தெரியவேண்டும்.

ஏனென்றால்விஞ்ஞானி காற்றின் அழுத்தத்தைக் கண்டான். தங்கம் மிகக் கடினமானது. அதை ஒன்றில் போட்டு காற்றழுத்தத்தை அதிகமாக்கி, தங்கத்துடன் மோதியவுடன்  தங்கம் தூசியாகப் போய்விடுகிறது.

கரைத்து விடுகிறான். சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா!  இப்போது மனிதன் விஞ்ஞானத்தால் அதைக் கரைக்கும் சக்தியைக் கொண்டு வருகிறான்.

அதைபோலஅந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தவுடன்
இதன் அழுத்தம் அதிகமாகி,
வேகமாகச் சுழற்சியாகிறது.
அப்போது, தீமையான உணர்வுகளுடன் ஊடுருவச் செய்கிறோம்.

விஷம் எப்படி ஊடுருவி அதன் நிலையை மாற்றுகிறதோ தே மாதிரி 
விஷத்தை ஒளியாக மாற்றிய உணர்வுகளை
உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்கிறோம்.

உடலில் உள்ள அந்த உணர்வின் அணுக்களுக்குள் ஊடுருவி, அதை மாற்றக்கூடிய சக்தி பெறவேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுவது.

சிலர், சாமி மணிக்கணக்கில் பேசுகிறார் என்று வெளியே சென்று அமர்வார்கள், வாழ்க்கை நிலைகள் கொண்டு அந்த மாதிரி செல்பவர்கள் போய்விடுகிறார்கள். 

இதில் மிஞ்சி வருபவர்கள், நீங்கள்,  அதாவது, எப்படி இருந்தாலும், அந்த  குருவின் அருளைப் பெறவேண்டும் என்ற நிலைகளில் இருப்பவர்கள்தான்,  இங்கே இருப்பார்கள்.

நீங்கள், கொஞ்சம் கொஞ்சம் பேசப்பேச அங்கே அவர்களுக்கும் கிடைக்கும். அவர்களையும் இங்கே அழைத்துவரும். 

நீங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் உங்கள் மூச்சு இந்த பூமியில் உள்ள தீமைகளை நீக்கும்.

உங்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களையும், இது திருந்த வைக்கும்.