ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2015

அகஸ்தியன் ஐந்து வயதில் துருவனாகும்போது பெற்ற மகா சக்திகள்

அகஸ்தியன் ஐந்தாவது வயது வரப்படும்போது அவன் தாய் தந்தையர் மடிந்து விடுகின்றார்கள்.

தாயின் வயிற்றில் பிறந்தாலும் அகஸ்தியன் தாய் தந்தையர் நஞ்சினை தன் உடலில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டதால் அவர் உடலிலே வளர்ந்த நஞ்சினை அதிகமாகச் சுவாசித்த நல்ல அணுக்கள் மடியத் தொடங்கி விடுகின்றது.

ஏனென்றால் நஞ்சின் தன்மை அதிகமாக நல்ல அணுக்களுக்குள் இணைக்கப்படும்போது அது மடிந்து விடுகின்றது.

ஆனால், அவர்கள் கருவில் வளர்ந்த குழந்தைக்கு 
நஞ்சின் நிலைகளை இணைத்து
நஞ்சினை உணவாக எடுக்கும்
நஞ்சினை தனக்குள் ஜீரணித்து அடக்கிடும் சக்தியாக அகஸ்தியனுக்குள் விளைகின்றது.

அப்படிக் கருவிலே விளைந்த அந்த உணர்வுகள்தான் பிறந்த பின் அகஸ்தியன் என்றும், அணுவின் ஆற்றலை அறியும் சக்தி பெற்றவனாகவும், பின் விண்ணுலகத்தை உணர்வின் அறிவாக தனக்குள் அறிந்திடும் உணர்வுகளாகவும் பெறுகின்றான்.

அவனுடய வளர்ச்சியில் வர வர இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தின் தொடரை உணர்கின்றான். வான்வீதியில் வானுலக இயக்கத்தைக் காணுகின்றான்.

வானஇயல் தத்துவத்தை அறிந்து கொள்ளும் சக்தியைத் தன் ஐந்தாவது வயதில் அவன் பெற்று விண்ணிலிருந்து வரும் சக்திகளை நம் பூமி துருவப் பகுதியின் வழியாகக் கவர்வதைக் காணுகின்றான்.

இவனுக்குள் தாய்க் கருவில் பெற்ற நஞ்சை அடக்கும் உணர்வுகள் இருப்பதால் துருவப் பகுதியில் நஞ்சு கலந்த அணுக்களாக வருவதை இவன் கண்ணால் பார்க்கின்றான்.

இந்த உணர்வுகளை அவன் நுகர்ந்தாலும் நஞ்சினை அடக்கிடும் உணர்வுகள் இவனுக்குள் விளைகின்றது. ஆகவே, துருவன் என்றும் காரணப்பெயரை வைக்கின்றார்கள்.

துருவத்தை நுகர்ந்தறிந்து வானஇயல் தத்துவத்தை சொல்லால் வெளிப்படுத்துகின்றான். அவன் வெளிப்படுத்திய அந்த உணர்வலைகள் அனைத்தையும் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து நமது பூமியில் அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.

அந்த சக்திகள் இன்றும் உண்டு.

அதனைப் பெறும் தகுதியாக நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பெற்ற சக்தியை எமக்குள் பதிவு செய்து
அதை உணரும்படியும்
அதை நுகரும்படியும்
அதை எனக்குள் வளர்க்கும்படியும் செய்தார்.

அவ்வாறு அவர் காட்டிய உணர்வின் அந்த அருள் ஞான வித்தை எமக்குள் பதிவாக்கி குரு காட்டிய அருள் நெறி கொண்டு அதன் உணர்வை என்னால் நுகர முடிந்தது.

அன்று துருவனின் தாய் தந்தையர்கள் தனக்குள் பெற்ற அந்த உணர்வின் அலைகளும் துருவனால் வெளிப்பட்ட உணர்வலைகளும் இந்த பூமியில் படர்ந்து பரவியுள்ளது.

குரு காட்டிய அந்த உணர்வின் வித்தால் அதை நுகர்ந்தறிந்து இப்பொழுது உங்களுக்குள் உபதேசிக்கும்போது அந்த ஆற்றல்கள் இந்த உணர்வின் தன்மை வெளிப்படுவதை மீண்டும் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது.

அதே சமயத்தில், நீங்கள் அந்த உணர்வலைகளை நுகரப்படும்போது அதன் அறிவாக
அன்று துருவன் வெளிப்படுத்திய அணுவின் தன்மை
உங்கள் உடலில் கருவாகி அணுவாக விளையத் தொடங்கும்.

ஆக, அந்த அணு அதன் எதனில் உருவானதோ துருவன் வெளிப்படுத்திய உணர்வலைகளை உணவாக உட்கொள்ளும் அணுவின் தன்மை அடைகின்றது.

அந்த நிலை அடையச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே.

ஞானகுருவின் பொன்மொழிகள் - April 2015

30.04.2015
நம் எண்ணங்கள் கோபுரத்தைப் போல எந்த அளவிற்கு உயர்ந்திருக்கின்றதோ அதே போல மெய் ஒளியின் தன்மைகளை நாம் ஏங்கும்போது அதன்வழிகளில் நாம் போகமுடியும்.
அந்த மெய் ஒளியை நாம் காணவேண்டும் என்றால் குரு அருளை நாடி குருவின் வழிகளில் சென்று நாம் மெய் ஒளியைப் பெறவேண்டும்.
29.04.2015
கணவன் மனைவி இந்த முறைப்படி தியானித்து துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைப் பதிவு செய்துகொண்டால் உடலைவிட்டுச் சென்றபின் இரு சரீரமும் ஒரு சரீரமாக இயங்கும். இதுதான் சிவசக்தியின் ஸ்வரூபம். ரிஷியின் தன்மை சிருஷ்டிக்கும் தன்மை.
கணவனும் மனைவியும் சேர்ந்து எண்ணத்தால் கருவாகி ஒரு உணர்வின் சக்தியை ஒரு உருவை உருவாக்குவது போன்று இரு சரீரமும் இந்தச் சரீரத்தை விட்டுச் சென்றபின் ரிஷியின் தன்மையைப் பெறுகின்றனர்.
அத்தகையை தன்மையில் விண் செல்பவர்கள்தான் விண் செல்ல முடியும். தனித்து எவரும் விண் செல்ல முடியாது.
28.04.2015
ஒவ்வொரு நாளும் சட்டை போடுவது போன்று, அழுக்கைத் துடைப்பது போன்று எண்ணத்திற்குள் வரும் அழுக்கைத் துடைக்கவேண்டும்.
துடைக்கவில்லை என்றால் சிறுகச் சிறுகச் சேர்ந்து நமது நற்குணங்களை மாய்த்துவிடும். துன்பமும் நோயும் சிந்தனையற்ற நிலையும் நமக்குள் உருவாகிவிடும்.
ஆகவே, மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும். 
27.04.2015
விஞ்ஞானத்தில் எல்லாம் சொல்லியுள்ளார்கள் என்பார்கள் சிலர். ஏட்டிலே படித்துக்கொள்வோம். அதை மனதில் கொள்வோம், சிதற விட்டுவிடுவோம்.
மெய்பொருளை அறியமாட்டோம்.
ஆனால், வியாக்ஞானப்படுத்துவோம்.
உட்பொருளைச் சுவாசிக்கும் நிலையை இழந்துவிடுவோம்.
இவைகள்தான் இன்றைய பாடநிலைகள்.
26.04.2015
தன்னையறிந்தவருக்கு ஒரு துக்கமுமில்லை.
தன்னையறியாதவருக்கு வாழ்வு தணலில் விழுந்த புழு போல் அமைந்துவிடும்.
25.04.2015
நம்முடைய வாழ்க்கையில் எத்தகைய இன்னல்கள் இருந்தாலும் உதறித் தள்ளிவிட்டு “நாம் பெறும் மெய் வழியே பெரிது” என்ற இந்த எண்ணத்துடன் வாழ்க்கையைத் தொடங்குங்கள்.
24.04.2015
தாய் தந்தையைரின் உடலைவிட்டுப் பிரிந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று ஏங்கி உடனடியாக குழந்தைகள் விண் செலுத்த வேண்டும்.
எந்தச் சாமியாரும் விண் செலுத்த முடியாது, எந்த ஜோதிட ஜாதகமும் அனுப்பாது. எந்த வேள்விகளும் நம்மை விண்ணுக்கு அனுப்பாது.
எந்த உடலின் சரீரமாக இருகின்றார்களோ அந்தக் குழந்தைகள் தான் விண் செலுத்த முடியும்.
23.04.2015
கலியின் கடைசியில் நாம் இருப்பதனாலே நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள்வழிப்படி நாம் அனைவருமே அந்த ஆற்றலின் துணைகொண்டு இந்தப் பூவுலகின் பெரும்படைப்பான நிலைகளை நாம் படைப்பதற்கே இந்தத் தியானத்தின் வழி - அருள் வழி.
22.04.2015
ஒவ்வொரு மெய்ஞானியும் பிறர் நலம் பெற அவர்களுக்கு உபதேசித்து அந்த உணர்வின் ஆற்றல் பெருக வேண்டும் என்று அவர்பால் அந்த ஜெபத்தைக் கூட்டி தவத்தில் இருந்துதான் உயர்ந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற்றார்கள்.
நான் கடவுளுடன் நேராகச் சென்று அவன் அருளைப் பெறுவேன் என்றால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான். 
ஏனென்றால் நம் உயிர் நாம் எதை எவ்வாறு எண்ணுகிறோமோ அந்த எண்ணத்தின் தன்மையை நமக்குள் உணர்த்தி அதை அணுவாக (உடலாக) உருவாக்குகிறது.
21.04.2015
நம் நண்பர் கஷ்டத்தைச் சொன்னால் நாம் உடனே ஆத்மசுத்தி செய்து நம்மைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்பொழுது அவர் பேசிய உணர்வின் ஆற்றலை நாம் வலுவிழக்கச் செய்கின்றோம்.
அடுத்து நாம் சொல்லவேண்டியது, “இனி உங்களுக்குத் துன்பமில்லை, மகரிஷிகளின் அருளால் நன்றாக இருப்பீரகள்” என்று உங்கள வாக்கைச் சொல்லுங்கள்.
20.04.2015
நாட்டுக்கு நாடு அரசனுக்கு அரசன் தன்னைத் தற்காத்துக்கொள்ள மாற்று அரச நிலைகளை வீழ்த்தி அவன் உணர்ந்துவிட்டால் தன்னை வீழ்த்திவிடுவான் என்று அழிக்கும் உணர்வுகள் போர் முறை கொண்டு இன்று உலகத்தையே அழிக்கக்கூடிய நிலைகள் துரித நிலைகளில் உருவாக்கி மனிதன் கூடிய சீக்கிரம் மனித இனமே இல்லாத நிலைகளுக்கு ஆகப் போகின்றது.
19.04.2015
மெய்ஞானிகள் பெற்ற அரும்பெரும் ச்க்திகளை யாம் உங்களுக்குள் பதியச் செய்யும்போது அதை நீங்கள் எந்த அளவுக்குக் கூர்ந்து கவனித்து அந்த மெய் ஒளியைப் பெறவேண்டும் என்று ஏங்குகின்றீர்களோ அந்த ஏக்கத்திற்குத்தக்கதான் பதிவாகும்.
சாமி நன்றாகக் கதை சொல்கிறார் என்று இரசித்துக் கொண்டிருந்தால் அந்த ரசிப்பு வீண் விரயம் தான். யாம் இதைப் பதிவு செய்த பின்பு இதை வளர்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.
18.04.2015
மெய்ஞானிகள் தங்களுக்குள் விளையவைத்த ஆற்றல்மிக்க சக்திகள் சப்தரிஷி மண்டலங்களிலே சுழன்று கொண்டுள்ளது. சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் அலைகளை நாம் சுலபத்தில் பெறமுடியும்.

அதைப்பெற கடும் தவமோ யாகமோ செய்யவேண்டியதில்லை, முழுமையான எண்ணம்தான் தேவை.
17.04.2015
இன்று விஞ்ஞானி ஒரு அணுவிற்குள் தன் உணர்வின் அலையை காந்த அலைகளையோ கெமிக்கல் கலந்த அலைகளையோ ஊடுருவிப் பாய்ச்சி இயந்திரத்தின் துணை கொண்டு அறிகிறான்.
இதைப் போல நமது குருநாதர் நமக்குள் எண்ணத்தைப் பாய்ச்சி அணுவுக்குள் ஊடுருவிச் செயல்படும் நிலையை அறிந்துணர்ந்து அதை ஆட்டிப்படைக்கும் நிலைகளிலிருந்து மீட்டுக்கொள்ள நீ எவ்வாறு பெறவேண்டும் என்று உணர்த்தினார். அந்த உணர்வின் அலைகளைத்தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
16.04.2015
வேதனை என்பது மனிதரைக் கொல்லும் நஞ்சு.
மகரிஷிகளின் அருள் மனிதருக்கு மகத்துவம் சேர்க்கும் மருந்து.
15.04.2015
மெய்ஞானிகள் எவ்வழியில் தன் உணர்வைக் கண்டுணர்ந்து மெய்வ்ழியில் விண் சென்றார்களோ, அதைப் போன்று மெய் ஒளியின் தன்மையை நம் எண்ணத்தில் தோற்றுவித்து அந்த உணர்வுகளைச் சுவாசித்து நாம் அந்த ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறுகின்றோம்.
அந்த ஆற்றலைப் பெறுவதற்காகத்தான் நாம் இந்தத் தியானத்தைச் செய்கிறோம். ஆக, இதையெல்லாம் நாம் செய்ய முடியுமா? பெறமுடியுமா? என்று சந்தேகித்தால் அதை உயிரான ஈசன் நமக்குள் படைத்துவிடுவான்.
14.04.2015
இனி நாட்டில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் யுத்தங்கள் நடக்கலாம். நாம் இரவில் படுத்து உறங்கும்பொழுது அந்த மகரிஷிகளை எண்ணி மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று இருந்தால்தான் விஞ்ஞானிகள் அலைவரிசை என்ற நிலைகளில் நம்மைத் தாக்கும் நிலைகளிலிருந்து நம்மைப் பாதிக்காதவண்ணம் நாம் தப்பித்துக் கொள்ள முடியும்.
13.04.2015
கார்த்திகேயா என்கிற பொழுது ஒரு பொருளை அறிந்து கொள்ளும் திறன் பெற்றது ஆறாவது அறிவு. அவ்வாறு அறிந்துகொண்ட நிலைகள் வளர்ச்சி பெற்றது விஞ்ஞானம். அதைக் காட்டிலும் உயர்ந்தது மெய்ஞானம்.
மெய்ஞானிகள் ஒவ்வொரு உணர்வின் செயலிலும் இயற்கையின் தன்மையை அறிந்து மனித உறுப்பு அழிந்திடாது உறுப்புக்குள் ஏற்படும் உணர்வின் அணுக்களை உடலுக்குள் உறுப்பின் சத்தினை உணர்வின் அணுவை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவர்கள்.
12.04.2015
நாம் எந்தக் குணத்தை எண்ணுகிறோமோ அந்த குணத்தின் தன்மை நமக்குள் சிவமாக மாறுகின்றது. ஓம் நமசிவாய.
சிவமாக உடலாக மாறியபின் மீண்டும் அது ஏகப்படும் பொழுது கேட்போர் உள்ளங்களில் “ஓ” என்று ஜீவனாகி “ம்” என்று அடங்குகின்றது. சிவாய நம ஓம்.
11.04.2015
யாம் வெறும் வார்த்தையில் சொல்கிறோம் என்று எண்ணிவிடாதீர்கள். ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்து, வரக்கூடிய துன்பத்தைப் போக்குவதற்கு உங்களுக்குள் பதிவு செய்திருக்கிறோம்.
சிரமப்பட்டு வளர்த்த இந்தச் சத்தின் நிலைகளை நீங்கள் அலட்சியப்படுத்திவிட வேண்டாம். ஆக அந்த ஆயுதத்தை தியானத்தின் நிலைகளில் எடுத்து ஒவ்வொரு நிமிடமும் வரக்கூடிய துன்பத்தை நீங்கள்தான் போக்கிக் கொள்ள வேண்டுமே தவிர சாமி செய்வார் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்.
உங்களுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வை உங்கள் உயிரான ஈசன் தான் செயல்படுத்துவானே தவிர வேறு யாரும் இல்லை.
10.04.2015
நாம் எத்தகைய நல்லதைச் செய்யவேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து நம் உயிரான ஈசனிடம் அது படும்போது நாம் கோவிலுக்குள் செல்வது போன்று நம் உயிரான ஈசனுக்கு அர்ச்சனையாகிறது என்பதை உணர்தல் வேண்டும்.
09.04.2015
உருவாக்கும் சக்தியான வெப்பம், இயக்கச் சக்தியான நஞ்சு, இணைக்கும் சக்தியான காந்தம், மணம் இந்த நான்கும் ஒரு அணுவிற்குள் இயக்கச் சக்தியாக மாறும் போது ஐந்தாவது நிலையான உணர்வு என்ற இயக்கம் என்ற நிலை அடைகின்றது. இதுவே காயத்ரி எனப்படுகிறது.
08.04.2015
யாரும் இறப்பதில்லை
உடல்தான் இறக்கின்றது
உணர்வுகள் அழிவதில்லை
உணர்வுகள் மாறுகின்றது
உணர்வுகள் மாறிக் கொண்டேயிருக்கும்
உணர்வுக்குத்தக்கவாறு உடல்கள் மாறும்
ஒளியின் சரீரமான உணர்வாக மாற்றச் செய்வதுதான்
மகரிஷிகள் உணர்த்திய தியானம்
07.04.2015
காளியின் சிலை கோபத்தின் சொரூபமாக இருக்கின்றது. காளியின் வாகனமோ புலி.
புலி மற்ற உயிரினங்களை இரக்கமற்றுத் தாக்கிக் கொன்று புசிப்பது போன்று நமது கோபத்தின் உணர்வுகள் நம் உடலிலுள்ள மனிதனாக உருவாக்கிய நல் உணர்வின் அணுக்களை இரக்கமற்றுத் தாக்கிக் கொன்று அடுத்து மனித சரீரத்தைப் பெறும் தகுதியை இழக்கச் செய்கின்றது.
06.04.2015
மெய்ஞானியரின் அருள் சக்தியைச் சுவாசித்து உயிரில் மோதி உடலிலுள்ள ஒவொரு அணுக்களிலும் கலக்கச் செய்தாலொழிய நாம் விதியை மதியால் வெல்ல முடியாது.
05.04.2015
மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பது விஞ்ஞானிகள் கருத்து. ஆனால், உணர்வின் இயக்கத்தின் வழித் தொடர் கொண்டு பரிணாம வளர்ச்சியில் பன்றியின் உயிராத்மாதான் அடுத்து மனித சரீரம் பெறுகின்றது.
பன்றியின் உயிராத்மா நஞ்சான உணர்வுகளைப் பிளந்து நல்லுணர்வினைத் தன்னுள் இணைக்கும் நிலையாகத் தன் உணர்வினை வளர்த்து தனது மறுபிறவியில் மனித சரீரத்தைப் பெறுகிறது என்பது மெய்ஞானிகள் நமக்குக் கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரமாகக் காண்பித்த பேருண்மை.
04.04.2015
எதனின் உணர்வை நம்முள் இணைத்து வளர்க்கின்றோமோ அதனின் உணர்வுகள் நம் உடலில் இணைந்து ஊழ்வினையாகின்றது.
இந்த ஊழ்வினையே நம் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகின்றது
03.04.2015
நாம் எதை எண்ணுகிறோமோ அந்த உணர்வின் அலைகள் நம்மைச் சுற்றி கவசமாக இருக்கும்.
ஆக, அது தான் முன்னாடி இருந்து நம்மைச் சுவாசிக்கச் செய்து எந்த குணத்தில் நாம் இருந்தோமோ அந்த குணத்தைப் பாதுகாக்க அதன் வழி ஞானத்தைக் கொடுக்கும்.
02.04.2015
நமது உடலுக்குள் எண்ணிலடங்காத எண்ண வித்துக்கள் உண்டு. அதனில் எந்த உணர்வின் தன்மை அதிகமோ அதனின் செயலாக்கமாக நமது ஆன்மா மாறுகின்றது.
01.04.2015
பேருண்மையின் நிலைகள் அனைத்தையும் சொல்லிவிட்டால் நாம் தெரிந்து கொண்டோம் என்ற அலட்சியம் வரும்.

தெரிந்து கொண்டோம் என்ற நிலைகளில் வாய்ச் சொல்லில்தான் பேச முடியுமே தவிர அந்த உணர்வின் ஆற்றல்களை நாம் அறிய முடியாமல் போய்விடும்.

April 29, 2015

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் பெற்ற "மகா சித்துகள்...!"

உதாரணமாக ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்றுவோம் என்றால் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் குறைந்து நல்ல நீராக மாறுகின்றது.

இதைப்போலத்தான் வராகன் (பன்றி) தீமைகளை வென்றிடும் உணர்வுகள் வலுப்பெற்று அது, தீமைகளைப் பிளந்துவிட்டு நல்ல உணர்வுகளை அதன் வாழ்க்கையில் நுகர்ந்து அந்த உணர்வுகள் அது உடலிலே பெருகுகின்றது.

தீமையைப் பிளந்திடும் உணர்வு உயிருடன் வளர்ச்சி பெற்ற அந்த உணர்வுகள்தான், மனிதனாக உருவாக்கும் அந்த அணுக்களாக உருப்பெற்று மனித ரூபத்தைக் கொடுக்கின்றது.

தாவர இனங்களில் ஒன்றுடன் ஒன்று இணைந்து எந்தெந்த உணர்வுகளின் தன்மை இணைகின்றதோ அதற்குத் தக்க தாவர இனங்கள் அது ரூபங்களை மாற்றி, மாற்றி வருகின்றது.

இதைப் போன்றுதான் எல்லா சரீரங்களிலேயும் தீமை, நன்மை, என்ற நிலைகளை உணர்ந்து உணர்ந்து, இந்த உணர்வின் அறிவு வளர்ச்சி அடைந்து, மனிதனாக ரூபத்தைப்பெற்ற பின், மனிதன் உணவாக உட்கொள்ளும் அந்த உணவுக்குள் மறைந்த நஞ்சினை, இந்த மனிதனின் உடல் நஞ்சினை மலமாக மாற்றி விட்டு, நஞ்சினை அகற்றும் அந்த ஆறாவது அறிவாக உருப்பெறுகின்றது.

ஆகவே, இதுதான் முருகு, மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன். ஆறாவது அறிவை முருகா என்றும், எதனையுமே தீமைகளை அகற்றி விட்டு, நஞ்சினை அகற்றி விட்டு, மகிழ்ச்சி பெறும் செயல்களை உருவாக்கும் திறன் பெற்றது கார்த்திகேயா.

ஆக, நன்மை, தீமை என்ற நிலைகள் அறிந்து, தீமைகளை அகற்றி விட்டு, நன்மையை அதாவது தனக்குள் அறிவின் ஒளியாக மாற்றிடும் திறமை பெற்றவன் மனிதன்.

அந்தத் திறமை பெற்ற மனிதன் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தனது வாழ்க்கையில், தனது உடலில், நஞ்சினை அகற்றிடும் சக்தி பெற்றவன்தான் அகஸ்தியன்.

அவன் அகஸ்தியனாக தன் தாய் தந்தை கருவில் வளரப்படும்போது, தாய் தந்தையர்கள் நஞ்சு கொண்ட மிருகங்களிருந்து காத்துக் கொள்ளும் உணர்வாக அவர்கள் நுகர்ந்து, நஞ்சு கொண்ட மிருகங்களுக்கு எதிர்மறையான தாவர இனங்களை
பச்சிலைகளையும் மூலிகைகளையும் எடுத்து
அரைத்து] தன் உடல்களில் பூசிக்கொண்டார்கள்.

தன் உடலின் வெப்பத்தால் இந்த உடலிலிருந்து வாசனைகள் வெளிப்படுவதை மற்ற மிருகங்கள் தன் உணவாகத் தேடி வரப்படும்போது, இதற்கு எதிர்மறையான வாசனையை நுகர்ந்தறிந்த பின் அருகில் வராதபடி வேறு திசையில் நகர்ந்து செல்கிறது.

அவ்வாறு காட்டுவாசிகளாக இருந்த அவர்களின் வாழ்க்கையில், தனது அறிவின் ஞானத்தால் காட்டு மிருகங்களிடமிருந்து தான் தப்பித்துக் கொள்ள அவர்கள் உடல்களில் பூசிக்கொண்ட உணர்வுகள்.

ஆனால், அதே சமயம் மற்ற மிருகங்கள் இதை நுகர்ந்து, இவர்கள் இருக்கும் பக்கம் வராதபடி விலகிச்சென்றாலும், இவர் உடலில் பூசிய உணர்வுகளை இவர் நுகர்ந்தறிந்து அவர்கள் உடலுக்குள் விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் அது அதிகரிக்கின்றது.

இருப்பினும், அவர்கள் கணவனும் மனைவியும் பல கொடிய மிருகங்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் நிலையாக விஷ ஜந்துக்கள், கொசுக்கள். பல விஷ வண்டுகள் போன்ற பல நிலைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்காக
பூசிய முலாம்களின் வாசனையை
அவர்களும் நுகர நேருகின்றது.

அவர்கள் உடலுக்குள் பல தீமை கொண்ட அணுக்களும் உண்டு. ஆக இதை நுகரப்படும்போது இவருக்குள் தீமை கொண்ட உணர்வுகளும் அது செயல் இழந்து அந்த நிலையும் மாறுகின்றது,

இருப்பினும் அவர்கள் கருவுற்றிருக்கப்படும்போது இந்தக் கருவில் வளரும் சிசுவிற்கு, நஞ்சினை வெல்லும் இந்த உணர்வுகள் அது சிறுகச் சிறுக இணைகின்றது.

அதே சமயத்தில் அவர்கள் விண்ணை நோக்கிப் பார்க்கப்படும்போது, அந்த உணர்வின் சத்தைக் கருவுற்றிருக்கும் அந்தத் தாய் நுகர்ந்து, விஷத்தன்மையை ஒடுக்கிடும் ஆற்றல் கொண்ட இந்த அணுக்களின் வளர்ச்சி இந்தக் கருவிலே விளைகின்றது.

அப்பொழுது அந்தக் கருவிலே விளையும் அந்த சிசுவிற்கு இவ்வளவு வீரியங்களும் சந்தர்ப்பத்தில் உருவாகின்றது,

பின் குழந்தையாகப் பிறக்கின்றது. இவ்வாறு உருப்பெற்ற மனிதன்தான் அகஸ்தியன். கருவில், சந்தர்ப்பத்தால் இப்படித் தாய் தந்தையர் விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றல்களைப் பெற்று அதன்வழி அகஸ்தியன் பிறந்தான்.

ஆக அந்தக் குழந்தை பிறந்தபின் (அகஸ்தியன்) விஷம் கொண்ட மற்ற உயிரினங்களோ, வண்டுகளோ, இவனருகிலே வந்தால் இவன் உடலில் வரும் உணர்வினை நுகர்ந்தால் அது மடிந்து விடுகின்றது.

அந்தக் குழந்தை தரையில் மல்லாந்து படுத்திருக்கும் போது வானை நோக்கிப் பார்க்கின்றான்.

வானைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, வானில் உருவாகும் நஞ்சினைப் பார்க்கின்றான். அந்த நஞ்சினைப் (அல்ட்ரா வயலெட்) பார்க்கும் திறன் அவனுக்குள் வருகின்றது.

சூரியனிலிருந்து வரும் அந்த அல்ட்ரா வயலெட் என்ற நஞ்சை அதனுடய இயக்கத்தின் தொடரில் காணுகின்றான்.

சூரியன் பிரிக்கும் உணர்வும் இந்த நஞ்சுகள் பரவி வரப்படும்போதும், நட்சத்திரத்திலிருந்து பிற மண்டலங்களிலிருந்து வரும்  இந்த நஞ்சினை அணுக்களாக சூரியனின் காந்த சக்தி பரவி அது பிரபஞ்சத்தில் பரவுவதையும் பார்க்கின்றான்.

அவன் அறியாதபடி இளம் வயதில் அகஸ்தியன் அந்தப் பிஞ்சு உள்ளத்தில் பார்க்கின்றான் ஆனால் சொல்லால் சொல்ல முடியவில்லை, ஆனால் நுகர்ந்தறிகின்றான், அறிவின் தன்மை உணருகின்றான்.

அகஸ்தியன் அந்தப் பிஞ்சு உள்ளத்தில் வெளிப்படுத்திய பேருண்மைகளை எம்மை குருநாதர் நுகரும்படி செய்தார். அந்த உணர்வுகள் அனைத்தும்
இந்தக் காற்று மண்டலத்தில் உள்ளது
நீங்கள் எல்லோருமே அதை நுகரமுடியும்.
அகஸ்தியன் கண்ட அண்டத்தின் அதிசயங்களை
நீங்கள் காண முடியும் உணர முடியும்.

அதைச் சுவாசிக்கும்போது அகஸ்தியன் நஞ்சை நீக்கிய ஆற்றல்மிக்க சக்திகள் உங்களுக்குள் பெருகுவதையும் நிச்சயம் உணர முடியும்.

April 28, 2015

உங்களால் மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் - ஞானகுரு

உங்கள் ஆசை எதில் இருக்கவேண்டும்?

அந்த சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் அந்த சக்தி எங்களுக்குள் வளர வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.

யாரவது கஷ்டப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டால்
அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும்
என்ற இந்த உணர்வை நீங்கள் எடுத்து உங்களுக்குள் சமைத்து
அதில் நீங்கள் மகிழ்ச்சியைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்

இதை நீங்கள் பெருக்க வேண்டும்

ஒருவர் உடலில் ஆவி செயல்படுகிறது என்றால் 4 பேர் சேர்ந்து கூட்டுத்தியானம் இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று இந்த சக்தியைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள்சக்தியைக் கூட்டிக்கொண்டபின் அவர் உடலில் உள்ள ஆன்மா மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும். அந்த ஆன்மா அவருக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும் என்று சொல்லவேண்டும்.

அவர்களையும் நீ இந்த மாதிரி ஆத்ம சுத்தி செய்யச் சொல்லி நீ சீக்கிரம் நன்றாகிப்போ என்று சொல்லவேண்டும் இதைப் போல் எடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு லாபம். இதைப் பெருக்கிப்பழக வேண்டும்

ஏனென்றால் நீங்கள் அந்தப் பேருண்மையைப் பார்க்கப் பார்க்க உங்களை அறியாமலேயே அந்த உணர்வலைகளுக்குள் சென்றவுடனே  சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வுகள் சுழல்வதைப்பார்க்கலாம்
இந்தத் தொடர்புக்குள் அந்த உணர்வுகள்
தன்னிச்சையாகவே அதை எடுக்கும்

ஒரு அரசமரத்தின் வித்து பாழடைந்த இடத்தில் பட்டாலும்
நீர் இல்லையென்றாலும் காற்றில் இருப்பதை எடுத்து
விழுதுகளைப் பாய்ச்சி தன் சத்தை எடுத்து வளர்ந்துவிடும்.

அதைப் போல உங்கள் நினைவின் ஆற்றல் எல்லாம் விண்ணுக்குச் சென்று பழக வேண்டும் அப்படிப் போனால் பல அற்புதங்கள் தெரியும் பல அதிசயங்கள் தெரியும்

ஆரம்பத்தில் (30 வருடங்களுக்கு முன்) உங்களுக்கு என்ன காட்சி கிடைத்தது? உங்களுக்கு என்ன தெரிந்தது? என்று நான் கேட்பேன்

அப்பொழுது எல்லாருக்கும் காட்சிகள் தெரியும். எல்லோரும் அதைப் பார்த்தேன் இதைப் பார்த்தேன் என்று சொல்வார்கள்

அப்படிச் சொன்னவர்களுக்கெல்லாம் என்ன ஆகியது? அந்த ஆசையில்தான் மூழ்கிவிட்டார்கள். ஆக, அதிலிருந்து மீள்வதற்கு வழியில்லாமல் போய்விட்டது

அந்தக் காட்சிகளை அகண்ட பேரண்டக் காட்சியை நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளோடு பார்க்கவேண்டும் அந்த உணர்வைப் பெறவேண்டும் என்ற ஆசையை நாம் அங்கே வைக்கவேண்டும் அதை நாம் வளர்க்கப் பழகவேண்டும்

ஏனென்றால் அதை நாம் எதில் பார்க்கவேண்டும் என்றால், அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று இதை நம் உடலுக்குள் ஏற்ற வேண்டும்

இதன்வழி கொண்டு ஏற்றியபின் உங்கள் பார்வையால் யார் கஷ்டப்பட்டாலும் மகரிஷிகளின் அருள்சக்தி அவர்கள் பெறவேண்டும் அவர்கள் உடலில் உள்ள தீமைகள் எல்லாம் நீங்கவேண்டும் என்று இந்த சக்தியை வைத்து அந்த உண்மையான சக்தியை நீங்கள்  பார்க்கலாம்.

இதைப் பார்க்கப்படும்போது அந்த தீமைகள் விலகி மகிழ்ச்சியின் உணர்வுகள் உங்களுக்குள் வரும். அந்த உணர்வின் எண்ணம் வேகமாகக் கொண்டுபோகின்றது

இதன் ரூபத்தில்தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர எனக்கு சப்தரிஷி மண்டலம் தெரியவில்லையே அது எப்படி வருகிறது? என்று இந்த சந்தேகம் கூடாது
     
ஆக, படிப்படியாகத்தான் நாம் போக வேண்டும் இப்பொழுது ஒரு சினிமா காட்டுகின்றார்கள் அங்கே இருக்கும் போது ஒளியாகத்தான் படுகின்றது அதைத் தடுத்து நிறுத்தும் போதுதான் உருவம் தெரிகின்றது
நாம் குறுக்கே பார்க்கும் போது தெரிவதில்லை
அதிலே தடுத்து நிற்கும் போதுதான் அந்த உணர்வு தெரிகின்றது

அதே மாதிரிதான் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் நமக்கு முதலில் தெரியாது. ஒளியின் அணுக்களாகத்தான் தெரியும்

உணர்வின் தன்மை தனக்குள் அதை நிறுத்தி அதை வைக்கப்படும் போது உருவத்தின் தன்மை யார் யார் என்ற உணர்வுகள் நமக்குத் தெரிகின்றது

இவையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு நேரடியாக காட்டிய நிலைகள் நீங்களும் அந்த மகரிஷிகளைப் பார்க்கலாம், அவர்களுடன் தொடர்பும் கொள்ள முடியும்.

April 27, 2015

சப்தரிஷி மண்டலத்துடன் நாம் எப்படி இணைய வேண்டும்...?

அன்றைக்கு காந்திஜி அவர் இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டிற்குப் போகும்போது அவரை உள்ளே விடமாட்டேன் என்கின்றார்கள்

இந்தியாவைப்பற்றி பேசப்போகும்போது அரை வேஷ்டியைக் கட்டிக்கொண்டிருக்கின்றார் என்று உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள் அவர்களைப் போல கோட் சூட் அணிந்து வந்தால்தான் அரசனைப் பார்க்க முடியும்

ஆனால், காந்திஜி அவர் எப்படியோ சாதித்து உள்ளே போய்விட்டார் அப்பொழுது அங்கே அவர் பேசும்பொழுது அவர்களுக்கு மரியாதைக்குரிய சொற்களைக் கொடுக்கின்றார்.

ஆனால், அவர்கள் ராஜதந்திரத்தில் என்ன செய்கின்றார்கள்? ஒரு டெலஸ்கோப்பைக் கையில் கொடுத்தார்கள்

இது எனக்குத் தெரியாது. ஆனால், குருநாதர் இதை எனக்கு ஞாபகப்படுத்துகின்றார்.

மாநாட்டிற்குப் போய்விட்டுத் திரும்பி கப்பலில் வரும்போது நிறைய நாட்களுக்குப் பிறகு அந்த டெலஸ்கோப்பை எடுத்து கடலுக்குள் பார்க்கிறார் காந்திஜி.

அப்பொழுது ஆழ் கடலில் மீன்கள் உள்ளுக்குள் போவதெல்லாம் அதிசயமாகத் தெரிகிறது. “ஆ.., அந்த மீன் போகிறது பார். ஆகா இங்கே இந்த மீன் போகிறது பார்..,” என்று ஆச்சரியப்படுகிறார்.

இப்படிச் சொன்னவுடனே, காந்திஜி கூட வந்த தேசாய் காந்தி, அபுல்கலாம் ஆசாத் இந்த இரண்டு பேரும் இதைப் பார்த்தவுடனே எனக்குக் கொடு உனக்குக் கொடு என்று வாங்கிப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்

கடலுக்குள் இருக்கும் அந்த அதிசயங்களைப் பார்க்கும் ஆசையில் ஒருவருக்கொருவர் “வெடுக்..,” என்று அதை வாங்குவது - தான் பார்ப்பது என்று கப்பலில் வரும் பொழுது இத்தனை நிலைகளும் அந்த மூன்று பேருக்குள்ளும் நடக்கின்றது

காந்திஜி ஒரு மகான் எல்லோருக்கும் உபதேசித்து வந்தாலும், அப்பொழுது அந்த இடத்தில் அந்த அதிசயத்தைப் பார்க்கும்போது அந்த இவருக்கு ஆசைகள் உருவாகின்றது.

அப்பொழுது  அவர் என்ன செய்தார்?

இப்படிப்பட்ட ஆசைகள் உருவான பின்பு இனி நம் கையில் இந்த டெலெஸ்கோப் இருந்தால் நாம் மூன்று பேரும் நிச்சயமாக நண்பர்களாக இருக்க மாட்டோம்.

பகைமையாகி விலகி விடுவோம் என்று டெலெஸ்கோப்பை வாங்கி அதை வேகமாகத் தூக்கி கடலில் போட்டுவிட்டார் காந்திஜி.
இது நமக்கு வேண்டாம் என்று இப்படிச் செய்கிறார்.
இது நடந்த நிகழ்ச்சி.

காங்கிரஸில் நான் ஆர்வமாக ஈடுபட்டிருந்தாலும் எனக்கு இது தெரியாது. ஆனால், குருநாதர் இதைக் காண்பிக்கின்றார்.  அவர் காண்பித்த பிற்பாடுதான் எனக்கு இது தெரிகின்றது.

குருநாதர் இதைத் தெளிவுபடுத்துகின்றார். ஏனென்றால், இயற்கையின் பேருண்மை நிலைகளை நான் உனக்குக் காண்பிக்கின்றேன்.

நான் உனக்குக் காண்பித்த நிலைகளை மற்றவர்களுக்கும் நீ சொல்வாய். எல்லோரும் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள் என்று இதை எச்சரிக்கை செய்கிறார்

பார்க்கவேண்டும் என்ற அந்த ஆசையில் தெரிய ஆரம்பித்தவுடன் அவர்கள் ஆசைப்பட்டு இந்த பூமியின் நிலையில்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

ஆக வந்தவர்கள் அனைவரும் இந்தப் புவியின் பற்றில் அந்த உணர்வை அவர்கள் பெருக்கிவிட்டார்கள் என்றால் அப்புறம்
நீ போக வேண்டும் என்ற காட்டிய பாதைக்கு
அவர்கள் போகமாட்டார்கள்.

நான் அதைப் பார்த்தேன் இதைப் பார்த்தேன் என்ற இந்த உணர்வு ஒன்றியவுடனே ஆசையின் உணர்வுகள் வளர்ந்துவிடும் என்று குருநாதர் உணர்த்துகிறார்.

நமது இந்த உடல் வாழ்க்கையின் நிலைகளை விளக்கி  
மெய்ஞானிகள் பெற்ற விண்ணின் ஆற்றல்மிக்க சக்திகளையும்,
அந்த மகரிஷிகள் வளர்த்த தீமையை வென்று
உணர்வை ஒளியாக மாற்றும் சக்திகளையும்
பெறக்கூடிய நிலைக்குத்தான் எல்லோரும் வர வேண்டும்.

ஆசை என்ற நிலையில் இந்த உடலின் இச்சைக்கு வளர்த்து அவர்களுக்குள் அதிகமாகி அப்புறம் இதிலே சிக்கிவிட்டால் நாம் பெரிய மகான் என்று பேர் ஆகக்கூடிய நிலையில் இந்த உடல் பற்று வந்துவிடும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

அந்த மெய்ஞானிகள் உணர்வை நீங்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை நீங்கள் வளர்த்து, அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால், உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம். ஏனென்றால்,
இந்த உடல் பற்றை அகற்றி
உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.

ஆகவே, உடலுக்காக வாழாமல் நம் உயிருக்காக வாழவேண்டும். அப்பொழுது அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

குருநாதர் இப்படித்தான் அனுபவபூர்வமாக அனைத்தையும் எமக்கு உணர்த்தினார்.