ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 2, 2015

இறந்தவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டால், பார்த்தால் என்ன செய்யவேண்டும்?

உடலை விட்டுப் பிரிந்தவர்கள் நல்ல மனிதர்களாக இருந்திருப்பார்கள் நல்லது செய்திருப்பார்கள் அந்த மாதிரி மனிதர்களை வேதனையுடன் நாம் எண்ணினால்
அந்த உயிராத்மா நமக்குள் வந்துவிடும்.
அல்லது சங்கடமான எண்ணங்கள் நம் உடலில் வந்துவிடும்.

இதையெல்லாம் தவிர்ப்பதற்கு யாரொருவர் இறந்தார்கள் என்று கேள்விப்பட்டவுடன் நீங்கள் முதலில் ஆத்மசுத்தி செய்து கொள்ள வேண்டும்.

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணிவிட்டு சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உடல் முழுவதும் நினைத்து ஏங்கி தியானிக்க வேண்டும்.

யார் இறந்தார்களோ அந்த உயிராத்மாவை நினைத்து, அந்தக் குடும்பத்தாருடன் சேர்ந்து சொல்லும் போது அவர்கள் உணர்வும் சேர்கின்றது.

நம் உணர்வும் ஒன்று போலச் சேர்ந்து, உடலைவிட்டுப் பிரிந்த அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று, எல்லோரும் சேர்ந்து விண்ணிலே உந்தித் தள்ள வேண்டும்.

சிறு துளி பெருவெள்ளம். ஏனென்றால் தியானமிருப்பவர்களை பௌர்ணமி தியானத்தில் இதற்காகத்தான் பிரார்த்திக்கச் செய்கிறோம்.

உங்கள் கண்ணின் புலனறிவை விண்ணில் செலுத்தச் செய்து, இறந்தவர்களுடைய உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அந்தக் குடும்பத்தார்கள் சப்தரிஷி மண்டலங்களின் அருளைப் பெறவேண்டும் என்று ஏங்கினால் அந்த அலைகளை சுலபமாகப் பெற்று உடலில் இருக்கக்கூடிய இன்னல்களைத் தீர்க்க முடியும்.

நாம் ஒரு தவறும் செய்திருக்கமாட்டோம். எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணியிருப்போம். பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும்போது
திடீரென்று ரோட்டில் விபத்து நடந்ததைப் பார்த்தால்
இன்னொரு ஆத்மா நம் உடலில் வந்து விடுகின்றது.

ஏதாவது அதிர்ச்சியான செய்திகளைக் கேட்டோம் என்றால், அந்த அதிர்ச்சியில் பயந்துவிடுவோம். அப்பொழுது அதிர்ச்சியில் இறந்த பிறிதொரு உயிரான்மா நம் உடலில் ஆவியாக வந்து தொல்லை கொடுக்கும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு உடலிலும் ஏதோ ஒரு வகையில் வந்து புகுந்து விடுகின்றது. இன்னொரு ஆத்மா எந்தத் துன்பப்பட்டதோ அதையெல்லாம் நம் உடலில் செலுத்திவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து தப்ப முடியாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

ஆகவே இதை மாற்றுவதற்கு, இறந்தவர்களுடைய உயிராத்மாவை விண் செலுத்த வேண்டும்.
இந்த தியானம் செய்தவர்கள் அந்த உயிராத்மாக்களை
உணர்வாலே உந்தி விண் செலுத்த வேண்டும்.

இந்தச் சக்தி கொண்டு எல்லோரும் சேர்ந்து தள்ளும் போது அந்த சப்தரிஷி மண்டலத்தில் அனுப்பி வைத்து விடுகிறோம்.

ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள். இந்த வழிகளிலே நீங்கள் ஒவ்வொருவரும் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தி பெற்று,
இந்த மனித உடலுக்குள் கவலையை நீக்கி
சொர்க்க பூமியான நிலைகள் கொண்டு
ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் மகிழ்ந்து வாழ
உங்கள் சொல்லும் செயலும் பேச்சும் மூச்சும்
உங்கள் குடும்பத்திற்குள் மகிழ்வை ஊட்ட
அக்கம் பக்கங்களில் நீங்கள் உறவாடும் தொழில் நிலைகள் கொண்டு
அங்கே இருப்போருக்கும் மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்.

அந்த மகிழ்ச்சியான நிலைகளில் சொர்க்க பூமியினுடைய நிலைகள் உங்கள் சுழற்சியின் வட்டமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொள்கிறேன்.