ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 27, 2015

சப்தரிஷி மண்டலத்துடன் நாம் எப்படி இணைய வேண்டும்...?

அன்றைக்கு காந்திஜி அவர் இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டிற்குப் போகும்போது அவரை உள்ளே விடமாட்டேன் என்கின்றார்கள்

இந்தியாவைப்பற்றி பேசப்போகும்போது அரை வேஷ்டியைக் கட்டிக்கொண்டிருக்கின்றார் என்று உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள் அவர்களைப் போல கோட் சூட் அணிந்து வந்தால்தான் அரசனைப் பார்க்க முடியும்

ஆனால், காந்திஜி அவர் எப்படியோ சாதித்து உள்ளே போய்விட்டார் அப்பொழுது அங்கே அவர் பேசும்பொழுது அவர்களுக்கு மரியாதைக்குரிய சொற்களைக் கொடுக்கின்றார்.

ஆனால், அவர்கள் ராஜதந்திரத்தில் என்ன செய்கின்றார்கள்? ஒரு டெலஸ்கோப்பைக் கையில் கொடுத்தார்கள்

இது எனக்குத் தெரியாது. ஆனால், குருநாதர் இதை எனக்கு ஞாபகப்படுத்துகின்றார்.

மாநாட்டிற்குப் போய்விட்டுத் திரும்பி கப்பலில் வரும்போது நிறைய நாட்களுக்குப் பிறகு அந்த டெலஸ்கோப்பை எடுத்து கடலுக்குள் பார்க்கிறார் காந்திஜி.

அப்பொழுது ஆழ் கடலில் மீன்கள் உள்ளுக்குள் போவதெல்லாம் அதிசயமாகத் தெரிகிறது. “ஆ.., அந்த மீன் போகிறது பார். ஆகா இங்கே இந்த மீன் போகிறது பார்..,” என்று ஆச்சரியப்படுகிறார்.

இப்படிச் சொன்னவுடனே, காந்திஜி கூட வந்த தேசாய் காந்தி, அபுல்கலாம் ஆசாத் இந்த இரண்டு பேரும் இதைப் பார்த்தவுடனே எனக்குக் கொடு உனக்குக் கொடு என்று வாங்கிப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்

கடலுக்குள் இருக்கும் அந்த அதிசயங்களைப் பார்க்கும் ஆசையில் ஒருவருக்கொருவர் “வெடுக்..,” என்று அதை வாங்குவது - தான் பார்ப்பது என்று கப்பலில் வரும் பொழுது இத்தனை நிலைகளும் அந்த மூன்று பேருக்குள்ளும் நடக்கின்றது

காந்திஜி ஒரு மகான் எல்லோருக்கும் உபதேசித்து வந்தாலும், அப்பொழுது அந்த இடத்தில் அந்த அதிசயத்தைப் பார்க்கும்போது அந்த இவருக்கு ஆசைகள் உருவாகின்றது.

அப்பொழுது  அவர் என்ன செய்தார்?

இப்படிப்பட்ட ஆசைகள் உருவான பின்பு இனி நம் கையில் இந்த டெலெஸ்கோப் இருந்தால் நாம் மூன்று பேரும் நிச்சயமாக நண்பர்களாக இருக்க மாட்டோம்.

பகைமையாகி விலகி விடுவோம் என்று டெலெஸ்கோப்பை வாங்கி அதை வேகமாகத் தூக்கி கடலில் போட்டுவிட்டார் காந்திஜி.
இது நமக்கு வேண்டாம் என்று இப்படிச் செய்கிறார்.
இது நடந்த நிகழ்ச்சி.

காங்கிரஸில் நான் ஆர்வமாக ஈடுபட்டிருந்தாலும் எனக்கு இது தெரியாது. ஆனால், குருநாதர் இதைக் காண்பிக்கின்றார்.  அவர் காண்பித்த பிற்பாடுதான் எனக்கு இது தெரிகின்றது.

குருநாதர் இதைத் தெளிவுபடுத்துகின்றார். ஏனென்றால், இயற்கையின் பேருண்மை நிலைகளை நான் உனக்குக் காண்பிக்கின்றேன்.

நான் உனக்குக் காண்பித்த நிலைகளை மற்றவர்களுக்கும் நீ சொல்வாய். எல்லோரும் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள் என்று இதை எச்சரிக்கை செய்கிறார்

பார்க்கவேண்டும் என்ற அந்த ஆசையில் தெரிய ஆரம்பித்தவுடன் அவர்கள் ஆசைப்பட்டு இந்த பூமியின் நிலையில்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

ஆக வந்தவர்கள் அனைவரும் இந்தப் புவியின் பற்றில் அந்த உணர்வை அவர்கள் பெருக்கிவிட்டார்கள் என்றால் அப்புறம்
நீ போக வேண்டும் என்ற காட்டிய பாதைக்கு
அவர்கள் போகமாட்டார்கள்.

நான் அதைப் பார்த்தேன் இதைப் பார்த்தேன் என்ற இந்த உணர்வு ஒன்றியவுடனே ஆசையின் உணர்வுகள் வளர்ந்துவிடும் என்று குருநாதர் உணர்த்துகிறார்.

நமது இந்த உடல் வாழ்க்கையின் நிலைகளை விளக்கி  
மெய்ஞானிகள் பெற்ற விண்ணின் ஆற்றல்மிக்க சக்திகளையும்,
அந்த மகரிஷிகள் வளர்த்த தீமையை வென்று
உணர்வை ஒளியாக மாற்றும் சக்திகளையும்
பெறக்கூடிய நிலைக்குத்தான் எல்லோரும் வர வேண்டும்.

ஆசை என்ற நிலையில் இந்த உடலின் இச்சைக்கு வளர்த்து அவர்களுக்குள் அதிகமாகி அப்புறம் இதிலே சிக்கிவிட்டால் நாம் பெரிய மகான் என்று பேர் ஆகக்கூடிய நிலையில் இந்த உடல் பற்று வந்துவிடும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

அந்த மெய்ஞானிகள் உணர்வை நீங்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை நீங்கள் வளர்த்து, அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால், உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம். ஏனென்றால்,
இந்த உடல் பற்றை அகற்றி
உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.

ஆகவே, உடலுக்காக வாழாமல் நம் உயிருக்காக வாழவேண்டும். அப்பொழுது அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

குருநாதர் இப்படித்தான் அனுபவபூர்வமாக அனைத்தையும் எமக்கு உணர்த்தினார்.