ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2015

ஈஸ்வராய குருதேவர் எம்மை ஆட்கொண்ட சந்தர்ப்பம்

ஒரு சமயம எமது (ஞானகுரு) மனைவியை பழனிக்கு அருகில் உள்ள கன்னடி பெருமாள் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றோம். அது சமயம் எமக்கு சாமியம்மாவின் உடலில் நோய் இருந்தது தெரியாது.

அந்தக் கோவிலுக்குச் சென்று வரும்போது சாமியம்மாவினால் வண்டியிலும் ஏற முடியவில்லை. நடந்து போகவேண்டும் என்றாலும் முடியவில்லை.

உடலில் நடுக்கம் ஏற்பட்டபின்தான் ஆஸ்பத்திரிக்கு சாமியம்மாவை அழைத்துச் சென்று காண்பித்தோம். ஆஸ்பத்திரியில் என் மனைவிக்கு போன் டி.பி. உள்ளது எலும்புகள் அரிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்கள்.

இங்கே ஒன்றும் செய்யமுடியாது என்று பழனி அரசாங்க ஆஸ்பத்திரியில் சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சாமியம்மாவை அழைத்துக் கொண்டுபோய்க் காண்பித்தோம்.

அங்கே போனால், அங்கே பணிபுரிபவர்கள் ஒருவருக்கொருவர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சாமியம்மாவை ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. ஒருவருக்கொருவர் தமாஷ் செய்து கொண்டிருந்தார்கள்.

அதன்பிறகு யாம் எமது மனைவியை தோளில் தூக்கிக் கொண்டுபோய் அங்குள்ள டாக்டர்களிடம் காண்பித்தோம். டாக்டர்கள் ட்ரீட்மெண்ட் கொடுத்தார்கள். எலும்பு துண்டாகிவிட்டது என்று கூறினார்கள்.

ஆபரேசன் செய்யவேண்டும் என்று கொண்டு சென்றால் அதுவும் நடக்கவில்லை. பிறகு எமது மாமனார்தான் தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் சொல்லி சாமியம்மாவிற்கு பேண்டேஜ் போடச் செய்தார்கள்.

பேண்டேஜ் போட்டாலும் குணம் அடையாது. ஏதோ கொஞ்ச நாளைக்குப் பாருங்கள். அதனுடைய விதி அதுதான் என்று கூறினார்கள். பிறகு சாமியம்மாவைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டோம்.

பிறகு இரண்டு நாளைக்கு யாம் வேலைக்குச் சென்றுவிட்டோம். யாம் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபொழுது எமது மாமனார் மயக்கமாகி அவருடைய உடலைவிட்டு ஆன்மா பிரிந்துவிட்டது.

எமக்குச் செய்தி அனுப்பினார்கள். வீட்டிற்கு வந்தோம். வீட்டில் நிலவரம் மோசமாக இருந்தது. எமது மாமியாருக்கு எம் மீது கோபம். “சண்டாளன், நீ என் குடும்பத்திற்குத் தொல்லை செய்துவிட்டாய்” என்று பேசி கண்டபடி எம்மைத் திட்டினார்கள்.

எமது மாமனார் உடலுக்கான முதல் நாள் காரியம் முடிந்து மறு நாள் அவருடைய உடலுக்கு சுடுகாட்டில் செய்யவேண்டிய சாங்கியங்களைச் செய்வதற்குப் போனோம்.

அப்பொழுது குருநாதர் வந்து, “டீ வாங்கிக் குடிடா..,” என்று எம்மைப் பார்த்துக் கூறினார்.

நான் உடனே “எனக்கு டீயும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்.., நீங்கள் இங்கிருந்து போங்கள்” என்று கூறினோம்.

அங்கே அப்பொழுது எமது சொந்த பந்தம் என்று உறவினர் கூட்டம் ஏராளமாக வந்திருந்தது. அந்த நேரத்தில் குருநாதர் இப்படி “டீ குடிடா” என்று கூறினார்.

எமது மாமனார் இறந்துவிட்டார். சாமியம்மாவோ (என் மனைவி) இன்றோ நாளையோ என்ற நிலையில் இருந்தார். இவ்வளவு மோசமான நிலையில் அந்தக் கூட்டத்தில் குருநாதர் எம்மைப் பார்த்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

அங்கிருந்த எமது உறவினர்களும் எம்மைப் பார்த்து அசிங்கமாகப் பேசும் நிலை ஆகிவிட்டது. தெருவில் குடியிருந்தவர்களும் எம்மை ஒரு பைத்தியக்காரன் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்படிப் பல வகையிலும் குருநாதர் எம்மை ஒரு குற்றவாளி ஆக்கிக் கொண்டு வந்தார். எமது மாமனாருக்கான இரண்டாம் நாள் சடங்கு முடிந்து உறவினர்கள் எல்லோரும் அவரவர் ஊருக்குச் சென்றுவிட்டார்கள்.

குருநாதர் எம்மிடம் “நீ என்னுடன் வரவேண்டும்” என்று கட்டாயப்படுத்தினார். அவருடன் சென்றேன்.

சாமியம்மாவிற்கு ஏற்பட்டுள்ள நோயையும் அதற்கு டாக்டர்கள் கூறிய மருந்துகளையும் நோயின் தன்மைகளையும் குருநாதர் எப்படியே எம்மிடம் கூறினார்.

“உனது மனைவி பிழைக்க மாட்டார், அவரை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று டாக்டர்கள் கூறியதைக் கூறி “உனது மனைவியைக் காப்பாற்ற ஆண்டவனே வந்துவிட்டான்” என்று சொல்லி சில விஷயங்களைக் கூறினார் குருநாதர்.

பிறகு சிறிது விபூதியையும் எலுமிச்சம்பழமும் கொடுத்து இதைக் கொண்டு போய் உன் மனைவிக்குக் கொடு என்று கூறினார்.

குருநாதர் கூறியபடி சாமியம்மாவிற்கு அதைக் கொடுத்தோம். அவர்களால் அதைக் குடிக்கக் கூட முடியவில்லை. அப்பொழுது எமது மாமியார் மனைவி சாகக் கிடக்கிறாள், எலுமிச்சைச் சாறைக் கொடுக்கிறான் என்று என்னைத் திட்டினார்கள். மிகவும் சிரமப்பட்டு சாமியம்மா அதைக் குடித்தார்கள்.

அடுத்த நாள் பார்த்தோம் என்றால் அசைவில்லாமல் இருந்த கைவிரல் அசைய ஆரம்பித்தது. பிறகு படிப்படியாக உடல் ஆரோக்கியம் அடைந்தது. ஒரு மாதத்திற்குள் தானே எழுந்து அமரும் நிலை உண்டானது.

அப்போது வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் ஒரு நம்பிக்கை தெரிந்தது. சாமியம்மா குணமடைந்த விபரத்தைக் குருநாதரிடம் கூறவேண்டும் என்று விரும்பினோம்.
குருநாதரைத் தேடினோம்.
அவரை எங்கேயும் பார்க்க முடியவில்லை.

ஆனால், அதற்கு முன் தினமும் ரோட்டில் சத்தம் போட்டுக் கொண்டு வருவார், மின் கம்பத்தைத் தட்டுவார். ஆனால், அந்த ஒரு மாதமாக அவரைக் காணவே முடியவில்லை.

அப்பொழுது யாம் வசிக்கும் தெருவில் எப்படியும் இந்தப் பக்கம்தான் குருநாதர் இருப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.

அது சமயம் குருநாதர் எமக்குப் பின்னால் நின்று என் முதுகைத் தட்டி “என்னைத் தேடினாயா..?” என்று கேட்டார்.

“ஆமாம் சாமி” என்றோம்.

“என்னை நீ நம்புகிறாய் அல்லவா” என்று கேட்டார்.

யாமும் “உங்களை நம்புகிறோம்” என்று கூறினோம்.

“நான் சொல்வதை நீ கேட்பாய் அல்லவா..? என்று கேட்டார்.

“கேட்பேன்” என்று கூறினோம்.

“மாற மாட்டாயே..,” என்பதுதான் அவருடைய வாக்கு.

அதன் பிறகு காடு மேடெல்லாம் குருநாதர் எம்மை அலையச் செய்து மூன்றரை இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து பல அனுபவங்களைப் பெறும்படி செய்தார்.

இயற்கையின் செயலாக்கங்களையும், பல பேருண்மைகளையும், ஞானிகள் கண்ட நிலைகளையும் நேரடியாக உணர்த்தி அந்த ஆற்றல்களை எம்மைப் பெறும்படி செய்தார்.

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும் என்று உணர்த்தினார். அப்படி அவர் காட்டிய அருள் வழியில் கண்டுணர்ந்த பேருண்மைகளைத்தான் யாம் சொல்லி வருகிறோம்.

August 30, 2015

சிறு வயதிலிருந்தே எம்மைப் பின் தொடர்ந்து வந்த குரு - நடந்த நிகழ்ச்சி

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் ஒரு சித்தர் அல்லது மகரிஷி என்று யாரும் சிந்தித்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு பித்தரைப் போன்றுதான் இருந்தார்.

பித்தரைப் போன்றுதான் பழனியம்பதியில் வாழ்ந்தார். யாம் (ஞானகுரு) வேலைக்குச் செல்லும்போது இடைவெளியில் வந்து எமது பாதையை மறித்தவாறு நிற்பார். எம்மைப் பார்த்து “வித்தைகளைக் கற்றுக் கொள்...! என்று கூறுவார்.

ஆனால் யாம் அவரிடம் எப்படி வித்தைகளைக் கற்றுக் கொள்வது...? பார்த்தால் ஒரு பித்தரைப் போன்று இருக்கின்றார். ஏனென்றால் பழனிக்கு ஏராளமான பித்தர்கள் வருவதுண்டு.

அந்தப் பித்தர்களைக் கண்டு யாம் ஒதுங்கிச் செல்வது போன்று குருநாதரையும் பித்தராக எண்ணி அவரை கண்டு ஒதுங்கிச் செல்வதுதான் எமது நிலை. குருநாதருடன் சேர்ந்து பழகினால் எமக்கும் பைத்தியம் பிடித்துக் கொள்ளுமோ...! என்ற பயமும் எமக்கு இருந்தது.

இதனால் குருநாதரை விட்டு யாம் விலகிச் சென்றோம். இருந்தாலும் குருநாதர் எம்மை விட்டபாடில்லை.

யாம் மில்லில் வேலையை முடித்துவிட்டுத் திரும்பி வரும்போது சண்முக நதிக்கு அருகே எமது பாதையில் வந்து குறுக்கிடுவார் குருநாதர். வேலைக்குப் போகும்பொழுதும் திரும்பி வரும்பொழுதும் குருநாதர் எம்மை வழி மறிப்பார்.

எம்மைப் பார்த்து... “டீ குடி... என்பார். டீ குடிக்க மறுத்தாலோ எம்மைத் துரத்திக் கொண்டு வருவார். அவர் வாங்கிக் கொடுக்கும் டீயைக் குடித்தால் எம்மை அங்கிருந்து போக விடுவார்.

இல்லை என்றால் எமக்கு இரண்டு திட்டு. அவர் திட்டுகிற பாஷையே வேறு விதமாக இருக்கும். ரொம்பக் கொச்சையாகப் பேசுவார். அடுத்தவர்கள் காதில் கேட்க முடியாது. அந்த அளவிற்குப் பேசுவார்.

இதற்குப் பயந்து கொண்டே குருநாதர் வாங்கிக் கொடுக்கும் டீயை யாம் சாப்பிடுவோம். சாமி, நான் டீ சாப்பிடுவதில்லை...! என்று கூறினால், சரி.. காபி குடி...! என்று கூறி காபி வாங்கித் தருவார்.

ஒரு சமயம் குருநாதர் எம்மை ஒரு வைத்தியரிடம் அழைத்துச் சென்று அவரைக் காண்பித்து இவருக்கு நான் தான் வைத்திய முறைகளைக் கற்றுக் கொடுத்தேன் என்று கூறி வைத்திய முறைகளை நீயும் கற்றுக் கொள் என்று எம்மிடம் கூறினார்.

அந்த வைத்தியரும் பல வைத்திய முறைகளை எமக்குக் கூறினார், குருநாதரிடம் நிறைய வித்தைகள் இருக்கின்றன...! என்றும் கூறினார்.

அவரிடம் நிறைய வித்தைகள் இருக்கின்றன சரி. ஆனால், அவருடைய நிலைமையைப் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கின்றது. நான் குடும்பஸ்தன். நான் பைத்தியம் போன்று சுற்ற முடியாது. அதனால் குருநாதரிடமிருந்து என்னை விடுவித்துவிடுங்கள். நான் போய்விடுகின்றேன் என்று யாம் வைத்தியரிடம் கூறினோம்.

நீ விட்டாலும்... நான் உன்னை விடமாட்டேன்...! என்று குருநாதர் எம்மைத் துரத்திக் கொண்டிருந்தார்.

ஒரு முறை குருநாதர் ஒரு பெஞ்சின் மீது உட்கார்ந்து கொண்டு... என்னைத் தூக்கு பார்க்கலாம்...! என்று எம்மைப் பார்த்துக் கூறினார்.

யாம் குருநாதரைத் தூக்கியபோது அவர் அமர்ந்திருந்த பெஞ்சும் அவருடன் ஒட்டிக் கொண்டு வந்தது. எம்மால் குருநாதரைத் தூக்க முடியவில்லை.

குருநாதர் எம்மைப் பார்த்து இவனுக்குச் சக்தியில்லை... என்னைத் தூக்க முடியவில்லை... என்று கூறினார். பிறகு “குருநாதர் மேலே கொஞ்சம் பார்த்துவிட்டு... இப்பொழுது உனக்குச் சக்தி வந்துவிட்டது... என்னைத் தூக்கு... என்று கூறினார்.

குருநாதர் சொன்னபடி யாம் அவரைத் தூக்கியபோது பெஞ்சு கீழே விழுந்தது. “பாருங்கள்... இவன் என்னமோ செய்கிறான்...! ஆனால் ஒன்றும் தெரியாது என்று கூறுகின்றான் என்று கூறினார்.

இது போன்று பல நிலைகளைச் செய்து காண்பித்தார் குருநாதர். ஒரு சந்தர்ப்பம் குருநாதர் எம்மைப் பழனிக்கு அருகிலுள்ள பெரிய ஆவுடையார் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

எம்து சிறு வயதில் நடந்த சம்பவங்களைக் கதை போன்று எம்மிடம் சொன்னார். குருநாதர் எம்மைப் பார்த்து “நீ சிறு பிள்ளையாக இருந்த காலம் முதல் கொண்டு நான் உன்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றேன்...! என்று கூறினார்.

எமது மூன்றாவது வயதில் எமக்கு அம்மை வார்த்திருந்தது அது சமயம் சாமியம்மாவினுடைய சின்னம்மா அவர்களிடம் எனக்கு இட்லி வேண்டும் என்று கேட்டோம்.

எமது சிறு வயது பிராயத்தில் எமது ஊரில் பெரும்பகுதி வசதியானவர்களிடம் கூட இராகி கஞ்சி, சோள கஞ்சி போன்றவைகளைத்தான் தங்களுடைய உணவாக ஆக்கிக் கொண்டனர்.

விசேஷக் காலங்களில் தான் அர்சி போன்றவைகளைப் பயன்படுத்தி சில சிறப்பு உணவுகளைத் தயார் செய்வார்கள்.

சாமியம்மாவினுடைய சின்னம்மாவிடம் எனக்கு இட்லி தான் வேண்டும் என்று அடம் பிடித்ததால் அவர் பக்கத்து வீட்டிற்குச் சென்று அங்கிருந்து சாப்பாடும் சாம்பாரும் வாங்கி வந்து சாப்பாட்டை இட்லி மாதிரிச் செய்து எம்மைச் சாப்பிட வைக்க முனைந்தார்.

யாம் சாப்பிடட மறுத்து இட்லியை எடுத்து அவர்களை அடித்துவிட்டோம். எமது சிறு வயதில் நடந்த நிகழ்ச்சி.

இந்தச் சம்பவத்தை குருநாதர் அப்பொழுது சொன்னார். இது போன்று எமது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை குருநாதர் எம்மிடம் கூறினார்.

எமக்கு ஏழு வயது இருக்கும்பொழுது எமது தாயார் எமது தந்தையிடம் கோபித்துக் கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணி கிணற்றில் குதித்துவிட்டார்கள்.

எமது ஊரில் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே நீச்சல் கற்றுக் கொடுப்பார்கள். எமது அம்மா கிணற்றில் குதித்தபோது யாமும் கிணற்றில் குதித்து அம்மாவின் தலை முடியைப் பிடித்து மேலே தூக்கிக் கொண்டு வந்தோம்.

என் அம்மா... “விடுடா...! விடுடா...! என்று கத்தினார்கள்.

நீங்கள் மேலே வந்தால்தான் விடுவேன் என்று கூறி எமது தாயாரைக் கிணற்றிலிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்தோம்.

இது போன்று எமது சிறு வயதில் நடந்த சம்பவங்களையும் யாம் செய்த குறும்புத்தனங்களையும் பழனி பெரிய ஆவுடையார் கோவிலில் வைத்து குருநாதர் எம்மிடம் கூறினார்.

August 29, 2015

நம் உயிரான ஈசனை நினைவிற்குக் கொண்டு வருவதுதான் “ஈஸ்வர தரிசனம்”

கோவிலை அமைத்து அதில் ஈசனுக்குச் சிலைகள் வைத்து அபிஷேகம் ஆராதனைகள் செய்து தேங்காய் பழம் வைத்து நாம் கும்பிட்டுவிட்டால் அதுதான் ஈஸ்வர தரிசனம் என்று நாம் நினைக்கின்றோம்.

ஈஸ்வர தரிசனத்திற்கு இன்று நாம் எப்படிச் செல்கிறோம்? தேங்காய் பழம் கொண்டு செல்கிறோம். சுவையான நைவேத்தியங்களைச் செய்கிறோம். பின், ஆலயத்திற்குள் வணங்கும்போது எப்படி வணங்குகின்றோம்?

அங்கே தெய்வச் சிலைக்குப் படைக்கப்பட்டிருக்கும் கனிகளை மலர்களை சுவைமிக்க பதார்த்தங்களை நாம் எண்ணுவதில்லை. மாறாக நாம் எதை எண்ணுகின்றோம்?

நம் வாழ்க்கையில் நமக்கு ஒருவர் இடைஞ்சல் செய்திருந்தால் அல்லது ஒருவர் நம்மைக் கோபித்திருந்தால் அவர்களைப் பற்றிய நினைவுகளையே அங்கே ஆலயத்தில் எண்ணிக் கொண்டிருப்போம்.

கோபித்தவர்களையும், இடைஞ்சல் செய்தவர்களையும் ஆலயத்திற்குள் நாம் எண்ணினால் நமக்குக் கோப உணர்வுகள்தான் வரும்.

ஒரு குழம்பு வைக்கும்போது பலசுவையுள்ள பொருகளைப் போட்டு அதில் சிறிது காரத்தை அதிகமாகப் போட்டால் குழம்பில் காரத்தின் சுவையே அதிகமாக இருக்கும்.

இதைப் போன்றுதான் நாம் தெய்வச் சிலைக்கு முன் சுவையான பலகாரங்களையும், நறுமணமான மலர்களையும் வைத்திருந்தாலும் நமக்கு இடையூறு செய்தவர்களை நாம் எண்ணும்போது நமக்குக் கோப உணர்வுகள்தான் வரும்.

தெய்வ வடிவங்களை உருவாக்கி ஈஸ்வர சக்தி எது? என்ற நிலைகளில் கதைகளை எழுதி ஈஸ்வரன் இந்த நிலைகளில் அனைவரையும் காப்பாற்றுவான் என்று ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆனால், ஆண்டவனுக்குத் தேங்காய் பழம், நைவேத்தியம் படைத்து ஆண்டவனிடம் உன்னுடைய குறைகளைச் சொல்லிவிட்டால் ஆண்டவன் உன்னைக் காப்பாற்றுவான் என்று மற்றவர்கள் சாங்கிய சாஸ்திரங்களை எழுதிவிட்டார்கள்.

நமது உயிரை ஈஸ்வரன் என்றும்
நாம் எண்ணிய எண்ணங்கள் எவையோ அவை அனைத்தையும்
உயிர் ஈசனாக இருந்து ஜீவ அணுக்களை உருவாக்கி
நமது உடலாக மாற்றுகின்றது என்பதை ஞானிகள் காண்பித்தனர்.

உயிரை ஈஸ்வரன் என்றும்
உயிரால் உருவாக்கப்பட்ட உணர்வின் சத்தை உடலை சிவம் என்றும் காண்பித்தனர் ஞானிகள். சிவனுக்கு வாகனமாக மாட்டை வைத்து அதற்கு நந்தீஸ்வரன் என்று பெயரிட்டனர் ஞானிகள்.

சிவனின் கணக்குப் பிள்ளை நந்தீஸ்வரன். நாம் எந்த உணர்வைச் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் போனவுடன் நந்தீஸ்வரா.., அதாவது சுவாசித்த உணர்வின் குணம் நம் உடலுக்குள் உணர்வின் சத்தாக விளைகின்றது.

இப்பொழுது இந்த மனித உடலில் நாம் எந்த குணத்தை அதிகமாக எண்ணி நமக்குள் சேர்த்துக் கொண்டோமோ அந்த உணர்வின் தன்மைக்கொப்ப நந்தீஸ்வரனின் கணக்கின் பிரகாரம் நமது உயிர் நமது அடுத்த உடலை உருவாக்குகிறது என்று ஈஸ்வர தரிசனத்தில் ஞானிகள் தெளிவாகக் காண்பித்துள்ளார்கள்.

இந்த மனித வாழ்க்கையிலுள்ள சூட்சம இயக்கங்களை மனிதருக்கு உணர்த்தும் விதமாக உடலைச் சிவமாக, உயிரை ஈசனாகக் காண்பித்தார்கள் ஞானிகள்.

ஆகவே,நம் உயிரான ஈசனை நினைவிற்குக் கொண்டு வருவதுதான் ஈஸ்வர தரிசனம் என்றனர் ஞானிகள்.

இதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால், ஈஸ்வர தரிசனம் என்பதன் மூலம் நமது உயிரை எண்ணும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

நாம் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தபின் மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி நாம் வணங்க வேண்டும்.

இந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டபின்
எங்கள் பார்வை பிறர் தீமைகளை நீக்குவதாக இருக்க வேண்டும்,
எங்கள் சொல் பிறர் கஷ்டங்களைப் போக்குவதாக இருக்க வேண்டும்,
எங்கள் பார்வை பிறரை நல்லவர்களாக்கும் நிலை பெறவேண்டும்,
எங்களைப் பார்ப்போரெல்லாம் உயர்ந்த எண்ணங்கள் பெறவேண்டும்
என்று இவ்வாறுதான் நாம் அனைவரும் எண்ணவேண்டும்.

நாம் காலையில் தூக்கதிலிருந்து எழுந்து ஈஸ்வர தரிசனம் எனும் நிலையில் நமது உயிரை எண்ண வேண்டும். நம் கண்கள் உயிரின் இயக்கத்தின் தொடர் கொண்டு இது நல்லது இது கெட்டது என்று காண்பிக்கின்றது.

நமக்கு ஒருவர் நன்மைகள் செய்திருந்தால் அவரை நாம் அதிகமாக எண்ணுவதில்லை. ஒருவர் நமக்குத் தீங்கு செய்திருந்தால், அவன் நமக்குத் தீமை செய்தானே பாவி…, என்று அடிக்கடி அவரைப் பற்றி எண்ணுவோம்.

இப்படிப்பட்ட உணர்வுகளை காலையில் படுக்கையை விட்டு எழும்போது எண்ணினால் வேதனை. காலையில் படுக்கையில் உடல் சோர்வடைந்திருக்கும் வேளையில் வேதனை என்ற உணர்வுகள் சுவாசிக்கப்பட்டு நம் உயிரில் மோதும்போது நம் உடலில் வேதனை உருவாகிறது.

அப்பொழுது நம்முடை ஈஸ்வர தரிசனம் எதுவாகின்றது?

நாம் வேதனை உணர்வு ஒன்றைக் கண் கொண்டு பார்த்து நமக்குள் பதிவு செய்து கொண்டபின் நம்மிடத்தில் வேதனையை உருவாக்கும் நினைவாற்றல் வருகின்றது.

நமக்கு ஒருவர் தீங்கு செய்திருந்து அதன் உணர்வுகள் நமக்குள் பதிவாகியிருந்தால் நமக்குத் தீங்கு செய்தவர் பற்றிய நினைவே நம்மிடத்தில் வருகின்றது.

இதனின் தொடர் கொண்டு காலையில் நாம் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் இனம் புரியாது “பாவிகள்.., எனக்கு ஏன் இப்படித் தீங்கு செய்கிறார்கள்?” என்ற வேதனை உணர்ச்சிகளைத் தூண்டும்.

வேதனைகளை நாம் எண்ணும்போது நம்முள் உள்ல வேதனையை உருவாக்கும் அணுக்களுக்கு உண்வினை அதிகமாக ஊட்டி நமக்குள் வேதனைகளை உருவாக்கும் நோய்களை நஞ்சின் தன்மைகளை வளரச் செய்கின்றது.

இதனை மாற்றுவதற்குத்தான் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம்
ஈஸ்வர தரிசனம் என்று காட்டி
காலையில் எழுந்திருக்கும்போதெ நினைவின் ஆற்றலை
நமது உயிரின்பால் கொண்டு செல்ல வேண்டும்
என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அடுத்து இந்தப் பூமியில் மனிதராகப் பிறந்து மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று உயிரில் ஒன்றிய உணர்வினை ஒளியின் உணர்வாக மாற்றி இன்று விண்ணில் ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ள துருவ நட்சத்திரத்தை எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள்  அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று பல முறை திரும்பத் திரும்ப எண்ணி தியானிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து எங்கள் சொல்லைக் கேட்போர் எல்லாம் வாழ்வில் இனிமை பெறவேண்டும், எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும், அவர்கள் மன நலம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். இது நம் ஈஸ்வர தரிசனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு நாம் எண்ணும்பொழுது
பிறர் நமக்குச் செய்த தீமைகளை மறக்கின்றோம்,
பிறருடைய துன்பங்களை மறக்கின்றோம்,
மற்ற குடும்பத்தினர் நமக்குச் செய்த இடைஞ்சல்களை மறக்கின்றோம்.

ஆகவே, இது போன்ற உயர்ந்த உணர்வின் தன்மைகளை  நமது உயிரில் இணைக்கும்போது நமது உடலில் மகிழ்ந்திடும் உணர்வுகளுக்கு அமுது கிடைக்கின்றது.
மகிழ்ந்து வாழும் சக்தியை நாம் பெறுகின்றோம்.
ஏகாந்த வாழ்க்கை வாழ முடியும். உடலுக்குப்பின்
அழியா ஒளிச்சரீரம் பெறமுடியும். 

August 28, 2015

முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்

குருவின் துணையால் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெறுவோம்.

உயிருடன் ஒன்றி நினைவினை சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது சப்தரிஷி மண்டலங்களின் அருங்காட்சி (மனக் கண்ணால்) நீங்கள் காணலாம். சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உயிரின் துணைகொண்டு சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற உணர்வினை விண்ணை நோக்கிச் செலுத்தி சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் ஏங்கிப் பெறுங்கள்.

எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்தி, உங்கள் உடலிலுள்ள ஜீவணுக்களுக்கு உணர்வினை ஊட்டுங்கள்.

சப்தரிஷி மண்டலங்களின் ஒளிகாந்த சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து ஏங்கித் தியானியுங்கள்.

கணவனின் உடலிலிருந்து ஆன்மா பிரிந்தாலும்
அவரின் உணர்வு உங்கள் உடலிலே உண்டு.

மனைவி உடலை விட்டுப் பிரிந்தாலும்
அவரின் உணர்வு உங்கள் உடலிலே உண்டு.

அந்த உணர்வின் துணை கொண்டு கணவரின்/மனைவியின் உணர்வுகள் அருளொளி பெற வேண்டுமென்று ஏங்கினால், உங்கள் இரு மனமும் ஒன்றென இணைந்து உணர்வினை ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

ஆக இவ்வாறே உங்களுடன் அவரின் உணர்வு ஒன்றியே வாழ்கின்றது.

அவர் உடலை விட்டுப் பிரிந்தாலும்
அந்த உணர்வின் தன்மையை இணைத்தால்
அவர் ஆன்மா என்றும் உங்களுடன் இணைந்து
ஒளியின் உணர்வாகப் பெறும் தகுதியைப் பெறும்.

எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலைவிட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த ஆன்மாக்களை உந்தி விண் செலுத்துங்கள்.

எங்கள் முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து சப்தரிஷி என்ற நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

நாம் இதற்கு முன்பு உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்றி வாழ்ந்து கொண்டிருப்பதை இப்பொழுது அகக் கண்ணால் உணரலாம்.

அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பதை அகக் கண்ணால் பார்க்கலாம்.

August 27, 2015

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஒளிவட்டத்தைப் பாதுகாப்புக் கவசமாக்கிக்கொள்ளுங்கள்

குருவின் துணையால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவோம்.

"துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா" என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.

உயிரின் துணைகொண்டு துருவ நட்சத்திரத்தின்பால் இணைந்து துருவ நட்சத்திரம் வேறல்ல, நாம் வேறல்ல என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தோடு ஒன்றுங்கள்.

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி முக்கண் என்ற உணர்வினை துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி அதனின்று வெளிப்படும் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. பேரருள் பேரொளியை நாம் நுகர்வோம்.

இப்பொழுது புருவ மத்தியில் பேரருள் பேரொளியாக மாறும்.
உயிருடன் ஒன்றிய உணர்வினையும் பேரருளையும் பேரொளியையும்
(அகக் கண் கொண்டு) நீங்கள் காணலாம்.

துருவ நட்சத்திரத்தின் ஏங்கிக் கொண்டிருக்கும் உணர்வினை நீங்கள் இப்பொழுது அகக்கண்ணால் பார்க்கலாம். துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை இப்பொழுது அகக்கண்ணால் நீங்கள் பார்க்கலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்,
எங்கள் இரத்த நாளங்களில் கலந்து,
எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும்,
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டுமென்று,
உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி,
கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
உடலிலுள்ள ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று ஏங்கி தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெறும். அந்த உணர்வின் மணம் வெளிவரும் பொழுது உங்கள் உடல் முழுவதும் ஒரு பாதுகாப்புக் கவசம் போன்று பேரருளின் ஒளிவட்டத்தை நீங்கள் காணலாம்.
தீமைகள் உங்கள் ஆன்மாக்குள் புகாது
பாதுகாக்கும் உணர்வின் சக்தியாக அமையும்.

உங்கள் உடல் முழுவதும் ஒளிவட்டம் இருப்பதை அகக்கண்ணால் இப்பொழுது நீங்கள் உணரலாம்; பார்க்கலாம். இப்பொழுது உங்கள் உடலே ஒளிமயமாகக் காட்சி தரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி  கணவன் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் படர்ந்து கணவர் உடலிலுள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உணர்வினைச் செலுத்தி, பேரருள் பெற வேண்டுமென்று கணவன் உயர்ந்த சக்தி பெற வேண்டுமென்று ஏங்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மனைவி உடல் முழுவதும் படர்ந்து மனைவியின் உடலிலுள்ள ஜீவான்மா, ஜீவணுக்கள் அனைத்தும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
இரு உணர்வும் ஒன்றி , இரு உயிரும் ஒன்றி, இரு மனமும் ஒன்றி,
பேரொளி என்ற உணர்வினை நீங்கள் உருவாக்குங்கள்.

உங்கள் உடலிலுள்ள அணுக்கள் அனைத்தையும் பேரொளி பெறும் அணுக்களாக கருவாக உருவாக்குங்கள்.

எங்கள் தாய் தந்தை உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் அன்னை தந்தையர் பேரருள் பேரொளி பெற்று அவர்களின் அருளாசியால் எங்கள் வாழ்வில் பொருளறியும் திறன் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

August 26, 2015

அகக்கண் தியானம்

குருவின் துணையால் துருவமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.

அகஸ்தியன் துருவனாகி,
அவன் வாழ்வில் திருமணமாகி,
இருமனமும் ஒன்றென இணைந்து ,
இரு உயிரும் ஒன்றென இணைந்து,
இரு உணர்வும் ஒன்றென இணைந்து,
பேரருள் பெற்று பேரொளி பெறும் சக்தியை,
அவர்களுக்குள் உருவாக்கிய அந்த துருவ மகரிஷிகளின் அரும்பெரும் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிருடன் ஒன்றி ஏங்குங்கள்

"துருவ மகரிஷி, அவர்கள் கணவரும் மனைவியும் பெற்ற அந்தப் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா" என்று ஏங்கி தியானியுங்கள்.

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உயிருடன் ஒன்றிய நினைவினை துருவ மகரிஷி வாழ்ந்த காலங்களுக்குச் செலுத்தி அவர்கள் கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றி, இரு உயிரும் ஒன்றி, அவர்களுள் விளைந்த பேரருளை நாமும் நுகர வேண்டுமென்று ஏங்கி தியானியுங்கள்.

அவர்கள் பெற்ற பேரருள் உங்களில் மனம் மகிழும் உணர்வு ஒளி வட்டமாக உங்கள் புருவ மத்தியில் அந்தப் பேரொளியின் உணர்வுகளை அகக்கண் கொண்டு காணலாம், உணரலாம்.

துருவ மகரிஷிகளின் பேரருள் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கி தியானியுங்கள்.

கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்தி உங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்ற உணர்ச்சியை ஊட்டுங்கள். உணர்வினை ஊட்டுங்கள்.

உங்கள் உடலிலுள்ள ஜீவணுக்கள், ஜீவான்மாக்கள் பெற வேண்டுமென்று கண்ணால் நீங்கள் ஊட்டிய உணர்வு, பேரருள் என்ற உணர்வின் மகிழ்ச்சியின் உணர்ச்சிகள் உங்கள் உடலிலே உருபெறும் சக்தியை நீங்கள் உணரலாம்.

"துருவ மகரிஷிகளின் பேரருள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா" துருவ மகரிஷிகளின் பேரருளின் ஒளி உங்கள் புருவ மத்தியில் அதனின் உணர்வின் உணர்ச்சியின் ஒளியை நீங்கள் காணலாம்.

அகக்கண்ணாக உங்களில் இருக்கும் உயிரான ஈசனுடன் இணைந்து நீங்கள் நுகரும் உணர்வுகள் பேரருள் பேரொளி என்ற உணர்வினைப் பெறும் உணர்வினை உங்கள் புருவ மத்தியில் (அகக்கண் கொண்டு) காணலாம்.

ஆண்கள், துருவ மகரிஷிகளின் பேரருள் மனைவியின் உடல் முழுவதும் படர்ந்து மனைவியின் இரத்த நாளங்களில் கலந்து மனைவியின் உடலிலுள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று ஏங்கி தியானியுங்கள்.

அதே போன்று, பெண்கள் துருவ மகரிஷிகளின் பேரருள் கணவர் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து கணவர் உடலிலுள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று ஏங்கி தியானியுங்கள்.

துருவ மகரிஷிகளின் அருள்சக்தியும் பேரருளும் குழந்தைகள், தங்கள் தாய் தந்தை பெற வேண்டும் என்றும் உடல் முழுவதும் படர்ந்து அவர்களது இரத்த நாளங்களில் கலந்து அவர் உடல்களில் உள்ள ஜீவான்மாக்கள், ஜீவணுக்கள அந்தப் பேரருளைப் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி தியானியுங்கள்.

அவர்கள் பெறும் அந்த அரும்பெரும் சக்தியை அவர் கருவிலே உருவான உங்கள் உடல், அவர்கள் பெற அவர்கள் உடலிலிருந்து வரும் உணர்வினை  நீங்களும் நுகர்ந்து உங்களுக்குள் அந்த அரும்பெரும் சக்தியை உருவாக்க இது உதவும்.

துருவ மகரிஷிகளின் பேரருள் உங்கள் உடலுக்குள் பரவுவதும்,
உங்கள் உடலிலுள்ள அணுக்கள் அது நுகர்வதும்,
அந்த அணுக்கள் மகிழ்ச்சியுறும் உணர்ச்சி
உங்கள் உடலிலே பேரானந்தத்தை ஊட்டும் பெரு மகிழ்ச்சியின் உணர்வாக
உங்கள் உடலில் நீங்கள் உணரலாம்.

உங்கள் உடலிலே முன்னிருக்கும் ஆன்மாவில் அப்பெரும்சக்தி சுழன்று கொண்டிருப்பதை நீங்கள் நுகரும்பொழுது அவ்வுணர்ச்சியின் தன்மையும் உங்களின் உடலில் அருள் வட்டம் சுழன்று கொண்டிருப்பதை உணரலாம்.