ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2017

இன்று கேமராக்களில் நுண்ணிய படங்களை எடுப்பது போலத் தான் குருநாதர் என் உடலுக்குள் ஏற்படும் இயக்கங்களைக் காட்டினார்

இன்றைக்கு விஞ்ஞான அறிவு கொண்டு சில கருவிகளை வைத்து மிக மிக நுண்ணிய நிலைகளை படமாக எடுத்துத் தெளிவாகக் காட்டுகின்றனர். நாம் அதிசயமாகப் பார்க்கின்றோம்.

இயற்கையின் உண்மைகளை நேரடியாகப் பார்க்கப்படும்போது அந்த உண்மையின் இயக்கங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வோம்.

விஞ்ஞான அறிவு கொண்டு யானைகளை மடக்குவதற்குக் கூட சில உபாயங்களைக் கண்டு நாம் வியக்கக்கூடிய அளவிற்குத் தக்க கேமராக்களை வைத்து எலக்ட்ரானிக் நுட்பம் கொண்டு பிரமிக்கத்தக்க அளவில் கூட இன்று படங்களைக் காட்டுகின்றனர்.

ஏனென்றால் இயற்கைக்கு மாறாக தான் எடுத்துக் கொண்ட திறமையைக் காட்டி உலகம் இப்படிதான் இருக்கின்றதென்று விஞ்ஞான அறிவால் சில நிலைகளைப் பார்க்கின்றோம்.

நீங்கள் கையில் ஒரு பையைக் கொண்டு போனால் இந்தப் பையைப் பிடுங்கி இன்னொருவன் கையில் கொடுக்கின்ற மாதிரி கேமராவில் எலக்ட்ரானிக் வழியில் மாற்றி டி.வி.யில் அப்படியே காட்டுகின்றார்கள்.

டி.வி.யிலும் சினிமாவிலும் இதைப் போன்ற படங்களையும் முறைகேடான நிலைகளையும் காட்டுகின்றனர். இயற்கைக்கு மாறான செயல்களையும் காட்டி அதிசய வைக்கும் நிலையும் பயமூட்டும் நிலையும் காட்டுகின்றனர்.

“ஆ…!” இதெல்லாம் எப்படி…! என்ற நிலையில் அதிர்ச்சியூட்டும் நிலைகளைத்தான் நாம் நுகர்கின்றோம். அதனின் விளைவுகளைப் பற்றி அறிவோரும் இல்லை. அறிவுறுத்துவோரும் இல்லை.

ஆனால் குருநாதர் என்னைக் (ஞானகுரு) காடுகளில் அலையச் செய்து ஒவ்வொரு நிமிடங்களிலும் ஒவ்வொரு உயிர்கள் (மிருகங்களும் உயிரினங்களும்) தன்னைப் பாதுகாக்க என்ன செய்கின்றது?

சினிமா டி.வி.யில் காட்டுகின்றார்கள் அல்லவா…! அது போல என்னை நேரடியாகவே கொண்டு போய்க் காட்டினார்.

மிருகங்கள் எப்படிப் போர் செய்கின்றது? மற்றதை எப்படித் தந்திரமாகப் பிடிக்கின்றது? தப்பி ஓட அந்த உயிரினங்கள் என்னென்ன செய்கின்றது?

அதே சமயத்தில் நான் வேடிக்கை பார்க்கும் போது என்னைத் தாக்க வரும் நிலையில் எனக்குள் எனென்ன உணர்வுகள் வருகின்றது?

அந்த உணர்வுகளை எல்லாம் நான் நுகர்ந்தபின் பதட்டமும் பயமும் ஆகி என் உடலில் எப்படியெல்லாம் மாற்றங்கள் ஏற்படுகின்றது?

அதை நுகர்ந்த ஒரு இரண்டு மணி நேரத்தில் இரத்தங்களில் வேதனை உணர்வுகள் கலக்கப்படும் பொழுது ஒவ்வொரு அணுக்களின் இயக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகின்றது என்று குருநாதர் அனுபவரீதியில் கொடுத்தார்.

மாறிய நிலைகளை மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு அடக்கி அந்தத் தீமை செய்யும் நிலைகளை நன்மை பயக்கும் அணுக்களாக ஒளியாக எப்படி மாற்ற வேண்டும் என்பது தான் காட்டிற்குள் அனுபவம்.

1.தீமைகள் எப்படி நம் உடலுக்குள் வருகின்றது?
2.அதனுடைய செயலாக்கங்கள் என்ன?
3.அதைத் தடுப்பது எப்படி?
4.ஞானிகளும் மகரிஷிகளும் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களை எப்படி அகற்றினார்கள்?
5.உயிருடன் ஒன்றிய உணர்வுகளை எப்படி ஒளியின் சுடராக மாற்றினார்ககள்?
6.விண்ணுலகம் எப்படிச் சென்றார்கள்? 

இதையெல்லாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்ட பின் தான் உங்களுக்குள் அதை உணர்த்துகின்றோம். குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்பபடிச் செய்கின்றோம்.

சித்திரை – சிறு திரை

அன்றாட வாழ்க்கையில் எல்லாவற்றையும் நாம் நல்ல குணத்தோடு தான் பார்க்கின்றோம். ஆனால் பிறரின் தீமையான உணர்வுகள் நமக்குள் சிறு திரையாகிவிடுகின்றது.

அப்பொழுது உங்கள் நல்ல குணத்தை அது மறைத்துவிடுகின்றது அல்லவா? அந்தச் சித்திரையை நீக்க வேண்டுமா… இல்லையா?

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலிலுள்ள இரத்தங்கள் முழுவதும் படரவேண்டும்.
4.எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
5.நாம் இதை எண்ணும் பொழுது அந்தத் திரையை நீக்கிவிடலாம்.

1.வேதனைப்படும் உணர்வை நாம் எடுத்தால்
2.நல்ல எண்ணங்களை அந்த நல்லதை அது மூடிவிடுகின்றது.
3.வேதனைப்படும் உணர்விற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பட்டவுடன் அதைத் திறந்துவிடுகின்றது.
4.“சித்திரை…,” அதாவது நல்லதை மறைக்கும் சிறு திரைகளை நீக்கிவிடுகின்றது. உண்மைப் பொருள் தெரிகின்றது.

இப்படி நம்மைத் தெரியச் செய்வதற்கு எத்தனையோ உபாயங்களைக் காட்டியுள்ளார்கள் மகரிஷிகள்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம் உடலுக்குள் எப்படி இயக்குகின்றது? சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் அதை நாம் எப்படி மாற்ற வேண்டும்? என்பதை இப்படித் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

புலித் தோலில் உட்கார்ந்து மந்திரம் ஜெபிப்பவர்களின் கடைசி நிலைகள்

சில விஷத் தன்மைகளை முறிக்கும் உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ந்து பல மந்திர ஒலிகளாக மந்திரங்களைப் பாய்ச்சப்பட்டு இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்துக் கொண்ட பின் என்ன செய்கின்றது…! என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்னொரு மனித உடலின் வீரிய உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அதற்கென்ற மந்திர ஒலியை எடுத்துக் கண் கொண்டு பார்த்தான் என்றால்
2.புலி அப்படியே தனக்குள் ஒடுங்கிவிடும்.

மனிதனுக்குள் வந்தபின் இதே மந்திரத்தால் தனக்குள் ஜெபித்து அதர்வண வேதம் என்ற நிலைகள் கொண்டு அதை எப்படிப் பக்குவப்படுத்துவது என்று பின் வந்த “அரசர்கள்…” செய்தனர்.

அதே நிலைகள் கொண்டு வந்து (சித்தர்கள் என்ற நிலையில்) காட்டிற்குள் போனால் இந்தப் புலிகள் ஒடுங்கும்.

இந்த மாதிரி மந்திரங்களைக் கற்றுக் கொண்டவர்கள் புலித் தோலை விரித்து வைத்து அந்தப் புலி எப்படி வீரிய உணர்வுகள் எடுத்ததோ இதன் மேல் அமர்ந்து சில மந்திரங்களை ஜெபிக்கின்றார்கள்.

அப்படி உட்கார்ந்து ஜெபித்தார்கள் என்றால் அந்தப் புலியினுடைய உணர்வுகள் இங்கே வந்தபின் புலியைக் கண்டால் எப்படி அஞ்சுகின்றனரோ இதைப் போல பிறர் அஞ்சி ஒடுங்கும் நிலை வருகின்றது.

இந்த இந்த மந்திரத்திற்கு இப்படிச் செய்தால் இப்படி என்று புலித் தோல்களை விரித்து வைத்து அதன் மேல் இருந்து சில ஜெபங்களைச் செய்தார்கள்.

அவன் உடலில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளை நாம் கேட்டோம் என்றால் நாம் அவர்களுக்கு அடிமையாக இருப்போம். இது வசிய மந்திரங்களில் எதன் மேல் உட்கார்ந்து எதைச் செய்வதென்று செய்தார்கள்.

எப்படிப் புலியின் தன்மை அடைந்ததோ புலியின் உணர்வுகளை இவர் நுகர்ந்தால்
1.இவர் எவ்வளவு பெரிய சித்தராக இருந்தாலும் சரி
2.(கடைசியில்) அவர் செத்தவராகத் தான் ஆகின்றார்.
3.இந்தப் புலியின் தன்மை ஆனபின் இந்தப் புலியின் மணமே வரும்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு மற்றவர்களை இவர் ஒடுக்கக் கற்றுக் கொண்டாலும் இவர் வெளியிலே சென்றபின் மனிதனின் உணர்வு இவருக்குக் கிடைக்காதபடி இவரை அடிமையாக்கிவிடும்.
1.புலித் தோலில் உட்கார்ந்தார்.  
2.கடைசியில் புலிக் குட்டியாகத்தான் போவார்.
3.இது இவர்களுக்குத் தெரியாது.

குருநாதர் இதை எல்லாம் தெளிவாக்கினார்.  

என்னைச் சில காலம் மான் தோலில் புலித் தோலில் உட்கார்ந்து இந்த உணர்வின் மணங்கள் வரப்போகும் போது இதனால் மற்றவர்களை நீ  எப்படி வசியப்படுத்த முடிகின்றது…? என்று காட்டினார்.

முந்தி நான் (ஞானகுரு) மான் தோலை வைத்திருப்பேன். அது தனக்குள் எளிமையாகப் போகும் போது அப்புறம் புலித் தோலையும் வைத்திருந்தேன்.

அந்த உணர்வுகளை நுகரப்படும்போது அந்தப் புலியின் உணர்வுகள் வரப்படும் போது மற்றவர்களை எப்படி அடிமையாக்குகின்றது…? என்று காட்டினார் குருநாதர்.

நீங்கள் வந்தவுடனே இரண்டு வார்த்தை கேட்டால் போதும். நான் சொல்கின்ற மாதிரி பூனைக்குட்டி மாதிரி நீங்கள் வருவீர்கள். இது வசியம்.

சில மந்திரங்களுக்கு இப்படிப்பட்ட இந்தச் சக்தி உண்டு.

ஆளைப் பார்த்தவுடனே அவரை வசியம் செய்ததும் ஆஹா… மகான்…, “பெரிய மகான்…!” என்று நாம் போற்றலாம்.
1.ஆனால் அவரும் மகானாகப் போவதில்லை.
2.நாம் கேட்டவர்களும் மகானாகப் போவதில்லை.
3.உடலின் தன்மை கொண்டு நம் செயலை இழந்தது தான் மிச்சம்.

ஆனால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அகஸ்தியன் தன் தாய் கருவில் பெற்ற சக்தியால் நஞ்சை வென்றிடும் நிலை வரும்போது இவன் காட்டிற்குள் சென்றால் மற்ற உயிரினங்களோ மற்ற மிருகங்கள் எல்லாமே அடங்கிவிடுகின்றது.

அதுதான் அகஸ்தியனைக் காட்டு ராஜா என்பது.

அகஸ்தியனுடைய தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது மிருகங்கள் விஷ ஜெந்துக்களிலிருந்து தன்னைக் காத்ததுக் கொள்ள பல பச்சிலைகளையும் மூலிகைளையும்  அரைத்துத் தன் உடலில் பூசியது. அந்த மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.

அந்த மணங்கள் கருவிலிருக்கும் அகஸ்தியருக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது. அகஸ்தியனுக்கு அந்தச் சக்திகள் சந்தர்ப்பத்தில் உருவானது தான்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு காட்டு விலங்குகளுடன் செல்லப்படும் போது எல்லாமே ஒடுங்கிவிடும். இவன் உடலில் வெளிப்படும் மணத்தை நுகரும் காட்டு விலங்குகள் எல்லாம் அதனுடைய வீரியத்தன்மை குறைவதால் சாந்தமாக ஒடுங்கிவிடுகின்றது.

அகஸ்தியன் காட்டுக்குள் போகின்றான் என்றால் அவன் பின் படையே போகும். அதனால் அகஸ்தியனுக்குக் “காட்டு ராஜா…” என்று பெயரை வைத்தார்கள்.

காடு இருக்கின்றது என்றால் அனைத்திற்கும் ராஜா இவன். தன் வளர்ச்சியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் ஒளியான அணுக்களைசு சுவாசித்தவர்கள் தங்களுக்குள் வளர்த்து இன்று சப்தரிஷி மண்டலமாக அவன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.
1.நாம் எடுக்க வேண்டியது மெய் ஒளியான அகஸ்தியனின் உணர்வுகளைத்தான்…
2.மந்திர ஒலிகளை அல்ல.

ஆனால் மந்திர ஒலிகள் கொண்டு சுவாசித்து அதைப் பாய்ச்சிச் சித்துகள் செய்யலாம் என்றால் மீண்டும் இந்தப் பூமியில் தத்தளிக்க வேண்டியது தான்…! 

December 30, 2017

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் வலு சேர்த்துக் கொண்டால் “தீய வினைகளையும் சாப வினைகளையும் பாவ வினனகளையும் பூர்வ ஜென்ம வினைகளையும் அகற்ற முடியும்…!”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலும் உடலில் உள்ள அணுக்களுக்கும் நினைவைச் செலுத்துதல் வேண்டும்.

நம் உடலிலே துருவ நட்சத்திரத்தின் வலிமை பெறப்படும் பொழுது அந்த ஈர்க்கும் சக்தியால் நம் உடலின் ஈர்ப்பு வட்டத்தில் (ஆன்மாவில்) உள்ள வேதனை மனக்கலக்கம் போன்ற உணர்வுகளை ஈர்க்காது அவைகளை ஒதுக்கித் தள்ளும் சக்தி பெறுகின்றது.

வெறுப்போ கோபமோ ஆத்திரமோ பயங்கரமோ மற்ற எத்தனையோ வகையான உணர்வுகள்
1.நம் உடலைச் சுற்றி அந்த உணர்வுகள் படர்ந்திருப்பதை
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி
3.நம் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது
4.அது வலு பெற்று நம் உடலைச் சுற்றியுள்ள அந்த ஆன்மாவைத் தூய்மைப்படுத்தித்
5.தீமையான உணர்வுகளை விலக்கித் தள்ளிவிடும்.

நாம் நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் நாம் எண்ணும் பொழுதெல்லாம் நம் “விலா எலும்புக்குள்ளும்…” பதிவாகி விடுகின்றது.

1.சந்தர்ப்பத்தால் நாம் கொடிய உணர்வுகளைப் பார்த்தாலும்
2.கொடிய உணர்வுகளை நீக்கிய அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும்
3.நமக்குள் இது அதைக் காட்டிலும் வலுக் கூடிக் கொண்டே வரும்.

இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமது “விலா எலும்புகளில் அதைப் பதிவாக்கி… அதனின் கணக்கைக் கூட்டிப் பழக வேண்டும்...”

1.இரவு படுக்கப்படும் பொழுதும்
2.காலையில் எழுந்திருக்கும் பொழுதும்
3.தொழிலுக்குச் செல்லும் பொழுதும்,
4.தொழிலை ஆரம்பிக்கும் பொழுதும்
5.எந்த வேலையச் செய்ய ஆரம்பிக்கும் பொழுதும்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நமக்குள் அதிகமாகச் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது இதற்கு முந்தைய தீய வினைகளோ பாவ வினைகளோ சாப வினைகளோ பூர்வ ஜென்ம அலைகளோ நமக்குள் பதிவாகி இயக்கிக் கொண்டிருப்பினும் அவைகளும் நாளுக்கு நாள் குறையத் தொடங்கும்.

இவ்வாறு நமது உடலில் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
1.மூச்சலைகளாக வெளிப்படும் பொழுதும்
2.நமது பூமியில் பரவும் பொழுது
3.நமது வீட்டில் குடியிருக்கும் பொழுதும்
4.நம் வீட்டுக்குள் பரவும் பொழுதும்
5.நம் வீட்டுக்குள் வரும் தீமையான உணர்வுகள் அனைத்தையும் வெளியே தள்ளி விடுகின்றது.

“சந்தேக உணர்வுகளும்… கலக்க உணர்வுகளும்…,!” நமக்குள் தோன்றுவதன் காரணம் என்ன?

உதாரணமாக நாம் மிகுந்த வெறுப்பாகும்படி ஒருவர் செயல்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் வெறுப்பான உணர்வுகள் செயல்படுவதைப் பார்த்தவுடன் அந்த வெறுப்புடன் நான் இருக்கின்றேன்.

அந்த வெறுப்பின் தன்மை வரப்படும்போது என் நண்பன் வருகின்றான். நம்மைப் பார்த்து.., “ஏம்ப்பா பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது…! என்று சொல்லிச் சிரிக்கின்றான்.

நண்பன் சிரிப்பதைப் பார்த்தவுடன் இந்த வெறுப்பின் தன்மையுடன் இருக்கும் பொழுது “என்ன..! இவன் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றான்…?” அவன் அப்படிப் பேசினான்.., ஆனால் இவன் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றான்.

ஆக சந்தோஷமாகச் சிரித்தாலும் இங்கே வெறுப்பு வருகின்றது.

அப்பொழுது என்ன செய்கின்றது? அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகள் இதனுடன் கலந்தபின் நண்பனின் உணர்வு இங்கே “எதிரியாகத் தெரிகின்றது”.

விஷத்திற்குள் நல்ல பொருளைப் போட்டால் என்ன செய்யும்? ருசியாக இருக்குமா…? அதுவும் மயக்கத்தான் செய்யும்.

இதைப் போன்று இயற்கையின் நிலைகள் வருவதை நாம் மனத் தூய்மை செய்ய வேண்டும். நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் யார் சங்கடப்பட்டார்களோ வேதனைப்பட்டார்களோ அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் அவர்கள் மன பலம் பெறவேண்டும் சிந்தித்துச் செயல்படும் திறன் பெறவேண்டும் அவர்கள் செயல்கள் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அப்பொழுது அவர்கள் உணர்வை நாம் எடுப்பதில்லை.

ஆனால் நாம் வேதனையாக இருக்கும் பொழுது நண்பன் சிரித்ததைப் பார்த்தவுடன் இந்த வெறுப்பின் உணர்வை ஊட்டி என்ன செய்கின்றோம்?
1.அந்த நண்பன் மேல் உணர்வு வரப்படும் பொழுது
2.அவனைப் பார்க்கும் பொழுது நம்மைக் கேலி செய்கின்றான் கிண்டல் செய்கின்றான்
3.நாம் இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது என்ற இந்த உணர்வு வரும்.

சில பேரைப் பார்த்துமே…, “நம்மைப் பிடிக்கவில்லை போலத் தெரிகிறது…” என்று சொல்வோம். அப்பொழுது எது நம்மை இயக்குகின்றது?

1.“நாம் நுகர்ந்த உணர்வை நம் உயிர் இயக்குகின்றது”.
2.தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
3,நல்லதைக் கெட்டதாகக் காட்டும். கெட்டதை நல்லதாகக் காட்டும் (நாம் நுகரும் உணர்வுகளே அதற்குப் பொறுப்பு).

ஆகவே அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அந்த உணர்வை உயிர் இயக்கும்படி நாம் பயிற்சியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

மற்ற தீமையான உணர்வுகள் வந்தாலும் அதன் மீது பற்று கொள்ளாது அருள் உணர்வைப் பற்றுடன் பற்றிக் கொள்ள வேண்டும். 

இதையெல்லாம் நாம் பழக்கப்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும்.

2004 நிகழ்வுக்குப் பின் 2014லிருந்து உருவாகும் “உலகைக் காக்கும் சக்திகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!”

கர்ப்பமுற்ற தாயின் குடும்பத்தில் அந்தப் பத்து மாதங்களும் ஒரு தெய்வீகக் குடும்பமாக இருந்து எல்லோரும் ஒன்று சேர்ந்து வேறு எந்தக் குறைகளையும் எண்ணாதபடி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த பேரருள் கருவிலே வளரும் சிசுக்களைப் பெறச் செய்தல் வேண்டும்.

அகஸ்தியனின் பார்வையில் சர்வ நஞ்சுகளையும் அடக்கியது போன்று கருவிலே வளரும் அந்தச் சிசு
1.நஞ்சுகளை நீக்கும் சக்தியும் அகண்ட அண்டத்தையும் அறிந்திடும் ஆற்றலும்
2.விஷத்தை வென்று ஒளியாக மாற்றும் ஆற்றலும் பெறவேண்டும் என்று
3.குடும்பத்தில் உள்ளோர் ஏகோபித்த நிலையில் 10 மாதங்களும் இப்படிச் செயல் படுத்த வேண்டும்.

1.துருவநட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இந்த உலகம் முழுவதும் படரவேண்டும்
2.உலகில் உள்ள அஞ்ஞானம் அகல வேண்டும்
அசுர உணர்வுகள் அழிந்திடவேண்டும்
3.அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற உணர்வை
4.எந்தக் கர்ப்பமுற்ற தாய் எண்ணி எடுத்ததோ
5.அப்படி உருவான அந்தச் சிசு நம்மையும் காப்பான்…!
6.அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக உலகையும் காக்கும்
சக்தியாக வருவான்….!

நமது பூமியில் பிரளயம் போன்று 2004ல் ஆனபின் 2014க்குள் அசுர உணர்வுகள் அழிந்து விடும். 2014க்கு மேல் தான் நாம் “தென்னாடுடைய சிவனே போற்றி..” என்று சொல்கின்றோம் அல்லவா…!

அவன் உணர்வைக் கருவில் பெற்று வளர்ந்த சிசுக்கள் ஞானிகளாகத் தோன்றுவார்கள்.

இப்படி உருவாகும் ஞானக் குழந்தைகள் திசைக்கு ஒரு 100 பேர் இருந்தால் போதும். அவர்கள் இடும் மூச்சலைகள் வெளி வரும் பொழுது நஞ்சை அகற்றும் ஆற்றலாகப் பரவத் தொடங்கும்.

இன்று எப்படி அணுக் கதிரியக்கப் பொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது சூறாவளியாக மாறுகின்றதோ அதே போல அந்தக் குழந்தைகள் விடும் மூச்சலைகள்
1.கடும் விஷத்தை ஒதுக்கித் தள்ளும் தன்மை வருகின்றது.
2.உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் இதைச் சந்திக்கலாம்.

ஏனென்றால் இப்போது (உபதேசம் செய்த வருடம் 2002) 40 வயது 50 வயதில் உள்ளவர்கள் எல்லாம் இருக்கின்றீர்கள். 20 முதல் 30 வயது உள்ளவர்களும் இருக்கின்றீர்கள்.

நான் (ஞானகுரு) சொன்னதைப் பதிவு செய்து வைத்து கொள்ளுங்கள். இதையெல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

கருவில் வரும் சிசுக்களை ஞானிகளாக (குழந்தைகளை) உருவாக்கும் தன்மை பெற்றுத் தான் நாளை வரும் கொடூர அரக்க உணர்வுகளிலிருந்து மீட்டுத் தரும் நிலை வரும்.

இது நிச்சயம்…!

தீவிரவாத உணர்வுகளை “நம் மூச்சலைகளால்..” அகன்று செல்ல வைக்க முடியும்

நம் பிரபஞ்சததில் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றது.

அந்த உணர்வுகள் நம் பூமியிலே கலந்து கொண்டு இருக்கும்போது ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொரு நட்சத்திரத்திற்கும் சேரவில்லை என்றால் ஒதுக்கப்பட்டுச் சுழிக்காற்றுகள் வருகின்றது.

கடல்களிலும் இதே போன்றுதான் எதிர் நிலையான நட்சத்திர அலைகள் தாக்கப்படும் போது அது புயலாக மாறுகின்றது.

மனிதனான நமக்குள்ளும் அந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகள் பெருக்கப்பட்டுள்ளது. அந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் இருந்தாலும்
1.எதிர் நிலையான நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் எந்த அளவுக்கு வலுவாக இருக்கின்றதோ
2.அதன் உணர்வு வழிப்படிதான் நம் உடலுக்குள் மற்ற உணர்வுகளை அடிமைப்படுத்துவதும்
3.அதன் நிலைகளில் பல மாற்றங்கள் ஏற்படுவதும் உண்டு.
அகண்ட பேரண்டத்தில் 2000 சூரியக் குடும்பங்கள் ஒன்றுக்கொன்று துணை கொண்டு ஓடி அது வாழ்ந்து கொண்டு சுழன்று கொண்டு இருக்கின்றது.

இருப்பினும் 2000 சூரியக் குடும்பங்களிலிருந்து வரக்கூடிய தூசி மண்டலங்கள் வால் நட்சத்திரமாக அது தனித்துத் தனித்து ஒதுங்கி இருக்கின்றது.

2000 சூரியக் குடும்பங்களுக்கும் நேர்ப்பாதையில் அத்தகைய தூசி மண்டலம் வரும் போது இதைக் கவர்ந்து மீண்டும் சூரியன் அந்தக் கொடிய விஷத் தன்மைகளை மாற்றிவிடுகின்றது.

சூரியனுக்குப் போகும் பாதையில் நமது பூமியின் ஈர்ப்பிற்குள் (வால் நட்சத்திரம்) வந்துவிட்டால்
1.பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் இந்தத் தூசி மண்டலங்கள் மோதும் போது நெருப்பாகி
2.அதனின் விஷத் தன்மைகள் நம் பூமிக்குள் பரவுகின்றது.
3.எந்தப் பகுதியில் பரவுகின்றதோ அங்கெல்லாம் விஷத்தன்மை பரவுகின்றது.
4.தாவர இனங்களானாலும் மற்ற எதுவானாலும் விஷத்தன்மை பரவுகின்றது.

(இப்பொழுது பல வால் நட்சத்திரங்கள் நம் பிரபஞ்சத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றது. பூமிக்குள்ளும் வந்து கொண்டிருக்கின்றது. பத்திரிக்கைகளிலும் டி.வி,யிலும் பார்ப்பீர்கள்)

இத்தகைய விஷத் தன்மைகள் பூமிக்குள் வந்து கொண்டு இருக்கும் இந்த நிலையில் மனிதருக்குள் கொடூர அசுர உணர்வுகள் ஒவ்வொரு மனித உடலில் தீவிரவாதம் என்ற நிலையில் பரவிக் கொண்டிருக்கின்றது.

அதிலிருந்து தப்ப குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நம் ஆன்மாவில் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை அதிகமாகப் பெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அருள் வட்டமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் வலுவான பின்
1.நாம் விடும் மூச்சலைகளால் இந்த விஷத் தன்மையான தீமையான உணர்வுகள்
2.அது ஒதுங்கி ஓடத் தொடங்கும்.

ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்து வெளிப்படும் நிலையில் ஒதுங்கிய அந்த விஷமான உணர்வுகள் மற்ற எதனின் ஈர்ப்பிற்கும் செல்லாதபடி சூரியனால் ஈர்க்கப்பட்டுவிடும்.

அவைகளைச் சூரியன் கவர்ந்து சென்று அந்த விஷத்தைப் பூராம் கருக்கி விடுகின்றது. எதிர் நிலையான உணர்வுகள் அனைத்தும் மாற்றப்படுவதை நாளடைவில் நீங்கள் இதை உணர முடியும்.

சூரியன் அந்த விஷத் தன்மைகளை எப்படிக் கவர்கின்றது..? எப்படி மாற்றுகின்றது…? என்ற நிலையைக் குருநாதர் என்னை எப்படிக் காண வைத்தாரோ அதைப் போல நீங்களும் பார்த்திட முடியும்.

அந்த நிகழ்ச்சிகளை உங்களிலே அறிந்திடவும் முடியும்.

December 29, 2017

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் தீமைகளைப் பிரிக்க முடியும்

நம் வாழ்க்கையில் அன்றாடம் நமக்குள் வரும் கோபம் சலிப்பு வேதனை வெறுப்பு ஆத்திரம் பயம் இதைப் போன்ற எத்தனையோ உணர்வுகளை நுகர்கின்றோம் அறிகின்றோம்.

1.நம் சுவாசத்தின் வழி நம் உடலுக்குள் போய் இரத்தத்தில் கலந்து
2.அணுவாக உருவாகும் கருவாக ஆகிவிடுகின்றது.
3.பின் இரத்தத்தில் சுழன்று முட்டை வெடித்து எந்த உறுப்பில் ஒட்டிக் கொள்கின்றதோ
4.அங்கே அது தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கும்.

அது பெருகிய பின் நல்ல குணங்களால் நல்ல அணுக்களால் உருவான நம் உறுப்புகள் செயலாக்கங்கள் குறையும். பின் உடல் நோயாகி மன நோயாகும்.

அத்தகையை தீமையான அணு உருவாகாமல் தடுக்க வேண்டும் அல்லவா. அப்படி உருவானாலும் அதைக் கரைத்துப் பிரிக்க வேண்டுமல்லவா…!

தங்க நகை செய்கின்றோம். அதைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் தான் தங்கம் சுத்தமாகின்றது. அதிலே அந்தத் திரவகத்தை ஊற்றினால் தானே அவ்வாறு ஆகும்.

1.ஆனால், தங்கத்தில் திரவகத்தை ஊற்றாமலே
2.அதிலுள்ள செம்பு பித்தளை, வெள்ளி எல்லாம் கரைந்து போய்விடும் என்று சொல்லிக் கொண்டு
3.நான் நிறையச் சக்தி பெற்றிருக்கின்றேன் என்றால் எப்படி முடியும்?
4.அது முடியாது.

அதைப் போன்று தான் நம் ஆன்மாவில் புகுந்த தீமைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் அதற்குண்டான சக்தியைச் சேர்த்தால் தானே ஆன்மா தூய்மையாகும்.

நமக்கு முன் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் அலைகளை நாம் எடுக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆகவே எது எப்படி இருந்தாலும் அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா. எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி நாம் உள் புறமாகக் கொண்டுபோய் சுத்தப்படுத்திப் பழக வேண்டும்.

1.தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் அணுவாக மாறுவதற்கு முன்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சேர்க்கும் பழக்கத்திற்கு வர வேண்டும்.

இவ்வாறு செய்தால் நம் இரத்தங்கள் தூய்மை பெறும். உறுப்புகள் சீராக இயங்கும். மன பலம் கிடைக்கும். சிந்திக்கும் ஆற்றல் பெருகும். மகிழ்ந்து வாழ முடியும்.

ஈவு இரக்கமற்ற நிலையில் மனிதனைக் கொன்று புசிக்கும் “தீவிரவாதம்… தோன்றக் காரணம்…!”

தீவிரவாதிகள் என்று உருவாகி இரக்கமற்றுக் கொல்கின்றார்கள் என்று சொன்னாலும் அந்தத் தீவிரவாதம் இன்று ஒவ்வொரு நாட்டிலும் உருவாகிவிட்டது.

தீவிரவாதத்தின் உணர்வுகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வந்துவிட்டது.
1.மனிதனுக்கு மனிதன் கொன்று ரசித்து வாழ்வதும்
2.மனிதனுக்கு மனிதனே புசித்து வாழும் தன்மை வந்துவிட்டது.

இந்த  தீவிரவாதிகளும் கொன்றதைச் சும்மா விடுவதில்லை. அவனைப் பழி தீர்த்து அவனைத் தின்று நான் இரசித்து நான் வாழ்கின்றேன் விழுங்கி விடுவேன் என்று செயல்படுத்துகின்றனர்.

இது எதனால் வந்தது? எப்படி வந்தது?

அதாவது ஒரு காலத்தில் இந்த ஆசியாக் கண்டத்திலே இஸ்ரேல் என்ற நாட்டில் யூதர்கள் இதைச் செயல்படுத்தி வந்தார்கள்.

யூதர்களுக்குள் போர் வந்தால் பெண்களும் சரி ஆண்களும் சரி உன்னைக் கொன்று உன் ஈரலை நான் விழுங்கப் போகின்றேன் என்று சொல்வதோடு மட்டுமல்ல மற்றவரைக் கொன்று அந்த ஈரலைப் பச்சையாகவே சாப்பிடுவார்கள்.

வெறித் தன்மையான ஊறப்பட்ட இந்த உணர்வுகள் கொண்டுதான் ஆண்களானாலும் பெண்களானாலும் “உன்னைக் கொன்று… உன்னை நான் முழுமையாகவே விழுங்குவேன்…!” என்று கொன்று தின்றார்கள்.
1.அத்தகைய உணர்வுகள்… அங்கே பரவப்பட்ட நிலைகள் தான்
2.இன்று உலகம் முழுவதற்கும் பரவிக்கொண்டு இருப்பது.

புது வருடம் ஒன்றாம் தேதி அவர்கள் தத்துவத்தை வழக்கமாக அந்த நாளாக வைத்து இவர்கள் கொண்டாடும் நேரத்தில்
1.தீமை என்று உணர்த்தி தீமையிலிருந்து விடுபட வேண்டும்
2.புது வருடம் மகிழ்ச்சியான வருடம் (“HAPPY NEW YEAR”) அவர்கள் சொன்னாலும்
3.அந்த யூத வம்சம் தான் இரக்கமற்றுக் கொன்றது… ரசித்து வாழ்ந்தது….!

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானிகள் மகரிஷிகள் நமக்கு உணர்த்தியது:-
1.ஈசனுக்கு முன் நாம் எல்லோரும் ஒன்று.
2.நாம் சுவாசிக்கும் நிலைகள் எல்லாம் ஒன்றி நமது உயிர் ஈசனாகின்றது.
3.அவன் அமைத்த கோட்டை தான் இந்த உடல்
4.இந்த கோட்டையை நாம் எப்போதுமே புனிதப்படுத்த வேண்டும்.
5.அவனுக்குள் ஒன்றி அவனாகவே ஆகவேண்டும்.

அவனுடன் ஐக்கிமாக வேண்டும் என்றால் விண் சென்ற மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்து அணுவாக உருவாக்கியே ஆகவேண்டும்

“என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…” என்று உயிரோடு ஒன்றி “ஒளியென்ற நிலை” நாம் பெற வேண்டும்.

இன்றைய உலகில் எது எப்படி இருந்தாலும் அந்த அகஸ்தியன் உணர்வு ஒன்றுதான் இந்த உலகை இருளில் இருந்து மீண்டும் மீட்கும். 

இது நிச்சயம்...!

இனி நம்மை காக்கும் ஆள் யாரும் இல்லை…! தீமைகள் வளராது தடுக்கும் சக்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்

எத்தனையோ கோடி உணர்வுகளை நான் கவர்ந்து கொடுத்தாலும் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் அந்தச் சூழ்நிலைக்கொப்ப இந்த உணர்வுகள் உன்னை மோதும்.
1.அந்த உணர்வுக்கொப்ப மெய் உணர்வைப் பாய்ச்சி
2.அனைவருக்கும் அருள் பெறச் செய்து
3.அவர்கள் உடலில் உள்ள இருளைப் போக்கும் உணர்வைப் பாய்ச்சு என்றார்
4.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
5.அதன் வழி தான் ஒவ்வொரு கால கட்டங்களிலும் இதைப் பாய்ச்சுவது.

புது வருடம் பிறக்கின்றது. நம் குருநாதர் காட்டிய அருள் ஒளிகளை உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.

இதன் உணர்வை இந்த உபதேசத்தின் வழிப்படி தியானித்து நாமும் இந்த ஊரும் உலகமும் அந்தத் தீமையான தீவிரவாத்தை அகற்றும் வல்லமையாக நாம் பெறுதல் வேண்டும்.

நாம் நல்லவர்கள் தான். பிறர்படும் வேதனையைக் கண்டு நுகர்ந்தால் நாம் எவ்வளவு பெரிய நல்லவர்களாக இருந்தாலும் அந்த வேதனை உணர்வு நமக்குள் நுகரப்பட்டு நமது நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட அணுக்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றது.

1.நல்ல செயலும் இழந்து விடுகின்றது.
2.நமக்குள் கடும் நோயும் வந்து விடுகின்றது.
3.நம்மை காக்க ஆள் இல்லை.

வேதனையின் வலு அதிகமாகி விட்டால் அதற்குப் பின்
1.நம்மைக்  கண்டாலே… நம் உணர்வே…
2.மற்றவர்களை அருகில் வராது தடுத்து விடும்
3.நாம் அனாதையாக வேண்டியது தான்.

இதைப் போல இயக்கங்களிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

தீமை என்று உணர்ந்தால் உங்களுக்குக் கொடுத்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைச் சீராகப் பயன்படுத்தி அதைத் தடுத்துக் கொள்ளுங்கள்

ஒவ்வொரு நொடியிலேயும் நம் வாழ்க்கையில் சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ வேதனையோ கோபமோ குரோதமோ இவையெல்லாம் நாம்
1.கண்களால் பார்த்துத் தான் நுகர்ந்து… உணர்வால் அறிகின்றோம்.
2.அறிந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி
3.உடலில் இரத்தத்துடன் கலந்து விடுகின்றது

டி.வி.யிலோ பத்திரிக்கை வாயிலாகவோ மற்ற நிலைகளையோ பார்த்து படித்து உலகை அறிந்து கொள்ளும் நேரம் வந்தாலும் நடக்கும் அசம்பாவிதங்களையும் கொடுமைகளையும் அறிந்து கொண்டாலும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தப் புது வருடத்திலிருந்து உங்கள் உடலுக்குள் தீமை புகாது “புருவ மத்தியில்… ஈஸ்வரா…” என்று எண்ணித் தடுத்துக் கொள்ளுங்கள். உலகிலே தீமைகள் வளராது தடுக்கும் அந்தச் சக்தியை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்,

 மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.