ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 28, 2017

சிவ தத்துவம் - 1

1.பரமசிவம்
ஆதியின் வான்வீதியில் ரூபங்கள் இல்லாத நிலையில் ரூபமாக, திடப்பொருளாக உருவாவதை பரம்பொருள் என்றும், ரூபங்கள் உருவாகக் காரணமாக இருந்த கண்ணுக்குப் புலப்படாத சக்தி என்றும், அது ஒன்றாக இணைந்து திடப்பொருளாகும் பொழுது பரமசிவம் என்றனர் ஞானிகள்.

பரம் என்பது எல்லை. பரம்பொருளாவதை பரமசிவம் என்றும் சக்தி சிவமாகின்ற நிலையை நாம் தெரிந்து கொள்வதற்காக பரமசிவம் என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

பரம்பொருள் தன் அருகில் காந்தப் புலன் மோதும் பொழுது சுழற்சியின் தன்மை அடைகின்றது.

தன் ஓடு பாதையில் சுழற்சியால் ஈர்ப்பாவதும் தனது துருவப் பகுதியில் தனக்கு எதிர் முனையில் வருவதைக் கவர்வதும் கவர்ந்து கொண்ட உனர்வை வெப்பம் தனக்குள் உருவாக்கும் திறன் பெறுகின்றது.
2. சீவலிங்கம்
இத்தகைய நிலை பெறுவதைத்தான் சீவலிங்கம் என்று பெயரை வைக்கின்றார்கள்.

“ஜீவனுள்ளதாக..., ஒரு பொருள் உருவாகின்றது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக சீவலிங்கம் என்று காரணப்பெயரை வைத்தார்கள்.

நாம் இன்று சிவலிங்கம் என்று சொல்லுகின்றோம். ஆனால், மெய்ஞானிகள் வைத்த பெயரோ சீவலிங்கம். “ஜீவிக்கும் திறன் பெற்று.., தனக்குள் வளர்க்கும் திறன் பெற்றது.

பரம்பொருள் தனது சுழற்சியின் பொழுது தன் துருவப் பகுதியில் எதிரில் வரும் தனது உணர்வினைக் கவர்ந்து தனக்குள் உள் இழுப்பதும் இதற்குள் ஏற்படும் வெப்பத்தின் தன்மை கொண்டு பரம்பொருளுக்குள் வெப்பம் நடுமையம் அடைகின்றது.

நடுமையைத்தில் வெப்பம் அடைந்து தன் அருகிலே இருக்கும் நிலைகள் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க தன் அருகிலே இருப்பது அனைத்தையும் அது அமிலமாக மாற்றுகின்றது.

பின் அதில் உள்ளது ஆவியாக மாறி உறைந்து ஒரு திடப்பொருளாகின்றது. மேற்பரப்பில் கவரப்படும் அனைத்து சத்தும் கொதிகலனாகும் பொழுது கீழே இறங்குகின்றது.

உதாரணமாக, ஒரு இரும்பை உருக்கினோம் என்றால் கீழ்பரப்பு உருகி கீழே இருக்கும் பாகம் அமிலமாக மாறுகின்றது. கீழ்பாகம் உருக மேல்பாகம் கீழே இறங்குகின்றது.

இதைப் போன்றுதான் பரம்பொருள் தன் சுழற்சியாகும் பொழுது மேற்பரப்பில் விழும் அணுக்களின் தன்மை அது நடுப்பாகத்தில் வெப்பத்தின் தன்மை கூடி தன் அருகிலே இருப்பதை உருகச் செய்கின்றது.

உருகுவதால் அதன் உணர்வுகள் கீழே இறங்குவதும் பரம்பொருள் சமமாக இருப்பது மேடு பள்ளமாக மாறுவதும் தான் கவர்ந்து கொண்ட சக்தி இந்த வெப்பத்தில் கலவைகளாக மாறுவதும் உலோகத் தன்மைகளாக மாறுவதும் கல் மண் பாறைகளாக ஆவதும் இதைப் போன்ற உருமாற்றங்கள் ஆவதினால்தான் சீவலிங்கம் என்ற காரணப்பெயரைச் சூட்டினார்கள்.

இவ்வாறு தனது வளர்ச்சியில் கவர்ந்து கொண்ட நிலைகள் சிறு பொருளாக இருந்தது பெரிய பொருளாக.., மாறுகின்றது. அப்படி உருப்பெற்ற பொருள்கள் பெரும் கோளாக மாறுகின்றது.

பெரும் பொருளாக மாறும் பொழுது அதனின் வளர்ச்சியும் அதிகரிக்கின்றது. தன் சுழற்சியின் வேகமும் கூடுகின்றது. சுழற்சியின் தன்மையால் வெப்பத்தின் தன்மையும்.., ஈர்ப்பின் தன்மையும்.., அதிகரிக்கின்றது.
3.ஈஸ்வரன் – “வெப்பமாக உள் நின்று இயக்கும் நிலை – கடவுள்
சுழற்சியால் ஏற்படும் வெப்பத்தைத் தன் ஓடு பாதையில் சேர்த்துக் கொள்கிறது. இதனால் வெப்பத்தின் தணல் அதிகமாகின்றது.

தன் அருகிலே இருக்கக்கூடிய பொருள்களின் கலவைகளைச் சீக்கிரமாக மாற்றுகின்றது. இந்த உணர்வின் தன்மை பாறைகளாகவும் உலோகங்களாகவும் மாறுபடுகின்றது.

உதாரணமாக, ஒரு இரும்பு திடப்பொருளாக இருப்பதை நெருப்பில் போட்டால் அது அமிலமாக மாறுகின்றது. இதைப் போன்று பரம்பொருள் மையத்தில் அமிலநிலை உருவாகின்றது.

முதலில் நீராக இருந்தது. அதனில் ஒன்றாகப் பல உணர்வின் அணுக்கள் இணைந்தது. அதனில் நீர் ஆவியாகி ஒன்றாக இணைந்த அணுக்கள் இரண்டறக் கலந்து ஒரு பொருளாக மாறியது.

அதே சமயம் அதனின் சுழற்சி வேகத்தில் வெப்பம் உருவானது. அதனில் இணைந்த உணர்வுகள் உருகும் தன்மை அடைந்து அதனில் உருமாற்றங்கள் ஏற்படும் நிலைகள் பெற்றது.

இந்த நிலைகள் எல்லாம் சந்தர்ப்பத்தால் உருவான நிலைகள். “கடவுள்.., என்ற தனித்தன்மை இல்லை.

இயற்கையில் சந்தர்ப்பத்தால் இணைந்த சக்தியின் நிலைகள் எதிர்மறை.., கொண்டு இயக்கும் நிலைகளால்தான்.., ஒன்றுடன் ஒன்று மோதி.., ஒன்றுடன் ஒன்று இணையும் நிலை.., உருவானது.

கடவுள் என்பது வெப்பமாக உள் நின்று தனது இயக்கத்தின் தொடர் கொண்டு தனக்குள் வருவதை உருமாற்றி.., உணர்வை மாற்றி.., பல நிலைகளை உருவாக்கின்றது.

உள் நின்று.., இயக்கும் வெப்பத்திற்குத்தான்.., கடவுள் என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

பிரபஞ்சம் உருவாகும் நிலையைச் “சாதாரண மனிதர்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஞானிகள் தெளிவாகக் காவியங்கள் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார்கள்

February 27, 2017

பிறர் உயர்ந்த உணர்வுகள் கொண்டு வளர வேண்டும் என்று எண்ணினால் நாம் நிச்சயம் வளர்கின்றோம்

ஆரம்ப நிலைகளில், சில இடங்களில் அருள் உணர்வுகளை வளர்ப்பதற்கு முயற்சி எடுத்தேன். ஆனால், அங்கே அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு இல்லாது போய்விட்டது.

அவர்கள் ஆசை ஒரு பக்கம் இழுக்கின்றது. “பேராசை..,” ஒரு பக்கம் இழுக்கின்றது.

“தனது நிலைகள் (தான்) வளர வேண்டும்” என்று எண்ணுகின்றது. “பிறரை வளர்க்க வேண்டும்..,” என்ற எண்ணம் இல்லாது போகின்றது.

பிறர் வளர வேண்டும் என்று எண்ணினால் நாம் நிச்சயம் வளர்கின்றோம். இதுதான் உண்மை.

“நீங்கள் வளர வேண்டும்..,” என்று எண்ணினாலே முதலில் நான் வளர்கின்றேன். “இவருக்கு என்ன வேலை..,?” என்று அந்த உணர்வை அங்கே குறைத்தால் நானும் குறைந்து விடுகின்றேன்.

அங்கேயும் குறை உணர்வே விளைந்து இரண்டு பேரும் போர் முறைக்குத் தான் வரும். அப்பொழுது தீமையின் இயக்கத்திலிருந்து மீளும் நிலை இல்லாது போய்விடுகின்றது.

அப்பொழுது என்ன ஆகின்றது?

“இப்படி இருந்தோம்.., அப்படி இருந்தோம்..,” என்று இதைத்தான் பேசிக் கொண்டிருக்க முடியும். இந்த உணர்வின் தன்மை நமக்குள் “வளர்ச்சியற்ற நிலை” அடைந்துவிடுகின்றது. பிறகு “இந்த உடலுக்குள்.., சேர்த்தது என்ன?”

எதனின் வெறுப்பின் உணர்வை வளர்த்ததோ இதனின் வலுப் பெற்றால் புவியின் ஈர்ப்புக்கே நிச்சயம் வருகின்றது. ஆகவே, புவியின் ஈர்ப்புக்கு வருவதிலிருந்து நாம் தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால், இந்த பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. நீங்கள் பெற வேண்டும் என்ற இச்செயல், யாம் உபதேசித்ததைக் கீதையிலே சொன்ன மாதிரி, “நீ எதை நினைக்கின்றாயோ.., அதுவாகின்றாய்”.

நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்; உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்; மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் விளைய வேண்டும்; என்ற உயர்ந்த உணர்வின் நோக்கம் கொண்டு உங்களுக்குள் உபதேசிக்கின்றேன்.

இதைக் கேட்டுணர்ந்த நீங்கள் இதைப் பின்பற்றினால்,  “பிறர் வளரவேண்டும்..,” என்ற உணர்வு உங்களுக்குள் வாழும் சக்தியாக வளர்ந்து,  உங்களுக்குள் தீமையை விளைவிக்கும் நிலைகள் அது “ஒடுங்கும்’.

தீமைகள் அவ்வாறு ஒடுங்கி மெய் உணர்வைக் காணும் நிலைகளில் உங்கள் பேச்சும் மூச்சும் வெளிப்பட்டு இன்று விஞ்ஞான உலகால் ஏற்பபடுத்தப்பட்ட நஞ்சினை வென்று இந்த பூமியின் தன்மையில், நஞ்சினை அகற்றி அனைவரும்ஏகாந்தமாக.., மகிழ்ந்து வாழ முடியும்”.

இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச்சரீரம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்திட முடியும்.

முருகனின் தத்துவம் - 13

பஞ்சாபிஷேகம் – பஞ்ச அமிர்தம் (பஞ்சாமிர்தம்) 
உதாரணமாக, கருணைக் கிழங்கை அப்படியே சாப்பிட்டால் அதிலுள்ள விஷம் நம்மை வீழ்த்திவிடும். அதை ஆறாவது அறிவு கொண்ட மனிதன் “முருகு” மாற்றியமைக்கக்கூடிய சக்தி பெற்ற நாம் என்ன செய்கின்றோம்?

கருணைக் கிழங்கில் விஷம் இருக்கிறதென்றால் “வேக வைத்து” விஷத்தின் தன்மை தணிக்கின்றோம்.

தொக்கியுள்ள இதனுடன் ஒன்றிய நிலைகளை “புளியைக் கரைத்துச்” சேர்த்து அந்த விஷத்தின் தன்மைகளைத் தணிக்கின்றோம்.

மிளகாயைத் கலந்து புளியுடன் சேர்த்து “உணர்ச்சியைத் தூண்டும்” சக்தி பெறச் செய்கின்றோம்.

உப்பைக் கலந்து அதனுடன் பல சரக்குகளைச் சேர்த்து இணைத்துச் “சுவையாக..,” மாற்றுகின்றோம். இதைத்தான் “முருகு” மாற்றியமைக்கும் சக்தி பெற்றவன் மனிதன்.

1.கருணைக் கிழங்கில் “விஷம் இருக்கின்றது..,” என்று தெரிந்து கொள்கின்றோம்.., கார்த்திகேயா.
2.மிளகாயில் “கார உணர்ச்சிகள் உண்டு..,” என்று தெரிந்து கொள்கின்றோம்.., கார்த்திகேயா.
3.புளியைக் கரைத்தால் விஷத்தின் நேர்முக இயக்கத்தை அடக்குகின்றது என்று தெரிந்து கொள்கின்றோம்.., கார்த்திகேயா.
4.உப்பைச் சேர்த்தால் சுவையின் உணர்ச்சிகளைத் தூண்டும் என்று தெரிந்து கொள்கின்றோம்.., கார்த்திகேயா.

இவை அனைத்தையும் தன் உணர்வால் சுவையுள்ளதாக மாற்றி பல சரக்குகளைச் சேர்த்த பின்
1.கருணைக் கிழங்கைக் குழம்பாக வைத்து “ருசித்துச் சாப்பிடும்போது..,”
2.அந்த உணர்ச்சிகள் “பஞ்ச அபிஷேகமாக..,”
3.மகிழ்ச்சியான நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
4.அப்பொழுது அந்த விஷத்தை வென்ற உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்டு..,
5.அந்த உணர்வின் “(ஊறும்) அமிலங்களை” உருவாக்குகின்றது.
6.அந்த அமிலங்கள் நம் “உமிழ்நீராக..,” மாறுகின்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் அந்தச் சக்திக்குள் “மகிழ்ச்சியூட்டும் உணர்வை ஊட்டப்படும் பொழுது..” அது நம் உடலில் இரத்த நாளங்களில் கலக்கப்படுகின்றது.

அப்பொழுது அந்த அணுக்களின் மலமாகி நம் உடலே நல்லதாகி நம் உடலை “ஆரோக்கியமான நிலைகளில்” உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

விஷத்தை அடக்குகின்றது. இதுதான் ஆறாவது அறிவாக மகிழ்வாகனா. மயிலைக் காட்டி அது தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுகின்றது என்று சாதாரண மனிதனுக்கும் புரியும் வண்ணம் காட்டினார்கள் ஞானிகள்.

ஆனால் சூடத்தையும் பஞ்சாமிர்தத்தையும் அங்கே கொடுத்தால் “முருகன் செய்வார்..,” என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

1.“பஞ்சாபிஷேகம்” என்றால்..
2.விண்ணிலிருந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்தியைக்
3.கண்களாலே காதாலே வாயாலே உடலாலே சுவாசத்தாலே எடுத்து
4.நமக்குள் சேர்க்க வேண்டும்.

பஞ்சாமிர்தம் அந்த ஐந்து வகையான அமிர்தங்களாக நமக்குள் எப்படிச் சுவையை ஊட்டுகின்றதோ இதைப் போல புலனறிவில் கவர்ந்து கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இவை அனைத்தும் அந்தப் புலனறிவின்
1.“பஞ்ச அமிர்தம்… பஞ்சாமிர்தம் என்ற நிலை அங்கே வருகின்றது.
2.அதுதான் “காயத்ரி..,” என்பது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நாம் அந்த எண்ணத்தை ஏங்கினால் அதன் உணர்வுகள் நம் உயிரிலே படும் பொழுது “அந்த உணர்ச்சியின் இயக்கமாக..” நம்மை இயக்குகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் செல்லப்படும் பொழுது அந்த “அகஸ்தியன்” எப்படித் தீமைகளை வென்றானோ.., “அந்த உணர்வின் தன்மை…, தீமையை  மாற்றியமைக்கும் உணர்ச்சிகள்” நம் உடலிலே வருகின்றது.


அப்படிச் சேர்த்துக் கொண்டால் அது ஒளியின் சுடராக நமக்குள் மாறி, உயிருடன் ஒன்றிடும் நிலையாகப் பெறமுடியும். அதன் வழி கொண்டு அந்த மெய்ஞானிகள் சென்றடைந்த சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அனைவரும் எளிதில் அடையலாம்.

February 26, 2017

எத்தகைய சிக்கல்களிலிருந்தும் மீண்டிடும் விடைகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும

தியானம் என்பது இங்கே உட்கார்ந்து தியானமிருப்பதில்லை. “இது பழக்கம்”.

பள்ளிக்குச் சென்று படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும்பொழுது மீண்டும் பள்ளிக்குச் சென்று யாரும் படிப்பதில்லை.

படித்து விட்டு வந்துவிட்டோம். படித்து முடித்து வந்தபின் தப்பாகிவிட்டால் ஓடிப் போய்ப் பள்ளியில் உட்கார்ந்து மீண்டும் படிப்பதில்லை.

பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்த பாடநிலையைப் பார்த்து செய்த நிலைகளில்.., “இதில் என்ன குறை இருக்கின்றது..,” என்று “திரும்பிப் பார்க்க வேண்டும்”.

தியானம் இருந்து பழகியபின் பழையபடி ஓடி வந்து தியானமிருப்பதில்லை.

இங்கே பாட நிலையை உங்களுக்குள் உறுதிப்படுத்தியபின் அருள் உணர்வுகளின் “பதிவு.., RECORD” உங்களுக்குள் இருக்கின்றது.

மீண்டும் அந்த இடத்திலேயே (எப்பொழுது சிக்கலாகின்றதோ) இதனுடய சிந்தனை என்ன? சாமி என்ன உபதேசம் செய்தார்? “சாமி உபதேசம் செய்ததற்கும்.., நமக்குள் வருவதற்கும்,,, என்ன வித்தியாசம் இருக்கின்றது?”

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும், அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணினால்.., “உங்களுக்கு விடை” அப்பொழுதே தெரியும்.

இந்த விடை கொண்டு உங்களுக்குள் மாற்றிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு வர வேண்டும்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கிறோம்?

சாமியை நம்புகிறோம், சாமியாரை நம்ப முடிகின்றது மந்திரக்காரரை எல்லாம் நம்ப முடிகின்றது. நாம் இப்படித்தான் தேடிப் போகின்றோம்.

நமக்குள் இந்தச் சக்தியை வளர்த்து இந்த வாழ்க்கையில் வந்த துன்பங்களை நீக்கி அந்தப் பேரருள் என்ற உணர்வை வளர்த்து இனிப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் என்ற அந்த நிலைக்கு வருதல் வேண்டும்.

அப்பொழுது இந்த வாழ்க்கையில் தீமை புகாது “தீமைகளை அடக்கிடும்.., வல்லமை” வருகின்றது.

ஆனால், விட்டுவிட்டால் என்ன சொல்வார்கள்?

தீமை என்ற உணர்வு வரப்படும் பொழுது.., எனக்குக் கஷ்டமாக இருக்கின்றதே.., இந்த வேலை செய்தால் அப்படி நடக்கின்றது.., அந்தத் தொழில் செய்தால் நஷ்டமாகின்றது.., இந்த வண்டிய ஓட்டினால் கஷ்டமாக இருக்கின்றது.., “எதைச் செய்தாலும் எனக்கு ஒரே.., தொல்லையாக இருக்கின்றது” என்பார்கள்.

இப்படிக் கஷ்டங்கள் ஆனபின் அப்புறம் அந்த உணர்வு கொண்டு பிள்ளைகளை எண்ணினால் அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகள் பதிவாகிவிடுகின்றது. அவர்கள் தொழில் செய்தாலும் நஷ்டமாகின்றது.

இப்படியே.., என் குடும்பத்தில் தொடர்ந்து எல்லாமே நஷ்டமாகின்றது. என் குடும்பத்திற்கு “யாரோ.., ஏதோ.., என்னமோ.., செய்து கொண்டிருக்கின்றார்கள்..,” என்ற இந்த எண்ணத்திற்கு வந்துவிடும். யாரோ செய்துவிட்டார்கள் என்ற இந்த உணர்வு தான் வரும்.

 அதற்குத் தகுந்த மாதிரி ஜோதிடம் பார்ப்பவர்களிடம் செல்வார்கள். அவன் என்ன செய்வான் தெரியுமா..,?

நாம் இந்த எண்ணத்துடன் செல்கிறோம் அல்லவா.., இதை மீண்டும் உறுதிப்படுத்திவிடுவான் (Re Record). உங்களுக்குத் “தோஷத்தைச் செய்துள்ளார்கள்..,” என்பான்.

சகஜ வாழ்க்கையில் ஏதாவது சிறு குறைகள் இருந்தால் அந்தக் குறையின் தன்மை வரும் பொழுது என்ன செய்வோம்? “இன்னார் தான்.., செய்திருப்பார்கள்” என்று உறுதிப்படுத்துவோம்.

அதே மாதிரி நாம் எண்ணும்பொழுது இந்த உணர்வு கலந்து அலைகளாகப் பாய்ச்சப்படும் பொழுது.., நீங்கள் அங்கே போனவுடன் (ஜோதிடம் பார்ப்பவன்) இன்னொரு ஆவியின் உணர்வு கொண்டு அல்லது உணர்வின் வலிமை பெற்று இதை அறியும் உணர்வு மோதப் பெற்றவுடன் அவன் என்ன சொல்வான்..?

உங்களுக்குப் பக்கத்தில் தான் இருக்கின்றார்கள், ரொம்பவும் தெரிந்தவர்கள் இருப்பார்கள் என்பான். இலேசாக ஒரு வார்த்தையை விட்டுப் பார்ப்பான்.

“சரி.., இதுதான்” என்பான் கடைசியில் இவர்கள் தான் செய்தார்கள் என்று பகைமையை உண்டாக்கிவிடுவான்.

உங்களுடைய சந்தர்ப்பம்.., பகைமையுடன் “இவர்கள் செய்திருப்பார்களா..,” என்ற சந்தேகம் அவர்கள் தான் செய்திருப்பார்கள் என்று உறுதியாகிவிடும்.

இந்த மாதிரிச் செய்துவிட்டார்கள் என்ற உணர்வு ஆனபின் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம்.., “ஜிர்.., ஜிர்..,” என்று பகைமை உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

“பாவிப்பயல்..,” ஒன்றும் தெரியாமல் இருந்து கொண்டு “எந்த வேலையைச் செய்திருக்கின்றான்..,” என்ற எண்ணங்கள் வரும்.

ஆனால், அவர்கள் நம்மைப் பார்க்கும் பொழுது “ஏன்…, இப்படி.., முறைத்து முறைத்துப் பார்க்கின்றார்கள்.,,” என்று அந்த உணர்வை அவர்கள் எடுத்துக் கொண்ட பின் அதற்குத் தக்க மாதிரி பதிலுக்கு அவர்களுக்குள்ளும் கலக்கமாகும்.

பின் ஒருவருக்கொருவர் என்ன ஆகும்? ஆக, அங்கேயும் வித்தியாசமாகி அவர்களும் முறைத்துக் கொள்வார்கள்.

அப்பொழுது என்ன முடிவுக்கு வருவார்கள்? “பார்த்தாயா.., ஜோதிடக்காரன் சொன்னது.., “கரெக்ட்..,”

அடுத்து வம்பு வந்தது வீட்டிற்குள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி.., நாம் “பிறருடைய உணர்வுகளைத்தான்” வளர்த்துக் கொள்கின்றோமே தவிர உங்களுடைய உணர்வை அருள் உணர்வை வளர்த்துக் கொண்டால் இருள் சூழும் நிலைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளும் சக்தி “உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்”.

இவ்வளவு பெரிய உடலை வளர்த்து வந்ததும் உங்களுடைய வாழ்க்கைக்கு வழி காட்டி வந்ததும் நீங்கள் நுகர்ந்த உணர்வு தான்.., உங்கள் உயிர் தான் இதையெல்லாம் உருவாக்கியது.

எதெனெதன் நிலைகளில் எண்ணுகின்றோமோ அதன் வழியில் தான் உயிர் இயக்கிக் காட்டுகின்றது.

நாம் உயர்ந்த உணர்வை எடுத்தால்.., அது கருவாகி அதை வளர்த்து விட்டால் அந்த “உயர்ந்த ஞானத்தையும்.., தீமைகள் புகாத நிலையும்” உங்களுக்குள் வளர்க்க இது உதவும்.

முருகனின் தத்துவம் - 12

1. கார்த்திகேயா நமது ஆறாவது அறிவு – சேனாதிபதி நம்மைப் பாதுகாக்கும்
நமக்கு இருளில் இருக்கும் பொருள் தெரிவதில்லை. ஆனால் வெளிச்சத்தில் இன்னென்ன பொருள் இருக்கிறதென்று அறிகின்றோம்.

இதுபோன்று, நமக்குள் அறிவின் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி ஒன்றை அறியச் செய்யும் ஆற்றல் நமது ஆறாவது அறிவுக்கு உண்டு.

கார்த்திகேயா என்ற நிலை நம் உடலிலிருந்து வரக்கூடிய மணத்திற்கு உண்டு. அது என்ன செய்கின்றது?

நமக்கு ஒன்றை “இது நன்மை.., இது தீமை..,” என்ற நிலைகளை அறியச் செய்கின்றது.

“கார்த்திகேயா” என்று அறிந்து உணர்ந்து தீமைகள் புகாத நிலைகள் கொண்டு நாம் தடுக்கும் நிலை வரப்படும்போது “சேனாதிபதி” என்றும் இந்த உடலைப் பாதுகாக்கும் சக்தி பெற்றது என்றும் ஆறாவது அறிவைத் தெளிவாகக் கூறுகின்றனர். 

நமது உயிரின் தன்மை ஒளியின் தன்மையாக இருக்கின்றது. இருளை நீக்கி மெய்ப்பொருளைக் காணும் எண்ணங்களை நமக்குள் பெற வேண்டும் என்பதே, நமக்கு ஞானிகள் காண்பித்த நிலை.

நண்பர்களிடத்தில் பகைமை கொண்டிருந்தால் பகைமை மறைய வேண்டும். நண்பர்கள் மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் அவர்கள் பொருள் காணும் திறன் பெறவேண்டும். எங்களுக்குள் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்.

எங்களுக்குள் மகரிஷிகளின் அருள்சக்தி பெருக வேண்டும். எங்கள் சொல்லைக் கேட்போரின் உணர்வுகளில் இருள் நீங்க வேண்டும் மெய்பொருளின் தன்மை நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படிப்பட்ட உணர்வுகளை நமக்குள் பெருக்கினால் நமது ஆறாவது அறிவின் தன்மை சேனாதிபதி என்ற நிலைகளில் நமது அறிவு நம்மைப் பாதுகாக்கும் நிலைகளில் இயக்கும்.

ஒரு மிலிட்டரிக்குச் சேனாதிபதி எதற்கு வைத்துள்ளார்கள்..,? கெட்டது வராதபடி தடுப்பதற்குத்தான் சேனாதிபதி.

தடுக்கத் தவறினால் என்ன ஆகும்..? படைகலன்களின் பாதுகாப்பு போய்விடும். நாட்டைக் காக்க முடியாமல் போகும்.

ஒருவன் சாபமிடுகின்றான் என்று தெரிகின்றது. நம் உடலுக்குள் சாபமிட்ட உணர்ச்சிகள் தூண்டுகிறது என்று தெரிகின்றது. அப்பொழுது என்ன செய்யவேண்டும்..? 

இந்த ஆறாவது அறிவை அந்தச் சேனாதிபதியைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த ஆறாவது அறிவைப் பயன்படுத்தினால் தீமைகள் புகாதபடி தடுக்க முடியும். அந்த ஆறாவது அறிவை.., முருகன் என்று காட்டி சேனாதிபதி..,” என்று உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.
2. மகரிஷிகளின் ஒளிச் சுடரை நமக்குள் ஏற்றி மற்றவர்கள் மேல் பாய்ச்ச வேண்டும்
பிறரின் தீமையின் உணர்வைப் பார்த்துணர்ந்து கஷ்டப்படுகின்றான்.., நஷ்டப்படுகின்றான்.., துயரப்படுகின்றான்.., என்ற வேதனையின் உணர்வு கொண்டு நண்பன் என்ற நிலைகளில் மற்றவரிடம் பழகினாலும் அவருடைய வேதனையின் உணர்வுகள் “நம்முடன் இணைந்து.., கலந்துவிடுகின்றது”.

இதுபோன்று ஒருவர் துயரப்படுகின்றான் என்றால், “அருள் மகரிஷிகளின் அருளுணர்வுகள் பெறவேண்டும்” என்ற உணர்வின் சுடரை நம்முள் ஏற்றி வைத்து உணர்வின் சொல்லை தன் உடலுக்குள் பரப்பி இந்த உணர்வின் ஒலி அலைகளை யார் துன்பத்தில் உள்ளனரோ அவர் மேல் பாய்ச்ச வேண்டும்.

பின் மகரிஷியின் அருள்சக்தி அவர் பெறவேண்டும். அவரின் உடல் முழுவதும் படர வேண்டும். அவருக்குள் இருக்கும் துயர் நீங்கள் வேண்டும். அதன் அருளானந்தம் பெறவேண்டும். அவருடைய உடலில் மகிழ்ச்சி பொங்கும் நிலைகள் உருவாக வேண்டும்.

அவருடைய செயல் வைரத்தைப்போல ஜொலிக்க வேண்டும். அவருடைய வாழ்க்கையும் வைரத்தைப்போல் ஜொலிக்க வேண்டும். என்ற உணர்வினை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமக்குள் அப்படி அருள் ஒளியின் உணர்வைச் சேர்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுக்கருவாக உருவாகி “இருள் புகாத நிலைகள் கொண்டு” அந்த உணர்வின் தன்மையை தனக்குள் பெருக்குகின்றது. 

இதன் வழி தீமைகள் வராது காக்கும் அருளுணர்வுகளை நமக்குள் பெருக்க முடிகின்றது. தீமைகள் நம் அருகிலே வராதபடி “பாதுகாப்புக் கவசமாகின்றது”.


அதற்குத்தான் ஞானிகள் ஆறாவது அறிவு முருகனை “சேனாதிபதி” என்று மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

February 25, 2017

தொழில் செய்யும் இடங்களில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுங்கள்

பிறருடைய தவறான செயல்களை உற்று பார்த்தால் அது உங்கள் ஆன்மாவில் (நாம் இழுத்துச் சுவாசிக்கும்) முன்னனியில் வந்துவிடும். தவறையே மீண்டும் சுவாசித்தால் என்ன ஆகும்?

ஆகவே, தவறான செயல்களை உற்றுப் பார்த்த அடுத்த கணம் “ஈஸ்வரா..,” என்று உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் சுழலச் செய்து அந்தத் தீய செயலின் உணர்வு உங்களுக்குள் அது வளராது அதனுடைய உணர்வைச் சமப்படுத்துதல் வேண்டும்.

ஆனால், சமப்படுத்திச் சென்றாலும் நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது அங்கே தொழில் சம்பந்தமாக மற்றவர்களைச் சந்திக்கும் பொழுதும் இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் செயல் அனைத்தும் நலம் பெறவேண்டும். நாங்கள் உருவாக்கும் உற்பத்தி செய்யும் பொருள்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அந்தப் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று கண் கொண்டு அந்த உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

அடுத்து எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இனிமை பெறவேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் மலரைப் போன்ற மணங்கள் பெருக வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு எண்ணி எடுக்கும் உணர்வின் செயலாக்கங்கள் அங்கே கூடினால் தொழில் செய்யும் இடத்தில் உள்ள தொழிலாளியிடமோ அல்லது மேலதிகாரியிடமோ பேசும் பொழுது நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இணைந்து வாழச் செய்யும்.

இப்படிச் சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்? நாம் ரோட்டில் வரப்படும் பொழுது தீய செயலை ஒருவர் செய்கின்றார் என்றால் அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உடலில் ஆன்மாவில் முன்னனியில் வந்துவிடும்.

அதை நுகர்ந்துவிட்டுத் தொழிலுக்கு வந்தால் நாம் சுவாசித்த உணர்வுகளே “நமக்குள் எதிரியாக வந்துவிடும்” என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது வேதனையான உணர்வைச் சுவாசித்துவிட்டுச் சென்று தொழிலில் ஒரு இயந்திரத்தை இயக்கினாலும் தவறான நிலைகளில் அது செயலுக்கு வரலாம். அது தவறான நிலைகளில் இயக்கப்படும் பொழுது பழுதாகி தடையாகவும் ஆகலாம்.

அதனால், நண்பரிடத்தில் அல்லது மேலதிகாரியிடத்தில் பகைமை ஊட்டும் நிலை வரும். ஏனென்றால், நம் உடலுக்குள் வந்த அந்தத் தீமையான உணர்வுகள் நல்ல நண்பர்களையே பகைமையாக்கிவிடும்.

அதனால் தொழிலையும் வெறுக்கும் நிலை வரும்.

இதைப் போன்று நம்மையறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நிமிடத்திலும் வெளியிலே செல்லும் பொழுதும் தொழிலுக்குச் செல்லும் பொழுதும் தொழிலுக்குச் சென்று தொழில் ஆரம்பிக்கும் பொழுதும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துச் செயல்படுத்திப் பாருங்கள்.

மன உறுதி கிடைக்கும். நம் சொல் மற்றவர்களை இணைந்து வாழச் செய்யும். உங்களுக்கு உதவியும் தேடி வரும். அன்பு வளரும். பண்பும் வளரும்.

அருள் ஒளி பெற்றால் இருளை அடக்கிடும் ஞானமும் வரும். தெளிந்த மனதுடன் வாழவும் முடியும். ஆகவே, இதை நீங்கள் எண்ணி எடுத்துப் பழகுங்கள்.

இதனால் உங்கள் தொழிலும் விருத்தியாகும். செல்வமும் தேடி வரும். வேலை பார்க்கும் இடத்தில் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் “உங்களால்.., ஒரு மன நிம்மதி கிடைக்கும்.”